என் மலர்
தேர்தல் செய்திகள்

மும்பை வடக்கு பாராளுமன்ற தொகுதியின் எம்.பி.யாக பதவி வகிப்பவர் கோபால் ஷெட்டி. பாஜகவை சேர்ந்த இவர் இந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பிரபல நடிகை ஊர்மிளா மட்டோன்கர் களமிறங்கியுள்ளார்.
இருவருக்கும் இடையில் இங்கு கடுமையான போட்டி நிலவிவரும் நிலையில் சமீபத்தில் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் நாடு முழுவதும் பாஜக 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என வெளியாகிவரும் தகவல்கள் பாஜகவினருக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனைதொடர்ந்து, பிரதமர் மோடியின் முகமூடிகளை அணிந்தவாறு நூற்றுக்கணக்கானவர்கள் லட்டு, மைசூர்பா, பால்கோவா உள்ளிட்ட இனிப்புகளை தயாரித்து வருகின்றனர்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடந்த தேர்தலில் 67.11 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
வேலூர் தவிர 542 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அந்தந்த பகுதி ஓட்டு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
மின்னணு எந்திரங்கள் இருக்கும் அறையை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தவிர கட்சிகளின் முகவர்களும் மின்னணு எந்திரங்களின் பாதுகாப்புக்காக அங்கேயே தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். வெளியில் இருந்தபடியே ரேடியோ அலைகள் மூலம் மின்னணு எந்திரங்களில் உள்ள பதிவை மாற்ற முடியும் என்ற புதிய குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் நாடு முழுவதும் சில குறிப்பிட்ட தொகுதிகளில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. சமீபத்தில் தேனி, மதுரை தொகுதிகளில் அப்படி எந்திரங்களை மாற்ற முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் இதற்கு விளக்கம் அளித்தனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்னணு எந்திரங்களை கொண்டு சென்று இருப்பு வைப்பதாக தெரிவித்தனர். அதன் பிறகே அமைதி திரும்பியது.
இந்த நிலையில் வட மாநிலங்களில் பல தொகுதிகளில் மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக தகவல்கள் பரவியபடி உள்ளன. குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இந்த பரபரப்பு அதிகளவில் பரவி உள்ளது.
அந்த சமூக வலைதள தகவல்களில் மின்னணு எந்திரங்களை ஒட்டு மொத்தமாக மாற்றவும் சில இடங்களில் மின்னணு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்யவும் முயற்சி நடப்பதாக படங்களுடன் தகவல்கள் பரவியது. இதனால் எதிர்க்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள காசிப்பூர் தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் மத்திய மந்திரி மனோஜ்சின்கா, பகுஜன் சமாஜ் சார்பில் அப்சல் அன்சாரி போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் பதிவான வாக்குகளை கொண்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்குள் நேற்று இரவு சிலர் செல்ல முயன்றனர்.
அவர்கள் அங்கிருந்த மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஒரு வாகனத்தில் ஏற்றி செல்ல முயன்றதாக தகவல் பரவியது. இதையடுத்து ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறை முன்பு அன்சாரியும் அவரது ஆதரவாளர்களும் திரண்டு வந்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் காசிப்பூர் தொகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
இதற்கிடையே உத்தர பிரதேச மாநிலம் சந்தவுலி தொகுதியிலும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக தகவல் பரவியது. இந்த தொகுதிக்குரிய மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்துக்கு நேற்று இரவு ஒரு லாரியில் ஏராளமான எந்திரங்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டன.
ஓட்டுப்பதிவு நிறைவு பெற்று 2 நாட்களுக்கு பிறகு லாரியில் இருந்து புதிதாக மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் இறக்கப்பட்டதால் அந்த தொகுதி சமாஜ்வாடி தொண்டர்களுக்கு சந்தேகம் எழுந்தன. அவர்கள் அதை வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.
சந்தவுலி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்காக திட்டமிட்டு ஓட்டுப்பதிவு எந்திரங்களை மாற்றுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டது. ஆனால் இதை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சந்தவுலி தொகுதியில் 35 மின்னணு எந்திரங்கள் முன் எச்சரிக்கையாக வைக்கப்பட்டு இருந்தன. ஏதாவது வாக்குச்சாவடியில் எந்திரங்கள் பழுதானால் அங்கு பயன்படுத்துவதற்காக இந்த 35 ஓட்டுப்பதிவு எந்திரங்களும் கையிருப்பு வைக்கப்பட்டு இருந்தன. அந்த 35 எந்திரங்களைதான் நாங்கள் லாரியில் இருந்து எடுத்து வந்து இறக்கி வைத்தோம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் இதை சமாஜ்வாடி தொண்டர்கள் ஏற்க மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
உத்தரபிரதேசத்தில் டுமரியாகஞ்ச் தொகுதியிலும் மினி லாரி மூலம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொண்டு வந்து மாற்றம் செய்யப்பட்டதாக பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த தொகுதியில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தது.
போராட்டங்கள் வலுத்ததால் மினி லாரியில் கொண்டு வரப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து எடுத்து வேறு பகுதிக்கு கொண்டு சென்றனர்.
ஜான்சி தொகுதியிலும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சி நடந்ததாக சமூக வலைதளங்களில் நேற்று முதல் பரபரப்பு தகவல் வெளியானது. பஞ்சாப், அரியானா, பீகார் மாநிலங்களிலும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பீகாரில் மகாராஜ் கஞ்ச், சரண் தொகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களுடன் லாரிகள் சுற்றி வருவதை லாலு பிரசாத் கட்சி தொண்டர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதனால் பீகாரிலும் பல இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்றது. வட மாநிலங்களில் சுமார் 20 தொகுதிகளில் மின்னணு எந்திரங்களை மாற்ற முயற்சி நடந்ததாக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளை தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிரடியாக மறுத்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மாற்றப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி உள்ள தகவல்களில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. தேவையில்லாமல் வதந்தியை பரப்பும் வகையில் இதை யாரோ செய்துள்ளனர். திட்டமிட்டு இத்தகைய சதியில் யாரோ ஈடுபட்டுள்ளனர்.
எந்த ஒரு தொகுதி வாக்குகளும் தில்லுமுல்லு செய்து மாற்றப்படவில்லை. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் உரிய முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த எந்திரங்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றன.
நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்களும், ஒப்புகை சீட்டு எந்திரங்களும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில்தான் சீல் வைத்து மூடப்பட்டன. அப்படி சீல் வைக்கப்பட்டது முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீல் வைக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படையினர் ஒவ்வொரு ஓட்டு எண்ணும் மையம் முன்பும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இத்தகைய பலத்த பாதுகாப்பை மீறி யாரும் உள்ளே சென்று விட முடியாது.
தேர்தல் ஆணையம் செய்துள்ள பாதுகாப்பை தவிர வேட்பாளர்களும் தங்களது முகவர்கள் மூலம் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு பாதுகாப்பில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் 24 மணி நேரமும் அங்குதான் இருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் மீறி எப்படி மின்னணு எந்திரங்களை கடத்தி சென்று விட முடியும். எனவே அடிப்படை ஆதாரமே இல்லாத இத்தகைய குற்றச்சாட்டுகளை யாரும் நம்ப வேண்டாம்.
உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் பயன்படுத்தாத அதாவது கையிருப்பு வைக்கப்பட்டு இருந்த மின்னணு எந்திரங்களை கொண்டு சென்றபோது தான் அதுபற்றி தெரியாமல் வதந்தியை பரப்பி விட்டனர். அத்தகைய இடங்களில் மின்னணு எந்திரம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதை அனைத்துக் கட்சியினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனால் பிரச்சினை தீர்ந்துள்ளது. பயன்படாத மின்னணு எந்திரங்களை கொண்டு செல்வது தொடர்பாக இப்போது நாங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம்.
ஜான்சி தொகுதியிலும் பயன்படாத மின்னணு எந்திரங்களை கொண்டு சென்றதால்தான் கட்சி தொண்டர்கள் சந்தேகத்தில் வதந்தியை பரப்பிவிட்டனர். தற்போது அங்கும் உரிய விளக்கம் அளித்த பிறகு பிரச்சினை தீர்ந்துள்ளது.
இவ்வாறு அந்த தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்புகள் சரியானது அல்ல. அவை மாற வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த கருத்து கணிப்புகளை நம்ப வேண்டாம் என்று அறிவித்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் கருத்து கணிப்புகள் தொடர்பாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர் தனது கருத்தை ஆடியோவில் பதிவு செய்து வெளியிட்டு இருக்கிறார். அந்த ஆடியோ பதிவில் பிரியங்கா கூறி இருப்பதாவது:-
காங்கிரஸ் தொண்டர்களே... எனது அருமை சகோதர, சகோதரிகளே... தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் என்பது வெறும் புரளியாகும். இந்த புரளிகளை நம்பி நீங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள். உங்கள் தைரியத்தை உடைப்பதற்காகவே இத்தகைய வதந்தி பரவி உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் ஒருபோதும் தைரியத்தை இழக்கக்கூடாது.
மிக முக்கியமாக இந்த சமயத்தில்தான் நீங்கள் மிகமிக உஷாராக இருக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் நீங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும். உங்கள் கடின உழைப்பு நிச்சயமாக வீண் போகாது. உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் உறுதியாக கிடைக்கும். நம்பிக்கையோடு இருங்கள்.

ராகுல்காந்தியும் கருத்து கணிப்புகளை நம்ப வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளார். மாநில கட்சி தலைவர்களில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் கருத்து கணிப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை திசை திருப்புவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
கருத்து கணிப்பு என்ற பெயரில் பரபரப்பு வதந்தியை ஏற்படுத்தி விட்டு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் கடந்த 19-ந்தேதியுடன் நிறைவு பெற்றது.
இதைத்தொடர்ந்து வெளியான கருத்துக்கணிப்புகளில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி, கேரள மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை பா.ஜனதா களம் இறக்கியது.

ஆனால், ராகுல்காந்தி அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதியிலும் வெற்றி பெறுவார். அமேதியில் அவர் ராஜினாமா செய்தால், இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரசார் தெரிவித்தனர். என்றாலும் ராகுலுக்கு எதிராக ஸ்மிருதி இரானி தீவிரமாக பிரசாரம் செய்தார்.
அமேதியில் 5-ம் கட்ட தேர்தலாக கடந்த மே-6ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது 57,33 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கடைசி கட்ட தேர்தல் நேற்று முன்தினம் மாலை முடிந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாயின.
இந்தியா டுடே, சி.என்.எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் கூறும் போது, “ராகுல்காந்தி அமேதியில் வெற்றி பெறுவார். ஆனால் ஸ்மிருதி இரானி அவருக்கு கடும் போட்டியைத்தருவார். அதனால் வாக்குகள் வித்தியாசம் பயமுறுத்தும் வகையில் இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும், 100 சதவீதம் இந்த நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த ஒரு அமைப்பு பொதுநல மனுவாக தாக்கல் செய்தது.

முன்னதாக, 50 சதவீத வாக்கு எண்ணும் இயந்திரங்களுடன் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களின் வாக்குகளையும் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், 21 எதிர்க்கட்சிகள் மனு தாக்கல் செய்து இருந்தன.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரு மக்களவை தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதி ஒவ்வொன்றிலும், தலா 5 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச்சீட்டையும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவை, கடந்த மே 7 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில், 23.5.2019 அன்று வாக்கு எண்ணும் பணிக்கு முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் கழக உடன்பிறப்புகள் மிகவும் கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று கழகத்திற்கு அர்ப்பணிக்கும் வகையில் பின்வரும் அம்சங்களை நினைவில் கொண்டு பணியாற்றுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 23.5.2019 அன்று, கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் உங்களுடைய மையங்களுக்கு காலை 6 மணிக்கே சென்று விட வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தும் முறைப்படி செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
வாக்குப்பதிவு எந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பதிவான வாக்குகளும், எண்ணிக்கையில் காட்டப்படும் வாக்குகளும் ஒரே எண்ணிக்கையில் உள்ளனவா என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடியும் போதும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் எத்தனை வாக்குகள் கிடைத்துள்ளன என்பதை எழுதி வைத்துக்கொண்டு, அதை தேர்தல் அதிகாரியிடம் சரிபார்க்க வேண்டும். அதன் பின்னர் தான் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரேனும் மாற்றுக் கட்சியினருக்கு ஆதரவாகவும், முறைகேடாகவும் செயல்படுகிறார்களா என்பதை தீவிரமாக கண்காணித்து, குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வினை காண வேண்டும்.
தி.மு.க.வினர் தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் கைதேர்ந்தவர்கள் என்பதை இந்த நாடே நன்கு அறியும். இதற்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்லலாம். ஆகவே, வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க.வினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை விழிப்போடு கண்காணித்து, அது சம்பந்தமாக மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வு காண வேண்டும்.
கழகம் மற்றும் தோழமைக் கட்சிகளின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் உங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அங்கிருந்து வெளியில் வர வேண்டும்.
கழகம் மற்றும் தோழமைக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள தலைமை ஏஜெண்டுகளும், தங்களுக்கான வாக்கு எண்ணும் மையங்களில், வாக்கு எண்ணும் பணி முறையாக நடைபெறுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
கழகத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் விழிப்புடன் இருந்து பணியாற்றுங்கள். இது, ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை எத்தகைய அம்சங்கள் தீர்மானித்துள்ளன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக லோக்நிதி அமைப்பு சார்பில் சர்வே நடத்தப்பட்டது.
குறிப்பாக வாக்களிக்கும்போது பிரதமர் யார் என்ற விஷயம் கவனத்தில் கொள்ளப்பட்டதா? என்று அந்த கருத்துக் கணிப்பில் ஆய்வு செய்யப்பட்டது.
அதில், மோடியின் தலைமை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை, பா.ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு மிக, மிக சாதகமாக இருந்தன என்று தெரிய வந்துள்ளது. பா.ஜனதா வேட்பாளர்கள் மீது கடும் அதிருப்தி இருந்தாலும் மோடிக்காக, பா.ஜனதா கட்சிக்கு வாக்களித்ததாக பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர்.
அந்த வகையில் 44 சதவீதம் பேர் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள், படித்தவர்கள். மற்ற மாநிலங்களை விட இந்தி பேசும் மாநிலங்களில் மோடிக்கு மிக அதிக ஆதரவு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு இத்தகைய தனிப்பட்ட செல்வாக்கு எதுவும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. அவரை 24 சதவீதம் பேர்தான் ஆதரித்துள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் தற்போது மோடியின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. பா.ஜனதா தொண்டர்களில் 80 சதவீதம் பேர் 2014-ல் மோடியை ஆதரித்து இருந்தனர். தற்போது அது 87 சதவீதமாக உயர்ந்துள்ளது. காங்கிரசை சேர்ந்தவர்களில் 7 சதவீதம் பேரும், பகுஜன்சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்களில் 11 சதவீதம் பேரும் மோடிக்கு ஆதரவளித்துள்ளனர்.
மோடி பிரதமர் வேட்பாளராக இல்லாமல் இருந்திருந்தால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து இருக்க மாட்டேன் என்று 32 சதவீதம் பா.ஜனதா தொண்டர்கள் தெரிவித்தனர். மற்ற கட்சிகளில் இருக்கும் மோடி மீதான அனுதாபிகளும் இதே கருத்தை வெளியிட்டனர். இதன் மூலம் மோடிக்கு பா.ஜனதாவையும் தாண்டி மற்ற கட்சிகளிலும் செல்வாக்கு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
கட்சிக்காக வாக்களித்ததாக அனைத்து மாநிலங்களிலும் கணிசமானவர்கள் கூறியுள்ளனர். அது போல வேட்பாளரை பார்த்து வாக்களித்ததாக பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர்.
பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, ஜார்க்கண்ட் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் பிரதமர் யார் என்பதை பொருத்து வாக்களித்து இருப்பதாக கணிசமானவர்கள் கூறியுள்ளனர். எனவே இந்தி பேசும் மாநிலங்களில் மோடிக்காக பா.ஜனதா கட்சிக்கு அதிக அளவு வாக்குகள் விழுந்தது தெரிய வந்துள்ளது.
ஒட்டுமொத்தத்தில் 46 சதவீதம் பேர் கட்சியை பார்த்து வாக்களித்துள்ளனர். 32 சதவீதம் பேர் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை பார்த்து வாக்களித்துள்ளனர். 17 சதவீதம் பேர் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பார்த்து ஓட்டு போட்டுள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடந்த தேர்தலில் 67.1 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்த வாக்குகளை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) எண்ணி முடிவுகள் அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாரதிய ஜனதா தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளன. இதனால் காங்கிரஸ் மற்றும் 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கலக்கம் அடைந்துள்ளனர்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வரும் வரை எதிர்க்கட்சிகள் மிகவும் உற்சாகமாக இருந்தன. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருவதைத் தடுக்க என்னென்ன செய்யலாம் என்றும் ஆலோசித்து வந்தன. கருத்துக் கணிப்புகள் வந்ததும் எதிர்கட்சிகளின் செயல்பாடுகளில் மந்தம் ஏற்பட்டது.
என்றாலும் எதிர்க்கட்சித் தலைவர்களை ஓரணியில் திரட்டும் முயற்சிகளில் ஆந்திர முதல்-மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கடந்த வாரம் அவர் காங்கிரஸ், ஆம்ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.
நேற்று மீண்டும் கொல்கத்தா சென்று மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசினார். சுமார் 45 நிமிடம் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது காங்கிரஸ் ஆதரவுடன் மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மத்தியில் ஆட்சி அமைப்பது பற்றி அவர்கள் விரிவான ஆலோசனை நடத்தியதாக தெரிய வந்துள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் அடுத்தடுத்த முயற்சி காரணமாக நேற்று சோனியாவை மாயாவதி சந்தித்து பேச முடிவு செய்திருந்தார். ஆனால் கருத்துக் கணிப்பு முடிவைத் தொடர்ந்து மாயாவதி தனது டெல்லி பயணத்தை ரத்து செய்தார். அவர் நேற்று அகிலேஷ் யாதவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் மாநில கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சிகளை சந்திரபாபு நாயுடு மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து டெல்லியில் இன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர். இன்று மதியம் தொடங்கி பிற்பகல் வரை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் உள்பட 21 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், அந்த அரசியல் சூழலுக்கு ஏற்ப செயல்படுவது பற்றி விவாதிக்கப்படுகிறது. எனவே இன்றையக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் ஒருமித்த கருத்து உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் இன்று பிற்பகல் 21 எதிர்க்கட்சித் தலைவர்களும் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்க திட்டமிட்டுள்ளனர். ஓட்டு எண்ணிக்கையின் போது ஒப்புகை சீட்டு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் சில கோரிக்கைகளில் பிடிவாதமாக உள்ளன.
ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஏதாவது 5 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளுடன், ஒப்புகைச்சீட்டு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணி ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மொத்தம் பதிவான வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை ஒப்புகை சீட்டு எந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் எண்ணி சரி பார்க்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கூறி வருகிறார்.
ஓட்டு எண்ணிக்கையின் போது, மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளிலும், ஒப்புகை சீட்டு எந்திரங்களிலும் குளறுபடி இருப்பது தெரிய வந்தால் அந்த தொகுதியில் முழுமையாக மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள். இதை வலியுறுத்தி 21 கட்சித் தலைவர்களும் இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் மனு கொடுக்க உள்ளனர்.
தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க செல்லும் குழுவில் காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வி, அகமது படேல், ஆம்ஆத்மி சார்பில் சஞ்சய்சிங், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சீதாராம் யெச்சூரி, பகுஜன் சமாஜ் சார்பில் சதீஷ் மிஸ்ரா, தெலுங்கு தேசம் சார்பில் சந்திரபாபு நாயுடு, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் டெரிக் ஓபிரைன், தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடந்துள்ளததாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சியினர் பேச முடிவு செய்துள்ளனர்.
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் பாஜக தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இன்று கூட்டணி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா விருந்து அளிக்கிறார். இதற்காக அனைத்து மாநிலங்களில் இருந்தும் கூட்டணி தலைவர்கள் டெல்லி சென்றுள்ளனர்.
இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் மத்தியில் பாஜக அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தோப்பு வெங்கடாசலம் கட்சி பதவியை ராஜினாமா செய்தது குறித்து கேட்டபோது, இதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என ஓபிஎஸ் கூறினார்.

மேலும் இந்த வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன. மற்ற கட்சிகளை பொறுத்தமட்டில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற சில கட்சிகள் கூட்டணி அமைத்தும், பல கட்சிகள் தனித்தனியாகவும் களம் கண்டன.
மத்தியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும். வருகிற 23-ந் தேதி (வியாழக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போதுதான் ஆட்சி அமைப்பது யார்? என்பது தெரியவரும்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாயின. அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டு உள்ளது. இதனால், பா.ஜனதா கூட்டணி தலைவர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை விருந்து அளிக்கிறார். டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறும் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள். இவர்கள் தவிர மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்கள்.
தேர்தல் முடிவு வெளியாக இருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விருந்து நிகழ்ச்சியின் போது, கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ஆலோசனை நடத்துகிறார்கள்.
இந்த விருந்து நிகழ்ச்சிக்கு முன்பாக, பா.ஜனதா மேலிட தலைவர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதில், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.






