என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vasant Utsavam"

    • ஆண்டாள் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது.
    • 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் திருவேங்கமுடையான் சன்னதியில் ஆண்டாள்-ரங்கமன்னார் எழுந்தருளுகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகாசி மாத கோடை வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சந்தனகாப்பு சாற்றப்பட்டு, புஷ்ப ஆடை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன்பின் மாடவீதிகள் வழியாக சென்று நாடக சாலை தெருவில் உள்ள திருவேங்கடமுடையான் கோவில் தெப்பத்தில் ஆண்டாள்-ரங்கமன்னார் எழுந்தருளினர்.

    அங்கு ஆண்டாள் பெயரில் இயற்றப்பட்ட கோதாஸ்துதி பாசுரம் பாடப்பட்டு, ஆண்டாள்-ரங்மன்னார் தெப்பத்தை வலம் வந்து சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் திருவேங்கமுடையான் சன்னதியில் ஆண்டாள்-ரங்கமன்னார் எழுந்தருளுகின்றனர்.

    • வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும்
    • வசந்த உற்சவ நாட்களில் இரவு 8 மணிக்கு பிறகு ஆரியபடாள் வாசலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    திருச்சி:

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த உற்சவத்தின் போது நம்பெருமாள் கோவிலின் நான்காம் பிரகாரமான ஆலிநாடன் திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி வடபுறம் அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார்.

    உற்சவத்தையொட்டி தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ் தனத்திலிருந்து புறப்பட்டு வசந்த மண்டபதிற்கு மாலை 6 மணிக்கு சென்றடைவார். அங்கு மண்டபத்தில் நடுவில் நம்பெருமாள் ஒய்யாரமாக வீற்றிருப்பார்.

    வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும். வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணா பிஷேகம் கண்டருளினார். பின்னர் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 9மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.


    வசந்த உற்சவ விழாவின் 7ம் நாளான்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறார். 9ம் திருநாள் அன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுவார்.

    வசந்த உற்சவ நாட்களில் இரவு 8 மணிக்கு பிறகு ஆரியபடாள் வாசலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • ஐந்து மூலவர் ஸ்தலம் அல்லது பஞ்ச மூர்த்தி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.
    • மூலவர் திருமேனியே கீதையில் பகவானின் சொரூபம் என்று கருதப்படுகிறது.

    "இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும்

    இன்பன், நற்புவி தனக்கு இறைவன்

    தன்துணை ஆயர் பாவை நப்பின்னை

    தனக்கிறை, மற்றையோர்க் கெல்லாம்

    வன்துணை, பஞ்ச பாண்டவர்க்காகி

    வாயுரை தூது சென்று இயங்கும்

    என்துணை எந்தை தந்தை தம்மானை''

    திருவல்லிக்கேணி கண்டேனே என்று திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட, திருத்தலம் சென்னையில் புகழ் பெற்ற தலம்.

    என்ன சிறப்பு என்றால், பிரதான மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர், முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான், பிரகாரத்தில் கஜேந்திர வரதர் மற்றும் யோக நரசிம்மர் தனித் தனி சந்நதிகளில் அருள்பாலிக்கின்றனர். அதனால் இத்தலம் ஐந்து மூலவர் ஸ்தலம் அல்லது பஞ்ச மூர்த்தி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.

    ரங்கநாதர் சந்நதியில் சுவாமியின் திருமுடிக்கு அருகில் வராகரும், திருவடிக்கு அருகில் நரசிம்மரும் உள்ளனர். இங்குள்ள மூலவர் திருமேனியே கீதையில் பகவானின் சொரூபம் என்று கருதப்படுகிறது.

    நின்றான் கோலத்துக்கு வேங்கடகிருஷ்ணர், அமர்ந்தான் கோலத்துக்கு தெள்ளியசிங்கர் என்றழைக்கப்படும் நரசிம்மர், கிடந்தான் கோலத்துக்கு மன்னாதர் என்றழைக்கப்படும் ரங்கநாதர். இந்த மூன்று நிலைகளுமே வீரம், யோகம், போகம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அருள்வதாக அமைந்துள்ளன.

    அதனால் ஒவ்வொரு மூலவருக்கும் தனித் தனி உற்சவங்கள் நடக்கும். இன்று முதல், ஸ்ரீ ரங்கநாதருக்கு 3 நாட்கள் வசந்த உற்சவம்.

    ×