search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரத்ததான முகாம்
    X

    ரத்ததானம் முகாம் நடந்தது.

    ரத்ததான முகாம்

    • முகாமில் 33 பேர் ரத்ததானம் செய்தனர்.
    • ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பேரிடர் காலத்தில் ரத்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவமனை ரத்த வங்கி இணைந்து நடத்திய ரத்ததான முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு இரத்த வங்கி உதவி பேராசிரியர் டாக்டர் பாலமுருகன் தலைமை தாங்கினர். டாக்டர் பாஸ்கரன், மாவட்ட நல கல்வியாளர் மணவாளன், வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் செவிலியர் கீர்த்தனா, சுகாதார ஆய்வாளர்கள், உதவி செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    முகாமில் 33 பேர் ரத்த தானம் செய்தனர்.இந்த முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×