என் மலர்
விழுப்புரம்
- தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.
- சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில் சிறுமி லியாவின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிவில் மாணவி லியா லட்சுமியின் நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
கழிவு நீர் தொட்டியில் விழுந்ததன் காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுவரை பிரேத பரிசோதனை அறிக்கை காவல் துறைக்கு மருத்துவக் கல்லூரியில் இருந்து வழங்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
- தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சம் நிவாரண நிதியை சிறுமியின் பெற்றோரிடம் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
- தவறு செய்தவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3½ வயது சிறுமி லியோ லட்சுமி பலியானதாக கூறப்படுகிறது. இறந்த சிறுமியின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் சிறுமியின் உடல் சொந்த ஊரான விக்கிரவாண்டிக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
சிறுமியின் உடலுக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி, விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சம் நிவாரண நிதியை சிறுமியின் பெற்றோரிடம் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
சிறுமி பலியான சம்பவம் மனவருத்ததை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த தமிழக முதலமைச்சர் ரூ.3 லட்சம் வழங்கியுள்ளார். இந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவறு செய்தவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்திற்கு யாருக்காவது அரசு வேலை வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளி முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
- பள்ளியில் இருக்கக்கூடிய அலுவலர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.
சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளி முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில் சிறுமி லியாவின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சிறுமியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் தனியார் பள்ளியில் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளியில் இருக்கக்கூடிய அலுவலர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
- மார்க்சிஸ்ட் கட்சி என்பது யாரோ ஒருவருக்கு சொந்தமான கட்சி அல்ல.
- சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா?
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 24-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தலைமை வகித்தார்.
இந்த பொதுக் கூட்டத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் தொழிற்சங்க பிரிவு செளந்தரராஜன், மதுரை எம்.பி வெங்கடேசன், வாசுகி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பேசிய கே.பாலகிருஷ்ணன், பா.ஜ.க. மற்றும் பா.ம.க. குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். மேலும் தாங்கள் கூட்டணி அமைத்துள்ள ஆளுங்கட்சியான தி.மு.க.-வையும் அவர் தாக்கி பேசினார். அவர் பேசியதாவது:-
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்காக கொதிக்கும் அண்ணாமலை, அ.தி.மு.க. ஆட்சியின் போது பொள்ளாச்சியில் பெண்களுக்கு வன்கொடுமை நடந்ததே அப்போது அமெரிக்காவுக்கு படிக்கப் போயிருந்தாரா?. அ.தி.மு.க.-வோடு கூட்டணி பேசிக்கொண்டிருந்தார். அன்றைக்கு ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கோரவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி உங்களுக்கு கவலையில்லை, அரசியல் தான் முக்கியமாக இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க.-வின் முயற்சிகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.-வின் முயற்சி தமிழகத்தில் ஒருபோதும் வெற்றி பெறாது.
ஒரு கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்த போது அந்த கட்சியின் நிறுவனர், இது நான் உருவாக்கிய கட்சி. இங்கே நான் சொல்வதை தான் எல்லோரும் கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லை என்றால் அவர்கள் இந்த அரங்கத்தை விட்டு வெளியே போய்விடலாம் என்று பேசுகிறார். ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி என்பது யாரோ ஒருவருக்கு சொந்தமான கட்சி அல்ல. லட்சக்கணக்கான உழைப்பாளர்கள் தங்கள் உதிரத்தை சிந்தி வளர்த்திருக்கிற கட்சி.
ஆளும் தி.மு.க. உடன் கூட்டணி வைத்துள்ளோம் என்ற அடிப்படையில் பா.ஜ.க., பா.ம.க.-வை கே.பாலகிருஷ்ணன் விமர்சித்தார் என்று பார்த்தால், முதலமைச்சரையும் கேள்வி எழுப்பினார்.
ஒரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னால் காவல்துறை வழக்கு போடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது. போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா? எனவே, இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.
அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் யார் அந்த சார் என்று எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவனும் கேள்வியை முன்வைக்க, தற்போது மற்றொரு கூட்டணி கட்சியான சி.பி.எம். கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் முதலமைச்சரை கேள்வி கணைககளால் துளைத்திருப்பது தி.மு.க. கூட்டணிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளி ஆட்கள் பள்ளிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில் சிறுமி லியாவின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.
- சிறுமி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டிய பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- வெளி ஆட்கள் பள்ளிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனியார் பள்ளி முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளி ஆட்கள் பள்ளிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் காவல் நிலையம் உள்ளது. 4 காவல் துறை வாகனங்களும் பள்ளியின் முன்பு நிறுத்தப்பட்டுள்ளது.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமி லியா லட்சுமியின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.
சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- தனியார் பள்ளியில் UKG படித்து வந்த சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு.
- பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிப்பதாக உறவினர் குற்றச்சாட்டு.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படித்து வந்த சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை கழிவுர் நீர் தொட்டியில் விழுந்தது தொடர்பாக தங்களிடம் பள்ளி நிர்வாகம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை. 3 மணிக்கு பிறகுதான் தகவல் தெரிவித்ததாக பெற்றோர் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
குழந்தை மதியம் 2 மணிக்குப் பிறகே ரெஸ்ட் ரூம் செல்வதற்காக வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. ஆனால் சிறுமியை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சியில் 1.50 எனக் காட்டுகிறது.
இவ்வாறு பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிப்பதாக உறவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் செயின்ட் மேரீஸ் பள்ளி முதல்வர் டொமினிக் மேரி, யுகேஜி வகுப்பு ஆசிரியை ஏஞ்சல், தாளாளர் எமால்டா ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிப்பதாக உறவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படித்து வந்த சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை கழிவுர் நீர் தொட்டியில் விழுந்தது தொடர்பான தங்களிடம் பள்ளி நிர்வாகம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை. 3 மணிக்கு பிறகுதான் தகவல் தெரிவித்ததாக பெற்றோர் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
குழந்தை மதியம் 2 மணிக்குப் பிறகே ரெஸ்ட் ரூம் செல்வதற்காக வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. ஆனால் சிறுமியை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சியில் 1.50 எனக் காட்டுகிறது.
இவ்வாறு பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிப்பதாக உறவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி தனியார் பள்ளிகள் இயக்குனர் முத்து பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
- குழந்தை மதியம் 2 மணிக்குப் பிறகே ரெஸ்ட் ரூம் செல்வதற்காக வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது.
- ஆனால் சிறுமியை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சியில் 1.50 எனக் காட்டுகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படித்து வந்த சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை கழிவுர் நீர் தொட்டியில் விழுந்தது தொடர்பான தங்களிடம் பள்ளி நிர்வாகம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை. 3 மணிக்கு பிறகுதான் தகவல் தெரிவித்ததாக பெற்றோர் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
லஞ்ச் முடிந்து 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. சிறுமி மதியம் 2 மணிக்கு ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டும் எனக் கூறி வக்குப்பறையில் இருந்த வெளியேறினார். 2.05 வரை சிறுமி திரும்பாததால் ஆசிரியர் ரெஸ்ட் ரூம் சென்று பார்த்தபோது சிறுமி அங்கு இல்லாததால் தேட ஆரம்பித்தார்கள்.
எல்லா வகுப்பறையிலும் பார்த்தோம். எங்கேயும் இல்லை. பின்னர் கழிவுநீர் தொட்டி அருகே சென்று பார்க்கும்போது, கம்பி வலை எடுக்கப்பட்டிருந்தது. உடனே கழிவுநீர் தொட்டியை பார்க்கும்போது உள்ளே சிறுமியின் செருப்பு கிடந்தது. இதனைத் தொடர்ந்து கழிவுநீர் தொட்டியில் பார்க்கும்போது குழந்தை உள்ளே விழுந்தது தெரியவந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் என தலைமை ஆசிரியர் கூறுகிறார்.
மதியம் 2 மணிக்குப் பிறகே ரெஸ்ட் ரூம் செல்வதற்காக வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாக தலைமை ஆசிரியர் கூறிய நிலையில், சிறுமியை ஒருவர் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் செல்லும் சிசிடிவி காட்சியில் 1.50 எனக் காட்டுகிறது.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் சிசிடிவி-யில் 2.40 மணி எனக் காட்டுகிறது. குழந்தையை கழிவுநீர் தொட்டியில் இருந்து தூக்கிய பிறகு சுமார் ஒரு மணி நேரம் தாமதம் ஏன்? என்ற கேள்வி எழும்புகிறது.
மேலும், கழிவு நீர் மேடான பகுதியில் உள்ளது. UKG சிறுமியால் மேடான பகுதியில் ஏற முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது?
அத்துடன் சிறுமியின் ஆடை நணையாமல் இருந்துள்ளது. கழிவுநீர் தொட்டியில் விழுந்தால் எப்படி ஆடை நணையாமல் இருக்கும். மேலும், கழிவுகள் ஆடையில் ஒட்டாமல் இருக்குமா?. ஆடையில் கழிவு ஒட்டியதற்கான அடையாளம் இல்லை.
குழந்தையை தூக்கிச் செல்லும் நபர் எந்தவித பதற்றமின்றி சாதாரணமாக தூக்கிச் செல்கிறார். குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சி மட்டுமே சிசிடிவி காட்சியில் இடம் பெற்றுள்ளது.
தலைமை ஆசியர் கூறியதற்கும் சிசிடிவி காட்சியில் தெரியும் நேரத்திற்கும் மாறுபாடு உள்ளது. சிறுமி உயிரிழப்பு தொடர்பாக பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரண் தகவலை தெரிவிப்பதாகவும், சிறுமி உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகவும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
- பலிக்கு காரணமான அலட்சிய அலுவர்களை கைது செய்யக்கோரியும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டுள்ளனர்
- அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விக்கிரவாண்டி பகுதியில் உள்ள செயிண்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் சிறுமி லியா லெட்சுமி UKG படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக பலியாகினார்.
குழந்தை பலியான சம்பவத்தால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் குழந்தை பலிக்கு நீதி கேட்டும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும் பலிக்கு காரணமான அலட்சிய அலுவர்களை கைது செய்யக்கோரியும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் அதாள பாதாளத்திற்கு சென்றுள்ளது.
- முதலமைச்சர் 2 மாதங்களுக்கு ஒரு முறை கலந்தாய்வு மேற்கொள்ள வேண்டும்.
திண்டிவனம்:
பா.ம.க. பொதுக்குழு கூட்டம் புதுவை அருகே உள்ள பட்டானூர் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் கடந்த 28-ந் தேதி நடைபெற்றது.
பொதுக்குழுவில் பா.மக. இளைஞர் அணி தலைவராக முகுந்தனை நியமித்து பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பா.ம.க. பொதுக்குழுவில் மோதல் உருவானது. இது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பா.மக. இளைஞர் அணி தலைவர் முகுந்தன் தான் என திட்டவட்டமாக அறிவித்தார்.
முகுந்தனை இளைஞர் அணி தலைவராக பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்தது தொடரும். அவர் இளைஞரணி தலைவராகவே இருப்பார். இதில் எந்தவித மாற்றமும் இல்லை. பொதுக்குழுவில் அறிவித்தபடி முகுந்தனிடம் நியமன கடிதத்தை வழங்கி விட்டேன்.
அன்புமணியுடன் கருத்து வேறுபாடு இல்லை. இது பேசி சரியாகி விட்டது. பா.ம.க. பொதுக்குழுவில் நடந்தது உட்கட்சி விவகாரம்.
தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் அதாள பாதாளத்திற்கு சென்றுள்ளது. மக்களை கேட்டால் முதலமைச்சரின் திறமையின்மையையே சொல்வார்கள். புலனாய்வு அதிகாரிகள் முதலமைச்சருக்கு சொல்வார்கள். இதற்கு முதலமைச்சர் திறமை இன்மையாக இருக்குமோ. இவரும் இவரது மகனை துணை முதலமைச்சராக்கி உள்ளார்.
தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையாக போற்றப்பட்டது. இப்போது முற்றிலுமாக முடங்கி விட்டது. திறமையான அதிகாரிகள் பலரும் இருக்கிறார்கள்.
வேங்கை வயலில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் 2 ஆண்டுகள் ஆகியும், குற்றவாளிகள் கைது செய்யப்பட வில்லை. அரசு மது கடையில் அருந்திய மதுவில் சயனைடு கலந்துள்ளது என சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டும் 1½ ஆண்டும் கண்டுபிடிக்கவில்லை. காங்கிரஸ் பிரமுகர் ஜெயகுமார் கொலை வழக்கில் 9 மாதம் ஆகியும் குற்றவாளி கண்டு பிடிக்கவில்லை.
திருப்பூர் பல்லடம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு 90 நாட்கள் ஆகியும், 14 தனி படைகள் அமைத்தும் கண்டுபிடிக்கவில்லை. தமிழக போலீசார் திறமையற்று இருக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி அருகே ஒரு பெண், பால் விற்பனை செய்துவிட்டு திரும்பும்போது, கொலை செய்யப்பட்ட நிலையில் இதுவரை குற்றவாளி கண்டு பிடிக்கவில்லை. காவல்துறை பல குழுக்கள் கொண்டுள்ளன. அதிராக மையங்களை வைத்து கொண்டு தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
முதலமைச்சர் 2 மாதங்களுக்கு ஒரு முறை கலந்தாய்வு மேற்கொள்ள வேண்டும். காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். டாஸ்மாக் சந்து, பொந்து கடைகளை மூட வேண்டும் 4,829 அதிகார கடைகள் உள்ளது. சந்து கடைகள் எங்கு உள்ளது என்று காவல்துறைக்கு நன்றாக தெரியும். இந்த கடைகளை மூட வேண்டும். அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
கட்சி நிர்வாகிகள் மற்றும் காவல்துறைக்கும் மாமூல் தருகின்றனர். மாணவர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
மகளிர் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும், மாணவர்கள், சிறுவர்கள் பாதிக்காத வகையில் சந்து கடைகளை மூட வேண்டும். இல்லையெனில் பா.ம.க. முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
மெத்த பெட்டமைன், கஞ்சா, அபின், போதைப்பொருள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டை மது இல்லா மாநிலமாக மாற்றப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது அரசு. இளைஞர்கள் சீரழிவதை வேடிக்கை பார்க்க முடியாது. தவறுகளும், தோல்விகளையும் மறைக்க தங்களது தோல்விகளை மறைக்க போராட்டம் நடத்தப்படும் கட்சிகள் மீது அடக்குமுறை கையில் எடுத்து வருகிறது. போராட்டம் செய்யக்கூடாது என்று கைது செய்யப்படுகின்றனர்.
தி.மு.க. ஆட்சியின் இந்த அடக்குமுறை இந்த ஆட்சியின் தோல்வியை ஒப்புக்கொள்கிறது. எதிர்க்கட்சியை அடக்குவது மூலம் தங்களது தோல்வியை ஒப்புக்கொள்கிறது. தி.மு.க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. சட்ட பேரவை தேர்தல் எப்போது நடந்தாலும் தோல்வியை சந்திக்கும். அரசு பள்ளிகளை மேம்படுத்த தனியார் பள்ளிகளிடம் உதவி பெறும் முடிவை அரசு கைவிட வேண்டும்.
அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக தனி ஆணையம் அமைத்து, நிதி பெறுவது தவறில்லை. கட்டாய கல்வி, கண்டனமில்லா கல்வி, தரமான கல்வி-கட்டணத்தை அரசே கட்டவேண்டும்.
நகர்புற உள்ளாட்சிகளுடன் கிராமப்புற உள்ளாட்சிகள் இணைக்கப்படக்கூடாது. 400 மேற்பட்ட கிராம ஊராட்சிகள் கலைக்கப்பட உள்ளது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் அதிகளவு பாதிக்கப்படுவார்கள்.
சொத்து வரி, குடிநீர் வரி உயரும். 100 நாள் வேலை திட்டம் ரத்து செய்யப்படும். அரசு இதனை கைவிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை அரசு நடத்த வேண்டும். 10.5 இட ஒதுக்கீட்டிற்கு பா.ம.க. தொடர்ந்து போராடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
- ஜகத் ஜனனி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இரவு மார்கழி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி, பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை பொருட்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து தங்ககவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு ஜகத் ஜனனி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.
தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு பம்பை மேள தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக் கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி, அங்காளம்மா! என்று பக்தி கோஷத்துடன அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து இரவு 12.30 மணியளவில் ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு பூக்காளால் அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து உற்சவர் அம்மன் கோவில் மண்டபத்திற்கு சென்றனர்.
ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
விழாவில் செஞ்சி துணைபோலீஸ் சூப்பிரண்டு கார்த்திகா பிரியா தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் மேல்மலையனூருக்கு இயக்கப்பட்டன.






