என் மலர்
விருதுநகர்
- கோவில் திருவிழாவில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.
- பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சேக்அப்துல்லா, 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பரளச்சி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கீழ்க்குடி கிராமத்தில் உலகநாயகி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்று இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பூலாங்கால் கிராமத்ைத சேர்ந்த பைசல் என்பவருக்கும், விழா கமிட்டியினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் சேக்அப்துல்லா(வயது24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் கிராம மக்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.
நிைலமை மோசமாகி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்ேபாது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து பரளச்சி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம், தலைமை ஏட்டு ராஜூ ஆகியோர் இருதரப்பினரை கண்டித்து சமரசமாக செல்லுமாறு எச்சரித்தனர்.
அப்போது சேக் அப்துல்லா மற்றும் 17 வயதுடைய நபர் சப்-இன்ஸ்பெக்டரையும், ஏட்டுவையும் பணி செய்ய விடாமல் தடுத்ததோடு அவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரின்பேரில் பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சேக்அப்துல்லா, 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
- ஆண்டாள் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது.
- 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் திருவேங்கமுடையான் சன்னதியில் ஆண்டாள்-ரங்கமன்னார் எழுந்தருளுகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகாசி மாத கோடை வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சந்தனகாப்பு சாற்றப்பட்டு, புஷ்ப ஆடை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன்பின் மாடவீதிகள் வழியாக சென்று நாடக சாலை தெருவில் உள்ள திருவேங்கடமுடையான் கோவில் தெப்பத்தில் ஆண்டாள்-ரங்கமன்னார் எழுந்தருளினர்.
அங்கு ஆண்டாள் பெயரில் இயற்றப்பட்ட கோதாஸ்துதி பாசுரம் பாடப்பட்டு, ஆண்டாள்-ரங்மன்னார் தெப்பத்தை வலம் வந்து சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் திருவேங்கமுடையான் சன்னதியில் ஆண்டாள்-ரங்கமன்னார் எழுந்தருளுகின்றனர்.
- அனுமதியின்றி பட்டாசு ஆலை வைத்திருந்தவர் மீது ேபாலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- இதில் ஆறுமுகசாமி கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள மல்லநாயக்கன்பட்டியில் சேகர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சமயன் அப்பநாயக்கன்பட்டி போலீசில் புகார் செய்தார். ேபாலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தி பட்டாசுகளை கொண்ட அட்டைபெட்டிகள், மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பட்டாசு ஆலை நடத்த இடம் கொடுத்த சேகர், ஆலை உரிமையாளர் திருத்தங்கல் ராஜசேகர், போர்மென் ஆறுமுகசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஆறுமுகசாமி கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வடுகப்பட்டி- அழகாபுரி சாலையில் உள்ள மூலிகை சேமிப்பு பண்ணையில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதாக நத்தம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அவர் கொடுத்த புகாரின்பேரில் நத்தம்பட்டி போலீசார் பண்ணையில் ேசாதனை நடத்தினர். அப்ேபாது அங்குள்ள தகர ெகாட்டகையில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதற்கான வெடி மருந்துகள் மற்றும் மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அழகாபுரியை சேர்ந்த மணிவைரம் என்பவரை தேடி வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் அமைய உள்ள நடமாடும் மதி அங்காடிகளில் பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினரால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் பிற தயாரிப்புகளை விற்பனை செய்ய விருதுநகர் மாவட்டத்தில் நடமாடும் மதி அங்காடிகள் அமைக்கப்பட உள்ளது.
அதன்படி விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு 3 நடமாடும் மதி அங்காடிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் மதி அங்காடிகளை இயக்க பின்வரும் விதிமுறை களுக்குட்பட்டு பயனாளிகள் தேர்வு செயயப்பட உள்ளனர். பயனாளிகள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும்.
மகளிர் மாற்றுத்திறனாளி கள், ஒற்றைப்பெற்றோர், கணவரால் கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளிகள், விதவை மாற்றுத்திறனாளி யாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் உறுப்பினர் சிறப்பு சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் பயனாளிகள் சார்ந்த சுய உதவிக்குழு தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணையத்தில் பதிவு பெற்றிருக்க வேண்டும். பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஆர்வம் மற்றும் முன்அனுபவ முடையவராக இருக்க வேண்டும்.
உறுப்பினர் சார்ந்த சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கி ஓராண்டிற்கு மேல் நிறைவடைந்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் உறுப்பினர்மீது வங்கி மற்றும் சமுதாய அமைப்புகளில் வராக்கடன் ஏதும் இல்லை என சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதிகள் பெற்றிருக்கும் விருப்ப முள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வளாகம், விருதுநகர் மாவட்டம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நரிக்குடி அருகே டாஸ்மாக் கடையில் மர்மநபர்கள் மதுபாட்டில்களை மூட்டை கட்டி திருட முயன்றனர்.
- போலீசார் ரோந்து வந்ததால் போட்டுவிட்டு தப்பினர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் -மானாசாைல ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக பாலகிருஷ்ணன் , சூப்பர்வைசராக இருளாண்டி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்கள் நேற்று இரவு வசூல் பணம் ரூ.2லட்சத்தை எடுத்துக் கொண்டு கடையை பூட்டி விட்டு சென்றனர். அதன்பிறகு நள்ளிரவு நேரத்தில் அந்த கடையில் கொள்ளையடிப்பதற்காக சில மர்ம நபர்கள் வந்துள்ளனர்.
அவர்கள் முதலில் கடையின் முன்பு இருந்த சி.சி.டி.வி. காமிராவை உடைத்து சேதப்படுத்தினர். பின்பு அவர்கள் டாஸ்மாக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பணம் கொள்ளையடிக்கலாம் என்று பணப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் பணம் எதுவும் இல்லை.
இதனால் விரக்தியடைந்த கொள்ளையர்கள், கடையில் இருந்த மது பாட்டில்களை எடுத்துச்செல்லலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி ஒரு சாக்கில் ஏராளமான மதுபாட்டில்களை வைத்து மூட்டை கட்டினர். மேலும் தங்களிடம் இருந்த ஜவுளிக்கடை கட்டை பையிலும் மதுபாட்டில்களை அடுக்கினர்.
பின்பு அவற்றை கடைக்கு வெளியே எடுத்து வந்தனர். அப்போது அந்த வழியாக வீரசோழன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமல் மற்றும் போலீசார் ரோந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்த அந்த மர்மநபர்கள், மூட்டை மற்றும் பையில் கட்டிவைத்திருந்த மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர்.
மதுக்கடையில் இருந்து மர்மநபர்கள் தப்பி ஓடுவதை பார்த்த போலீசார், அவர்களை பிடிப்பதற்காக துரத்திக்கொண்டு ஓடினர். ஆனால் அந்த மர்மநபர்கள், வேகமாக ஓடி போலீசாரிடம் சிக்காமல் தப்பிச் சென்றுவிட்டனர்.
மதுக்கடையில் மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்றது மற்றும் காமிராவை உடைத்த சம்பவம் தொடர்பாக கடையின் சூப்பர்வைசர் இருளாண்டி வீரசோழன் போலீசில் புகார் செய்தார். டாஸ்மாக் ஊழியர்கள் வசூல் பணத்தை கடையில் வைத்துவிட்டு செல்லாமல் கொண்டு சென்றதால், கொள்ளையர்களிடம் பணம் சிக்கவில்லை.
மேலும் போலீசார் ரோந்து வந்ததால் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களும் தப்பின. கடையில் வைக்கப்பட்டிருந்த காமிரா மட்டும், கொள்ளையர்கள் உடைத்ததால் சேதமாகிவிட்டது. அவற்றின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.
மதுக்கடையில் கொள்ளையர்கள் புகுந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
- மகனிடம் இருந்து வீட்டை மீட்டுத்தர வேண்டும் என்று கலெக்டரிடம் மூதாட்டி மனு அளித்தார்.
- மகள் மற்றும் மகன்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் தவசி. இவரது மனைவி செல்லம்மாள் (வயது80). இவர்களுக்கு 4 மகன்கள், 1 மகள் உள்ளனர். மகள் மற்றும் மகன்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
தவசி 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். செல்லம்மாள் சொத்துக்களை மகன்களுக்கு பிரித்து கொடுத்தார்.
தான் வசித்து வரும் வீட்டையும் மகன்க ளுக்கு தானமாக பத்திரப் பதிவு செய்து கொடுத்தார்.
இந்தநிலையில் மூத்த மகன் பொன்மாடசாமி, தாய் செல்லம்மாளை வீட்டை விட்டு வெளியேறு மாறு அடித்து துன்புறுத்தி உள்ளார். இது குறித்து செல்லம்மாள் ஸ்ரீவில்லி புத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் ஜெயசீலனிடம் புகார்் செய்தார். அந்த மனுவில் மகன் தன்னை அடித்து விரட்டுவதால் வீட்டை தானமாக வழங்கிய பத்திரத்தை ரத்து செய்து வீட்டை மீட்டுத் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
- புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
- ரூ.46 ஆயிரத்து 870 ரொக்கம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை ேபாலீசார் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள மாரிகுண்டாம்பட்டி பகுதியில் உள்ள புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெம்பக்கோட்டை போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது மாரிச்சாமி(48) என்பவது வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு தடைசெய்யப்பட்ட ஏராளமான புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அங்கு வைக்கப்பட்டிருந்த 457 புகையிலை பாக்கெட்டுகள், ரூ.46 ஆயிரத்து 870 ரொக்கம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை ேபாலீசார் பறிமுதல் செய்தனர். புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்த மாரிச்சாமி, புகையிலை பாக்கெட்டுகளை வாங்கி செல்வதற்காக வந்த சித்துராஜபுரத்தை சேர்ந்த ராமசாமி(40), சாத்தூர் நடுவப்பட்டியை சேர்ந்த மனோகரன்(40) ஆகியோரை கைது செய்தனர்.
- திருச்சுழி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
- 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் அம்மன்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் மற்றும் தேவர் குருபூஜை விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதில் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஒரு குழுவிற்கு 12 பேர் என 10 குழுக்களை சேர்ந்த சுமார் 120-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். இதை உள்ளூர், வெளியூர் பொதுமக்கள் ஆராவாரத்துடன் கண்டு ரசித்தனர்.
வெற்றி பெற்ற குழுவினருக்கு ரொக்கப்பணம் சேர், கட்டில், குத்துவிளக்கு மற்றும் மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது. திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை அமைச்சர் நேரு இன்று தொடங்கி வைக்கிறார்.
- கொரோனா தாக்கத்தினாலும் பணியில் தொய்வு ஏற்பட்டு கைவிடப்படும் சூழ்நிலை உருவானது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகருக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு கடந்த 2012-ம் ஆண்டு அன்றைய முதல்- அமைச்சரால் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அப்பணிகள் எதுவும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது.
அதன்பின் ராஜபாளையம் தொகுதிக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக தங்கப்பாண்டியன் பொறுப்பேற்றவுடன், அம்ரூத் திட்டத்தில் மத்திய-மாநில அரசு மானியத்தின் கீழ் 2016-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 110 விதியின் கீழ் மீண்டும் ராஜபாளையம் நகருக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் பணீந்திரரெட்டியிடம் எம்.எல்.ஏ. சென்று மனு அளித்து தொடர்ந்து வலியுறுத்தி அனைத்து முயற்சிகளும் செய்து ராஜபாளையம் நகருக்கு ரூ172.70 கோடி மதிப்பில் மேற்கண்ட திட்டத்திற்கு 30-1-2017 அன்று அரசாண வெளியிடப்பட்டது. இந்த திட்டத்திற்காக ராஜபாளையம் நகரில் 11 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பட இருந்தது.
கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தங்கப் பாண்டியன்.எம்.எல்.ஏ தலைமையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பூமி பூஜை நடை பெற்றது. தங்க பாண்டியன் எதிர்கட்சி சட்ட மன்ற உறுப்பினராக இருந்தபோதிலும் பணியில் தொய்வு ஏற்படும் போது அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு திட்டப் பணியை விரைவுப்படுத்தினார். அதன்பின் ஒப்பந்த தாரரின் தனிப்பட்ட பிரச்சினையாலும், கொரோ னா தாக்கத்தினாலும் பணியில் தொய்வு ஏற்பட்டு கைவிடப் படும் சூழ்நிலை உருவானது.
இந்நிலையில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்து மு.க.ஸ்டாலின் முதல் அமைச்ச ராக பொறுப்பேற்ற வுடன் திட்டப்பணிக்கு மீண்டும் செயல்படுத்த தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. நடவடிக்கை மேற்கொண் டார். அதன்படி நகராட்சி நிர்வாக துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவையும், விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுவிடமும் பேசி திட்டப்பணியை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. விரைவு படுத்தினார்.
தற்போது தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து உள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று (26-ந்தேதி) மாலை 6 மணியளவில் சங்கரன் கோவிலில் நடக்கிறது. அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
ராஜபாளையம் மக்களின் நீண்டநாள் கனவான தாமிரபரணி குடிநீர் வந்தடைந்தவுடன், ஆளுயர மாலையை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு வெற்றி மாலையாக அணிவித்து மகிழ தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.
- பட்டாசு வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
- 10 கிலோ சாக்குமூடை, மூலப்ெபாருட்களை பறிமுதல் செய்த போலீசார் ைகது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அன்பில்நகரம் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் ஏழாயிரம்பண்ணை போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கிருந்த தகர செட்டில் பாதுகாப்பின்றி சாக்குமூடைகளில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் வெடிபொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களும் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 15 கிலோ இரண்டு சாக்கு மூடைகள், ஒரு 10 கிலோ சாக்குமூடை, மூலப்ெபாருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை பதுக்கிவைத்திருந்த ராஜிவ்காந்தியை(38) ைகது செய்தனர்.
சிவகங்கை நகர் பஸ் நிலையத்தில் லாட்டரி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நகர் போலீசார் பஸ்நிலையப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி லாட்டரி விற்ற சகாய குளோரி, சிவசக்கரவர்த்தி, நாகவேல், துரைப்பாண்டியன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கேரள லாட்டரிகள், ரூ.1500 பறிமுதல் செய்யப்பட்டது.
- ஒரே நாள் இரவில் 2 வீடுகள், தனியார் நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யாநகரை சேர்ந்தவர் கயத்தம்மாள். இவர் அங்குள்ள ஒரு வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் மருத்துவ பரிசோதனைக்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் மதுரைக்கு சென்று விட்டார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்(வயது28) என்பவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு கயத்தம்மாள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்த மர்ம நபர்கள் அதில் இருந்த 10 பவுன் நகை, பணத்தை திருடினர். அங்கிருந்து வெளியேறிய கும்பல் அருகில் உள்ள சதீஷ் வீட்டுக்குள் புகுந்து 5 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். மேலும் அதே பகுதியில் பூட்டியிருந்த சில வீடுகளிலும் அந்த கும்பல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கதவை உடைக்க முடியாததால் அவர்கள் அதனை கைவிட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி ஹவுசிங் போர்டு பகுதியில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. நேற்று இரவு இங்கு வந்த கொள்ளை கும்பல் கதவை உடைத்து அலுவலகத்தில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றது. இன்று காலை கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன் மற்றும் போலீசார் திருட்டு நடந்த வீடுகள், நிதி நிறுவனத்தில் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த இடங்களில் கைரேகைகளை சேகரித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஒரே நாள் இரவில் 2 வீடுகள், தனியார் நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் பல நாட்கள் திட்டம் தீட்டி இதில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
- ஜனநாயக மரபை சிதைக்கிற வகையில் பிரதமர் மோடி நடந்து கொள்வது அதிர்ச்சியளிக்கிறது.
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை வருகிற 28-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவை தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிக்க உள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின்படி பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அதிகாரப்பூர்வ தலைவர் குடியரசு தலைவர் தான். எனவே அவர் தான் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும். ஆனால் தன்னுடைய பெயர் வரலாற்றில் நிலைக்க வேண்டும் என்ற ஆசையால் ஜனநாயக மரபை சிதைக்கிற வகையில் பிரதமர் மோடி நடந்து கொள்வது அதிர்ச்சியளிக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
எனவே புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் 28-ந்தேதியை துக்க தினமாக கடைபிடிப்போம். அந்த நாளில் கட்டிடத்தை திறப்பதற்கு உள்நோக்கம் இருக்கிறது. சவார்கரின் பிறந்த நாளன்று பாராளுமன்றம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கறுப்பு கட்டை அணிந்து கருப்பு கொடி ஏந்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






