என் மலர்
விழுப்புரம்
- விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.
- விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.
விழுப்புரம்:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு பயணத்தின் போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். அவருக்கு விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையின் இருபுறமும் காத்திருந்த பொதுமக்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழுப்புரம் மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
- சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம்:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு பயணத்தின் போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக இன்று மாலை வருகிறார். இன்று மாலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான ஓங்கூர் சுங்கச்சாவடி அருகில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பொன். கவுதமசிகாமணி, டாக்டர் சேகர் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
அதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு திண்டிவனம் நகரில் சென்னை சாலையில் மேம்பாலம் வழியாக ஜே.வி.எஸ். திருமண மண்டபம் வரை வந்து (ரோடு ஷோ) பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெறுகிறார்.
அதன் பின்னர் அந்த திருமண மண்டபத்தில் நடைபெறும் விழுப்புரம் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி சிறப்புரையாற்றுகிறார்.
பின்னர் திண்டிவனத்தில் இருந்து காரில் புறப்பட்டு விழுப்புரம் வருகிறார். அங்கு கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகே ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மறைந்த ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கம் மற்றும் இட ஒதுக்கீடு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த 21 சமூக போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் ரூ. 5.70 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
அதனை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருக்கும் விழா பந்தல் மேடைக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி விழுப்புரம் மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று தி.மு.க. கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- இந்த திராவிட மாடல் ஆட்சியை யாரால் தொட்டு கூட பார்க்க முடியாது.
- தன்னுடைய செய்தி வரவேண்டும் என்பதற்காக சீமான், பெரியார் குறித்து அவதூறாக பேசி வருகிறார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெரியாரை சொல்லி திமுக வாக்கு கேட்குமா இல்லை காந்தி நோட்டுகளை கொடுத்து வாக்கு கேட்குமா? என்று சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடியிடம் சீமான் விமர்சனம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த பொன்முடி, "பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நடக்கும் ஆட்சி தான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பல இடங்களில் பல நேரங்களில் சொல்லி இருக்கிறார். அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
Duplicate போட்டோவை எடிட் செய்து வெளியிட்டவர்தான் சீமான். திராவிடம் என்பது இனம், தமிழ் என்பது மொழி இந்த இரண்டும் இணைந்தும் செயல்படுவது தான் திராவிட மாடல் ஆட்சி என்று தமிழக முதல்வர் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த திராவிட மாடல் ஆட்சியை யாரால் தொட்டு கூட பார்க்க முடியாது. தன்னுடைய செய்தி வரவேண்டும் என்பதற்காக சீமான், பெரியார் குறித்து அவதூறாக பேசி வருகிறார்" என்று தெரிவித்தார்.
- மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
- பணம் இருந்தால்தான் பதவி தரப்படுவதாக தொண்டர்கள், நிர்வாகிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சியை தொடங்கினாலும் இடையில் எந்த தேர்தல் வந்தாலும் போட்டியிட போவதில்லை என்றும் 2026 சட்டசபை தேர்தலை நோக்கி பயணிப்பது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இக்கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இதனால் தமிழக வெற்றிக்கழக கட்சியில் தொண்டர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பொறுப்புகளுக்கு பணம் வாங்குவதாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் நகர செயலாளர் பதவிக்கு ரூ.15 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், பணம் இருந்தால்தான் பதவி தரப்படுவதாக தொண்டர்கள், நிர்வாகிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இது அக்கட்சியினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி கொடுப்பதற்காக யாராவது பணம் வாங்கினால், அவர்கள் மீது எந்த பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், நான் தெளிவாக சொல்கிறேன்.. யாராக இருந்தாலும், கட்சியில் பதவிக்காக பணம் கொடுப்பவர்கள் என்றாலும் பணம் வாங்கினார்கள் என்றாலும் அவர்கள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
- பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் கிராஃபிக்ஸ் என சர்ச்சை எழுந்தது.
- புகைப்பட சர்ச்சை தொடர்பான கேள்விக்கு, ‘அத விடுங்க' என சீமான் பதில் கூறாமல் தவிர்த்தார்.
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்ககிரி ராஜ்குமாரின் இந்த குற்றச்சாட்டிற்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் பூரிகுடிசையில் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் கள் விடுதலை மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமானிடம் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் கிராஃபிக்ஸ் என சர்ச்சை எழுந்தது குறித்து கேள்வி எழுப்பினர்.
அந்த கேள்விக்கு, 'அத விடுங்க' என சீமான் பதில் கூறாமல் தவிர்த்தார்.
இதனையடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து பேசிய சீமான், "பெரியார் என பேசும் பெருமக்கள், பெரியார் பிறந்த மண் என சொல்லும் பெருமக்கள் பெரியாரை பற்றி பேசி வாக்கு கேளுங்களேன். சீமான் பெரியாரை விமர்சித்துவிட்டார் அவருக்கு ஓட்டு போடாதீர்கள் என ஒருமுறை பேசி பாருங்கள்.
பெரியாரை சொல்லி வாக்கு வாங்க போகிறீர்களா? காந்தி படத்தினைக் காட்டி வாக்கு வாங்க போகிறீர்களா? கொள்கை வழிநின்று ஆட்சி செய்பவர்களுக்கு கோடிகளை கொட்டி கொடுத்து வாக்கை பறிக்க வேண்டிய தேவை ஏன் வருகிறது" என்று தெரிவித்தார்.
- கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும் என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசினார்.
- ஆயுர்வேதத்தில் மாட்டுக் கோமியம், 'அமிர்த நீர்' என சொல்லப்பட்டிருக்கிறது என்று தமிழிசை தெரிவித்தார்.
மாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும் என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கோமியம் விவகாரம் தொடர்பாக காமகோடி நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
பசுவின் சிறுநீரில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நான் கூறியதை அமெரிக்காவில் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஐந்து ஆய்வுக் கட்டுரைகள் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன. அந்த ஆவணத்தை உங்கள் அனைவருக்கும் அனுப்புகிறேன்" என்று தெரிவித்தார்.
காமகோடியின் இந்த கருத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் காமகோடியின் கருத்தை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழிசை ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
அதிலும் குறிப்பாக, "ஆயுர்வேதத்தில் மாட்டுக் கோமியம், 'அமிர்த நீர்' என சொல்லப்பட்டிருக்கிறது" என்று மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் கோமியம் சர்ச்சை தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "மருத்துவமனைகளில் மாட்டு மூத்திரத்தை லிட்டர் லிட்டராக கொடுத்து குடிக்க சொல்ல வேண்டும். இந்த பைத்தியங்கள் கிட்ட நாடும் நாட்டு மக்களும் சிக்கி கொண்டுள்ளோம். மாட்டு பால் குடிக்கிறவன் இடைச்சாதி, மாட்டுக்கறி சாப்பிடுகிறவன் கீழ்சாதி, மாட்டு மூத்திரம் குடிக்கிறவன் உயர்ந்த சாதி. இது தான் இந்த நாட்டின் கட்டமைப்பு. உலகத்திலேயே இந்தியாவில் தான் நெய் எரிக்கப்படுகிறது, பால் கொட்டப்படுகிறது, மூத்திரம் குடிக்கபடுகிறது" என்று தெரிவித்தார்.
- பூரிகுடிசையில் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் கள் இறக்கி போராட்டம் நடைபெற்றது.
- மருத்துவ குணம் கொண்ட ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது பனை மரம்.
தமிழகம் முழுவதும் ஜனவரி 21-ந்தேதி கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும் என்று கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி விழுப்புரம் மாவட்டம் பூரிகுடிசையில் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் கள் இறக்கி போராட்டம் நடைபெற்றது.
கள் இறக்கி போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்தார். போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் விவசாயிகளுக்கு ஆதரவாக பொது மேடையில் கள் அருந்தி ஆதரவு தெரிவித்தார்.
பனை மரத்தில் இருந்தும் நன்மை பயக்கக்கூடிய ஏராளமான உணவுப் பொருட்கள் நமக்கு கிடைக்கிறது. பனை மரத்தில் இருந்து கள், பதனீர், பனை வெல்லம், நுங்கு, பனம் பழம், பனக்கிழங்கு, விசிறி ஆகியவை கிடைக்கிறது.
மருத்துவ குணம் கொண்ட ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது பனை மரம். ரசாயனம், உரம் போன்ற எந்த வேதிப்பொருளும் சேர்க்காமல் பயன் தரக்கூடிய பனை மரம் ஏராளமான பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 01.01.1987-ம் ஆண்டு முதல் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 38 ஆண்டு காலமாக கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
- பள்ளியில் குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு உள்ளதா என கடந்த 7-ந் தேதி பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- பள்ளி மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து வந்து பள்ளியில் விட்டு சென்றனர்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டியிலுள்ள செயின்ட் மேரீஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி. படித்த அதே ஊரைச்சேர்ந்த பழனிவேலுவின் மகள் லியா லட்சுமி(4) என்ற சிறுமி கடந்த 3-ந் தேதி பள்ளி வளாகத்திலுள்ள செப்டிக் டேங்கில் விழுந்து இறந்தது. இதையடுத்து பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பள்ளி விடுமுறை விடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர் எமில்டா, பள்ளி முதல்வர் டோமினிக் மேரி, ஆசிரியை ஏஞ்சல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் சென்னை உயர்நீதி மன்ற உத்திரவுபடி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளனர் .
பள்ளியில் குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு உள்ளதா என கடந்த 7-ந் தேதி பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு முடிந்த நிலையில் இப்பள்ளியில் அரையாண்டு தேர்வு நடைபெறாமல் விடுமுறையால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் செல்போன்களில் குறுந்தகவல், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இன்று முதல் பள்ளி திறக்கப்படும் எனவும், அனைவரும் முழு யூனிபார்ம்வுடன்பள்ளிக்கு 9 மணிக்கு வரவேண்டும் எனவும், இன்று சிறப்பு வகுப்புகள் ஏதும் கிடையாது என அறிவிப்பு அனுப்பினர். மாணவி இறந்த சம்பவம் நடந்து 16 நாட்களுக்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பள்ளி மீண்டும் இன்று திறக்கப்பட்டது. பள்ளி மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து வந்து பள்ளியில் விட்டு சென்றனர்.
9 மணிக்கு பிரேயர் தொடங்கிய நிலையில் இறந்த சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் சுமார் 50 பேர் பள்ளியை முன்பு முற்றுகையிட்டு எங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை.
பள்ளி நிர்வாகம் பள்ளியில் உள்ள குறைபாடுகளை சரி செய்து விட்டோம் என்றும் இனி நாங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக வைத்திருப்போம் என்றோ உறுதி அளிக்கவில்லை. திடீரென நேற்று செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு இன்று பள்ளி திறக்கப்படுகின்றது. பள்ளி நிர்வாகம் முறையாக பெற்றோர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் போட்டு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும். என்று கூறி பள்ளியின் முன்பு முற்றுகையிட்டனர்.
- கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும் என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- நோயைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் அந்த மாட்டின் சிறுநீரில் இருக்கும்.
மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு ஜுரம் அடிக்கிறது. நான் மருத்துவரை சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சந்நியாசி அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். உடனடியாக அவர் கோமியத்தை பருகியுள்ளார். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு ஜுரம் சரியாகி விட்டது.
கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
மாணவர்களுக்கு அறிவியலை போதிக்கும் இந்தியாவின் உச்சபட்ச கல்வி நிறுவனத்தின் இயக்குநரே அறிவியலுக்கு புறம்பாக பேசியுள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. காமகோடியின் இந்த கருத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐஐடி இயக்குநர் இவ்வாறு பேசுவது உண்மையில் வருந்தத்தக்கது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, "முதலில் கோமியத்தை அவர் குடிக்கட்டும், அவர் குடித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. ஐ.ஐ.டி போன்ற நிறுவனத்தின் இயக்குனர் இவ்வாறு பேசுவது என்பது உண்மையில் வருந்தத்தக்கது.
மாட்டு மூத்திரம் உடலுக்கு கேடு என அறிவியல் ரீதியாக சொல்லப்படும் இந்த காலத்தில், அறிவியல் ரீதியான நிறுவனத்தின் இயக்குனரே இப்படி சொல்லியிருப்பதற்கான காரணம் புரியவில்லை.
மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஐஐடி இயக்குநர் ஆளுநர் போல மாறிவிட்டார் என தெரிகிறது. அந்த அடிப்படையில் தான் இந்தக் கருத்துக்கள் வருகிறது. இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
அதுவும் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிற தமிழக மக்கள், அறிவியல் ரீதியாக சிந்திக்க கூடியவர்கள், பகுத்தறிவு மிகுந்தவர்கள், ஐஐடி இயக்குனர் கூறி விட்டார் என்பதற்காக அதை ஏற்று கொள்ளமாட்டார்கள் என்பது தான் நடைமுறை உண்மை" என்று தெரிவித்தார்.
- தடயவியல் நிபுணர்களும் கொள்ளை நடைபெற்ற வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.
- கடந்த 4 மாதங்களில் 7 கொள்ளை சம்பவம் நடை பெற்று உள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் சாலாமேடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் அருண் லியோ கிங் (வயது 47).
இவர் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.
அருண் லியோ கிங் மனைவி ஜான் ஜாக்குலின். இவர் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கிராமம் என்ற ஊரில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
அருண் லியோ கிங் சகோதரருக்கு பெங்களூருவில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அவரை பார்ப்பதற்காக அருண் லியோ கிங் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் கடந்த திங்கட்கிழமை பெங்களூருவிற்கு சென்றார்.
நேற்று மாலை அவர்கள் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டின் முன் பக்க கிரீல் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த 17 அரை பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து அருண் லியோ கிங் விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். தகவலின் பேரில் விழுப்புரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திர நாத் குப்தா, தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வ நாயகம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ மன்னார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு. அது கொள்ளை நடைபெற்ற வீட்டை மோப்பம் பிடித்து 3 தெருக்கள் வழியாக சென்று போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் நின்றது.
தடயவியல் நிபுணர்களும் கொள்ளை நடைபெற்ற வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.
விழுப்புரம் சாலா மேடு பகுதியில் கடந்த 4 மாதங்களில் 7 கொள்ளை சம்பவம் நடை பெற்று உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே புதியதாக பொறுப் பெற்றுள்ள போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தொடர் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குரு பிரசாத் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
- பள்ளி மாணவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவெண்ணைநல்லூர்;
விழுப்புரம் மாவட்டம் கப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் குரு பிரசாத்( வயது15). விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
பொங்கல் விடுமுறை என்பதால் நேற்று மதியம் நண்பர்களுடன் ஏனாதிமங்கலம் தென் பெண்ணையாற்றில் குளிக்க. சென்றுள்ளார். அப்போது ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென குரு பிரசாத் நீரில் மூழ்கி மாயமானார். உடன் வந்த நண்பர்கள் பொதுமக்கள் ஆகியோர் தேடிப் பார்த்தனர்.
குரு பிரசாத் கிடைக்காததால் திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழு நிலைய அலுவலர் சுந்தரேஷ்வரர் தலைமையிலான மீட்பு குழுவினர் வரவைத்து நீரில் மூழ்கி மாயமான குரு பிரசாத்தை தீவிரமாக இரவு 11 மணி வரை தேடி வந்தனர்.
வெளிச்சம் இல்லாத காரணத்தாலும் குளிரின் காரணமாகவும் தேடும் பணி நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திர குமார் குப்தா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நீரில் மூழ்கி மாயமான குருபிரசாத்தை தேடும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் .
தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் இன்று 2-வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் குருபிரசாத் பிணமாக மீட்டெடுக்கப்பட்டார். குரு பிரசாத் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காணை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மைக்கேல் இருதயராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நண்பருடன் குளிக்கச் சென்று பள்ளி மாணவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் கப்பூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பாமக இளைஞர் சங்கத் தலைவராக பரசுராமன் முகுந்தன் என்பவரை ராமதாஸ் நியமனம் செய்தார்.
- இது தொடர்பாக ராமதாசுக்கும் அன்புமணிக்கு இடையே கருது முரண்பாடு எழுந்தது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை 1-ந்தேதியான இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உங்கள் அனைவருக்கும் எங்களுடைய இனிய தைத்திருநாள் பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நம் அனைவரது இல்லங்களிலும் இன்பமும், மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பொங்கி வழியட்டும். உங்களது அனைத்து இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
பாமக இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை நியமனம் செய்தது தொடர்பாக ராமதாசுக்கும் அன்புமணிக்கு இடையே கருத்து முரண்பாடு எழுந்த நிலையில் இருவரும் ஒன்றாக இணைந்து இன்று பொங்கல் கொண்டாடியுள்ளனர்.






