என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தேர்தல் செய்திகள்
வேலூர் மக்களவை தொகுதியில் வருகிற ஆகஸ்ட் 5ந்தேதி வாக்கு பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9ந்தேதி நடைபெறும்.
வேலூர் மக்களவை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி. சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு வேலூர் ஒடுகத்தூரில், ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசும்பொழுது, இந்த முறை இரு பருவமழைகளும் பொய்த்துள்ளது. ஆனாலும் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது.
100 நாள் வேலை திட்டத்தை ஒருபோதும் நிறுத்த மாட்டோம். வேலூர் ஒடுகத்தூர் பேருந்து நிலையம் நவீனமயமாக்கப்படும் என கூறினார்.
இதேபோன்று வேலூர் லத்தேரியில் பொதுமக்களிடையே அவர் பேசும்பொழுது, வருகிற 2023ம் ஆண்டுக்குள் தமிழகம் குடிசை இல்லா மாநிலமாக மாறும். பொதுமக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்றும் கூறினார்.
திருப்பதி:
நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜாவுக்கு ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அவர் பதவியேற்று முதல் முறையாக நகரி தொகுதிக்கு வந்தார். அவரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரும், ஆதரவாளர்களும் வரவேற்றனர்.
நகரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து அவர், கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுடன் ஏராளமான பைக்குகளில் ஊர்வலமாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.
நகரியில் புதிதாக அமைக்கப்பட்ட முன்னாள் முதல் அமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் உருவச்சிலையை நடிகை ரோஜா திறந்து வைத்தார். அப்போது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என பொதுமக்கள் தீர்மானித்தனர். ஜெகன்மோகன்ரெட்டி ஆந்திராவில் பாதயாத்திரை மேற்கொண்டபோது, அவர் பொதுமக்களை நேரில் சந்தித்து பல நல்ல வாக்குறுதிகளை அறிவித்தார்.
இதனால் தான் பொதுமக்கள் அவரை முதல் அமைச்சர் பதவியில் அமர வைத்துள்ளனர். பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்வதில் ஜெகன்மோகன் ரெட்டியைப்போல் ஒரு தலைவர் யாரும் இருக்க முடியாது.
நகரி தொகுதியில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். இங்குள்ள இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். எனக்கு இந்த பதவியை வழங்கிய ஜெகன்மோகன் ரெட்டிக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
இந்த பதவியில் நான் நியாமாக இருந்து பொதுமக்களுக்கு பல வளர்ச்சி பணிகளை மேற்கொள்வேன். தொகுதியில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது திரைப்பட இயக்குனரும், கணவருமான ஆர்.கே.செல்வமணி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர், ஆதரவாளர்கள் பலர் உடனிருந்தனர்.
திருச்சி:
தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் புதுடெல்லியில் அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 300 விவசாயிகள், கடந்த 25 மற்றும் 26-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி உண்ணாவிரதம் , பாராளுமன்ற முற்றுகை போராட்டங்களை நடத்தினர்.
மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிரதமர் அலுவலகத்தில் தீர்மான கடிதத்தையும் கொடுத்தனர். விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, டெல்லியில் இருந்த தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி.க்கள், புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோர் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 300 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். அதன் பிறகு 2 நாள் போராட்டத்தை முடித்துக்கொண்ட விவசாயிகள் சென்னை புறப்பட்டுள்ளனர். 31-ந்தேதி அவர்கள் சென்னைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தஞ்சைக்கு திரும்பிய ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, 2 நாட்கள் போராட்டம் வெற்றிக்கரமாக அமைந்தது. அனைத்து தரப்பினரையும் இந்த போராட்டம் சென்று சேர்ந்துள்ளது. பிரதமர் அலுவலகத்தில் எங்கள் கோரிக்கை தீர்மானத்தை கொடுத்துள்ளோம். எங்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த பலர் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை டெல்டா மாவட்டத்தில் நிறைவேற்றாது என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இனி டெல்டா பகுதிகளில் புதிதாக எண்ணை குழாய்களை பதிக்க உள்ளே வராது. தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாசின் முத்துவிழா பொதுக்கூட்டம் தி.நகர் முத்துரங்கன் சாலையில் நடந்தது. மாநில துணை பொதுசெயலாளர் சகாதேவன் தலைமை தாங்கினார். வடக்கு மண்டல இணை பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தி தமிழ்நாடு முழுவதும் 90 ஆயிரம் மதுக்கடைகளை மூடியவர் நமது நிறுவனர். அடுத்த 20 வருடங்களில் நாட்டில் என்ன நடக்கும் என்பதை அறிந்து அதற்கேற்ப திட்டங்களை செய்வார்.
இன்று காலநிலை மாற்றம் பற்றி பேசுகிறார்கள். மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னையில் குடிக்க தண்ணீர் இல்லை. ஐரோப்பாவில் 42.6 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் நிலவுகிறது. உலகம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இதை முன்பே உணர்ந்து தான் பசுமை தாயகம் அமைப்பை தொடங்கி பல்லாயிரக்கணக்கான மரங்களை நட்டுள்ளார்.
சமூக நீதிக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி பல இட ஒதுக்கீடுகளை பெற்று தந்திருக்கிறார். 3 இடஒதுக்கீடுகளை பெற்று தந்த ஒரே தலைவர் நமது தலைவர். இடஒதுக்கீடு என்பது சலுகை கிடையாது. அது மக்களின் உரிமை.
ஆட்சிக்கு வர வேண்டும், பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் நமக்கு கிடையாது.
பாராளுமன்ற தேர்தலில் மக்கள் ஏமாந்து விட்டீர்கள். 5 பவுன் நகைக் கடன் தள்ளுபடி என ஸ்டாலின் சொன்னதை நம்பியா ஓட்டு போட்டீர்கள்? அவரால் என்ன செய்ய முடியும். அவர் எதிர்க்கட்சி தலைவர். அவரால் சட்டசபையில் தினமும் வெளிநடப்பு தான் செய்ய முடியும்.
நீங்கள் இன்னும் வெகுளியாக இருக்கிறீர்கள். நன்றாக சிந்தியுங்கள். 17 ஆண்டுகளாக வரைவு அறிக்கை தாக்கல் செய்த ஒரே கட்சி பா.ம.க. 2001-ல் இருந்து மாதிரி பட்ஜெட் போட்டுக் கொண்டிருக்கிறோம்.
தேர்தல் அறிக்கையில் பல்வேறு நல்ல திட்டங்களை கூறி இருந்தோம். ஆனால் 1 இடத்திலும் வெற்றியை மக்கள் தரவில்லை.
எங்களை பொறுத்தவரை கூட்டணிக்காக தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என முதல்-அமைச்சரிடம் கூறி உள்ளோம். அதற்காக நாங்கள் எந்த அளவுக்கும் பாடுபடுவோம். அதையும் மீறி ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வந்தால் அதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். கூட்டணியை பற்றி எங்களுக்கு கவலை கிடையாது. நாங்கள் அடையாளத்துக்காக கட்சி நடத்தவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
வேலூர் பாராளுமன்ற தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி ஆகியோருக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 27, 28 மற்றும் ஆகஸ்ட் 2 -ம் தேதி என 3 நாள் பிரசாரம் செய்ய உள்ளார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாணியம்படி, ஆம்பூர், கீழ்வைத்தியணான்குப்பம், குடியாத்தம் அணைக்கட்டு வேலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் தொடங்கும் 27-ந்தேதி கதிர் ஆனந்தை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் பிரசாரம் மேற்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. டி.என்.முருகானந்தம், காங்கிரஸ் பொதுச்செயலாளர் சிரஞ்சீவி ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. முனிரத்தினம் தலைமையிலான தேர்தல் பணிக்குழுவோடு இணைந்து பணியாற்றுவார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி இருக்கிறார்.
வேலூர் பாராளுமன்ற தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி ஆகியோருக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட தமிழகம் முழுவதும் இருந்து கட்சியினர் ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு, வேலூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
வெளி மாவட்டத்தில் இருந்து தேர்தலுக்காக வந்துள்ளவர்கள் தங்குவதற்கு தனியார் திருமண மண்டபம், விடுதி, ரெசிடென்சி ஆகியவை முன்பதிவு ஆகிவிட்டது. இதனால் அரசியல் கட்சியினர் தங்குவதற்கு வீடுகளை குறிவைக்கின்றனர். 10 நாள் வாடகைக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வீட்டின் உரிமையாளர்கள் கேட்கின்றனர்.
பிரசாரத்திற்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் வீட்டின் உரிமையாளர் கேட்கும் பணத்தை கொடுத்து அரசியல் கட்சியினர் தங்குகின்றனர். பண்ணை வீடுகளுக்கு கிராக்கி அதிகமாக உள்ளது. அந்த வீடுகளை அரசியல் கட்சியினர் ஆர்வமாக கேட்கின்றனர். சிலர் அரசியல் பிரமுகர்களுக்கு வீடு கொடுக்க தயங்குகின்றனர். ஏதாவது பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்று வீடு கொடுக்க மறுக்கின்றனர்.
ஆம்பூர் என்றாலே பிரியாணிக்கு பெயர் பெற்றது ஆகும். ஏற்கனவே ஆம்பூரில் பிரியாணி வியாபாரம் நன்றாக இருக்கும். தற்போது வெளியூர் நபர்கள் ஆம்பூரில் வந்து குவிந்துள்ளதால் அனைத்து பிரியாணி ஓட்டல்களிலும் வியாபாரம் சக்கை போடு போடுகிறது. வியாபாரம் அதிகரித்துள்ளதால் ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்யும் அரசியல் பிரமுகர்கள் மதிய உணவுக்காக ஆம்பூர் பிரியாணியை தேடி செல்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்