என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • பொதுமக்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
    • முகாமில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    வேதாரண்யம்:

    கருப்பம்புலம் ஊராட்சி மன்றம், நாகப்பட்டினம் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை ஆகியவை இணைந்து கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் கருப்பம்புலம் ஊராட்சியில் நடைபெற்றது.

    முகாமிற்கு ஊராட்சி தலைவர் சுப்புராமன் தலைமை தாங்கினார். மருதூர் கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன் முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமில் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், கண் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், இ.சி.ஜி., ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோ தனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    இதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    முகாமில் தலைமை டாக்டர் சுந்தர்ராஜன், டாக்டர்கள் ராஜசேகர், அனாமிகா, யுவன்சிங், சகிதர்பானு, கண் மருத்துவ அலுவலர் கவிதா, சுகாதார மேற்பார்வை ஆய்வாளர் சிவப்பிரகாசம், சுகாதார ஆய்வாளர்கள் ராமராஜன், அன்பழகன், சுமதி ரகுராமன் உள்ளிட்ட மருத்துவ துறையினர் கலந்து கொண்டனர்.

    • நீலாயதாட்சி அம்மன் கோவில் முன்பு யாகசாலை பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
    • சிறிய விநாயகர் சிலை படகில் கொண்டு செல்லப்பட்டு வெட்டாற்றில் கரைக்கப்டுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 32 அடி உயர அத்தி மரத்திலான விஸ்வரூப விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதற்கு முன்னதாக ஒன்றரை அடி உயர களிமண்ணால் ஆன விநாயகர் சிலை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் வைக்க ப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.

    இதையடுத்து இரவு 32 அடி உயர அத்திமரத்திலான விநாயகர் சிலை ஊர்வல த்தையடுத்து நீலாயதாட்சி அம்மன் கோவில் முன்பாக யாக பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை ஊர்வல வாகனத்தில் எழுந்தருள செய்யப்பட்டது.

    தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

    ஊர்வலம் கோவில் முன் தொடங்கி நீலா கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி சாலை, காடம்பாடி, பால் பண்ணை ச்சேரி வழியாக நாகூர் வந்தது. ஊர்வலத்தின் முன்பாக மங்கள இசையுடன் பல்வேறு கச்சேரிகள் இசைக்கப்பட்டது.

    இன்று(19ம் தேதி) காலை ஊர்வலம் நாகூர் வெட்டாற்று பாலத்தை வந்தடைந்ததும் விஸ்வரூப விநாயகருக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த சிறிய விநாயகர் சிலையை படகில் கொண்டு செல்லப்பட்டு வெட்டாற்றில் கரைக்கப்டு கிறது ஊர்வலத்தை முன்னிட்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • விநாயகர் சதுர்த்தி அன்று சொர்ண கணபதிக்கு தங்க கவசம்.
    • கோவில் யானை பிரக்ருதிக்கு கஜ பூஜை செய்து, மகாதீபாராதனை நடைபெற்றது.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.இந்த கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி அன்று சொர்ண கணபதிக்கு தங்க கவசமும், உடன் அமைந்துள்ள விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரமும் செய்யப்படுவது வழக்கம்.

    இதன்படி நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சொர்ண கணபதிக்கு சிறப்பு அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, கோவில் யானை பிரக்ருதிக்கு கஜ பூஜை செய்து, மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தபோது மின்சாரம் திடீரென தடைப்பட்டது.
    • இன்வெர்ட்டர் வசதி கூட இல்லாத அவலம் உறவினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சேர்ந்தவர் சென்னத் நிஷா. இவரது மகன் பாபா பக்ரூதீன். இவர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் சென்றனர். பாபா பக்ரூதீன் மோட்டார் சைக்கிளை ஓட்ட சென்னத் நிஷா பின்னால் அமர்ந்து இருந்தார்.

    இவர்கள் மோட்டார் சைக்கிள் நாகை அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சென்ற போது, எதிரே நாகூரைச் சேர்ந்த நஜிம் முஹமது, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சந்தோஷ், சதிஸ் ஆகிய 3 பேர் வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் பாபா பக்ரூதின் மற்றும் சென்னத் நிஷா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 3 வாலிபர்களும் நாகை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    படுகாயம் அடைந்த 3 பேருக்கும் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தபோது மின்சாரம் திடீரென தடைப்பட்டது.

    இதனால் டாக்டர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதையறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இரவு நேரத்தில் அவசர சிகிச்சை பிரிவில் மின்சாரம் இல்லாமல் எப்படி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள் என்றும் பொது மக்களிடையே கேள்வி எழுந்தது.

    மேலும் அவசர சிகிச்சை பிரிவில் இன்வெர்ட்டர் வசதி கூட இல்லாத அவலம் அவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு நாகை மட்டுமன்றி இன்வெட்டர் இல்லாத அனைத்து அரசு ஆஸ்பத்திகளுக்கும் இன்வெட்டர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விபத்து குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்.
    • தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

    திருப்பத்தூர்:

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கொட்டும் மழையில் நேற்று மாலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழா நாட்களில் இரவு மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷிப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கற்பக விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    நேற்று 9-ம் நாள் விழா ஆகும். விநாயகர் சதுர்த்தியும் என்பதால் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலையில் மூலவர் தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து மூலவருக்கு சந்தனம் சாத்தப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது.

    மாலையில் சந்தனகாப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 4.30 மணி முதல் ஏராளமான பக்தர்கள் விநாயகரை சந்தனக்காப்பு திருக்கோலத்தில் தரிசித்தனர்.

    மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பெரிய தேரில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் கற்பக விநாயகரும், சிறிய தேரில் சண்டிகேசுவரரும் எழுந்தருளினர். அதன் பின்னர் தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது திடீரென மழை பெய்தது. ஆனால் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர். இதில் சண்டிகேசுவரர் தேரை முழுக்க முழுக்க பெண்களே இழுத்து வந்து தரிசித்தனர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் பிள்ளையார்பட்டிக்கு இயக்கப்பட்டன.

    இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பின்னர் உற்சவர் தங்க மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மதியம் மூலவருக்கு மோதகம் (கொழுக்கட்டை) படையல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார் மற்றும் காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்துள்ளனர்.

    • நீல, சிவப்பு நிற முழுக்கை டீ சர்ட், டவுசரும் அணிந்திருந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை நல்லியான் தோட்டம் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் நாகை இருப்புப் பாதை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜு, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து கிடந்தவர் நீல, சிவப்பு நிற முழுக்கை டீ சர்ட், டவுசரும் அணிந்திருந்தார்.

    இது குறித்து இருப்பு பாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகையில் வாலிபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அரிசி மாவு போன்றவற்றால் சிலைகள் செய்யலாம்.
    • சிலைகளை செய்வதற்கு ரசாயன வண்ணங்கள் பயன்படுத்த தவிர்க்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட தேசிய பசுமை படையும் தோப்பு துறை அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியும் இணைந்து மாசில்லாத இயற்கை வழி விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    வேதாரண்யம் நகராட்சியில் இருந்து பேருந்து நிலையம் கடைவீதி வழியாக உப்பு சத்தியாகிரகம் நினைவு மண்டபம் வரை நடைபெற்ற பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பேரணியை நகராட்சி தலைவர் புகழேந்தி தெரடங்கி வைத்தார்.

    விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பொழுது களிமண், மஞ்சள் ,அரிசி மாவு போன்றவற்றால் சிலைகள் செய்யலாம், ரசாயன வண்ணங்களை தவிர்க்க வேண்டும், பிளாஸ்டிக், தர்மாகோல், ரங்கோலி ஸ்டிக்கர், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், போன்றவற்றை தவிர்க்க வேண்டும்,

    இயற்கையில் கிடைக்கும் மரப்பட்டைகள் இயற்கை வண்ணங்கள் பூக்கள் வண்ணக்கற்கள் தென்னை தோரணங்கள் மாவிலை இவற்றை வழிபாட்டிற்கு பயன்படுத்தலாம், அலங்காரம் செய்த குப்பைகளை நீர் நிலைகளுக்கு கொண்டு செல்லாமல் தவிர்க்கலாம்.

    பிளாஸ்டிக் பயன்பாட்டு குறைப்பு ,பிளாஸ்டிக் மறுசுழற்சி, மறு பயன்பாடு இவற்றின், மூலம் பிளாஸ்டிக் நீர் நிலைகளை சென்றடையாமல் தவிர்க்கலாம், மாசில்லாமல் விநாயகர் வழிபட்டு சுற்றுச்சூழலை காப்போம் என்று மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

    பிளாஸ்டிக் தவிர்த்தல் குறித்து பேரணியில் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர் நிகழ்ச்சியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோ கிக்கப்பட்டன.

    இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தேசிய பசுமை படை ஆசிரியர் வி கண்ணையன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • விழாவில் 100 மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நகர கூட்டுறவு வங்கி தலைவர் அன்பரசு தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் 100 மாணவிகளுக்கு சைக்கிள்களை வங்கி தலைவர் அன்பரசு வழங்கினார்.

    முன்னதாக குருகுலம் நிர்வாக அறங்காவலர் கயிலைமணி வேதரத்னம் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை செல்வி நன்றி கூறினார்.

    • தூய்மையே சேவை சிறப்பு முகாம் திருப்புகலூர் வவ்வாலடியில் தொடங்கியது.
    • தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு அங்குள்ள குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    தூய்மை பாரத இயக்க ஊரகம் விழிப்புணர்வு செயல்பாடுகளின் தூய்மையே சேவை சிறப்பு முகாம் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி வவ்வாலடியில் தொடங்கியது.

    இதில் வவ்வாலடி பகுதிகளில் ஒட்டுமொத்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு அங்குள்ள குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டதுடன் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    மேலும் ஊராட்சியை தூய்மையாக வைக்க பாடுபடுவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    முகாமை ஊராட்சி தலைவர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர், ஊராட்சி செயலர் ஜெய்சங்கர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த முகாம் வரும் அக்டோபர் 2-ம் தேதிவரை ஊராட்சி பகுதி முழுவதும் நடக்கிறது.

    அதேபோல் பனங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா செந்தில்குமார் கொடியசைத்து முகாமை துவக்கி வைத்தார்.

    • வேதாரண்யம் கடற்கரையில் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.
    • அரசு மாதிரிப்பள்ளி மாணவர்கள் 100 பேர் இதில் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    சென்னை சுற்றுச்சூழல் துறையும் நாகப்பட்டினம் மாவட்ட தேசிய பசுமை படையும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் கிரேட் எப் தொண்டு நிறுவனமும் இணைந்து உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் கடற்கரையில் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.

    தோப்பு துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 பேர் இதில் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் திலீப் குமார் தூய்மை பணியினை தொடங்கி வைத்தார்.

    கடற்கரை தினம் கொண்டாடப்படும் காரணம், கடற்கரை தினத்தை ஒட்டி ஐநா சபை வகுத்த நெறிமுறைகள் மக்கும் குப்பை மக்கா குப்பை பிரித்தெடுத்தல் இவற்றை பற்றி தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் கார்த்திகேயன் மற்றும் ரோட்டரி சங்கத்தினர், பசுமை செயல்பாடுகளை கண்காணிக்கும் அலுவலர் பசுமை டிவைனியா மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கினார்.

    சுற்றுச்சூழல் துறை சார்பில் மாணவர்க ளுக்கு பச்சை வண்ண த்தொப்பி வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தோப்பு த்துறை அரசினர் மேல்நி லைப்பள்ளி தலைமையாசி ரியர் எஸ் கவி நிலவன் தேசிய பசுமை படை ஆசிரியர் வி கண்ணையன், மாவட்ட சூழல் ஒருங்கிணைப்பாளர். இமய சிவன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணி வண்ணன், மற்றும் ஆசிரியர்கள் தூய்மை பணியாளர்கள், ரோட்டரி சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    உலக கடற்கரை தூய்மை தினத்தை (ஒவ்வொரு வருடம் செப்டம்பர் மூன்றாவது சனிக்கிழமை) முன்னிட்டு உலக ஓசோன் தினத்தை முன்னிட்டும் கலைக்கு ழுவினர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

    பின்னர் நகராட்சி தலைவர் புகழேந்தி விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.

    பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று உப்பு சத்தியாகிரக மண்டபத்தை அடைந்தது.

    மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொது மக்களுக்கு விநியோகித்தனர். முடிவில் மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • சிவபெருமானுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
    • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா.

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று கற்பகவிநாயகர் சிவபெருமானுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    • விற்பனைக்கு தயாராக இருந்த இறால்களை மர்மநபர்கள் பிடித்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணி அடுத்த கருவேலங்கடையில் சந்திரபோஸ் எனபவருக்கு சொந்தமான இறால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு வளர்க்கப்படும் இறால்கள் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வழக்கம் போல் சந்திரபோஸ் தனது இறால் பண்ணைக்கு சென்ற வலைகளை கொண்டு விற்பனைக்கு தயாராக இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான இறால்களை மர்ம நபர்கள் பிடித்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இதுபோல் இப்பகுதியில் அடிக்கடி மின் மோட்டார்கள், மின் ஒயர்கள் உள்ளிட்டவை திருட்டு நடைபெறுவதால் போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என இறால் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×