என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிவகாசியில் மொபட்டில் சென்ற பெண்ணை தாக்கி 9 பவுன் நகை பறிப்பு
- சிவகாசி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நகை பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
- மோட்டார் சைக்கிளில் வரும் மர்மநபர்கள் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து திருட்டு செயல்களில் ஈடுபடுகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ரேணுகாதேவி. இவர் சம்பவத்தன்று தனது குழந்தையுடன் மொபட்டில் வெளியே புறப்பட்டார். அப்போது ஹெல்மெட் அணிந்த மர்மநபர் மோட்டார் சைக்கிளில் ரேணுகா தேவியை பின் தொடர்ந்தார்.
தெய்வானை நகர் அன்பின் வீதியில் வந்த போது மர்மநபர் ரேணுகாதேவியை மறித்து அவர் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார். ஆனால் அவர் திருடனிடமிருந்து நகையை காப்பாற்ற முயன்றார். இதில் ஆத்திரமடைந்த மர்மநபர் ரேணுகா தேவியை தாக்கி அவர் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினார். அப்போது ரேணுகாதேவி கொள்ளையனை பிடிக்க மொபட்டில் சென்ற போது கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.
சிவகாசி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நகை பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மோட்டார் சைக்கிளில் வரும் மர்மநபர்கள் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.






