search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.ஆர்.பாண்டியன்
    X
    பி.ஆர்.பாண்டியன்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றாது- பி.ஆர்.பாண்டியன் நம்பிக்கை

    டெல்லியில் 2 நாட்கள் நடத்திய போராட்டத்தால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றாது என்று பி.ஆர்.பாண்டியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    திருச்சி:

    தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் புதுடெல்லியில் அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 300 விவசாயிகள், கடந்த 25 மற்றும் 26-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி உண்ணாவிரதம் , பாராளுமன்ற முற்றுகை போராட்டங்களை நடத்தினர்.

    மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிரதமர் அலுவலகத்தில் தீர்மான கடிதத்தையும் கொடுத்தனர். விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, டெல்லியில் இருந்த தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி.க்கள், புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோர் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

    புதுவை முதல்வர் நாராயணசாமி

    கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 300 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். அதன் பிறகு 2 நாள் போராட்டத்தை முடித்துக்கொண்ட விவசாயிகள் சென்னை புறப்பட்டுள்ளனர். 31-ந்தேதி அவர்கள் சென்னைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே தஞ்சைக்கு திரும்பிய ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, 2 நாட்கள் போராட்டம் வெற்றிக்கரமாக அமைந்தது. அனைத்து தரப்பினரையும் இந்த போராட்டம் சென்று சேர்ந்துள்ளது. பிரதமர் அலுவலகத்தில் எங்கள் கோரிக்கை தீர்மானத்தை கொடுத்துள்ளோம். எங்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த பலர் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை டெல்டா மாவட்டத்தில் நிறைவேற்றாது என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

    ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இனி டெல்டா பகுதிகளில் புதிதாக எண்ணை குழாய்களை பதிக்க உள்ளே வராது. தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×