search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
    X

    விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

    • பெருங்கடம்பனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.
    • அதனை தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்ட இரண்டாம் ஆண்டை முன்னிட்டு வனத்துறை சார்பில் நாகை பெருங்கடம்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    அதனையொட்டி தேசிய பசுமை படை மாணவர்கள், ஆதிபராசக்தி மன்ற உறுப்பினர்கள் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் வனச்சரகர் ஆதிலிங்கம், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், பசுமை கண்காணிப்பாளர் டிவைனியா, தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் எழிலன், ஓவிய சங்கத் தலைவர் முருகையன், இயற்கை ஆர்வலர் கீழ்வேளூர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஒவ்வொரு மாணவர் பெயரிலும் ஒவ்வொரு மரக்கன்று நடப்பட்டு அவற்றை பராமரித்து வளர்த்து காட்டும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் ஒரு வருடம் கழித்து அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

    தேசிய பசுமை படை மாணவர்களுக்கு கிரேட் எஃப் தொண்டு நிறுவனம் சார்பாக மஞ்சப்பைகள் வழங்க ப்பட்டன.

    Next Story
    ×