என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • தேசிய சேவை தொண்டர் மலைசாமி நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி, திருச்சுழி ஒன்றியங்களில் மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் நேரு யுவகேந்திரா சார்பில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிலம்ப கலைக்குழு மற்றும் பால் சிலம்பம் கிராமிய கலைக்குழு ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாணவ-மாணவிகளின் சிலம்பம், வாள் வீச்சு, கட்டைக்கால் போன்ற பாரம்பரியமிக்க கலைகளின் வாயிலாக மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதில் வில்லிபத்திரி இளையோர் மன்றத்தலைவர் கருப்பசாமி, பால் சிலம்பம் ஆசிரியர் வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.தேசிய சேவை தொண்டர் மலைசாமி நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

    • திருச்சுழியில் ஜமாபந்தி 2-ந் தேதி வரை நடக்கிறது.
    • மண்டல துணை வட்டாட்சியர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நேற்று முதல் வருகிற 2-ந் தேதி வரை ஜமாபந்தி நடைபெறும் என கலெக்டர் ஜெயசீலன் அறிவித்திருந்தார். அதன்படி திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. இதில் சென்னிலைகுடி, புலிக்குறிச்சி, விடத்தக்குளம் உள்ளிட்ட 8 வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட 28 வருவாய் மற்றும் கூடுதல் வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

    இதில் தாசில்தார் பாண்டி சங்கர் ராஜா, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சிவக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
    • அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சொக்கலாம்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து(27). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. காளிமுத்துவிற்கு கடன் பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியில் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி முத்துமாரி கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணன்கோ வில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துபாண்டி(32). இவருக்கு குடிபழக்கம் இருந்தது. கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • கடந்த 20-ந் தேதி முத்துக்குமார் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது ராமுத்தாய் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
    • கணவர் முத்துக்குமார் நடத்தையில் சந்தேகப்பட்டதால் ராமு தாய் தனது 2 பெண்குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு அவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி ராமுதாய் (வயது30) இவர்களது மகள்கள் நிஷா(6), அர்ச்சனா தேவி(3).

    கடந்த 20-ந் தேதி முத்துக்குமார் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது ராமுத்தாய் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இது தொடர்பாக கணவன்-மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முத்துக்குமார் ராமுதாய் நடத்தை மீது சந்தேகப்பட்டு பேசியதாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து ராமுதாய் தனது குழந்தைகளுடன் மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முத்துக்குமார் கடந்த 22-ஆம் தேதி ராமு தாயின் தந்தை தங்கச்சாமிக்கு போன் செய்து ராமுதாய் மற்றும் குழந்தைகள் அங்கு வந்தார்களா? என கேட்டுள்ளார்.

    உடனே தங்கசாமி அங்கு என்ன நடந்தது? என்று கேட்டுள்ளார். அதற்கு முத்துக்குமார் மனைவி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் வெளியில் சென்று விட்டதாக கூறியுள்ளார். இதற்கிடையே நேற்று காலை தேவதானம் அருகே முத்து மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் ராமு தாய் மற்றும் அவரது 2 குழந்தைகள் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. அவர்களது உடலை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கணவர் முத்துக்குமார் நடத்தையில் சந்தேகப்பட்டதால் ராமு தாய் தனது 2 பெண்குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு அவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக ராமுதாயின் தந்தை தங்கசாமி கொடுத்துள்ள புகாரில் முத்துக்குமார் தனது மகளின் நடத்தையில் சந்தேகப்பட்டதால் அவர் தனது குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • விருதுநகர் அருகே பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
    • சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சின்ன மருளூத்து பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள் (வயது55). இவர் அங்கு உள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார் சம்பவத்தன்று வெளியூர் செல்வதற்காக தோட்டத்தில் இருந்து மெயின் ரோட்டிற்கு நடந்து வந்தார். அப்போது மெயின் ரோட்டில் ஒரு காரின் அருகே 2 மர்ம நபர்கள் நின்றிருந்தனர்.

    நாகம்மாள் அருகே வந்தபோது ஒரு மர்ம நபர் திடீரென்று நாகம்மாளின் வாயை பொத்தி அவர் கழுத்தில் அணிந்து இருந்த கவரிங் செயினை பதித்துள்ளார். மற்றொருவர் காதில் அணிந்திருந்த கம்மலை அறுத்து எடுத்துள்ளார். நாகம்மாள் சுதாரிப்பதற்குள் கண்ணி மைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் இருவரும் காரில் ஏறி தப்பிச் சென்றனர்.

    இதில் படுகாயமடைந்த நாகம்மாள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    • தொழிலாளர் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) மை விழிச்செல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் ஆணையின்படி திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களை விநியோ கிக்கும் நிறுவனங்கள் மற்றும் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

    அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களை விநியோ கிக்கும் நிறுவனங்கள் மற்றும் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் குறைந்த பட்ச கூலிச் சட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன.

    இதில் தொழிலா ளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 10 நிறுவனங்கள் மீது முரண்பாடு காணப்பட்டு மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் அந்த நிறுவ னங்களின் மீது கேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஏப்ரல் மாதம் குறைந்த பட்ச ஊதியம் வழங்காத 7 நிறுவனங்கள் மீது மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அந்த நிறுவனங்களில் பணிபுரிந்த தொழிலா ளர்களுக்கு குறைவு சம்பளம் ரூ.4 லட்சத்து 71 ஆயிரத்து 879 மதுரை தொழிலாளர் இணை ஆணையரால் பெற்று வழங்கப்பட்டது.

    அனைத்து நிறுவ னங்களும் குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் கீழ் அந்தந்த தொழில் நிறுவ னங்களுக்கு நிர்ணயி க்கப்பட்ட குறைந்த பட்ச ஊதியத்தை (ஊதியம்+ அகவிலைப்படி) அளிக்க வேண்டும். குறைவு ஊதியம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 04562 225130 என்ற விருதுநகர் தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண்ணை, அலுவலக வேலை நேரத்தில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட சிறப்பாய்வினை விருதுநகர், அருப்புக் கோட்டை, சிவகாசி முதல் மற்றும் 2-ம் சரகம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபா ளையம், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்கள் மேற்கொ ண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பத்தூரில் வசந்த விழாவில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
    • வசந்த பெருவிழா குழு நிர்வாகத்தால் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பூமாயி அம்மன் கோவில் 89-ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு

    13-ம் ஆண்டு வசந்த விழா நடந்தது. 10 நாள் விழாவாக நடந்த இந்த விழாவில் பால்குட திருவிழா விமரிசையாக நடந்தது. சாம்பான் ஊரணி அருகே உள்ள கோட்டை கருப்பர் கோவிலில் இருந்து பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டோர் பால்குடம், பூத்தட்டுகளை தலையில் சுமந்து 4 ரோடு, கீழரத வீதி, தேரோடும் வீதிகள் வழியாக கோவில் திருக்குளத்தை சுற்றி பூமாயி அம்மன் கோவிலை வந்தடைந்தனர். அதன்பின்பு பூமாயி அம்மனுக்கு திருமஞ்சனம், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 8 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கொண்டு வந்த பூக்களால் பூமாயி அம்மனுக்கு பூச்சொரிந்தனர். வசந்த பெருவிழா குழு நிர்வாகத்தால் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர், தென்மாபட்டு, தம்பிபட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த சோழிய வெள்ளாளர் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகரில், 26-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் மே மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    • விருதுநகர் அருகே பஸ் மோதி ஒருவர் பலியானார்.
    • இறந்து கிடந்த நபர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை மண்டபசாலை பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி(57). இவர் தாயில்பட்டி சாலையில் உள்ள சலூன் கடை அருகே நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக பொன்னுசாமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் அரசு பஸ் டிரைவர் வடமலை குறிச்சியை சேர்ந்த ராஜசுபகுமார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் வளையங்குளம் கண்மாயில் உள்ள கிணற்றின் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக மல்லாங்கிணறு கிராம நிர்வாக அதிகாரி ராம்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் மல்லாங்கிணறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த நபர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
    • பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்தனர்.

    விருதுநகர்

    சிவகாசி பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் பட்டாசுகள் வெடித்து சிதறி அறைகள் தரைமட்டமானது. இதில் காளிராஜ் என்பவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து சாணார்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சாந்தி சம்பவ இடத்தில்ஆய்வு செய்து எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பட்டாசு ஆலை உரிமையாளர் மாடசாமி, மேலாளர் முத்துக்குமார், போர்மென் முத்துகருப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி சிவகாமிபுரம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பட்டாசு கடை அருகில் முத்தமிழ்புரம் காலனியை சேர்ந்த அருணாசலம் (32) என்பவருக்கு சொந்தமான செட்டில் பாதுகாப்பின்றி அட்டை பெட்டியில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்தனர்.

    • இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • மற்ற நோய்களை போல் தொற்றா நோய்கள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதில்லை.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் பெ.புதுப் பட்டியில் மாவட்ட நிர்வா கம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இதை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தற்போது பொதுமக்களி டையே மாறி வரும் உணவு பழக்க வழக்கத்தின் காரணமாக நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவை மூலம், எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் வருவதற்கான காரணமாக அமைகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான 40 வயதிற்கு மேற்பட்ட வர்களை பரிசோதனை செய்ய வசதியாக அனைத்து பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் சுமார் 40ஆயிரம் பேருக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்கள் இருப்பது கண்டறி யப்பட்டுள்ளது. மற்ற நோய்களை போல் தொற்றா நோய்கள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதில்லை. அவற்றை கவனிக்காமல் இருக்கும் பட்சத்தில்ம் இருதயம், கண், சிறுநீரக உள்ளிட்ட உறுப்புகள் பாதிப்புக்கும் அளவிற்கான விளைவுகள் உள்ளது.

    எனவே 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், இது போன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் மருத்துவ முகாமை பயன்படுத்தி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரியல்எஸ்டேட் புரோக்கர் திடீரென இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணாநகர் பகுதியை சேர்ந்தர் பாலமுருகன்(45). இவருக்கு திருமணமாகவில்லை. வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி புரோக்கர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது அறையில் பேச்சு மூச்சில்லாமல் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலமுருகனின் சகோதரர் கோவிந்தராஜ் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×