என் மலர்
நாகப்பட்டினம்
- கட்டியை கர்ப்பப்பையில் இருந்து அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் அகற்றினர்.
- இந்த கட்டி சுஜித்ராவின் கர்ப்பப்பையில் சுமார் 20 ஆண்டுகளாக இருந்து உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி சுஜித்ரா (வயது 50). சுசித்ராவுக்கு கடந்த சில நாட்களாக வயிறு வலி இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க முடியாமல் அவதிப்பட்டார்.
சம்பவத்த ன்று அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகி ச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு சுசித்ராவின் வயிறு பகுதியை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கால்பந்தை விட 16 கிலோ எடையிலான கட்டி ஒன்று சுசித்ராவின் கர்ப்பபையில் இருப்பதை கண்டுபி டித்தனர்.
இந்த கட்டியை அகற்ற சுசித்ராவுக்கு பல்வேறு கட்ட மருத்துவ மருத்துவ பரிசோ தனைகளும், ஆலோ சனைகளும் செய்யப்பட்டது.
இதையடுத்து அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியின் அறுவை சிகிச்சை நிபுணர் அமுதன் தலைமையில் உதவி நிபுணர் ராஜேஷ், மயக்கவியல் நிபுணர்கள் ஆனந்தராஜ், அருண் ஆகியோர் கொண்ட டாக்டர் குழுவினர் சுசித்ராவுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அதில் சுமார் 16 கிலோ எடை கொண்ட கட்டியினை கர்ப்பப்பையில் இருந்து அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.
பைப்ரோய்டு யூட்டரஸ் எனப்படும் இந்த கட்டி சுஜித்ராவின் கர்ப்ப பையில் 20 ஆண்டுகளாக இருந்து உள்ளது. தொப்பை தானே என்று கண்டு கொள்ளாமல் அவர் விட்டு விட்டார். சிறிது, சிறிதாக அந்த கட்டி வளர்ந்து ஒரு கட்டத்தில் சிறுநீரகத்தை அடைக்கும் தருவாயில் சென்று விட்டது.
முடியாத பட்சத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை அகற்றினோம். தற்போது நினைத்து நலமாக உள்ளார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
- சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்து பழுதடைந்த நிலையில் உள்ளது.
- புதர்மண்டி கிடக்கும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கட்டலாடியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அன்றாட தேவைகளுக்கு கட்டலாடியிலிருந்து ஆண்டிதோப்பு வழியாக திருமருகல் வரும் சாலை உள்ளது.
இந்த சாலையை கட்டலாடி பொதுமக்கள் கடைத்தெரு, ஊராட்சி ஒன்றிய அலுவ லகம், வேளாண்துறை அலு வலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வங்கி, பொதுப்பணித்துறை அலுவலகம், பஸ் நிலையம் என பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சாலையில் இருபுறமும் செடி,கொடிகள், நாணல், கருவேல மரங்கள் வளர்ந்து பழுதான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகா ரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு புதர்மண்டி கிடக்கும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.
- வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
- நிகழ்ச்சியில் 950-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.
விழாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜோதிமணி அம்மாள் துவக்கி வைத்தார்.
தேசிய தொழில்நுட்ப கழகம் புதுச்சேரி - ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை பிரிவின் முதன்மையர் செந்தில்குமார் மற்றும் ஒன் லைப் ஒன் சாய்ஸ் லைஃப் ஸ்கில்ஸ் அகாடமியின் தலைவரும் உளவியல் பயிற்சியாளருமான கார்த்திக் வேலு ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அவர்களது எதிர்காலம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நு ட்பங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினர்.
கல்வி குழுமத்தின் இணைச் செயலர் சங்கர் கணேஷ் முன்னிலை வகித்தனர். நிர்வாகத் தலைவர் மணிகண்ட குமரன், கல்விசார் இயக்குனர் மோகன், தேர்வு நெறியாளர் சின்னதுரை, மாணவர் சேர்க்கை பிரிவின் தலைவர் ஹரி நாராயணன், முதலா மாண்டு துறை முதன்மையர் தேவராஜன் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் வாழ்த்துரை யாற்றினர். நிகழ்ச்சி ஏற்பாடு களை துறைதலைவர் முனைவர் தீபா, கூடுதல் துறை தலைவர்கள் முனைவர் பொன்சடைலட்சுமி, முனைவர் தாரணி, முனைவர் மூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்வில் 950 மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
- காசிவிஸ்வநாத திருசிற்றம்பல விநாயகர் கோவிலில் மத நல்லிணக்க விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.
- ஊர்வலமானது 5 கி.மீ. தூரம் சென்று ஏரியில் விஜர்சனம் செய்யப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலத்தில் உள்ள காசிவிஸ்வநாத திருசிற்றம்பல விநாயகர் கோவிலில் மத நல்லிணக்க விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.
முன்னதாக கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டு கோவிலில் இருந்து விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட மும்மதத்தினரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வேதார ண்யம் நிலவள வங்கி தலைவர் பிரபு, அகரம் மெட்ரிக் பள்ளி தாளாளர் விவேக் வெங்கட்ராமன், சமூக ஆர்வலர்கள் விஜயபாலன், விஜயராமன் சேட்டாபாய், வெங்கட் மற்றும் காங்கிரஸ் கட்சி வர்த்தக பிரிவு அப்சல்உசேன், முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் வைரம், வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கமம் கோவிந்தராஜ், நகர காங்கிரஸ் தலைவர் அர்ஜூனன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் போஸ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தேங்காய் உடைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
ஊர்வலமானது 5 கி.மீ. தூரம் சென்று மருதவம்புலம் ஏரியில் விஜர்சனம் செய்யப்பட்டது.
இதேபோல், தோப்புத்துறை, ஆயக்காரன்புலம், ஆதனூர், நெய்விளக்கு, கரியாபட்டிணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
- குப்பையில் இருந்து உரம் தயாரிப்பு குறித்து செயல்விளக்கம் நடைபெற்றது.
- குப்பைகளை தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு குப்பையில் இருந்து உரம் தயாரிப்பு குறித்து எப்படி என்பது குறித்து செயல்விளக்கம் நடைபெற்றது.
வேதாரண்யம்நகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தில் குப்பை இல்லாத நகராட்சியாக மாற்றுவதற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நகராட்சி பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என விழிப்புணர்வு பேரணி கடற்கரையில் தூய்மை பணி மேலும் மாணவ மாணவிகள் தூய்மை இந்தியா திட்டத்தில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நேற்று வேதாரணியம் குப்பை கிடங்கில் குப்பைகளை தரம் பிரிப்பது எப்படிஅதில் இருந்து உயரம் தயாரிப்பது எப்படி என்பது குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் புகழேந்திநகராட்சி ஆணையர் வெங்கட லெட்சுமணன் நகர மன்ற துணைத் தலைவர் மங்களநாயகி துப்புரவு ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நகராட்சியில் குப்பை கிடங்கில் பணிபுரியும் பணியாளர்கள் குப்பைகளை எப்படி கையாளுகின்றனர் மக்கும் குப்பை மக்காத குப்பைதரம் பிரிப்பது எவ்வளவு சிரமங்கள் உள்ளன குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது எப்படி என்பது குறி த்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது நகரமன்ற உறுப்பி னர்கள் நகராட்சி பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.
- சாலையில் சென்று கொண்டிருந்த வேன் வெற்றிச்செல்வன் மீது மோதியது.
- அவர் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி காரைநகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் (வயது53). இவர் கருங்ண்ணி ஊராட்சியில், ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்தார்.
வழக்கம் போல் பணி முடித்துவிட்டு நேற்று மாலை வீட்டிற்கு வந்த அவர் அங்கிருந்து சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது நாகையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் ஓடாச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த வேன் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயத்தோடு மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய வேனை பறிமுதல் செய்த கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சரணாலயத்தில் வனவிலங்குகள், பறவைகள் கணக்கெடுக்கும் பயிற்சி இன்று காலை தொடங்கப்பட்டது.
- நாள் ஒன்றுக்கு 40 பேர் வீதம் 5 நாட்களுக்கு பயிற்சியானது நடைபெற உள்ளது.
வேதாரண்யம்:
கோடியக்கரை வனவிலங்கு சரணா லயத்தில் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் அமிஷேக் தோமர் ஆலோசனையின் பேரில், திருச்சி மண்டல வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள். வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் மயிலாடுதுறை எ.வி.சி. கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 200 பேருக்கு வனவிலங்குகள், பறவைகள் கணக்கெடுக்கும் முறைகள் குறித்த பயிற்சி இன்று காலை தொடங்கப்பட்டது.
பயிற்சியை நாகப்பட்டி னம் வன உயிரின காப்பாளர் அபிஷேக் தோமர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான், மாயிலாடுதுறை எ.வி.சி. கல்லூரி உதவி பேராசிரியர்கள் பாண்டி யன், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கணக்கெடுக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தனர். நாள் ஒன்றுக்கு 40 பேர் வீதம் 5 நாட்களுக்கு பயிற்சியானது நடைபெற உள்ளது.
- பொதுமக்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
நாகப்பட்டினம்:
திருக்குவளை ஊராட்சி கீழ்குடி கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் ஊராட்சி சார்பில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் முறையாக வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தெரிவித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் திருக்குவளையில் இருந்து மேலப்பிடாகை செல்லும் பிரதான சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றி செல்வம் , திருக்குவளை போலீசார் அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் பொது மக்களுக்கு டேங்கர் லாரியின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வது என்றும் முடிவானது.
இதில் உடன்பாடு எட்டியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதி யில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சாலையோர தடுப்புச்சுவரில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
- விபத்தில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள காமேஸ்வரம் ஆனையன்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அருள்.இவரது மனைவி பிரபா. இந்த தம்பதிக்கு வர்ஷா (4), நிஷாலினி(7) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் காமேஸ்வரத்திலிருந்து திருப்பூண்டிக்கு மோட்டார்சைக்கிளில் அருள், பிரபா மற்றும் வர்ஷா ஆகிய 3 பேரும் சென்றுள்ளனர்.
தென்னம்பிள்ளை சாலையோரத்தில் கீழ்க்குமிழி தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு நாகை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர்.
இதில் 4 வயது குழந்தை வர்ஷா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்க ள்தெரிவித்தனர். மேலும் அருள், பிரபா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- 50-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவி குழுவினர் தயாரித்த பொருட்களை காட்சிபடுத்தினர்.
- வேதாரண்யம் ஒன்றியத்தில் 1603 மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளன.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுயஉதவி குழுவினர், தமிழ்நாடு மாநில வாழ்வாதார குழு இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருட்கள் செய்வோர் மற்றும் விற்பனையாளர் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய துணை வட்டாட்சியர் அண்ணா துரை தலைமை தாங்கினார். முன்னதாக மகளிர் சுயஉதவி குழு வட்டார இயக்க மேலாளர் அன்பு ரோஸ் மேரி அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பயிற்றுனர் பாலகணேஷ் சுகந்தி, தலைமையாசிரியர் தெட்சணாமூர்த்தி, துணை வட்டார அலுவலர் பக்கிரிசாமி, வர்த்தக சங்க பொருளாளர் சீனிவாசன், வட்டார மகளிர் சுயஉதவி குழுஒருங்கிணை ப்பாள ர்கள் மேனகா, அருள்மேரி, ஜெயமாலினி சுமித்ரா, மணிபாரதி உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 50-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவி குழுவினர் தாங்கள் தயாரித்த பொருட்களை காட்சிபடு த்தினர்.
இதுகுறித்து மகளிர் சுயஉதவி குழு வட்டார இயக்க மேலாளர் அன்பு ரோஸ் மேரி கூறுகையில்:-
வேதாரண்யம் ஒன்றியத்தில் 1603 மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளன. அவற்றில் 1400 குழுக்களுக்கு சுமார் ரூ.3 கோடி நிதி வழங்கப்பட்டு சிறுதானிய பொருட்களை கொண்டு உணவு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி உள்ளனர்.
- பயணியர் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
- தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினைத் துவக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
நாகை:
அமைச்சர் எ.வ.வேலு இன்று நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, இலங்கையில் உள்ள காங்கேச துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு கடல்சார் வாரியம், ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மற்றும் வெளியுறவுத் துறை மூலம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் விரைவு பயணியர் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்த பயணியர் கப்பல் பயணம், வெளிநாட்டு பயணம் என்பதால் ஒன்றிய அரசின் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கையாள ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினைத் துவக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
இலங்கை மக்கள் குறிப்பாக, தமிழ் மக்கள் தங்களின் கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள், வணிகம், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா ஆகிய தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைவதுடன், தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்கள் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பகுதிகள், கலாச்சாரப் பகிர்வு, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விநாயகருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் உள்ள கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வேதாரண்யத்தில் உள்ள அச்சம் தீர்த்த விநாயகருக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷே கங்கள் நடைபெற்றது.
பின், சிறப்பு சந்த னக்காப்பு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்க ப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.
பின்னர், பக்தர்களுக்கு மோதகம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதேபோல், வேதாரண்யத்தில் உள்ள கற்பக விநாயகர் கோவில், கட்சுவான் முனீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர், தோப்புத்துறை வரம் தரும் விநாயகமூர்த்தி கோவில், இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்தி விநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், நாகை சாலை மருதமரத்து விநாயகர், ஞானவிநாயகர், புஷ்பவனம் புஷ்பவிநாயகர், தேத்தாக்குடி தெற்கு யாதவபுரம் மணர்குள சித்தி விநாயகர், ஆறுக்காட்டுத்துறை விநாயகர் கோவில், வேதாரண்யம் கோவிலில் உள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் ஆகிய விநாயகர்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராத னைகள் நடைபெற்று, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரா தனை காண்பிக்கப்பட்டது.
இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வினைகள் தீர வேண்டி விநாயகரை வழிபட்டனர்.
மேலும், வேதாரண்யம் காவல் சரகத்தில் 35 இடங்கள், கரியாப்பட்டினம் காவல் சரகத்தில் 35 இடங்கள், வேட்டைக்காரன் இருப்பு காவல் சரகத்தில் 13 இடங்கள் ஆக மொத்தம் 83 இடங்களில் பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து, 2,3 நாட்கள் கழித்து சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.






