என் மலர்
நாகப்பட்டினம்
- பெருங்கடம்பனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.
- அதனை தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்ட இரண்டாம் ஆண்டை முன்னிட்டு வனத்துறை சார்பில் நாகை பெருங்கடம்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.
அதனையொட்டி தேசிய பசுமை படை மாணவர்கள், ஆதிபராசக்தி மன்ற உறுப்பினர்கள் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வனச்சரகர் ஆதிலிங்கம், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், பசுமை கண்காணிப்பாளர் டிவைனியா, தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் எழிலன், ஓவிய சங்கத் தலைவர் முருகையன், இயற்கை ஆர்வலர் கீழ்வேளூர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு மாணவர் பெயரிலும் ஒவ்வொரு மரக்கன்று நடப்பட்டு அவற்றை பராமரித்து வளர்த்து காட்டும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் ஒரு வருடம் கழித்து அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
தேசிய பசுமை படை மாணவர்களுக்கு கிரேட் எஃப் தொண்டு நிறுவனம் சார்பாக மஞ்சப்பைகள் வழங்க ப்பட்டன.
- திருக்கண்ணபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- கபடி போட்டியில் மாவட்ட அளவில் 2-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலை யில்லா சைக்கிள வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் தலைமை யாசிரியர் வெங்கடசுப்பிர மணியன் தலைமை தாங்கினார்.
ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சரவணன், இளஞ்செழியன், அபிநயா அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 78 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பரமேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திருமால்வளவன் நன்றி கூறினார்.
பின்னர் முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடை பெற்றது.
விழாவில் போட்டியில் கலந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு, கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ வழங்கினார்.
- கண்இமைக்கும் நேரத்தில் மீனவர்கள் ஹரிகிருஷ்ணன் உள்பட 5 மீனவர்களையும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்க தொடங்கினர்.
- தொடர் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை அருகே உள்ள செருதூர் கிராமத்தில் இருந்து சக்திபாலன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று காலை அதே கிராமத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (வயது 26), சூர்யா (25), கண்ணன் (23), சிரஞ்சீவி, சக்தி பாலன் ஆகிய 5 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டனர்.
இன்று அதிகாலை 5 பேரும் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 அதிவேக படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 10-க்கும் மேற்பட்டோர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் நாகை மீனவர்கள் பைபர் படகில் ஏறினர். கண்இமைக்கும் நேரத்தில் மீனவர்கள் ஹரிகிருஷ்ணன் உள்பட 5 மீனவர்களையும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்க தொடங்கினர்.
இந்த தாக்குதலில் மீனவர்கள் 5 பேரும் காயமடைந்து படகில் சரிந்து விழுந்தனர். இதனை தொடர்ந்து 550 கிலோ வலை, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பிடித்து வைக்கப்பட்ட மீன்கள், வாக்கி டாக்கி, ஜி.பி.எஸ் கருவி, பேட்டரி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து தப்பினர்.
கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மீனவர்கள் 5 பேரும் இன்று காலை கரைக்கு திரும்பி உறவினர்களுக்கு நடந்த விவரங்களை கூறினர்.
இது குறித்து தகவல் அறிந்த நாகை கடலோர காவல்படையினர் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த மீனவர்களை நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோடியக்கரையில் மீன்பிடித்து கொண்டிருந்த 4 நாகை மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி பொருட்களை பறித்து சென்றனர். தற்போது மீண்டும் கோடியக்கரையில் இலங்கை கடற்கொள்ளையர்கள், மீனவர்களை தாக்கி கொள்ளையடித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை கடற்கொள்ளையர்களின் தொடர் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கருநாவாய் பூச்சி அறுவடை நிலையில் உள்ள வயல்களில் அதிகமாக தென்படுகிறது.
- விளக்கு பொரி அமைத்து தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
நாகப்பட்டினம்:
குறுவை பயிர்களை தாக்கும் குருத்துப் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குருத்துப்பூச்சி பாபநாசம் வேளாண்மை கோட்டத்தில் நடப்பு குறுவை பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் ஆங்காங்கே குருத்துப் பூச்சி, கரு நாகப்பூச்சி மற்றும் இலை கருகல் நோய் அறிகுறிகள் தென்படுகிறது.
கபிஸ்தலம் அருகே கருப்பூர் கிராமத்தில் குறுவை பயிர்களில் வேளாண்மை துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் கருநாவாய் பூச்சி அறுவடை நிலையில் உள்ள வயல்களில் அதிகமாக தென்படுகிறது.
இதனை கட்டுப்படுத்திட ஆசி பேட் 25 எஸ்.பி. ஏக்கருக்கு 250 கிராம் உபயோகப்படுத்தலாம்.
மேலும் வாத்துகளை கருநாவாய் பூச்சிகள் காணப்படும் வயல்களில் மேச்சலுக்கு விடுவதன் மூலம் இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்.
விளக்கு பொரி அமைத்து தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். கருநாவாய் பூச்சிகளை வேப்பங்கொட்டை கரைசல் வயலில் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
பாக்டீரியல் இலை கருக்கல் நோயை கட்டுப்படுத்திட தாக்குதல் அதிகமாக காணப்படும் போது காப்பர் ஆட்சி குளோரைடு 500 கிராம் மற்றும் ஸ்பெக்ட்ரோ மைசின் சல்பேட் மற்றும் பெற்றா சொலின் கலவை 120 கிராம் ஆகிய மருந்துகளை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேலைகளில் தெளித்து இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாகை மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் நாளை கடன் மேளா நடக்கிறது.
- ரூ.15 கோடி மதிப்பில் கடன்கள் வழங்கப்பட உள்ளன.
நாகப்பட்டினம் :
நாகப்பட்டினம் கூட்டுறவு சங்க நாகை மண்டல இணைப்பதிவாளர் அருள் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி நாகை மாவட்ட கூட்டுறவுத்துறையின் சார்பில் கடன் மேளா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடக்கும் இந்த கடன் மேளாவில் மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள், வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், வட்டியில்லா மீனவர் கடன், வட்டியில்லா மாற்றுத்திறனாளிகள் கடன் உள்ளிட்ட ரூ.15 கோடி மதிப்பில் கடன்கள் வழங்கப்பட உள்ளன.
இதில் வைப்புத்தொகை திரட்டுதல், பல்வேறு வகையான கடன் மனுக்கள் பெறுதல், புதிய சேமிப்பு கணக்குகள் தொடங்குதல், மத்திய கூட்டுறவு வங்கியின் தொழில் நுட்ப சேவைகளை விளம்பரப்படுத்துவது ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பயங்கர ஆயுதங்களுடன் நாகை மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
- வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் அவருடைய மகன்கள் பிரதீப், பிரகாஷ், பிரவின், திருமுருகன் உள்ளிட்ட 4 பேர் கடந்த 21-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கோடியக்கரை தென்கிழக்கே 10 நாட்டில்கள் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு அத்துமீறி 2 அதிவேக படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகை மீனவர்களிடம் கத்தி முனையில் மீன்கள் மற்றும் தளவாட பொருட்களை கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நாகை மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பின்னர் கத்தி முனையில் நாகை மீனவர்களின் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ வலை, 50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், ஜிபிஎஸ் கருவி , 4 செல்போன்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் படுகாயங்களுடன் செருதூர் மீன் இறங்குதளத்திற்கு வந்த மீனவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சக மீனவர்கள் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தொழில் செய்யமுடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், ஒன்றிய அரசும் தமிழக அரசும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழுமம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர், போலீஸ் சூப்பிரண்டு ஜோதிராமலிங்கம் நாகை மீனவர்களை தாக்கி மீன் மற்றும் வலைகளை கொள்ளையடித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்னதாக சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றார்.
- நுண் உரக்கிடங்கு வளாகத்தில் செயல்முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி சார்பில்தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் நகராட்சி செயல்படுத்தி வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை பொதுமக்கள் , சிறு கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்விளக்கம் அளிக்கபட்டது.
நிகழ்ச்சிக்கு நகர் மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார் நகராட்சி ஆணையர் வெ ங்கடலட்சுமண ன்முன்னி லை வகித்தார்.
சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் வரவேற்றார் நிகழ்ச்சியி ல்வர்த்தக சங்க தலைவர் தென்னரசு பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நகராட்சி வளம் மீட்பு மையத்திலும் நுண் உரக்கிடங்கு வளாகத்திலும் செயல்முறை கள் செய்து காண்பிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வணிகர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் உரக்கி டங்கில் தயார் செய்யப்பட்ட மாதிரி உரம் இலவசமாக வழங்கப்பட்டது.
திடக்கழிவு மேலாண்மைவளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
- ஆட்டோ, டிராக்டர் போன்ற வாகனங்களில் நாகை புதிய கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.
- விநாயகர் சிலைக்கு தேங்காய், பழம் படைத்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை நகர் பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பினர் சார்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்ட 10 சிலைகள் போலீஸ் பாதுகாப்போடு விதிமுறைகளுடன் ஆட்டோ, டிராக்டர் போன்ற வாகனங்களில் நாகை புதிய கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு விநாயகர் சிலைக்கு தேங்காய், பழம் படைத்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். தொடர்ந்து சிலைகளை படகு மூலம் கொண்டு கரைப்ப தற்காக திட்டமிட்டனர்.
ஆனால் படகு ஏற்பாடு செய்ய காலதாமதம் ஆனதால் சிலைகளை உடனே கரைக்க வேண்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்ரியா, வெற்றிவேல் ஆகியோர் அவர்களிடம் வலியுறுத்தினார்.
கையில் எடுத்து சென்றால் சிலைகளை முறையாக கடலில் கரைக்க முடியாது. எனவே படகு வந்ததும் அதில் கொண்டு சென்று கரைக்கிறோம் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து வற்புறுத்தியதால், இந்து முன்னணி அமைப்பு பக்தர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சிறிய சிலைகளை பெண்களே கையில் கொண்டு சென்று கடலில் கரைத்தனர்.
பின்னர் படகு வந்ததும் அதில் கொண்டு சென்று நடுக்கடலில் விநாயகரை விஜர்சனம் செய்தனர்.
இதில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஊர்க்காவல் படையினர் தீயணைப்பு துறையினர் கடலோர காவல் குழும போலீசார் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.
- 63 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியில் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் யோகீஸ்வரன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தியாகராஜன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளி மேலாண்மை குழுவினர் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் 63 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் மதியழகன் நன்றி கூறினார்.
- கீழையூர் கடலோர காவல் படை குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- படுகாயம் அடைந்த மீனவர்கள் சிகிச்கைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் நாகை மீனவர்கள் மற்றும் வேதாரண்யம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது அவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இதனால் அவர்களின் தொழில் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதைப்போன்ற சம்பவம் இன்று நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் பகுதியை சேர்ந்தவர் சபாபதி. இவருக்கு சொந்தமாக படகு உள்ளது.
இந்நிலையில் கடந்த 21-ந்தேதி சபாபதிக்கு சொந்தமான படகில் பிரகாஷ், பிரவின், திருமுருகன், பிரதீப் ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 அதிவேக விசை படகில் 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் வந்தனர்.
அவர்கள் சபாபதிக்கு சொந்தமான படகில் ஏறி அதில் இருந்த 4 மீனவர்களை கடுமையாக தாக்கினர். பின்னர் படகில் இருந்த சுமார் 500 கிலோ மீன்பிடி வலைகள், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள் மற்றும் வாக்கிடாக்கிகள், தொழில் நுட்ப உபகரணங்கள் ஆகியவற்றை கொள்ளை எடுத்து கொண்டு மீன்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
பின்னர் படுகாயத்துடன் 4 மீனவர்கள் கோடியக்கரை திரும்பினர். பின்னர் இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும், கடலோர காவல் படை குழுமத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கீழையூர் கடலோர காவல் படை குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
படுகாயம் அடைந்த மீனவர்கள் சிகிச்கைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் கோடியக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 4 வீதிகளிலும் கடந்த ஒரு ஆண்டாக வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது.
- போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்ட வணிகர் சங்க செயலாளர் திருமலை செந்தில் மற்றும் வணிகர் சங்க பொருளாளர் கந்தசாமி, வேதாரண்யம் நகர வணிகர் சங்க செயலாளர் முரளி ஆகியோர் மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங்கை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வேதாரண்யம் நகர கடைத்தெருவில் உள்ள 4 வீதிகளிலும் கடந்த ஒரு ஆண்டாக வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நீண்ட நாட்கள் ஆகியும் முடியாததால் வணிகர்க ளுக்கும், பொதுமக்களுக்கும், அவ்வழியாக செல்லும் போக்குவரத்துக்கும் மிகுந்த இடையூறாக உள்ளது.
எனவே, நெடுஞ்சாலை துறையினர் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்று க்கொண்ட மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- முத்தமிழ் ஆனந்தன் ஓசோன் படலம் பற்றி விளக்க உரையாற்றினார்.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் விமல் செய்திருந்தார்.
நாகப்பட்டினம்:
நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையத்தில், சி.பி .சி .எல், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தேசிய பசுமை படை சார்பில் ஓசோன் தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. பசுமை கண்காணிப்பாளர் டிவைனியா, சி.பி.சி.எல் அதிகாரிகள் குமார், நடராஜன், சூரியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் ஓசோன் படலம் பற்றி விளக்க உரையாற்றினார். சுற்றுச்சூ ழல் தகவல் பரப்பு மையத்தி ன் ஒருங்கிணை ப்பாளர் செங்குட்டுவன் நிகழ்ச்சிக ளை தொகுத்து வழங்கினார். முன்னதாக தலைமை ஆசிரியர் நாகராஜன் வரவேற்புரை ஆற்றினார். தேசிய பசுமை படை பள்ளி ஒருங்கிணை ப்பாளர் சக்திவேல் நன்றி கூறினார்.
முடிவில் தேசிய பசுமை படை மாணவர்க ளுக்கு பசுமை தொப்பியும் மஞ்சப்பையும் வழங்க ப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் விமல் செய்திருந்தார்.






