என் மலர்
விளையாட்டு
- 22 வயதான ஆனந்த்குமார், சீனியர் ஆண்கள் பிரிவில் 1000 மீட்டர் பிரிவில் விளையாடினார்.
- இதே சாம்பியன்ஷிப்பில் 500 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
சீனாவில் நடைபெற்ற ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த இந்திய இளம் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.
22 வயதான ஆனந்த்குமார், சீனியர் ஆண்கள் பிரிவில் 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் 1:24.924 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இதன் மூலம், ஸ்பீடு ஸ்கேட்டிங் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதற்கு ஒரு நாள் முன்னதாக அவர், இதே சாம்பியன்ஷிப்பில் 500 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற தமிழகவீரர் ஆனந்த்குமார் வேல்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், "2025 ஆம் ஆண்டு ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்பில் சீனியர் ஆண்கள் 1000 மீட்டர் ஸ்பிரிண்டில் தங்கம் வென்றதற்காக ஆனந்த்குமார் வேல்குமாரை நினைத்து பெருமைப்படுகிறேன். அவரது மன உறுதி, வேகம் மற்றும் உற்சாகம் அவரை ஸ்கேட்டிங்கில் இந்தியாவின் முதல் உலக சாம்பியனாக்கியுள்ளது. அவரது சாதனை எண்ணற்ற இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும். அவருக்கும் அவரது அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- வைஷாலி (24) ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று அசத்தியுள்ளார்.
- கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று அசத்தியுள்ளார்.
இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை டான் ஸோங்கி உடன் மோதிய வைஷாலி 11 சுற்றுகளில், 8 புள்ளிகளைப் பெற்று தொடரை வென்றார். வைஷாலி கிராண்ட் செஸ் தொடரை வெல்வது இது இரண்டாவது முறையாகும்.
இதன்மூலம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.
மேலும் இந்த வெற்றியின் மூலம் கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்குத் தேர்வாகியுள்ள மூன்றாவது இந்திய வீராங்கனையாகவும் வைஷாலி மாறியுள்ளார். முன்னதாக இந்திய வீராங்கனைகளான திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பி ஆகியோர் தேர்வாகினர்.
கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற நமது சென்னைப் பெண் வைஷாலிக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி வெறும் ஒரு தனிப்பட்ட மைல்கல் மட்டுமல்ல, சென்னைக்கும், தமிழ்நாட்டிற்கும், இப்போது உலக அரங்கில் தங்கள் கனவுகள் பிரதிபலிப்பதைக் காணும் எண்ணற்ற இளம் பெண்களுக்கும் ஒரு கொண்டாட்டமாகும்" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், " வைஷாலி ரமேஷ்பாபுவுக்கு வாழ்த்துக்கள். இது ஒரு சிறப்பான சாதனை என்றும் அவரது ஆர்வமும், அர்ப்பணிப்பும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிராஜ் 23 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
- சிறந்த வீராங்கனைக்கான விருதை அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர் காஸ்ட் வென்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து கவுரவிக்கிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வென்றார்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ், ஐந்து போட்டிகளில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முக்கிய காரணமாக இருந்தார்.
அதேபோல், சிறந்த வீராங்கனைக்கான விருதை அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர் காஸ்ட் வென்றுள்ளார்.
- 22 வயதான ஆனந்த்குமார், சீனியர் ஆண்கள் பிரிவில் 1000 மீட்டர் பிரிவில் விளையாடினார்.
- இதே சாம்பியன்ஷிப்பில் 500 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் நடைபெற்ற ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த இந்திய இளம் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.
22 வயதான ஆனந்த்குமார், சீனியர் ஆண்கள் பிரிவில் 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் 1:24.924 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இதன் மூலம், ஸ்பீடு ஸ்கேட்டிங் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதற்கு ஒரு நாள் முன்னதாக அவர், இதே சாம்பியன்ஷிப்பில் 500 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- அன்ஷி ராத் 46 பந்தில் 48 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
- மறுமுனையில் நிசாகத் கான் சிறப்பாக விளையாடி 36 பந்தில் அரைசதம் விளாசினார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய 2ஆவது ஆட்டத்தில் இலங்கை- ஹாங்காங் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வன்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஹாங்காங் அணியின் ஜீஷன் அலி, அன்ஷி ராத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜீஷன் அலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, ராத் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜீஷன் அலி 17 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபர் ஹயாத் 4 ரன்னில் வெளியேறினார்.
3ஆவது விக்கெட்டுக்கு அன்ஷி ராத் உடன் நிசாகத் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அன்ஷி ராத் 46 பந்தில் 48 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
மறுமுனையில் நிசாகத் கான் சிறப்பாக விளையாடி 36 பந்தில் அரைசதம் விளாசினார். இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது. இறுதியாக ஹாங்காய் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்துள்ளது.
150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பதும் நிஷாங்கா அதிரடியாக விளையாடி அரைசதமடித்தார். அவர் 68 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்துதடுத்து களமிறங்கியவர்கள் அணிக்கு தங்களது பங்களிப்பை செய்தனர். இறுதியில் இலங்கை அணி 18.5 ஓவர்களில் இலக்கை கடந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
- வைஷாலி கிராண்ட் செஸ் தொடரை வெல்வது இது இரண்டாவது முறை.
- இந்த வெற்றியின் மூலம் கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்குத் தேர்வாகியுள்ள மூன்றாவது இந்திய வீராங்கனையாகவும் வைஷாலி மாறியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று அசத்தியுள்ளார்.
இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை டான் ஸோங்கி உடன் மோதிய வைஷாலி 11 சுற்றுகளில், 8 புள்ளிகளைப் பெற்று தொடரை வென்றார். வைஷாலி கிராண்ட் செஸ் தொடரை வெல்வது இது இரண்டாவது முறை.
இதன்மூலம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.
மேலும் இந்த வெற்றியின் மூலம் கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்குத் தேர்வாகியுள்ள மூன்றாவது இந்திய வீராங்கனையாகவும் வைஷாலி மாறியுள்ளார். முன்னதாக இந்திய வீராங்கனைகளான திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பி ஆகியோர் தேர்வாகினர்.
- நிசாகத் கான் 38 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- அன்ஷி ராத் 46 பந்தில் 48 ரன்கள் எடுத்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய 2ஆவது ஆட்டத்தில் இலங்கை- ஹாங்காங் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வன்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஹாங்காங் அணியின் ஜீஷன் அலி, அன்ஷி ராத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜீஷன் அலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, ராத் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜீஷன் அலி 17 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபர் ஹயாத் 4 ரன்னில் வெளியேறினார்.
3ஆவது விக்கெட்டுக்கு அன்ஷி ராத் உடன் நிசாகத் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அன்ஷி ராத் 46 பந்தில் 48 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
மறுமுனையில் நிசாகத் கான் சிறப்பாக விளையாடி 36 பந்தில் அரைசதம் விளாசினார். இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது. இறுதியாக ஹாங்காய் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்துள்ளது. நிசாகத் கான் 38 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா 2 விக்கெட் வீழ்த்தினார்.
- கடைசி நேரத்தில் குஜராத் 36-38 என்ற கணக்கில் பின்தங்கிய இருந்தது.
- அதன்பின் 37-40 எனத் தோல்வியடைந்தது.
புரோ கபடி லீக் 2025 சீசனின் 33ஆவது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ஹரியானா ஸ்டீலர்ஸ்- குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. முதல் பாதி நேர ஆட்டத்தில் ஹரியானா அணி 25-20 என 5 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலைப் பெற்றது.
2ஆவது பாதி நேர ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் அபாரமாக விளையாடினர். இதனால் போட்டி பரபரப்பாக சென்றது. இரு அணிகளுக்கும் இடையில் 2 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது. கடைசி நேரத்தில் ஹரியானா ரெய்டர்கள் ஷவம் பட்டாரே, ஸ்ரீதர் கடம், வினய் ஆகியோர் தலா ஒரு புள்ளி எடுக்க 40-37 என ஹரியானா வெற்றி பெற்றது. 2ஆவது பாதி நேர ஆட்டத்தில் குஜராத் 17-15 என முன்னிலைப் பெற்றும் பயனில்லை.
- ஐக்கிய அரபு அமீரகத்தின் தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் விளாசினர்.
- ஜுனைத் சித்திக் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம்- ஓமன் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான அலிஷன் ஷரபு- கேப்டன் முகமது வாசீம் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 11 ஓவரில் 88 ரன்கள் குவித்த போது இந்த ஜோடி பிரிந்தது. ஷரஃபு 38 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வாசீம் 54 பந்தில் 69 ரன்கள் விளாசினார். முகமது சோகைப் 13 பந்தில் 21 ரன்களும், ஹரிஷித் கவுசிக் ஆட்டமிழக்காமல் 8 பந்தில் 19 ரன்களும் விளாசினர். ஓமன் அணியின் ஜித்தன் ராமநந்தி 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் 10 பந்தில் 20 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின் 4 வீரர்கள் தொடர்ந்து ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
ஆர்யன் பிஷ்ட் 32 பந்தில் 24 ரன்களும், வினாயக சுக்லா 17 பந்தில் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஓமன் 18.4 ஓவரில் 130 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் 42 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு அமீரகம் அணி சார்பில் ஜுனைத் சித்திக் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
ஐக்கிய அரபு அமீரகம் இரண்டு போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. ஓமன் இரண்டு போட்டிகளிலும் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது. ஏறக்குறைய ஓமன் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இந்தியா 2 போட்டிகளில் இரண்டிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான்- ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
- வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் கேட்டால், அவர்களில் யாரும் ஆசிய கோப்பையில் விளையாட விரும்பவில்லை.
- இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியது வருத்தமாக இருக்கிறது.
துபாய்:
ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் 128 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் நேற்றைய ஆட்டம் முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர். இது கிரிக்கெட் உலகில் பேசு பொருளாகி உள்ளது.
இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது வருத்தமாக இருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
எனக்கு ஒரு விஷயம் நிச்சயம் தெரியும். வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் கேட்டால், அவர்களில் யாரும் ஆசிய கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்திருக்க மாண்டார்கள். ஒரு வகையில், பிசிசிஐ அதற்கு ஒப்புக்கொண்டதால் அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
இந்தியா -பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியது வருத்தமாக இருக்கிறது. ஆனால் சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது வீரர்களிடம் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது குறித்து அவர்களின் தனிப்பட்ட கருத்துகள் என்ன என்று கேட்டால், அவர்கள் வேண்டாம் என்று சொல்லியிருப்பார்கள் என்பதையும் நான் உண்மையாகச் சொல்ல முடியும். அவர்களில் யாரும் விளையாட விரும்பவில்லை.
என ரெய்னா கூறினார்.
- பெண்கள் 4 பிரிவில் பதக்கம் வென்றனர்.
- ஆண்கள் பிரிவில் ஒருவர் கூட பதக்கம் வெல்லவில்லை.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீராங்கனைகள் பதக்கம் வென்று அசத்தினர்.
ஜெய்ஸ்மின் லம்போரியா 57 கிலோ எடைப்பிிவில் தங்கம் வென்றார். அதேபோல் 48 கிலோ எடைப்பிரிவில் மீனாட்சி ஹூடா தங்கம் வென்றார். பூஜா ராணி 80 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கமும், நுபுர் ஷொரன் 80 கிலோ எடைக்கு மேல் எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
ஜெய்ஸ்மின் பதக்கம் வென்ற பிரிவைத் தவிர்த்து, மற்ற மூன்று வீராங்கனைகள் வெற்றி பெற்ற பிரிவு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இடம்பெறாதைவாகும். இதனால் போட்டிகள் கடுமையாக இல்லை எனக் கூறப்படுகிறது. நுபுர் பிரிவில் 10 வீராங்கனைகள்தான் கலந்து கொண்டனர். 80 கிலோ எடைப்பிரிவில் 12 வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
வீராங்கனைகள் பிரிவுகளிலாவது 4 பதக்கம் கிடைத்தது. ஆண்கள் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை.
ஜட்டுமணி சிங் (50 கிலோ) அபினாஷ் ஜாம்வால் (65 கிலோ) ஆகியோர் மட்டுமே காலிறுதிக்கு முன்னேறினர். மறற வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக முதல் ரவுண்டிலேயே தோல்வியடைந்தனர்.
உலக குத்துச் சண்டை சங்கம் பிரச்சனை காரணமாக இந்திய வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு இரண்டு தொடர்களில் மட்டுமே விளையாடியுள்ளனர். வீராங்கனைகள் ஒரேயொரு தொடரில் மட்டும்தான் விளையாடியுள்ளனர்.
- போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம்.
- நேற்றைய போட்டியில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர்.
ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே அடித்தது.
பின்னர் 128 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் நேற்றைய ஆட்டம் முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர். இந்த வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடி தீர்த்தனர்.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து இந்திய துணை கேப்டன் சுப்மன் கில் தனது எக்ஸ் பக்கத்தில் உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார்.
அதில், "இன்றைய வெற்றி பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நம்மைப் பாதுகாக்கும் துணிச்சல்மிக்க நமது ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. இந்தியாவின் உணர்வு களத்திலும் வெளியிலும் வாழ்கிறது. ஜெய் ஹிந்த்!" என்று பதிவிட்டுள்ளார்.






