search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு
    X

    மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு

    • மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • தேசிய சேவை தொண்டர் மலைசாமி நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி, திருச்சுழி ஒன்றியங்களில் மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் நேரு யுவகேந்திரா சார்பில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிலம்ப கலைக்குழு மற்றும் பால் சிலம்பம் கிராமிய கலைக்குழு ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாணவ-மாணவிகளின் சிலம்பம், வாள் வீச்சு, கட்டைக்கால் போன்ற பாரம்பரியமிக்க கலைகளின் வாயிலாக மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதில் வில்லிபத்திரி இளையோர் மன்றத்தலைவர் கருப்பசாமி, பால் சிலம்பம் ஆசிரியர் வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.தேசிய சேவை தொண்டர் மலைசாமி நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

    Next Story
    ×