என் மலர்
விளையாட்டு
- முதல் பாதி முடிவில், பெங்களூரு புல்ஸ் அணி 20-14 என்ற கணக்கில் வலுவான முன்னிலையுடன் ஆதிக்கம் செலுத்தியது.
- அர்ஜுன் தேஷ்வால்லின் 'சூப்பர் 10' தமிழ் தலைவாஸ்க்கு கை கொடுத்தது.
12 அணிகள் பங்கேற்றுள்ள 12வது சீசன் புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.
நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கிய போட்டியில் தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ் மோதின.
தமிழ் தலைவாஸ் அணி 35-29 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தியது. ஆட்டத்தின் முதல் பாதி முடிவில், பெங்களூரு புல்ஸ் அணி 20-14 என்ற கணக்கில் வலுவான முன்னிலையுடன் ஆதிக்கம் செலுத்தியது.
இரண்டாம் பாதி தொடங்கியதும், தமிழ் தலைவாஸ் அணி மீண்டு வந்து இறுதியில் வெற்றியை சுவைத்தது.
இறுதியில் அர்ஜுன் தேஷ்வால்லின் 'சூப்பர் 10' தமிழ் தலைவாஸ்க்கு கை கொடுத்தது. இதன் மூலம் பெங்களூரு புல்ஸ்சின் தொடர் வெற்றிக்கு தமிழ் தலைவாஸ் புல் ஸ்டாப் வைத்துள்ளது.
முன்னதாக நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய பெங்கால் வாரியர்ஸ் அணி 41-37 புள்ளிக்கணக்கில் உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய வங்கதேசம் 154 ரன்கள் எடுத்தது.
அபுதாபி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இன்று நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, தொடக்க ஆட்டக்காரர் தன்ஜித் ஹசன் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 31 பந்தில் 52 ரன்கள் குவித்தார். சைப் ஹசன் 30 ரன்கள் எடுத்தார். தவ்ஹிக் ஹிருதோய் 26 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.
ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், நூர் அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்குகிறது.
- புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
- யு.பி.யோதாஸ் அணியை பெங்கால் வாரியர்ஸ் அணி வீழ்த்தியது.
ஜெய்ப்பூர்:
12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.
இறுதியில், சிறப்பாக ஆடிய பெங்கால் வாரியர்ஸ் அணி 41-37 புள்ளிக்கணக்கில் உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
- ஸ்மிருதி மந்தனா 2வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
- பந்துவீச்சில் இந்தியாவின் தீப்தி சர்மா 3 இடம் சரிந்து 7வது இடத்தில் உள்ளார்.
துபாய்:
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான வீராங்கனைகள் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி இன்று வெளியிட்டது.
அதன்படி, பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா (735 புள்ளி) 2வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
முதல் இடத்தில் இருந்த இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர் பிரண்ட் (731 புள்ளி) 2வது இடத்திற்கு சரிந்துள்ளார். 3-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் (725 புள்ளி) உள்ளார்.
ஹர்மன்பிரீத் கவுர் 12வது இடத்திலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களில் மாற்றமில்லை. இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (795 புள்ளி) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னெர் (725 புள்ளி) 2ம் இடத்திலும், மேஹன் ஸ்கட் (691 புள்ளி) 3ம் இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவின் தீப்தி சர்மா 3 இடங்கள் சரிந்து 7வது இடத்தில் உள்ளார்.
ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் இந்தியாவின் தீப்தி சர்மா தொடர்ந்து 4வது இடத்திலேயே நீடிக்கிறார்.
- இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் எளிதில் வெற்றி பெற்றார்.
- இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் எளிதில் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டி வரும் 21-ம் தேதி வரை நடக்கிறது.
இதில் இந்தியா சார்பில் லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி, பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி உள்ளிட்டோர் களம் காணுகிறார்கள்.
இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, டென்மார்க் வீராங்கனை ஜூலி டாவால் ஜாகோப்சென் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய பி.வி.சிந்து 21-4, 21-10 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
இந்தப் போட்டி 27 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
- வைஷாலி கிராண்ட் செஸ் தொடரை வெல்வது இது இரண்டாவது முறையாகும்.
- அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை டான் ஸோங்கி உடன் மோதிய வைஷாலி 11 சுற்றுகளில், 8 புள்ளிகளைப் பெற்று தொடரை வென்றார். வைஷாலி கிராண்ட் செஸ் தொடரை வெல்வது இது இரண்டாவது முறையாகும். இதன்மூலம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.
கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்த கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் வைஷாலி அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்.
தங்களின் தொடர் வெற்றிகள் மூலம் தமிழ்நாட்டிற்கும், இந்திய திருநாட்டிற்கும் மென்மேலும் பெருமைகளைச் சேர்த்திட வாழ்த்துகிறேன்.
என கூறினார்.
- DREAM11-உடனான உறவை முறித்துக் கொள்கிறோம் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.
- போட்டி ஒன்றுக்கு ரூ.4.5 கோடி வீதம் அப்போலோ டயர்ஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளதால் DREAM11-உடனான உறவை முறித்துக் கொள்கிறோம் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் BCCI உறுதியாக தொடர்பு வைத்துக்கொள்ளாது எனவும் கூறினார். இதனால் ஆசிய கோப்பை தொடரின் போது ஸ்பான்சர் இல்லாத ஜெர்சியுடன் இந்திய அணி களமிறங்கியது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சராக அப்போலோ டயர்ஸ் நிறுவனம் தேர்வாகி உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.579 கோடிக்கு அப்போலோ டயர்ஸ் உரிமையை பெற்றுள்ளது.
போட்டி ஒன்றுக்கு ரூ.4.5 கோடி வீதம் அப்போலோ டயர்ஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
- டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை.
- போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கி கொள்ளவில்லை.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். அந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
இந்த விவகாரம் சா்ச்சையாகி இருக்கும் நிலையில் இதற்கு பொறுப்பாக போட்டி நடுவா் ஆண்டி பைகிராப்டை (ஜிம்பாப்வே) நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தை ஐ.சி.சி. யிடமும் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) முறையிட்டது.
இந்நிலையில் ஆட்ட நடுவர் ஆண்டி பைகிராஃப்டை நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இருந்து நீக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.
டாஸின்போது இந்திய கேப்டன் சூர்யகுமாருடன் கைக் குலுக்க வேண்டாம் என பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவிடம் ஆண்டி பைகிராஃப்ட் அறிவுறுத்தியதாக PCB குற்றச்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
- ஓமனுக்கு எதிரான போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி பெற்றது.
- ஐக்கிய அரபு அணி கேப்டன் முகமது வாசிம் 54 பந்தில் 69 ரன்கள் விளாசினார்.
துபாய்:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. கேப்டன் முகமது வாசிம் 54 பந்தில் 69 ரன்கள் விளாசினார்.
அடுத்து ஆடிய ஓமன் அணி 18.4 ஓவரில் 130 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் அணி 42 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இப்போட்டியில் அரை சதம் அடித்தன் மூலம், முகமது வாசிம் 83 டி20 போட்டிகளில், 37.71 சராசரி, 154.88 ஸ்ட்ரைக் ரேட்டில் 3,000 ரன்களைக் கடந்தார்.
இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் அதிவிரைவாக மூவாயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற வரலாற்று சாதனையை முகமது வாசிம் படைத்துள்ளார். மேலும், அவர் 1,947 பந்துகளில் 3,000 ரன்களைக் கடந்த ஜாஸ் பட்லர் சாதனையை முறியடித்துள்ளார்.
- ஆப்கானிஸ்தான் அணியின் முதல் போட்டியில் நவீன் உல் ஹக் விளையாடவில்லை.
- அவருக்கு பதிலாக அப்துல்லா அஹ்மத்ஷாய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
துபாய்:
ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நவீன் உல் ஹக் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியின் முதல் போட்டியில் இவர் விளையாடவில்லை.
இந்நிலையில், தோள்பட்டை காயம் முழுமையாக குணமடையாத நிலையில் ஆசிய கோப்பை தொடரிலிருந்து நவீன் உல் ஹக் நீக்கப்பட்டுள்ளார் என ஆப்கானிஸ்தான் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவருக்கு பதிலாக அப்துல்லா அஹ்மட்ஷாய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிரான டி20 தொடரில் தான் அப்துல்லா அஹ்மட்ஷாய் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சையும், 2வது போட்டியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியது.
- ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றது.
புதுடெல்லி:
ஆசியக் கோப்பை தொடரில் சூரியகுமார் தலைமையிலான இந்தியா முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
முதல் போட்டியிலேயே ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்திய இந்தியா, 2வது போட்டியில் பாகிஸ்தனையும் வீழ்த்தியது. குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்துள்ள இந்தியா ரன்ரேட் அடிப்படையில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இதற்கிடையே, போட்டி முடிந்ததும் இந்திய அணி வீரர்கள் கை குலுக்காமல் சென்றது குறித்து பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் போட்டி குறித்து சவுரவ் கங்குலி கூறியதாவது:
இந்திய அணியை அனைத்து நாட்களிலும் வீழ்த்தும் தரம் எந்த ஆசிய அணியிடமும் இல்லை. பாகிஸ்தான் நமக்கு பொருத்தமாக இல்லை என்பதை மரியாதையுடன் சொல்வேன். ஏனெனில் அந்த அணியில் தரம் தடுமாறுவதை என்னால் பார்க்க முடிகிறது.
இந்திய அணி நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா இல்லாமல் விளையாடுகிறது. இந்திய அணி கிரிக்கெட்டில் வெகுதூரம் முன்னோக்கி இருக்கிறது. பாகிஸ்தான் உள்ளிட்ட மற்ற ஆசிய அணிகள் ஓரிரு நாட்களில் நம்மை தோற்கடிப்பார்கள். மற்றபடி பெரும்பாலான நாளில் நாம் சிறந்த அணியாக இருக்கிறோம்.
நான் 15 ஓவருக்கு பின் போட்டியைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிராக மான்செஸ்டர் சிட்டி விளையாடிய கால்பந்து போட்டியை பார்த்தேன். ஏனெனில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே எந்தப் போட்டியும் இல்லை. கடந்த 5 ஆண்டாக இந்தியா–பாகிஸ்தான் போட்டிக்கு எதிர்பார்ப்பு கொடுக்கிறோம். அது உடனடியாக உடைந்து ஒருதலைபட்சமாக முடிகிறது என தெரிவித்தார்.
- போட்டி நடுவா் ஆண்டி பைகிராப்டை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது
- இந்த விவகாரத்தை ஐ.சி.சி. யிடம் பாகிஸ்தான் முறையிட்டு உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். அந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். ஓய்வறை வாசலில் பாகிஸ்தான் வீரர்கள் காத்துக் கொண்டிருந்த போது இந்திய அணி அறைக் கதவு மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
போட்டிக்கு முன்பே மத்திய அரசு மற்றும் பி.சி.சி.ஐ. உடன் ஆலோசித்து பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கப் போவதில்லை என்று முடிவு எடுத்து விட்டதாக கேப்டன் சூர்ய குமார் யாதவ் கூறினார். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
இந்த விவகாரம் சா்ச்சையாகி இருக்கும் நிலையில் இதற்கு பொறுப்பாக போட்டி நடுவா் ஆண்டி பைகிராப்டை (ஜிம்பாப்வே) நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தை ஐ.சி.சி. யிடமும் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) முறையிட்டு உள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவா் மோசின் நக்வி 'எக்ஸ்'தள பதிவில் 'கிரிக்கெட்டின் மூலமாக இருக்கும் எம்.சி.சி.யின் விதிகளை யும், ஐ.சி.சி.யின் நடத்தை விதிகளையும் போட்டி நடுவா் (ஆண்டி பை கிராப்ட்) மீறியது தொடா் பாக ஐ.சி.சி.யிடம் நாங்கள் முறையிட்டுள்ளோம். சம்பந்தப்பட்ட நடுவரை ஆசிய கோப்பை போட்டியில் இருந்து நீக்க வேண்டும் என்று குறிப் பிட்டுள்ளார்.
ஐ.சி.சி. நிராகரிப்பு
பாகிஸ்தானின் இந்த கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டி நடுவர் பைகிராப்டை நீக்கும் மனநிலையில் இல்லை என்று கூறிப்படுகிறது. மோஷின் நக்வியின் கோரிக்கை மீது ஐ.சி.சி. நட வடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை. இதுகுறித்து ஐ.சி.சி. தனது முடிவை விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது.
போட்டி நடுவரை நீக்காவிட்டால் ஆசிய கோப்பை போட்டியில் இருந்து விலகப் போவதாகவும் பாகிஸ்தான் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரிக்க இருப்பதால் அந்த அணி போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரான மோசின் நக்வி ஆசிய கவுன்சிலின் தலைவராக இருக்கிறார். அவர் ஜெய்ஷா தலைவராக இருக்கும் ஐ.சி. சி.யிடம் தான் முறையிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






