என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • திருச்சுழி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
    • 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் அம்மன்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் மற்றும் தேவர் குருபூஜை விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதில் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஒரு குழுவிற்கு 12 பேர் என 10 குழுக்களை சேர்ந்த சுமார் 120-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். இதை உள்ளூர், வெளியூர் பொதுமக்கள் ஆராவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

    வெற்றி பெற்ற குழுவினருக்கு ரொக்கப்பணம் சேர், கட்டில், குத்துவிளக்கு மற்றும் மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது. திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை அமைச்சர் நேரு இன்று தொடங்கி வைக்கிறார்.
    • கொரோனா தாக்கத்தினாலும் பணியில் தொய்வு ஏற்பட்டு கைவிடப்படும் சூழ்நிலை உருவானது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகருக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு கடந்த 2012-ம் ஆண்டு அன்றைய முதல்- அமைச்சரால் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அப்பணிகள் எதுவும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது.

    அதன்பின் ராஜபாளையம் தொகுதிக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக தங்கப்பாண்டியன் பொறுப்பேற்றவுடன், அம்ரூத் திட்டத்தில் மத்திய-மாநில அரசு மானியத்தின் கீழ் 2016-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 110 விதியின் கீழ் மீண்டும் ராஜபாளையம் நகருக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் பணீந்திரரெட்டியிடம் எம்.எல்.ஏ. சென்று மனு அளித்து தொடர்ந்து வலியுறுத்தி அனைத்து முயற்சிகளும் செய்து ராஜபாளையம் நகருக்கு ரூ172.70 கோடி மதிப்பில் மேற்கண்ட திட்டத்திற்கு 30-1-2017 அன்று அரசாண வெளியிடப்பட்டது. இந்த திட்டத்திற்காக ராஜபாளையம் நகரில் 11 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பட இருந்தது.

    கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தங்கப் பாண்டியன்.எம்.எல்.ஏ தலைமையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பூமி பூஜை நடை பெற்றது. தங்க பாண்டியன் எதிர்கட்சி சட்ட மன்ற உறுப்பினராக இருந்தபோதிலும் பணியில் தொய்வு ஏற்படும் போது அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு திட்டப் பணியை விரைவுப்படுத்தினார். அதன்பின் ஒப்பந்த தாரரின் தனிப்பட்ட பிரச்சினையாலும், கொரோ னா தாக்கத்தினாலும் பணியில் தொய்வு ஏற்பட்டு கைவிடப் படும் சூழ்நிலை உருவானது.

    இந்நிலையில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்து மு.க.ஸ்டாலின் முதல் அமைச்ச ராக பொறுப்பேற்ற வுடன் திட்டப்பணிக்கு மீண்டும் செயல்படுத்த தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. நடவடிக்கை மேற்கொண் டார். அதன்படி நகராட்சி நிர்வாக துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவையும், விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுவிடமும் பேசி திட்டப்பணியை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. விரைவு படுத்தினார்.

    தற்போது தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து உள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று (26-ந்தேதி) மாலை 6 மணியளவில் சங்கரன் கோவிலில் நடக்கிறது. அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

    ராஜபாளையம் மக்களின் நீண்டநாள் கனவான தாமிரபரணி குடிநீர் வந்தடைந்தவுடன், ஆளுயர மாலையை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு வெற்றி மாலையாக அணிவித்து மகிழ தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.

    • பட்டாசு வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
    • 10 கிலோ சாக்குமூடை, மூலப்ெபாருட்களை பறிமுதல் செய்த போலீசார் ைகது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அன்பில்நகரம் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் ஏழாயிரம்பண்ணை போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கிருந்த தகர செட்டில் பாதுகாப்பின்றி சாக்குமூடைகளில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் வெடிபொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களும் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 15 கிலோ இரண்டு சாக்கு மூடைகள், ஒரு 10 கிலோ சாக்குமூடை, மூலப்ெபாருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை பதுக்கிவைத்திருந்த ராஜிவ்காந்தியை(38) ைகது செய்தனர்.

    சிவகங்கை நகர் பஸ் நிலையத்தில் லாட்டரி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நகர் போலீசார் பஸ்நிலையப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி லாட்டரி விற்ற சகாய குளோரி, சிவசக்கரவர்த்தி, நாகவேல், துரைப்பாண்டியன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கேரள லாட்டரிகள், ரூ.1500 பறிமுதல் செய்யப்பட்டது.

    • ஒரே நாள் இரவில் 2 வீடுகள், தனியார் நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யாநகரை சேர்ந்தவர் கயத்தம்மாள். இவர் அங்குள்ள ஒரு வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் மருத்துவ பரிசோதனைக்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் மதுரைக்கு சென்று விட்டார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்(வயது28) என்பவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு கயத்தம்மாள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்த மர்ம நபர்கள் அதில் இருந்த 10 பவுன் நகை, பணத்தை திருடினர். அங்கிருந்து வெளியேறிய கும்பல் அருகில் உள்ள சதீஷ் வீட்டுக்குள் புகுந்து 5 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். மேலும் அதே பகுதியில் பூட்டியிருந்த சில வீடுகளிலும் அந்த கும்பல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கதவை உடைக்க முடியாததால் அவர்கள் அதனை கைவிட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி ஹவுசிங் போர்டு பகுதியில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. நேற்று இரவு இங்கு வந்த கொள்ளை கும்பல் கதவை உடைத்து அலுவலகத்தில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றது. இன்று காலை கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன் மற்றும் போலீசார் திருட்டு நடந்த வீடுகள், நிதி நிறுவனத்தில் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த இடங்களில் கைரேகைகளை சேகரித்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஒரே நாள் இரவில் 2 வீடுகள், தனியார் நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் பல நாட்கள் திட்டம் தீட்டி இதில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
    • ஜனநாயக மரபை சிதைக்கிற வகையில் பிரதமர் மோடி நடந்து கொள்வது அதிர்ச்சியளிக்கிறது.

    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை வருகிற 28-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவை தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிக்க உள்ளது.

    அரசியலமைப்பு சட்டத்தின்படி பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அதிகாரப்பூர்வ தலைவர் குடியரசு தலைவர் தான். எனவே அவர் தான் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும். ஆனால் தன்னுடைய பெயர் வரலாற்றில் நிலைக்க வேண்டும் என்ற ஆசையால் ஜனநாயக மரபை சிதைக்கிற வகையில் பிரதமர் மோடி நடந்து கொள்வது அதிர்ச்சியளிக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

    எனவே புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் 28-ந்தேதியை துக்க தினமாக கடைபிடிப்போம். அந்த நாளில் கட்டிடத்தை திறப்பதற்கு உள்நோக்கம் இருக்கிறது. சவார்கரின் பிறந்த நாளன்று பாராளுமன்றம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கறுப்பு கட்டை அணிந்து கருப்பு கொடி ஏந்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்றாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
    • மத்தியதரை வழி போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரியை சந்தித்து வலியுறுத்தினர்.

    விருதுநகர்

    மதுரை-விருதுநகர் இடையே கப்பலூரில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி விதிமுறை களுக்கு முரணாக திரு மங்கலம் நகராட்சி பகுதியில் அமைக்க ப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நான்கு வழிச்சாலையில் பயணிக்காத வாகனங்க ளிடமும் சுங்க கட்டணம் வசூலிக்கும் நிலையில் இதனை அகற்ற வேண்டு மென மாணிக்கம் தாகூர் எம்.பி., தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ்குமார் ஆகியோர் தலைமையில் சுங்கச்சாவடி மீட்புக் குழு தலைவர் ஜெயராமன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மத்தியதரை வழி போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரியை சந்தித்து வலியுறுத்தினர்.அப்போது அவர் விரைவில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்றும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். ஆனாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது.

    கப்பலூர் சுங்கச்சா வடியில் அடிக்கடி வாகன ஓட்டிகளுடன் அங்குள்ள ஊழியர்கள் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்துவதுடன் வாகன ஓட்டிகளை தாக்குவதும் அதிகரித்து வரும் நிலை உள்ளது.

    இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரி வித்துள்ளனர். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியி னர் போராட்டம் நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்ப டாத நிலை நீடிக்கிறது.

    இதுகுறித்து கப்பலூர் சுங்கச்சாவடி மீட்பு குழு தலைவர் ஜெயராமன் மற்றும் விருதுநகா் நாடாளுமன்ற தொகுதி முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கூறியதாவது:- மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் மத்திய மந்திரி நிதின்கட்காரி யை சந்தித்து கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினை களை குறித்து தெரிவித்த போது அவர் அதனை அகற்ற நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். மேலும் 60 கி. மீ. இடைவெளியில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்றும் விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால் எவ்வித ந டவ டிக்கையும் எடுக்கவில்லை. இதேநிலை நீடித்தால் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி காங்கி ரஸ் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • உதவி பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பில் சமையலயறை கட்டும் பணிகளையும், திருவண்ணா மலை ஊராட்சியில் என்.சண்முகசுந்தராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தைகள் நேய பள்ளி கட்டிடம் கட்டுதல் திட்டத்தின் கீழ் ரூ.31.30 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டும் பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமையலறை கூடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், பூவாணி கிராமத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழு தேனீ வளர்ப்பில் பயன்பெற்று வருவதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) தண்டபாணி, உதவி பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • விபத்துக்கு வழிவகுக்கும் போலீசாரின் வாகன சோதனை நடக்கிறது.
    • சோதனை என்ற பெயரில் போலீசார் தங்களது ஜீப்பை ரோட்டில் நிறுத்தி வாகன சோதனை நடத்துகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் ரெயில்வே பீடர் ரோடு வாகன நெரிசல் மிகுந்த பகுதியாகும். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த சாலையில் ஆயிரக்க ணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

    இங்குள்ள கந்தபுரம் தெரு வழியாக அங்குள்ள ராமர் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகிறார்கள். இதனால் ரெயில்வே பீடர் ரோடு பரபரப்பாக காணப்படு கிறது. வாகன நெரிசல் மிகுந்த இந்த சாலையில் கடந்த சில மாதங்களாக சோதனை என்ற பெயரில் போலீசார் தங்களது ஜீப்பை ரோட்டில் நிறுத்தி வாகன சோதனை நடத்துகின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த பகுதியில் வழக்கத்தை விட போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது.

    மேலும் சில நேரங்களில் விபத்தும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அண்மையில் அந்த சாலையில் நடந்த விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் சாலையில் போக்குவரத்தை சரிசெய்ய வேண்டிய போலீசாரே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகன சோதனை நடத்துவது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    • காசநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • காசநோய் கழகம் சார்பில் இலவசமாக நவீன முறையில் எக்ஸ்ரே எடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சக்க ராஜாக்கோட்டை மூதனூர் தாயாதியார் சாவடி வளாகத்தில் தேசிங்கு ராஜா பண்ணை நினைவாக சக்காராஜா கோட்டை சத்திரிய ராஜூக்கள் பொது மகாசபையும், விருதுநகர் மாவட்ட காசநோய் கழகமும் இணைந்து காசற்ற இலவச காசநோய் கண்டறியும் முகாமை நடத்தியது.

    முகாமில் சக்கராஜாக் கோட்டை சத்திரிய ராஜூக்கள் மகாசபை தலைவர் சின்ன வெங்கட ராஜா, ரவிராஜா, ஜெகநாத ராஜா, பலராம ராஜா, நகராட்சி ஆணையாளர். பார்த்தசாரதி மற்றும் சுகாதார அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு விருதுநகர் மாவட்ட காசநோய் கழகம் சார்பில் இலவசமாக நவீன முறையில் எக்ஸ்ரே எடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.இதில் காசநோய் கண்டறி யப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனை மூலம் தொடர்பு கொள்ளப்படு வார்கள். அவர்களுக்கு உரிய மருத்துவ உதவி அவர்களது இல்லம் தேடி வந்து விடும் என தெரிவிக்கப்பட்டது.

    காச நோயற்ற தமிழகம் காண்போம் என்ற தலைப்பில் (காசற்ற) இலவச முகாம் சிறப்பாக நடத்தியதை சமூக ஆர்வலர்கள் வரவேற்று பாராட்டினார்கள்.

    முகாம் ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட காசநோய் கழகம் மற்றும் தேசிங்கு ராஜா பண்ணை குடும்பத்தார் செய்திருந்தனர்.

    • 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் மது குடித்து வந்தார் இதனை மனைவி ராக்கம்மாள் (42) கண்டித்தார். இதில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த ராக்கம்மாள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கண்மாய்பட்டி மனோகரன் காலனியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி தேவதாய் (69). உடல்நல குறைவு காரணமாக விரக்தியில் இருந்த இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • மாநில அளவிலான போட்டியில் அருப்புக்கோட்டை பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • ஒரு லட்சத்து 15 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு 26 ஆயிரத்து 750 யோசனைகளை சமர்ப்பித்திருந்தனர்.

    அருப்புக்கோட்டை

    பள்ளிக்கல்வித்துறை, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் போட்டிகள் மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் நடைபெற்றன. இதில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப் பள்ளியின் ஐன்ஸ்டீன் குழுவைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர்கள் லலித்குமார், கோபிநாத், அபிஷேக் அடங்கிய குழு சமர்பித்த யோசனை ட்ரான்ஸ்பார்மர் செக்யூரிட்டி மாவட்ட அளவில் முதல் 10 இடங்களுக்குள் தேர்வு செய்யப்பட்டு, ஜனவரி மாதம் மண்டல அளவில் நடைபெறும் போட்டியில் விருதுநகர் மாவட்டம் சார்பாக கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களையும், உறுதுணையாக இருந்த அறிவியல் ஆசிரியர் சரவணகுமார் அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜர் ஏ.பி.கே. கல்விக்குழும தலைவர் ஜெயக்குமார், பள்ளி தலைவர் சிவராமகிருஷ்ணன், பள்ளிச் செயலாளர் மணி முருகன், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.

    கடந்த மே 6-ந்தேதி கிருஷ்ணன் கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்று 3-ம் இடத்தை பெற்று ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசினையும், முதல்வர் விருதினையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். விரைவில் சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சரிடம் விருது பெற உள்ளனர்.

    முன்னதாக இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு 26 ஆயிரத்து 750 யோசனைகளை சமர்ப்பித்திருந்தனர்.

    • விருதுநகா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அருகே பார்கள் அனுமதியின்றி செயல்படுவதாக புகாா் எழுந்தது.
    • அனுமதியின்றி செயல்பட்ட 4 பார்களை சாத்தூா் தாசில்தார் வெங்கடேசன், மதுவிலக்கு போலீசாா் பூட்டி சீல் வைத்தனா்.

    விருதுநகர்:

    விருதுநகா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அருகே பார்கள் அனுமதியின்றி செயல்படுவதாக புகாா் எழுந்தது. இது தொடர்பாக சோதனை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, விருதுநகா் வட்டாரத்தில் 18, சிவகாசி பகுதியில் 25, அருப்புக்கோட்டை பகுதியில் 11, ராஜபாளையம் பகுதியில் 25, சாத்தூா் பகுதியில் 8, ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் 20, திருச்சுழி பகுதியில் 14 என மொத்தம் 121 பார்கள் அனுமதியின்றி செயல்பட்டதை கண்டறிந்து சீல் வைத்தனா்.

    இதேபோல் சாத்தூா், வெம்பக்கோட்டை, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி பார்கள் செயல்படுவதாக சாத்தூா் வருவாய்த் துறையினருக்கும், மதுவிலக்கு போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சாத்தூா், இருக்கன்குடி, நென்மேனி, படந்தால், ஓவைய நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பார்களின் உரிமங்களை போலீசாா் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனா். அப்போது அந்தப் பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்ட 4 பார்களை சாத்தூா் தாசில்தார் வெங்கடேசன், மதுவிலக்கு போலீசாா் பூட்டி சீல் வைத்தனா்.

    வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் வெம்பக்கோட்டை தாசில்தார் ரெங்கநாதன், மதுவிலக்கு போலீசாா் ஆய்வு நடத்தினா். அப்போது அந்தப் பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்ட 4 பார்களுக்கு அவா்கள் சீல் வைத்தனா்.

    மேலும் பல்வேறு பார்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    ×