search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cottage"

    • வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.
    • தீவிபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 65) இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளனர்.

    ஏகாம்பரம் சுமை தூக்கும் தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவரது கூரை வீட்டில் திடீரென தீ பிடித்தது எரிய தொடங்கியது. பின்னர் வீட்டில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்களும் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    இதனால் வீடு முழுவதும் தீ பரவி கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

    இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முடியவில்லை.

    அதற்குள் வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.

    தீவிபத்து குறித்து தகவல் அறிந்த பாபநாசம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த தளவாட சாமான்கள், மின் சாதனங்கள், கட்டில் பீரோ, புடவை என ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

    தீவிபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • காங்கயம் அருகே அய்யாசாமி நகா் காலனி பகுதியில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • கட்டடம் கட்டத் தேவைப்படும் பொருட்களை வைப்பதற்காக தகரத்தால் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது.

    காங்கயம்:

    காங்கயம் அருகே அய்யாசாமி நகா் காலனி பகுதியில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன் அருகே கட்டடம் கட்டத் தேவைப்படும் பொருட்களை வைப்பதற்காக தகரத்தால் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை மதியம் அந்த கொட்டகையில் திடீரெனெ தீப் பிடித்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா்.இது குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • விறகு அடுப்பில் இருந்த தீ அருகே உள்ள ஓலை குடிசையில் பற்றியது.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குடிசையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.4444444444444444

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் டேம் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (64). இவர் தென்னங்கீற்று வேய்ந்த தகர சீட்டு போட்ட குடிசை வீட்டில் மனைவி சிவகாமியுடன் குடியிருந்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பொன்னுசாமியின் மனைவி சிவகாமி குளிப்ப தற்காக குடியிருக்கும் வீட்டின் அருகே விறகு அடுப்பில் சுடுநீர் வைத்து உள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக விறகு அடுப்பில் இருந்த தீ அருகே உள்ள ஓலை குடிசையில் பற்றியது. உடனே தீயை அணைக்க முயன்ற பொன்னுசாமி இந்த தீ விபத்து குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குடிசையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த துணிகள், ரொக்க பணம் ரூ.2 ஆயிரம் தீயில் கருகியது.

    மேலும் குடிசை அருகே இருந்த கன்று குட்டிக்கு லேசான தீ காயம் ஏற்பட்டது.இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×