search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liquor Dealer"

    • கள்ளச்சாராயம் கடத்தல், விற்பனையை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • சாராயம் விற்பனையில் ஈடுபட்டு தனபாலன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி நாகை மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொ ருத்தானிருப்பு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனபாலன் (வயது 57).

    இவர் அதே பகுதியில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால், கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் சாராயம் விற்பனை தொடர்பான வழக்குகள் உள்ளதோடு தனபாலன் கைது செய்யப்பட்டு நாகை மாவட்ட சிறையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    தொடர்ந்து தனபாலன் சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வருவதால் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்கிற்கு பரிந்துரை செய்தனர்.

    இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸக்கு பரிந்துரை செய்தார்.

    அதனை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து கீழ்வேளூர் போலீசார் நாகை சிறையில் இருந்த தனபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • வீட்டின் அருகில் உள்ள ஓடை யில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது கையும் களவுமாக சிக்கினார்.
    • குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சிமாவட்டம், சின்னசேலம் வட்டம், கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்(38) அவரது வீட்டின் அருகில் உள்ள ஓடை யில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது கையும் களவுமாக சின்ன சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் இருந்து 120 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது. இவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாரயம் விற்பனை செய்யும் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவர் நட வடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், சாராய வியாபாரி ராமச்சந்திரனை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் , ராமச்சந்திரனை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி நேற்று ராமச்சந்திரனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.

    • அருள் (எ) சந்தானம் என்ற பெயரிலான பெண், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
    • குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க விழுப்புரம் கலெக்டர் உத்தரவிட்டார்.

    விழுப்புரம்: 

    மரக்காணம் அருகே பிரம்மதேசம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நல்லாளம் கிராமத்தில் அருள் (எ) சந்தானம் என்ற பெயரிலான பெண், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடபட்டு வந்தார். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் அருளை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க விழுப்புரம் கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து பிரம்மதேசம் போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்

    • சாராய வியாபாரி விஜயகுமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
    • சப்- இன்ஸ்பெக்டர் பழனி இவரை பிடித்து கைது செய்தார்.

    விழுப்புரம்: 

    திருவெண்ணைநல்லூர் அருகே மலையம் பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 47) அப்போது ரோந்து சென்ற திருவெண்ணைநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் சாராய வியாபாரி விஜயகுமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    விழுப்புரம் கே. கே. ரோடு அண்ணா நகரை சேர்ந்தவர் அய்யனார் (62). இவர் திருவெண்ணைநல்லூர் அருகே தென்மங்கலம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் சாராயம் விற்பனை செய்தார். அப்போது ரோந்து சென்ற திருவெண்ணைநல்லூர் சப்- இன்ஸ்பெக்டர் பழனி இவரை பிடித்து கைது செய்தார். 

    • உளுந்தூர்பேட்டை அருகே சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் அவரை ஓராண்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார்.

    கள்ளக்குறிச்சி, செப்.18-

    கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வடமாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (எ) கன்னுகுட்டி (வயது 55). இவர் கடந்த மாதம் 17-ந்தேதி வடமாம்பாக்கம் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தார். அவரை திருநாவலூர் போலீசார் அவரிடமிருந்து 120 லிட்டர் கள்ளச்சாராயத்தை கைப்பற்றினர். இவர் மீது திருநாவலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள்நிலுவையில் உள்ளது.

    இவ்வாறு தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவரின் நடவடிக்கையை கட்டுபடுத்தும் வகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் அவரை ஓராண்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார். அதன்படி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் மேற்படி நபரை ஓராண்டு தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி திருநாவலூர் போலீசார் ஏழுமலையை நேற்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

    ×