search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Cricket Board"

    • இந்திய வீரர்களை தேர்வு செய்யும் புதிய தேர்வு குழு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
    • ரோகித் சர்மா, வீராட் கோலி ஆகிய இருவருமே 20 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ளனர்.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 8 போட்டிகள் நடந்துள்ளன.

    இந்திய அணி ஒரே ஒரு முறை மட்டுமே 20 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது. அறிமுக போட்டியான 2007ல் டோனி தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

    அதன் பிறகு 2014 போட்டிக்கான 20 ஓவர் உலக கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இலங்கையிடம் தோற்றது. இதுவரை 2 முறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது. ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரை இறுதியில் இங்கிலாந்திடம் மோசமாக தோற்றது.

    2024-ம் ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை போட்டி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இந்த உலக கோப்பை போட்டியிலாவது சாம்பியன் பட்டம் பெற்று விட வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.பி.சி.ஐ.) தீவிரமாக உள்ளது. இதனால் இப்போதே இளம் வீரர்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    உலக கோப்பையை கருத்தில் கொண்டு சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, வீராட்கோலி ஆகியோர் இனி வரும் 20 ஓவர் போட்டியில் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று தெரிகிறது.

    ஹர்திக் பாண்ட்யா அணிக்கு கேப்டனாக செயல்படுவார். அவர் ஏற்கனவே பல தொடர்களில் கேப்டனாக இருந்து 20 ஓவர் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அவர் நீண்ட காலத்துக்கு 20 ஓவர் அணியின் கேப்டனாக செயல்பட கிரிக்கெட் வாரியம் கருதுகிறது.

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட 20 ஓவர் அணியை தான் கிரிக்கெட் வாரியம் விரும்புவதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்திய வீரர்களை தேர்வு செய்யும் புதிய தேர்வு குழு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சேட்டன் சர்மா தொடர்ந்து தேர்வு குழு தலைவராக நீடிக்கப்பட்டு உள்ளார்.

    20 ஓவர் போட்டியின் எதிர்காலம் தொடர்பாக அவர் ரோகித்சர்மா, வீராட்கோலி ஆகியோருடன் பேசுவார் என்று தெரிகிறது. அப்போது கிரிக்கெட் வாரியத்தின் திட்டத்தை எடுத்துரைப்பார். அவர்களாகவே 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்பேத கிரிக்கெட் வாரியத்தின் விருப்பமாக உள்ளது.

    ரோகித் சர்மா 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 20 ஓவர் போட்டியில் ஆடினார். வீராட் கோலி 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிராக அறிமுகம் ஆனார். 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 20 ஓவரில் ஆடினார்.

    இருவரும் 20 ஓவர் உலக கோப்பைக்கு கேப்டனாக இருந்துள்ளனர். ஆனால் கோப்பையை வென்றது இல்லை. இதனால் தான் தற்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    ரோகித் சர்மா, வீராட் கோலி ஆகிய இருவருமே 20 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ளனர். 34 வயதான வீராட் கோலி 115 போட்டியில் 107 இன்னிங்சில் 4008 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இதில் ஒரு சதமும், 37 அரை சதமும் அடங்கும். 35 வயதான ரோகித் சர்மா 140 ஆட்டத்தில் 3853 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். 4 சதமும், 29 அரை சதமும் அடித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகள் தமிழ்நாடு சங்கங்களின் பதிவாளரிடம் நேற்று பதிவு செய்யப்பட்டதாக கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #IndianCricketBoard
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களுடன் கூடிய புதிய விதிமுறைகளை 4 வார காலத்திற்குள் சென்னையில் உள்ள தமிழ்நாடு சங்கங்களின் பதிவாளரிடம் முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 9-ந்தேதி உத்தரவிட்டு இருந்தது. அதன்படி நேற்று பதிவு செய்யப்பட்டதாக கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய விதிமுறைகளை மாநில கிரிக்கெட் சங்கங்கள் 30 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் கோர்ட்டு ஆணையிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.  #IndianCricketBoard
    இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு லோதா கமிட்டி பரிந்துரை செய்த சிபாரிசு தொடர்பான வழக்கு விசாரணையை ஜூலை 4-ந் தேதிக்கு தள்ளிவைப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அறிவித்தனர். #BCCI #Supremecourt
    புதுடெல்லி:

    லோதா கமிட்டி சிபாரிசின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக விதிமுறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

    கடந்த 1-ந் தேதி நடந்த விசாரணையின் போது, ‘இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகளை வகுப்பது குறித்த தங்களது ஆலோசனைகளை மாநில கிரிக்கெட் சங்கமும், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் மே 11-ந் தேதிக்குள் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் புதிய விதிமுறையின் இறுதி வடிவம் கோர்ட்டு உத்தரவுக்கு உட்பட்டதாகும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறை குறித்து, மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் தங்களது ஆலோசனைகளை, இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்டுள்ள சீனியர் வக்கீல் கோபால் சுப்பிரமணியத்திடம் அறிக்கையாக சமீபத்தில் தாக்கல் செய்தனர்.

    அந்த அறிக்கையில், ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிர்வாகிகளாக இருக்கக்கூடாது. ஒருவர் தொடர்ந்து 2 முறைக்கு மேல் ஒரு பதவியில் தொடர வேண்டும் என்றால் 3 ஆண்டு கால இடைவெளி விட்டு தான் போட்டியிட முடியும் உள்ளிட்ட லோதா கமிட்டியின் முக்கியமான பரிந்துரைகளுக்கு பெரும்பாலான மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை ஜூலை 4-ந் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். #BCCI #Supremecourt
    ×