என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்திய அணி 49.5 ஓவரில் 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலிய தரப்பில் டார்சி பிரவுன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி இன்று நியூ சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க பேட்டர்களாக பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். ராவல் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ஹர்லீன் தியோல் 10, கேப்டன் ஹர்மன்பிரித் கவூர் 17 என விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இதனையடுத்து மந்தனாவுடன் தீப்தி சர்மா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிரிதி மந்தனா சதம் விளாசி அசத்தினார். அவர் 77 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 91 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அதனை தொடர்ந்து தீப்தி சர்மா 40 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ராதா யாதவ் 6, அருந்ததி ரெட்டி 4 என அடுத்தடுத்து வெளியேறினார்.

    இறுதியில் ரிச்சா கோஷ்- சினே ராணா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரிச்சா கோஷ் 29, ராணா 24 ரன்கள் எடுத்து வெளியேற இந்திய அணி 49.5 ஓவரில் 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் டார்சி பிரவுன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
    • இன்றைய போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக செயல்பட்டார்.

    டோக்கியோ:

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் பங்கேற்றுள்ளனர்.

    இதில் இன்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று நடந்தது. இதில் ஏ பிரிவில் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

    பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக செயல்பட்டார்.

    84.50 மீட்டர் தொலைவை கடந்து ஈட்டியை வீசினால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற நிலையில், அவர் தனது முதல் வாய்ப்பில் 84.85 மீட்டர் தூரம் எறிந்து அசத்தினார்.

    இதன்மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா முன்னேறியுள்ளார்.

    • 45 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
    • 77 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 2ஆவது போட்டி இன்று நியூ சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க பேட்டர்களாக பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். ராவல் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    ஆனால் ஸ்மிரி மந்தனா சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். 45 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்த நிலையில், 77 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 91 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வயிடைந்தது. 3ஆவது மற்றும் கடைசி போட்டி 20ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது.

    • பாகிஸ்தான், UAE அணிகள் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.
    • இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறும்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (துபாய், அபு தாபி) நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரின் பிரிவுகளுக்கான லீக் ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), ஓமன் அணிகள் இடம் பிடித்துள்ளன.

    இதில் நான்கு அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையாடி விட்டன. இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் UAE ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராக விளையாடி, இரண்டிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றான சூப்பர் 4-க்கு முன்னேறியுள்ளது. ஓமன் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து வாய்பை இழந்தது.

    பாகிஸ்தான், UAE அணிகள் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இன்று இரு அணிகளும் தங்களது கடைசி லீக் போட்டியில் விளையாடுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி இந்தியாவுடன் சேர்ந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

    இதனால் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரண்டு அணிகளுக்கும் இன்றைய போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தோல்வியடைந்தால் தொடரில் இருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்படும். இதனால் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடுவார்கள்.

    ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக UAE, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. அந்த நம்பிக்கையடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக களம் இறங்கும்.

    அதேவேளையில் UAE சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள அந்த அணி வீரரக்ள் விரும்புவாரக்ள். ஐக்கிய அரபு அமீரகததின் தொடக்க ஜோடிகளான அலிஷன் ஷரஃபு, கேப்டன் முகமது வாசீம் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்கின்றன. பாகிஸ்தானுக்கு எதிராக இருவரும் மாயாஜாலம் நிகழ்த்தினால் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்க வாய்ப்புள்ளது.

    • வங்கதேச அணிக்கெதிராக 8 ரன்களில் வெற்றியை நழுவ விட்டது ஆப்கானிஸ்தான்.
    • இலங்கையை சாய்த்தால் சூப்பர் 4 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் முன்னேறும்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற்று வருகிறது. 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பிடித்துள்ளன. இலங்கை அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. நேற்று வங்கதேசம்- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் வங்கதேச அணி தோல்வியடைந்தால் போட்டியில் இருந்து வெளியேறும் நிலை இருந்தது. ஆனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி, 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    தற்போது இலங்கை 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் (1.546 ரன்ரேட்) முதல் இடத்தில் உள்ளது. வங்கதேசம் 3 போட்டிகளில் விளையாடி விட்டது. இதில் 2-ல் வெற்றி, ஒன்றில் தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று (-0.270) 2ஆவது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் 2-ல் ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வியின் மூலம் 2 புள்ளிகள் பெற்று (2.150) 3ஆவது இடத்தில் உள்ளது.

    நாளை இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி முதல் இடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிடும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தால் தொடரில் இருந்து வெளியேறிவிடும்.

    இலங்கை, வங்கதேசம் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதனால் ஆப்கானிஸ்தானுக்கு நாளைய போட்டி வாழ்வா? சாவா? போட்டியாகும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையில் ரன்ரேட் பார்க்கப்படும். அதனடிப்படையில் ஒரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதனால் நாளைய போட்டி பரபரப்பானதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஏ பிரிவில் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இன்று நடைபெறும் பாகிஸ்தான்- ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான போட்டியில் போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றான சூப்பர் 4-க்கு தகுதி பெறும்.

    • ஐ.சி.சி. டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
    • இதில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தில் 3 இடங்கள் முன்னேறியுள்ளார்.

    துபாய்:

    டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

    இதில் இந்திய பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 3 இடங்கள் முன்னேறி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடந்த டி20 போட்டிகளில் அவர் சிறப்பாக பந்து வீசினார்.

    பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா முதலிடத்திலும், திலக் வர்மா 2 இடம் பின்தங்கி 4-வது இடத்திலும் சூர்யகுமார் யாதவ் 7வது இடத்திலும் உள்ளார்.

    ஆல் ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா முதலிடத்தில் நீடிக்கிறார்.

    • சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் லக்‌ஷயா சென் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி வரும் 21-ம் தேதி வரை நடக்கிறது.

    இதில் இந்தியா சார்பில் லக்ஷயா சென், பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி உள்ளிட்டோர் களம் காணுகிறார்கள்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், பிரான்சின் தோமா பாப்போவ் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய பிரான்ஸ் வீரர் 21-11, 21-10 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் லக்ஷ்யா சென் முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • தேர்வு குழுவுக்கு முன்னாள் வேகப்பந்து வீரர் அஜித் அகர்கர் தலைவராக உள்ளார்.
    • எஸ்.சரத், சுபர்கோ பானர்ஜி ஆகியோரின் பதவி காலம் முடிவடைகிறது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி. சி.ஐ) தேர்வு குழுவுக்கு முன்னாள் வேகப்பந்து வீரர் அஜித் அகர்கர் தலைவராக உள்ளார். சுபர்கோ, பானர்ஜி, அஜய் ரத்ரா, எஸ்.சரத் ஆகிய 4 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    இதில் எஸ்.சரத், சுபர்கோ பானர்ஜி ஆகியோரின் பதவி காலம் முடிவடைகிறது. இதனால் தேர்வு குழுவில் இருந்து அவர்கள் வெளியேறுவார்கள். அவர்களுக்கு பதிலாக புதிய தேர்வுக்குழு உறுப்பினராக முன்னாள் பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா நியமிக்கப்படுகிறார்கள்.

    கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கும் இந்த கூட்டத்தில் ஆர்.பி.சிங், ஓஜா ஆகியோர் பெயர்கள் தேர்வுக்குழு உறுப்பினராக அறிவிக்கப்படும்.

    இடது கை வேகப்பந்து வீரரான ஆர்.பி.சிங் 2007 -ம் ஆண்டு டோனி தலைமையில் 20 ஓவர் உலக கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்று இருந்தார். 39 வயதான அவர் 82 சர்வதேச போட்டிகளில் 124 விக்கெட் கைப்பற்றியுள்ளார். மத்திய மண்டலத்தில் இருந்து அவர் தேர்வுக்குழு உறுப்பினர் ஆகிறார்.

    இடது கை சுழற்பந்து வீரரான ஓஜா தெற்கு மண்டலத்தில் இருந்து தேர்வுக்குழு உறுப்பினரா கிறார். அவர் 24 டெஸ்டில் 113 விக்கெட் கைப்பற்றியுள் ளார். ஒருநாள் போட்டியில் 21 விக்கெட்டும் (18 போட்டி), 20 ஓவர் ஆட்டத்தில் 10 விக்கெட்டும் (6 போட்டி) எடுத்தவர்.

    • 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையை உசைன் போல்ட் படைத்தார்.
    • உசைன் போல்ட் மின்னல் வீரன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.

    ஜமைக்கா நாட்டை சேர்ந்த முன்னாள் பிரபல ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட். 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாளரான அவர் ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் 11 உலக தடகள சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார்.

    உசைன் போல்ட், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் (9.58 வினாடிகளில்) மட்டுமில்லாமல் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் (19.19 வினாடிகள்) மற்றும் 4x100 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தயம் (36.84) உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.

    உலகின் மிக வேகமாக ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையை பெற்ற உசைன் போல்ட் மின்னல் வீரன் என்று அழைக்கப்பட்டார்.

    ஓட்டப்பந்தயத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட உசைன் போல்டிற்கு தற்போது படிக்கட்டுகளில் ஏறுவதற்கு கூட மூச்சு வாங்குகிறது என்று வெளியான தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    39 வயதான உசைன் போல்ட்செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில், "நான் ஒரு காலத்தில் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் ஓடினேன். ஆனால் இப்போது படிக்கட்டில் ஏறினால் கூட எனக்கு மூச்சு வாங்குகிறது. நான் உண்மையில் மீண்டும் ஓடத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறன். நான் மீண்டும் முழுமையாக உடற்பயிற்சி செய்யத் தொடங்கும்போது, மூச்சு வாங்கும் பிரச்சனை சரி ஆகும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

    • இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர்.
    • இந்த விவகாரத்தை ஐ.சி.சி. யிடம் பாகிஸ்தான் முறையிட்டது.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.

    டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். அந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.

    இந்த விவகாரம் சா்ச்சையாகி இருக்கும் நிலையில் இதற்கு பொறுப்பாக போட்டி நடுவா் ஆண்டி பைகிராப்டை (ஜிம்பாப்வே) நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது. மேலும் இந்த விவகாரத்தை ஐ.சி.சி. யிடமும் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) முறையிட்டது.

    இந்நிலையில் ஆட்ட நடுவர் ஆண்டி பைகிராஃப்டை நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இருந்து நீக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் கோரிக்கைக்கு செவிசாய்த்து ஐசிசி ஒரு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதாவது UAE உடனான கட்டாயம் வெற்றி பெற வேண்டிய போட்டியில் ஆண்டி பைகிராஃப் நடுவராக இருக்க மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ரிச்சி ரிச்சர்ட்சன் நடுவராக செயல்படுவார் என்று ஐசிசி பாகிஸ்தானுக்கு உறுதி அளித்துள்ளது.

    UAE உடனான போட்டியில் வெற்றி பெற்றால் தான் சூப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் அணியால் தகுதி பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர்.
    • கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.

    டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். அந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.

    இந்த விவகாரம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, "ஆசிய கோப்பை தொடங்கும்போதே இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு எதிரான புறக்கணிப்பு பிரசாரங்கள் இணையத்தில் அதிகரித்தன. அது வீரர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதனால் பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்க வேண்டாம் என்று பிசிசிஐ கூறியதில் ஆச்சரியமில்லை.

    இதற்காக இந்திய வீரர்களை நான் குறைகூறவில்லை. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவு படி அவர்கள் நடந்துகொண்டார்கள்.

    செய்தியாளர் சந்திப்பின்போது பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரிடம் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்கினார்.

    ஆனால் இந்திய அரசாங்கத்தால் சமூக ஊடக அழுத்தத்தைக் கையாள முடியாததால் மைதானத்தில் மக்களின் முன்பு அவரால் கைகுலுக்க முடியவில்லை. இதனால் இந்திய வீரர்கள் உலகத்தின் முன் அவமானமடைந்தனர்" என்று தெரிவித்தார். 

    • 2020 ஆம் ஆண்டு 6.17 மீட்டர் உயரம் தாண்டி அர்மாண்ட் டுப்லாண்டிஸ் உலக சாதனை படைத்தார்.
    • அர்மாண்ட் டுப்லாண்டிஸ் 6.30 மீட்டர் உயரம் தாண்டி புதிய உலக சாதனையை படைத்தார் .

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது.

    உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தடியூன்றித் தாண்டுதல் (Pole Vault) இறுதிச் சுற்றில் ஸ்வீடன் நாட்டு வீரர் அர்மாண்ட் டுப்லாண்டிஸ் 6.30 மீட்டர் உயரம் தாண்டி புதிய உலக சாதனையை படைத்தார் .

    இதன்மூலம் தனது உலக சாதனையை 14வது முறையாக அர்மாண்ட் டுப்லாண்டிஸ் முறியடித்துள்ளார்.

    2020 ஆம் ஆண்டு 6.17 மீட்டர் உயரம் தாண்டி அர்மாண்ட் டுப்லாண்டிஸ் உலக சாதனை படைத்தார். இதனையடுத்து கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ந்து அவரது சாதனையை 14 ஆவது முறையாக அவரே முறியடித்து உலக சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் தடியூன்றித் தாண்டுதல் (Pole Vault) போட்டியின் முடிசூடா மன்னனாக அவர் திகழ்ந்து வருகிறார்.

    ×