என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக உள்ளதால், பக்தர்கள் விரதம் கடைபிடித்து வருகின்றனர்.
    • நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி திருமருகல் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக உள்ளதால், பக்தர்கள் விரதம் கடைபிடித்து வருகின்றனர். குறிப்பாக சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். புரட்டாசி மாத சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

    திருமருகலில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு பஞ்சாமிர்தம்,பால், இளநீர், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • 108 திவ்ய தேசங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.
    • கோவிலின் எதிரே உள்ள புஷ்கரணி தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் உதயகருட சேவை நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு உதயகருட சேவை நேற்று நடைபெற்றது. இதையொட்டி பெருமாள் அலங்கரிக்கப்பட்டு கருட வாகனத்தில் எழுந்தருளி பவளக்கால் சப்பரத்தில் வீதிஉலா நடைபெற்றது.

    இதைதொடர்ந்து கோவிலின் எதிரே உள்ள புஷ்கரணி தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் குணசேகரன், தக்கார் முருகன், முன்னாள் அறங்காவல் குழு தலைவர் ராதாகிருட்டிணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக புது வாழ்வு அறக்கட்டளை சார்பில் நாகை மஞ்சக்கொல்லை குமரன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    இதில் புது வாழ்வு அறக்கட்டளை நிறுவனர் கலைவாணன், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், சுத்தானந்த கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பருத்தி சேலைகள் உள்ளிட்ட ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • நாகை விற்பனை நிலையத்திற்கு இந்த ஆண்டிற்கு ரூ. 50 லட்சம் இலக்கு நிர்ணயம்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் கைத்தறி கூட்டுறவு நிறுவனமான கோ - ஆப்டெக்ஸ்சில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலர் பேபி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு தீபாவளி விற்பனைக்காக காஞ்சிபுரம் பட்டு சேலைகள், சேலம் பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், பருத்தி சேலைகள் உள்ளிட்ட ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாகை விற்பனை நிலையத்திற்கு இந்த ஆண்டிற்கு ரூ. 50 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யபட்டுள்ளது. முதல் விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலர் வாடிக்கையாளருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

    கோ -ஆப்டெக்ஸ் கடலூர் மண்டலத்தில் ரூ.13 கோடி இலக்கு நிர்ணயம் செய்யபட்டு உள்ளது எனவும், அரசு ஊழியர்களுக்கு தவணை முறை கடன் விற்பனை உள்ளதால் அனைத்து துறை ஊழியர்களும் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் வேண்டுகோள் விடுத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கோ -ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் சாந்தாராம், நாகை விற்பனை நிலையம் மேலாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ரமேஷ் ரேசன் கடையில் பணியாற்றி வந்தார்.
    • எதிரே வந்த பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் ஆழியூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 29). இவர் வடகரை ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். சிக்கல் கீழவீதியைச் சேர்ந்தவர் தினகரன். இவரது மகள் பிரபாவதி ( 20). இவர்கள் ரெண்டு பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் வேளாங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    பாப்பா கோவில் அருகே சென்ற போது எதிரே வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தில் படுகாயம் அடைந்த பிரபாவதி நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நாகை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூலிகை செடிகள், பூச்செடிகள் உள்ளிட்டவைகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது.
    • விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் தண்ணீர் குழாய்கள் பெற விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் தோட்டக்கலை துறை மூலம் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும்,பெரும் விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் ஏக்கர் ஒன்றுக்கு 18 கருப்பு நிற தண்ணீர் குழாய்கள் வழங்கப்படும் என அறிவி க்கப்பட்டு விண்ணப்பங்கள் பெற ப்பட்டது.விண்ண ப்பங்கள் பெறப்பட்டு தகுதியான 400 விவசாயிகளுக்கு முழு மானியத்தில் தண்ணீர் குழாய்களை உதவி தோட்ட க்கலை அலுவலர்கள் செல்லபாண்டியன், சரவண அய்யப்பன் ஆகியோர் வழங்கினர்.

    மேலும் ஒன்றியத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு தகுதிக்கு ஏற்ப வாழை,கோவைக்காய் செடி,முள் இல்லா மூங்கில், மூலிகை செடிகள், பூச்செ டிகள் உள்ளிட்டவைகள் 100 சதவீத மான்யத்தில் வழங்கப்பட்டது.

    அப்போது இந்த தண்ணீர் குழாய்கள் மூலம் குறைவான அளவில் தண்ணீர் பயன்பாடு,மகசூல் அதிகரி ப்பு,களைகள் வளர்வது குறைக்கப்ப டும்,மின்சாரம் குறைவான அளவில் பயன்படும் என உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் தெரிவித்தார்.

    மேலும் தண்ணீர் குழாய்கள் தேவைப்படும் சிறு குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் பெற தோட்ட க்கலை அலுவலகத்திற்கு வந்து சிறு குறு விவசாய சான்று,அடங்கல்,நிலத்தின் வரைபடம்,ஆதார் நகல்,தொலைபேசி எண் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என கூறினார்.

    மேலும் தகவல்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர் 9952329863 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கூறினார்.

    • நாகையில் சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வந்தன.
    • திடீரென பெய்த கனமழையால் சேதமடைந்தது விவசா யிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வந்தன.

    இந்த நிலையில் போதிய தண்ணீர் இல்லாததால் பல்வேறு இடங்களில் குறுவை பயிர்கள் கருகியது.

    மேலும் கால்நடைகளை வயலில் கட்டியும் டிராக்டர் கொண்டு அழித்தனர் இதனால் சுமார் 35 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது எஞ்சிய பயிர்களை பல தூரங்களில் இருந்து எஞ்சின் மூலம் தண்ணீர் கொண்டுவந்து குறுவை பயிர்களை காப்பாற்றினர்.

    குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த வெண்மணி, கடலாகுடி, திருபஞ்சனம், பிச்சமங்கம், அணக்குடி, கிள்ளுக்குடி அய்யடிமங்கலம், காரிய மங்கலம், மோகலூர் , செண்பகபுரம்,பரப்பனூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கரில் 90 நாட்கள் ஆகிய பயிர்கள் இன்னும் 10, தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நேற்று முன்தினம் இடியுடன் பெய்த கனமழை காரணமாக நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது.

    மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் அறுவடை எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே விவசாயிகள் கடன் வாங்கி சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் திடீரென பெய்த கனமழை யால் சேதமடைந்தது விவசா யிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

    எனவே தமிழக அரசு உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாகையில் உள்ள புதேவாலயம், கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுவிட் வழங்கி கொண்டாடினார்.
    • மீலாதுநபி பெறுவிழாவாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மீலாதுநபி பெறுவிழாவாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    அதன்படி நாகூர் நாயகன் நேசபாசறை என்ற அமைப்பை சேர்ந்த ஹாஜா சம்சுதீன் சாகிப் என்ற இஸ்லாமியர் மீலாது நபியை மத நல்லிணக்க விழாவாக கொண்டாடும் வகையில் நாகப்பட்டினம் கடற்கரை சாலையில் உள்ள புனித லூர்து அன்னை தேவாலயம், புகழ்பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம், பாப்பாகோவில் ஹாஜா சேக் அலாவுதீன் வலியுல்லா தர்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்கு வரும் பக்தர்களுக்கு சுவிட் கேக் வழங்கி கொண்டாடினார்.

    மீலாது நபி பெருவிழாவில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி இஸ்லாமியர் ஒருவர் கேக் வழங்கி கொண்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்பட்டுள்ளது.

    • கள்ளச்சாராயம் கடத்தல், விற்பனையை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • சாராயம் விற்பனையில் ஈடுபட்டு தனபாலன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி நாகை மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொ ருத்தானிருப்பு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனபாலன் (வயது 57).

    இவர் அதே பகுதியில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால், கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் சாராயம் விற்பனை தொடர்பான வழக்குகள் உள்ளதோடு தனபாலன் கைது செய்யப்பட்டு நாகை மாவட்ட சிறையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    தொடர்ந்து தனபாலன் சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வருவதால் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்கிற்கு பரிந்துரை செய்தனர்.

    இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸக்கு பரிந்துரை செய்தார்.

    அதனை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து கீழ்வேளூர் போலீசார் நாகை சிறையில் இருந்த தனபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
    • தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    திருமருகலில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு திருமருகல் ஒன்றிய தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், தலைவர் குமார், பொருளாளர் திருவருட்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக மாவட்ட மகளிர் அணி நிர்வாகி ஜெயலட்சுமி வரவேற்றார்.

    மாநில தலைமை நிலை செயலர் ரமேஷ் கொள்கைகளை விளக்கி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை சரி செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • நகரில் பெரும்பாலான தண்ணீர் தேவையை இந்த குளம் பூர்த்தி செய்கிறது.
    • குளத்தை சீரமைத்து நகரில் நீர் ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நாகை நகரில் உள்ள நீர் நிலைகளில் முக்கியமானதாக அக்கரை குளம் உள்ளது.

    தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த குளத்தை குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

    இது தவிர நகரில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு வரக்கூடிய பக்தர்கள் இந்த குளத்தில் நீராடி செல்வது வழக்கம்.

    நகரில் பெரும்பாலான தண்ணீர் தேவையை இந்த குளம் பூர்த்தி செய்கிறது.

    தற்போது இந்த அக்கரை குளத்தை சுற்றி கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது.

    வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் மாசடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    நாகை நகரில் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த குளத்தை சீரமைத்து நகரில் நீர் ஆதாரத்தை பெருக்கி பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நகர் பகுதியில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    • பேரூராட்சி பகுதியில் அரசால் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தனர்.
    • பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமாக ரூ.3 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டகலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்திரவின்படி, வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோகம் செய்யப்படுகிறதா ? என கடைகளில் பேரூராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

    இதில் கடைகளில் 30 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமாக ரூ.3000 வசூல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து பேரூராட்சி ஊழியர்கள் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கிறதா என சோதனை நடத்தி வருகின்றனர்.

    ×