என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை விபத்து
- சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
- பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்தனர்.
விருதுநகர்
சிவகாசி பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் பட்டாசுகள் வெடித்து சிதறி அறைகள் தரைமட்டமானது. இதில் காளிராஜ் என்பவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து சாணார்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சாந்தி சம்பவ இடத்தில்ஆய்வு செய்து எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பட்டாசு ஆலை உரிமையாளர் மாடசாமி, மேலாளர் முத்துக்குமார், போர்மென் முத்துகருப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி சிவகாமிபுரம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பட்டாசு கடை அருகில் முத்தமிழ்புரம் காலனியை சேர்ந்த அருணாசலம் (32) என்பவருக்கு சொந்தமான செட்டில் பாதுகாப்பின்றி அட்டை பெட்டியில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்