என் மலர்
விருதுநகர்
- கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்றாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
- மத்தியதரை வழி போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரியை சந்தித்து வலியுறுத்தினர்.
விருதுநகர்
மதுரை-விருதுநகர் இடையே கப்பலூரில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி விதிமுறை களுக்கு முரணாக திரு மங்கலம் நகராட்சி பகுதியில் அமைக்க ப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நான்கு வழிச்சாலையில் பயணிக்காத வாகனங்க ளிடமும் சுங்க கட்டணம் வசூலிக்கும் நிலையில் இதனை அகற்ற வேண்டு மென மாணிக்கம் தாகூர் எம்.பி., தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ்குமார் ஆகியோர் தலைமையில் சுங்கச்சாவடி மீட்புக் குழு தலைவர் ஜெயராமன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மத்தியதரை வழி போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரியை சந்தித்து வலியுறுத்தினர்.அப்போது அவர் விரைவில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்றும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். ஆனாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது.
கப்பலூர் சுங்கச்சா வடியில் அடிக்கடி வாகன ஓட்டிகளுடன் அங்குள்ள ஊழியர்கள் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்துவதுடன் வாகன ஓட்டிகளை தாக்குவதும் அதிகரித்து வரும் நிலை உள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரி வித்துள்ளனர். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியி னர் போராட்டம் நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்ப டாத நிலை நீடிக்கிறது.
இதுகுறித்து கப்பலூர் சுங்கச்சாவடி மீட்பு குழு தலைவர் ஜெயராமன் மற்றும் விருதுநகா் நாடாளுமன்ற தொகுதி முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கூறியதாவது:- மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் மத்திய மந்திரி நிதின்கட்காரி யை சந்தித்து கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினை களை குறித்து தெரிவித்த போது அவர் அதனை அகற்ற நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். மேலும் 60 கி. மீ. இடைவெளியில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்றும் விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால் எவ்வித ந டவ டிக்கையும் எடுக்கவில்லை. இதேநிலை நீடித்தால் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி காங்கி ரஸ் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- உதவி பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பில் சமையலயறை கட்டும் பணிகளையும், திருவண்ணா மலை ஊராட்சியில் என்.சண்முகசுந்தராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தைகள் நேய பள்ளி கட்டிடம் கட்டுதல் திட்டத்தின் கீழ் ரூ.31.30 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டும் பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமையலறை கூடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், பூவாணி கிராமத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழு தேனீ வளர்ப்பில் பயன்பெற்று வருவதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) தண்டபாணி, உதவி பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- விபத்துக்கு வழிவகுக்கும் போலீசாரின் வாகன சோதனை நடக்கிறது.
- சோதனை என்ற பெயரில் போலீசார் தங்களது ஜீப்பை ரோட்டில் நிறுத்தி வாகன சோதனை நடத்துகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் ரெயில்வே பீடர் ரோடு வாகன நெரிசல் மிகுந்த பகுதியாகும். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த சாலையில் ஆயிரக்க ணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
இங்குள்ள கந்தபுரம் தெரு வழியாக அங்குள்ள ராமர் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகிறார்கள். இதனால் ரெயில்வே பீடர் ரோடு பரபரப்பாக காணப்படு கிறது. வாகன நெரிசல் மிகுந்த இந்த சாலையில் கடந்த சில மாதங்களாக சோதனை என்ற பெயரில் போலீசார் தங்களது ஜீப்பை ரோட்டில் நிறுத்தி வாகன சோதனை நடத்துகின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த பகுதியில் வழக்கத்தை விட போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது.
மேலும் சில நேரங்களில் விபத்தும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அண்மையில் அந்த சாலையில் நடந்த விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் சாலையில் போக்குவரத்தை சரிசெய்ய வேண்டிய போலீசாரே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகன சோதனை நடத்துவது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
- காசநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
- காசநோய் கழகம் சார்பில் இலவசமாக நவீன முறையில் எக்ஸ்ரே எடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் சக்க ராஜாக்கோட்டை மூதனூர் தாயாதியார் சாவடி வளாகத்தில் தேசிங்கு ராஜா பண்ணை நினைவாக சக்காராஜா கோட்டை சத்திரிய ராஜூக்கள் பொது மகாசபையும், விருதுநகர் மாவட்ட காசநோய் கழகமும் இணைந்து காசற்ற இலவச காசநோய் கண்டறியும் முகாமை நடத்தியது.
முகாமில் சக்கராஜாக் கோட்டை சத்திரிய ராஜூக்கள் மகாசபை தலைவர் சின்ன வெங்கட ராஜா, ரவிராஜா, ஜெகநாத ராஜா, பலராம ராஜா, நகராட்சி ஆணையாளர். பார்த்தசாரதி மற்றும் சுகாதார அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு விருதுநகர் மாவட்ட காசநோய் கழகம் சார்பில் இலவசமாக நவீன முறையில் எக்ஸ்ரே எடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.இதில் காசநோய் கண்டறி யப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனை மூலம் தொடர்பு கொள்ளப்படு வார்கள். அவர்களுக்கு உரிய மருத்துவ உதவி அவர்களது இல்லம் தேடி வந்து விடும் என தெரிவிக்கப்பட்டது.
காச நோயற்ற தமிழகம் காண்போம் என்ற தலைப்பில் (காசற்ற) இலவச முகாம் சிறப்பாக நடத்தியதை சமூக ஆர்வலர்கள் வரவேற்று பாராட்டினார்கள்.
முகாம் ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட காசநோய் கழகம் மற்றும் தேசிங்கு ராஜா பண்ணை குடும்பத்தார் செய்திருந்தனர்.
- 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் மது குடித்து வந்தார் இதனை மனைவி ராக்கம்மாள் (42) கண்டித்தார். இதில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த ராக்கம்மாள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கண்மாய்பட்டி மனோகரன் காலனியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி தேவதாய் (69). உடல்நல குறைவு காரணமாக விரக்தியில் இருந்த இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- மாநில அளவிலான போட்டியில் அருப்புக்கோட்டை பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- ஒரு லட்சத்து 15 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு 26 ஆயிரத்து 750 யோசனைகளை சமர்ப்பித்திருந்தனர்.
அருப்புக்கோட்டை
பள்ளிக்கல்வித்துறை, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் போட்டிகள் மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் நடைபெற்றன. இதில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப் பள்ளியின் ஐன்ஸ்டீன் குழுவைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர்கள் லலித்குமார், கோபிநாத், அபிஷேக் அடங்கிய குழு சமர்பித்த யோசனை ட்ரான்ஸ்பார்மர் செக்யூரிட்டி மாவட்ட அளவில் முதல் 10 இடங்களுக்குள் தேர்வு செய்யப்பட்டு, ஜனவரி மாதம் மண்டல அளவில் நடைபெறும் போட்டியில் விருதுநகர் மாவட்டம் சார்பாக கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களையும், உறுதுணையாக இருந்த அறிவியல் ஆசிரியர் சரவணகுமார் அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜர் ஏ.பி.கே. கல்விக்குழும தலைவர் ஜெயக்குமார், பள்ளி தலைவர் சிவராமகிருஷ்ணன், பள்ளிச் செயலாளர் மணி முருகன், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.
கடந்த மே 6-ந்தேதி கிருஷ்ணன் கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்று 3-ம் இடத்தை பெற்று ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசினையும், முதல்வர் விருதினையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். விரைவில் சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சரிடம் விருது பெற உள்ளனர்.
முன்னதாக இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு 26 ஆயிரத்து 750 யோசனைகளை சமர்ப்பித்திருந்தனர்.
- விருதுநகா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அருகே பார்கள் அனுமதியின்றி செயல்படுவதாக புகாா் எழுந்தது.
- அனுமதியின்றி செயல்பட்ட 4 பார்களை சாத்தூா் தாசில்தார் வெங்கடேசன், மதுவிலக்கு போலீசாா் பூட்டி சீல் வைத்தனா்.
விருதுநகர்:
விருதுநகா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அருகே பார்கள் அனுமதியின்றி செயல்படுவதாக புகாா் எழுந்தது. இது தொடர்பாக சோதனை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, விருதுநகா் வட்டாரத்தில் 18, சிவகாசி பகுதியில் 25, அருப்புக்கோட்டை பகுதியில் 11, ராஜபாளையம் பகுதியில் 25, சாத்தூா் பகுதியில் 8, ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் 20, திருச்சுழி பகுதியில் 14 என மொத்தம் 121 பார்கள் அனுமதியின்றி செயல்பட்டதை கண்டறிந்து சீல் வைத்தனா்.
இதேபோல் சாத்தூா், வெம்பக்கோட்டை, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி பார்கள் செயல்படுவதாக சாத்தூா் வருவாய்த் துறையினருக்கும், மதுவிலக்கு போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சாத்தூா், இருக்கன்குடி, நென்மேனி, படந்தால், ஓவைய நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பார்களின் உரிமங்களை போலீசாா் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனா். அப்போது அந்தப் பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்ட 4 பார்களை சாத்தூா் தாசில்தார் வெங்கடேசன், மதுவிலக்கு போலீசாா் பூட்டி சீல் வைத்தனா்.
வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் வெம்பக்கோட்டை தாசில்தார் ரெங்கநாதன், மதுவிலக்கு போலீசாா் ஆய்வு நடத்தினா். அப்போது அந்தப் பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்ட 4 பார்களுக்கு அவா்கள் சீல் வைத்தனா்.
மேலும் பல்வேறு பார்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
- சிவகாசி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நகை பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
- மோட்டார் சைக்கிளில் வரும் மர்மநபர்கள் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து திருட்டு செயல்களில் ஈடுபடுகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ரேணுகாதேவி. இவர் சம்பவத்தன்று தனது குழந்தையுடன் மொபட்டில் வெளியே புறப்பட்டார். அப்போது ஹெல்மெட் அணிந்த மர்மநபர் மோட்டார் சைக்கிளில் ரேணுகா தேவியை பின் தொடர்ந்தார்.
தெய்வானை நகர் அன்பின் வீதியில் வந்த போது மர்மநபர் ரேணுகாதேவியை மறித்து அவர் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார். ஆனால் அவர் திருடனிடமிருந்து நகையை காப்பாற்ற முயன்றார். இதில் ஆத்திரமடைந்த மர்மநபர் ரேணுகா தேவியை தாக்கி அவர் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினார். அப்போது ரேணுகாதேவி கொள்ளையனை பிடிக்க மொபட்டில் சென்ற போது கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.
சிவகாசி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நகை பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மோட்டார் சைக்கிளில் வரும் மர்மநபர்கள் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- ஆதிதிராவிடர் தொழில் முனைவோர்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப் பதாவது:-
தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (எஸ்.சி./எஸ்.டி.) தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்கும் ஆரம்ப அமைவு கட்டத்தில் எதிர் கொள்ளும் நிதிச்சுமையை தணிப்பது மற்றும் தேவை யான வளங்களைப் பெறு வதை எளிதாக்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் தொழில் முனை வோர்களின் ஒட்டுமொத்த செலவை கணிசமாக குறைத்து தொழில் முனைவோர்கள் தங்கள் வணிகத்தில் ஆர்வமுடன் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் பேருதவியாக இருக்கும்.
இந்த திட்டத்தில் எந்திரங்கள் மற்றும் உபகர ணங்களை வாங்குவதற்கான கடனுக்கு 35 சதவீத மூலதன மானியமும், 6 சதவீத வட்டி மானியமும் வழங்க வழி வகை செய்யப்பட்டள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்க ளுக்கு விண்ணப்பிக்கலாம். நேரடி விவசாயம் சார்ந்த தொழில்கள் மேற்கொள்ள இந்த திட்டத்தில் வழிவகை இல்லை.
இந்த திட்டத்தில் புதிய தொழில் ஆரம்பிக்கவும் மற்றும் ஏற்கனவே செயல்படுத்தப்படும் தொழில்களின் விரிவாக்கத்திற்கும் மானிய கடனுதவி வழங்கப்படும். வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு எந்திரங்கள், நிலம், சோதனைக்கருவிகள், கணிணி சார்ந்த பொருட்கள் மற்றும் தொழில் சார்ந்த வாகனங்கள் வாங்கவும் இந்த திட்டத்தில் மானியத்துடன் கடன் வழங்கப்படும்.
மேற்காணும் திட்டத்தில் பயன்பெற திட்ட அறிக்கை, விலைப்பட்டியல் மற்றும் உரிய ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in/aabcs என்ற இணையதளம் முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம்.
மேலும் கூடுதல் விபரங்க ளுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பொது மேலாளர் அலுவலகம், மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 89255 34036 என்ற தொலைபேசியிலோ அணுகலாம்.
இந்த திட்டத்திற்கான மாபெரும் விழிப்புணர்வு முகாம் வருகிற 30-ந் தேதி அன்று மாவட்ட கூட்ட அரங்கில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசு மேல்நிலைப்பள்ளியில் 13 மாணவிகளை சேர்த்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பாராட்டினர்.
- விண்ணப்ப படிவங்களை மாணவிகளுக்கு வழங்கி அதனை பூர்த்தி செய்யப்பட்டு உடனடியாக அட்மிஷனும் போடப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் மாலையாபுரம் பகுதியைச் சேர்ந்த திருவள்ளுவர் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த 13 மாணவிகள் மேல்படிப்பிற்காக ராஜபாளையம் நகரில் உள்ள எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்க இடம் வாங்கி தருமாறு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.வை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
உடனடியாக அவர் மாணவிகளை அழைத்துக் கொண்டு அந்த பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரி யரிடம் பேசி மாணவி களுக்கு பிடித்தமான பாடப்பிரிவை தேர்வு செய்து கொடுத்தார். மேலும் விண்ணப்ப படிவங்களை மாணவிகளுக்கு வழங்கி அதனை பூர்த்தி செய்யப்பட்டு உடனடியாக அட்மிஷனும் போடப்பட்டது. நாங்கள் கேட்டதும் பள்ளிக்கு நேரில் வந்து இடம் வாங்கி கொடுத்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு மாணவிகள் குடும்பத்தினருடன் நன்றி தெரிவித்தனர்.
ராஜபாளையம் தொகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் படிப்பிற்காக பள்ளியில், கல்லூரியில் இடம் வேண்டும் என்று தன்னை எந்த நேரத்தில் தொடர்பு கொண்டாலும் கடிதம் மூலமாகவும், நேரிலும் சென்று அவர்களுக்கு கல்வி பயில இடம் வாங்கி கொடுக்க தயாராக இருப்பதாக எம்.எல்.ஏ உறுதி அளித்தார்.
சிறப்பு வாய்ந்த பணியை செய்து முடித்து தனது பதவிக்கும், தமிழக அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வை சமூக ஆர்வலர்களும், ஆசிரி யர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.
- கண்மாய் மடை நீர் செல்ல சாலையில் பாலம் அமைக்க வேண்டும்.
- விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் ரங்கசாமி முன்னிலை வகித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் குறுவட்டத்தை சேர்ந்த குருக்கள்குளம், வடக்கு ஸ்ரீவில்லிபுத்தூர், தெய்வேந்திரி, தைலாகுளம், சிங்கம்மாள்புரம் அத்திகுளம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், நிலப்பதிவு, நில நிர்வாகம், வருவாய்த் துறை தொடர்பான 115 கோரிக்கை மனுக்களை, கலெக்டரிடம் வழங்கினர்.
தெய்வேந்திரி, சோளங்குளம், நொச்சிகுளம் கண்மாய் நீரை பயன்படுத்து வோர் சங்க தலைவர் தேவப்பிரியம் அளித்த மனுவில், 'மதுரை- கொல்லம் 4 வழி சாலை பணிக்காக தெய்வேந்திரி குளத்தின் பாசன நிலங்களை அரசு கைய கப்படுத்தி உள்ளது.
இந்த சாலையின் குறுக்கே செல்லும் தெய்வேந்திரி கண்மாய் நடுமடை, வடக்கு மற்றும் தெற்கு மடை ஆகிய 3 மடைகளின் கால்வாய் களில் சிறு குழாய்கள் அமைக்க திட்டமிடப்பட் டுள்ளது. ஆனால் இந்த மடைகள் மூலம் சுமார் 100 ஏக்கருக்கு மேல் தண்ணீர் செல்ல வேண்டியுள்ளது. அதனால் குழாய்கள் அமைத்தால் நீரின் அளவு குறைந்து பாசனம் தடைபட வாய்ப்புள்ளது.
3 கால்வாய்களிலும் உள்ள சிறிய வாய்க்கால்களை அடைத்து விடாமல் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தென்னை விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளைர் முத்தையா அளித்த மனுவில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள செண்பகதோப்பு பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் குலதெய்வ கோவில்களுக்கு செல்பவர்களிடம் வனத்துறை ஒரு நபருக்கு ரூ.20 வீதம் கட்டணம் வசூல் செய்கின்றனர்.
விவசாயிகள் மற்றும் பக்தர்களிடம் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- கபடி போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
- தேசிய நடுவர் காளிதாஸ் வீரர்களுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் பி.ஏ.சி.ராமசாமி ராஜா நினைவு விளையாட்டு மன்றம் சார்பில் 60-வது மணிவிழா ஆண்டு கபடி போட்டி ஊர்க்காவல் படை மைதானத்தில் நடந்தது. இறுதிப் போட்டியில் மீனாட்சிபுரம் செவன் லைன்ஸ் அணியும், வத்திராயிருப்பு வீ.கே.ஏ.என். அணியும் மோதியது. இதில் மீனாட்சிபுரம் அணி வெற்றி பெற்றது. வத்திராயிருப்பு அணிக்கு 2-வது பரிசு கிடைத்தது. கிருஷ்ணாபுரம் கே.எஸ்.சி. அணிக்கு 3-வது பரிசும், சோலைசேரி ஜாம்பவான் கபடி குழு அணிக்கு 4-வது பரிசும் கிடைத்தன. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் கே.எஸ்.ஆர். பஸ் அதிபர் ஜெகதீஷ் சவுந்தர் பரிசுகளை வழங்கினார். சுப்பிரமணிய ராஜா வரவேற்றார். ராமராஜ், ராதாகிருஷ்ண ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கபடி குழு தலைவர் சுப்பிரமணிய ராஜா, செயலாளர் கனி முத்து குமரன், துணைத் தலைவர் சம்சுதீன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். தேசிய நடுவர் காளிதாஸ் வீரர்களுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.






