search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடியக்கரை சரணாலயத்தில் வனவிலங்கு- பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
    X

    கோடியக்கரை சரணாலயத்தில் வனவிலங்கு- பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

    • சரணாலயத்தில் வனவிலங்குகள், பறவைகள் கணக்கெடுக்கும் பயிற்சி இன்று காலை தொடங்கப்பட்டது.
    • நாள் ஒன்றுக்கு 40 பேர் வீதம் 5 நாட்களுக்கு பயிற்சியானது நடைபெற உள்ளது.

    வேதாரண்யம்:

    கோடியக்கரை வனவிலங்கு சரணா லயத்தில் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் அமிஷேக் தோமர் ஆலோசனையின் பேரில், திருச்சி மண்டல வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள். வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் மயிலாடுதுறை எ.வி.சி. கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 200 பேருக்கு வனவிலங்குகள், பறவைகள் கணக்கெடுக்கும் முறைகள் குறித்த பயிற்சி இன்று காலை தொடங்கப்பட்டது.

    பயிற்சியை நாகப்பட்டி னம் வன உயிரின காப்பாளர் அபிஷேக் தோமர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான், மாயிலாடுதுறை எ.வி.சி. கல்லூரி உதவி பேராசிரியர்கள் பாண்டி யன், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கணக்கெடுக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தனர். நாள் ஒன்றுக்கு 40 பேர் வீதம் 5 நாட்களுக்கு பயிற்சியானது நடைபெற உள்ளது.

    Next Story
    ×