என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • சிவகாசி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நகை பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
    • மோட்டார் சைக்கிளில் வரும் மர்மநபர்கள் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து திருட்டு செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ரேணுகாதேவி. இவர் சம்பவத்தன்று தனது குழந்தையுடன் மொபட்டில் வெளியே புறப்பட்டார். அப்போது ஹெல்மெட் அணிந்த மர்மநபர் மோட்டார் சைக்கிளில் ரேணுகா தேவியை பின் தொடர்ந்தார்.

    தெய்வானை நகர் அன்பின் வீதியில் வந்த போது மர்மநபர் ரேணுகாதேவியை மறித்து அவர் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார். ஆனால் அவர் திருடனிடமிருந்து நகையை காப்பாற்ற முயன்றார். இதில் ஆத்திரமடைந்த மர்மநபர் ரேணுகா தேவியை தாக்கி அவர் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினார். அப்போது ரேணுகாதேவி கொள்ளையனை பிடிக்க மொபட்டில் சென்ற போது கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    சிவகாசி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நகை பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மோட்டார் சைக்கிளில் வரும் மர்மநபர்கள் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • ஆதிதிராவிடர் தொழில் முனைவோர்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
    • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப் பதாவது:-

    தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (எஸ்.சி./எஸ்.டி.) தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்கும் ஆரம்ப அமைவு கட்டத்தில் எதிர் கொள்ளும் நிதிச்சுமையை தணிப்பது மற்றும் தேவை யான வளங்களைப் பெறு வதை எளிதாக்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    மேலும் தொழில் முனை வோர்களின் ஒட்டுமொத்த செலவை கணிசமாக குறைத்து தொழில் முனைவோர்கள் தங்கள் வணிகத்தில் ஆர்வமுடன் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் பேருதவியாக இருக்கும்.

    இந்த திட்டத்தில் எந்திரங்கள் மற்றும் உபகர ணங்களை வாங்குவதற்கான கடனுக்கு 35 சதவீத மூலதன மானியமும், 6 சதவீத வட்டி மானியமும் வழங்க வழி வகை செய்யப்பட்டள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்க ளுக்கு விண்ணப்பிக்கலாம். நேரடி விவசாயம் சார்ந்த தொழில்கள் மேற்கொள்ள இந்த திட்டத்தில் வழிவகை இல்லை.

    இந்த திட்டத்தில் புதிய தொழில் ஆரம்பிக்கவும் மற்றும் ஏற்கனவே செயல்படுத்தப்படும் தொழில்களின் விரிவாக்கத்திற்கும் மானிய கடனுதவி வழங்கப்படும். வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு எந்திரங்கள், நிலம், சோதனைக்கருவிகள், கணிணி சார்ந்த பொருட்கள் மற்றும் தொழில் சார்ந்த வாகனங்கள் வாங்கவும் இந்த திட்டத்தில் மானியத்துடன் கடன் வழங்கப்படும்.

    மேற்காணும் திட்டத்தில் பயன்பெற திட்ட அறிக்கை, விலைப்பட்டியல் மற்றும் உரிய ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in/aabcs என்ற இணையதளம் முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம்.

    மேலும் கூடுதல் விபரங்க ளுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பொது மேலாளர் அலுவலகம், மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 89255 34036 என்ற தொலைபேசியிலோ அணுகலாம்.

    இந்த திட்டத்திற்கான மாபெரும் விழிப்புணர்வு முகாம் வருகிற 30-ந் தேதி அன்று மாவட்ட கூட்ட அரங்கில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு மேல்நிலைப்பள்ளியில் 13 மாணவிகளை சேர்த்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பாராட்டினர்.
    • விண்ணப்ப படிவங்களை மாணவிகளுக்கு வழங்கி அதனை பூர்த்தி செய்யப்பட்டு உடனடியாக அட்மிஷனும் போடப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மாலையாபுரம் பகுதியைச் சேர்ந்த திருவள்ளுவர் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த 13 மாணவிகள் மேல்படிப்பிற்காக ராஜபாளையம் நகரில் உள்ள எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்க இடம் வாங்கி தருமாறு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.வை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

    உடனடியாக அவர் மாணவிகளை அழைத்துக் கொண்டு அந்த பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரி யரிடம் பேசி மாணவி களுக்கு பிடித்தமான பாடப்பிரிவை தேர்வு செய்து கொடுத்தார். மேலும் விண்ணப்ப படிவங்களை மாணவிகளுக்கு வழங்கி அதனை பூர்த்தி செய்யப்பட்டு உடனடியாக அட்மிஷனும் போடப்பட்டது. நாங்கள் கேட்டதும் பள்ளிக்கு நேரில் வந்து இடம் வாங்கி கொடுத்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு மாணவிகள் குடும்பத்தினருடன் நன்றி தெரிவித்தனர்.

    ராஜபாளையம் தொகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் படிப்பிற்காக பள்ளியில், கல்லூரியில் இடம் வேண்டும் என்று தன்னை எந்த நேரத்தில் தொடர்பு கொண்டாலும் கடிதம் மூலமாகவும், நேரிலும் சென்று அவர்களுக்கு கல்வி பயில இடம் வாங்கி கொடுக்க தயாராக இருப்பதாக எம்.எல்.ஏ உறுதி அளித்தார்.

    சிறப்பு வாய்ந்த பணியை செய்து முடித்து தனது பதவிக்கும், தமிழக அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வை சமூக ஆர்வலர்களும், ஆசிரி யர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.

    • கண்மாய் மடை நீர் செல்ல சாலையில் பாலம் அமைக்க வேண்டும்.
    • விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் ரங்கசாமி முன்னிலை வகித்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் குறுவட்டத்தை சேர்ந்த குருக்கள்குளம், வடக்கு ஸ்ரீவில்லிபுத்தூர், தெய்வேந்திரி, தைலாகுளம், சிங்கம்மாள்புரம் அத்திகுளம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், நிலப்பதிவு, நில நிர்வாகம், வருவாய்த் துறை தொடர்பான 115 கோரிக்கை மனுக்களை, கலெக்டரிடம் வழங்கினர்.

    தெய்வேந்திரி, சோளங்குளம், நொச்சிகுளம் கண்மாய் நீரை பயன்படுத்து வோர் சங்க தலைவர் தேவப்பிரியம் அளித்த மனுவில், 'மதுரை- கொல்லம் 4 வழி சாலை பணிக்காக தெய்வேந்திரி குளத்தின் பாசன நிலங்களை அரசு கைய கப்படுத்தி உள்ளது.

    இந்த சாலையின் குறுக்கே செல்லும் தெய்வேந்திரி கண்மாய் நடுமடை, வடக்கு மற்றும் தெற்கு மடை ஆகிய 3 மடைகளின் கால்வாய் களில் சிறு குழாய்கள் அமைக்க திட்டமிடப்பட் டுள்ளது. ஆனால் இந்த மடைகள் மூலம் சுமார் 100 ஏக்கருக்கு மேல் தண்ணீர் செல்ல வேண்டியுள்ளது. அதனால் குழாய்கள் அமைத்தால் நீரின் அளவு குறைந்து பாசனம் தடைபட வாய்ப்புள்ளது.

    3 கால்வாய்களிலும் உள்ள சிறிய வாய்க்கால்களை அடைத்து விடாமல் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    தென்னை விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளைர் முத்தையா அளித்த மனுவில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள செண்பகதோப்பு பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் குலதெய்வ கோவில்களுக்கு செல்பவர்களிடம் வனத்துறை ஒரு நபருக்கு ரூ.20 வீதம் கட்டணம் வசூல் செய்கின்றனர்.

    விவசாயிகள் மற்றும் பக்தர்களிடம் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • கபடி போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • தேசிய நடுவர் காளிதாஸ் வீரர்களுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் பி.ஏ.சி.ராமசாமி ராஜா நினைவு விளையாட்டு மன்றம் சார்பில் 60-வது மணிவிழா ஆண்டு கபடி போட்டி ஊர்க்காவல் படை மைதானத்தில் நடந்தது. இறுதிப் போட்டியில் மீனாட்சிபுரம் செவன் லைன்ஸ் அணியும், வத்திராயிருப்பு வீ.கே.ஏ.என். அணியும் மோதியது. இதில் மீனாட்சிபுரம் அணி வெற்றி பெற்றது. வத்திராயிருப்பு அணிக்கு 2-வது பரிசு கிடைத்தது. கிருஷ்ணாபுரம் கே.எஸ்.சி. அணிக்கு 3-வது பரிசும், சோலைசேரி ஜாம்பவான் கபடி குழு அணிக்கு 4-வது பரிசும் கிடைத்தன. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் கே.எஸ்.ஆர். பஸ் அதிபர் ஜெகதீஷ் சவுந்தர் பரிசுகளை வழங்கினார். சுப்பிரமணிய ராஜா வரவேற்றார். ராமராஜ், ராதாகிருஷ்ண ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கபடி குழு தலைவர் சுப்பிரமணிய ராஜா, செயலாளர் கனி முத்து குமரன், துணைத் தலைவர் சம்சுதீன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். தேசிய நடுவர் காளிதாஸ் வீரர்களுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • தேசிய சேவை தொண்டர் மலைசாமி நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி, திருச்சுழி ஒன்றியங்களில் மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் நேரு யுவகேந்திரா சார்பில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிலம்ப கலைக்குழு மற்றும் பால் சிலம்பம் கிராமிய கலைக்குழு ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாணவ-மாணவிகளின் சிலம்பம், வாள் வீச்சு, கட்டைக்கால் போன்ற பாரம்பரியமிக்க கலைகளின் வாயிலாக மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதில் வில்லிபத்திரி இளையோர் மன்றத்தலைவர் கருப்பசாமி, பால் சிலம்பம் ஆசிரியர் வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.தேசிய சேவை தொண்டர் மலைசாமி நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

    • திருச்சுழியில் ஜமாபந்தி 2-ந் தேதி வரை நடக்கிறது.
    • மண்டல துணை வட்டாட்சியர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நேற்று முதல் வருகிற 2-ந் தேதி வரை ஜமாபந்தி நடைபெறும் என கலெக்டர் ஜெயசீலன் அறிவித்திருந்தார். அதன்படி திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. இதில் சென்னிலைகுடி, புலிக்குறிச்சி, விடத்தக்குளம் உள்ளிட்ட 8 வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட 28 வருவாய் மற்றும் கூடுதல் வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

    இதில் தாசில்தார் பாண்டி சங்கர் ராஜா, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சிவக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
    • அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சொக்கலாம்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து(27). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. காளிமுத்துவிற்கு கடன் பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியில் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி முத்துமாரி கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணன்கோ வில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துபாண்டி(32). இவருக்கு குடிபழக்கம் இருந்தது. கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • கடந்த 20-ந் தேதி முத்துக்குமார் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது ராமுத்தாய் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
    • கணவர் முத்துக்குமார் நடத்தையில் சந்தேகப்பட்டதால் ராமு தாய் தனது 2 பெண்குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு அவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி ராமுதாய் (வயது30) இவர்களது மகள்கள் நிஷா(6), அர்ச்சனா தேவி(3).

    கடந்த 20-ந் தேதி முத்துக்குமார் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது ராமுத்தாய் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இது தொடர்பாக கணவன்-மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முத்துக்குமார் ராமுதாய் நடத்தை மீது சந்தேகப்பட்டு பேசியதாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து ராமுதாய் தனது குழந்தைகளுடன் மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முத்துக்குமார் கடந்த 22-ஆம் தேதி ராமு தாயின் தந்தை தங்கச்சாமிக்கு போன் செய்து ராமுதாய் மற்றும் குழந்தைகள் அங்கு வந்தார்களா? என கேட்டுள்ளார்.

    உடனே தங்கசாமி அங்கு என்ன நடந்தது? என்று கேட்டுள்ளார். அதற்கு முத்துக்குமார் மனைவி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் வெளியில் சென்று விட்டதாக கூறியுள்ளார். இதற்கிடையே நேற்று காலை தேவதானம் அருகே முத்து மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் ராமு தாய் மற்றும் அவரது 2 குழந்தைகள் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. அவர்களது உடலை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கணவர் முத்துக்குமார் நடத்தையில் சந்தேகப்பட்டதால் ராமு தாய் தனது 2 பெண்குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு அவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக ராமுதாயின் தந்தை தங்கசாமி கொடுத்துள்ள புகாரில் முத்துக்குமார் தனது மகளின் நடத்தையில் சந்தேகப்பட்டதால் அவர் தனது குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • விருதுநகர் அருகே பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
    • சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சின்ன மருளூத்து பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள் (வயது55). இவர் அங்கு உள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார் சம்பவத்தன்று வெளியூர் செல்வதற்காக தோட்டத்தில் இருந்து மெயின் ரோட்டிற்கு நடந்து வந்தார். அப்போது மெயின் ரோட்டில் ஒரு காரின் அருகே 2 மர்ம நபர்கள் நின்றிருந்தனர்.

    நாகம்மாள் அருகே வந்தபோது ஒரு மர்ம நபர் திடீரென்று நாகம்மாளின் வாயை பொத்தி அவர் கழுத்தில் அணிந்து இருந்த கவரிங் செயினை பதித்துள்ளார். மற்றொருவர் காதில் அணிந்திருந்த கம்மலை அறுத்து எடுத்துள்ளார். நாகம்மாள் சுதாரிப்பதற்குள் கண்ணி மைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் இருவரும் காரில் ஏறி தப்பிச் சென்றனர்.

    இதில் படுகாயமடைந்த நாகம்மாள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    • தொழிலாளர் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) மை விழிச்செல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் ஆணையின்படி திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களை விநியோ கிக்கும் நிறுவனங்கள் மற்றும் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

    அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களை விநியோ கிக்கும் நிறுவனங்கள் மற்றும் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் குறைந்த பட்ச கூலிச் சட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன.

    இதில் தொழிலா ளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 10 நிறுவனங்கள் மீது முரண்பாடு காணப்பட்டு மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் அந்த நிறுவ னங்களின் மீது கேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஏப்ரல் மாதம் குறைந்த பட்ச ஊதியம் வழங்காத 7 நிறுவனங்கள் மீது மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அந்த நிறுவனங்களில் பணிபுரிந்த தொழிலா ளர்களுக்கு குறைவு சம்பளம் ரூ.4 லட்சத்து 71 ஆயிரத்து 879 மதுரை தொழிலாளர் இணை ஆணையரால் பெற்று வழங்கப்பட்டது.

    அனைத்து நிறுவ னங்களும் குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் கீழ் அந்தந்த தொழில் நிறுவ னங்களுக்கு நிர்ணயி க்கப்பட்ட குறைந்த பட்ச ஊதியத்தை (ஊதியம்+ அகவிலைப்படி) அளிக்க வேண்டும். குறைவு ஊதியம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 04562 225130 என்ற விருதுநகர் தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண்ணை, அலுவலக வேலை நேரத்தில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட சிறப்பாய்வினை விருதுநகர், அருப்புக் கோட்டை, சிவகாசி முதல் மற்றும் 2-ம் சரகம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபா ளையம், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்கள் மேற்கொ ண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பத்தூரில் வசந்த விழாவில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
    • வசந்த பெருவிழா குழு நிர்வாகத்தால் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பூமாயி அம்மன் கோவில் 89-ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு

    13-ம் ஆண்டு வசந்த விழா நடந்தது. 10 நாள் விழாவாக நடந்த இந்த விழாவில் பால்குட திருவிழா விமரிசையாக நடந்தது. சாம்பான் ஊரணி அருகே உள்ள கோட்டை கருப்பர் கோவிலில் இருந்து பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டோர் பால்குடம், பூத்தட்டுகளை தலையில் சுமந்து 4 ரோடு, கீழரத வீதி, தேரோடும் வீதிகள் வழியாக கோவில் திருக்குளத்தை சுற்றி பூமாயி அம்மன் கோவிலை வந்தடைந்தனர். அதன்பின்பு பூமாயி அம்மனுக்கு திருமஞ்சனம், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 8 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கொண்டு வந்த பூக்களால் பூமாயி அம்மனுக்கு பூச்சொரிந்தனர். வசந்த பெருவிழா குழு நிர்வாகத்தால் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர், தென்மாபட்டு, தம்பிபட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த சோழிய வெள்ளாளர் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    ×