என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • மாரியம்மனுக்கு தினசரி பூஜைகளும் வழிபாடு நடந்தது.
    • அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் அமைந்துள்ளது நாட்டு மடம் மாரியம்மன் கோவில்.

    இந்த மாரியம்மனை திருவிளையாடற்புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் ஒரு மடம் அமைத்து அதில் இந்த மாரியம்மனை வைத்து வழிபாடு செய்ததாக வரலாறு.

    அதனால் இந்த மாரியம்மனுக்கு நாட்டு மடம் மாரியம்மன் என பெயர்.

    இந்த மாரியம்மனுக்கு தினசரி பூஜைகளும், ஞாயிறு, வெ்ளளி, செவ்வாய் கிழமைகளில் வழிபாடும் நடைபெறும்.

    ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாள் விழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு புரட்டாசி திருவிழா 29-ந்தேதி அன்று தொடங்கியது.

    இதையொட்டி வேதாரண்யேஸ்வரர் கோவிலிலிருந்து அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வந்தடைந்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

    நான்காம் நாள் மண்டகபடியான திங்கள் கிழமை இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, வண்ண மலர்களால், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூத வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி வீதியுலா காட்சி நடந்தது.

    இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்தும், மாவிளக்கு போட்டும் அம்மனை வழிபட்டனர்.

    பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடு களை அர்ச்சரக்கட்டளை கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • மீனவர்கள் 100க்கும் மேற்பட படகுகளை கடலில் இருந்து கரையில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.
    • கடும் காற்றின் காரணமாக கடற்கரையில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வீசும் சூறைக்காற்று காரணமாக கடல் கடும் சீற்றமாக காணப்படுகிறது.

    இதனால் மீனவர்கள் 2-ம் நாளாகமீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் 100க்கும் மேற்பட படகுகளை கடலில் இருந்து கரையில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.

    கோடியக்கரை கடற்கரை பகுதியில் வீசும் சூறை காற்று காரணமாக சாலைகளின் குறுக்கேயும், கடற்கரை பகுதிகளிலும் சுமார் 5 அடி உயரம் மணல் குன்றுகளாக குவிந்து காட்சியளிக்கிறது.

    இந்த திடீரென்று உருவான மணல் குன்றுகளால் மீனவர்கள் மற்றும் வாகனங்கள் அப்பகுதியில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடற்கரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி வலைகள் மண்ணில் புதைந்து காணப்படுகிறது. வழக்கமாக கோடியக்கரையில் அக்டோபர் முதல் மீன்பிடி வரை மீன்பிடி சீசன் காலமாகும்.

    இந்த 6 மாத சீசன் காலத்தில் நாகை,திருவாரூர், தஞ்சை, கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கோடியக்கரைக்கு வந்து தங்கி மீன் பிடித்து தொழில் செய்வது வழக்கம்.

    ஆனால் இந்த ஆண்டு இதுவரை சீசன் துவங்கப்படவில்லை இதற்கு காரணம் தற்போது வழக்கத்துக்கு மாறாக வீசும் இந்த காற்றால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

    எனவே சீசன் காலம் தொடங்க இன்னும் இரு வாரமாகும் என மீனவர்கள் தெரிவித்தனர். கடும் காற்றின் காரணமாக கடற்கரையில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 

    • ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய அங்காடி கட்டிடம் கட்டப்பட்டது.
    • புதிய அங்காடி கட்டிடத்தை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி பால்பண்ணைச் சேரியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2022-23 நிதியின் கீழ், ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்காடி கட்டிடத்தை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், 12-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செந்தில் குமார், வி.சி.க. நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் அருட்செல்வன், நகரச் செயாளர் முத்துலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கருப்பம்புலம் ஊராட்சியில்காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடந்தது.
    • 30 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் மூலம் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கருப்பம்புலம் ஊராட்சியில்காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் முருகையன் வரவேற்றார்.

    வேதாரணியம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜு, பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகநாதன் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள், 100 நாள் திட்ட பணியாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில் பணிகள் விரைந்து நடை பெற்று வருகிறது.

    அடுத்த ஆண்டிற்குள் பணிகள் முடிக்கபட்டு தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் மூலம் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும்.

    100 நாள் வேலைத்திட்ட பணியில்ஊதியம் வழங்குவதில் தேக்க நிலைஇருந்தது.

    தற்போது அது சரி செய்யப்பட்டு அவரவர் வங்கி கணக்கில் ஊதியம் ஏற்றப்படும். மேலும் வீடு கட்டும் திட்டத்தில் வீடு பெற்றவர்கள் உடனடியாக பணியை முடிக்க வேண்டும் .

    அப்படி முடித்தால் தான் மற்றவர்களுக்கு வீடு கிடைக்கும்.

    எனவே விரைந்து வீடு கட்டும் பணியை முடிக்க வேண்டும் என்று ஊராட்சி ஒன்றிய ஆணையர்ராஜு பேசினார்.

    கருப்பம்புலம் ஊராட்சியில் ஆதரவற்ற முதியோர்களுக்கு வீட்டு வரியை இனி ஊராட்சி மன்றமே செலுத்தும் என தீர்மானம் நிறைவே ற்றப்பட்டது.

    சென்ற ஆண்டு கிராம சபா கூட்டத்தில் ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி கிடையாது என்று அறிவிப்பு செய்து நடைமுறைப்படுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கூட்டம் முடிவில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தியராஜன் நன்றி கூறினார்.

    • காவிரி டெல்டாவில் பயிரிட்ட பயிர் உரிய தண்ணீர் இன்று கருகி வருகிறது.
    • விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    காவிரி டெல்டாவில் பயிரிட்ட பயிர் உரிய தண்ணீர் இன்று கருகி வருகிறது.

    இதனால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய தண்ணீரை தமிழகத்திற்கு தரமறுக்கும் கார்நாடக அரசை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் உரிய தண்ணீர் பெற்றுதந்து விவசாயிகளை பாதுக்கவேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, பெரியார் சிலை அருகே முக்குலத்து புலிகள் அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முக்குலத்துபுலிகள் கட்சி தலைவர் ஆறு. சரவணன் தேவர் தலைமை தாங்கி பேசினார்.

    அதனை தொடர்ந்து சித்தராமையாவின் உருவ பொம்மை, படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உருவபொம்மை எரிப்பின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உருவபொம்மை மீது தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்தினர்.

    இதனால் அப்பகுதியில பரபரப்பு ஏற்பட்டது.

    இதில் முக்குலத்து புலிகள் கட்சியின் மாநில செயலாளர் எஸ்கே.தேவர், திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முத்துப்பேட்டை ஒன்றிய பொறுப்பாளர் பாலா திருவாரூர் நகர பொறுப்பா ளர் வினோத் குமார் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • வடகாடு பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த கோதண்டராம சுவாமி கோவில் அமைந்துள்ளது.
    • ஆஞ்சநேயர் சன்னதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு வடகாடு பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த கோதண்டராம சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் இந்த ஆண்டு கம்பசேவை விழா நடைபெற்றது நிகழ்ச்சியில்கம்ப விளக்கிற்கு அபிஷேகம் நடைபெற்று, சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடந்தது.

    இதே போல் ஆஞ்சநேயர் சுவாமி திருஉருவ படம்வைக்கப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஆஞ்சநேயர் சன்னதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    பக்தா்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனா். பெண்கள் பக்தர்களுக்கு வாழைப்பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன

    இதே போல் மறைஞாயநல்லூர், தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில், நாகக்குடையான் சீனிவாசபெருமாள் கோவில், கோவில்பத்து எனையாளும் கண்ணபெருமான் ஆகிய பெருமாள் கோவில்களில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னா் பெருமாள் வண்ண மலர்களாலும், துளசி மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் ஆங்காங்கே கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    • வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் பணி நடந்தது.
    • பனை மர விதை நடுதல் மற்றும் பாதுகாத்தல் குறித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் அ. டயானா ஷர்மிளா தலைமையில், பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தனர்.

    இதில் வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் எம். பொன்னுசாமி, கீழ்வேளூர் வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் வருவாய் துறை அலுவலகர்கள், பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போது பனை மர விதை நடுதல் மற்றும் பாதுகாத்தல் குறித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது.

    • சமுதாயக்கூடம் கட்டிடத்தை ஷாநவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
    • தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி முனிசிபல் பேட்டையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2021-2022 நிதியின் கீழ், ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக்கூடம் கட்டிடத்தை, நாகை எம்.எல்.ஏ ஜெ.முகம்மது ஷாநவாஸ் திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன், நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, நகர்மன்ற துணைத் தலைவர் எம்.ஆர்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 17-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பா.திலகர், வி.சி.க. நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் நா.அருட்செல்வன், நகரச் செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஓட்டலில் மீலாது சமத்துவ விழா கொண்டாடப்பட்டது.
    • நிகழ்வில் தி.மு.க. அமைப்பு செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    சென்னை திருவல்லி கேணியில் தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் அசோசியேசன் சார்பில் தனியார் ஓட்டலில் மீலாது சமத்துவ விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை மாநகராட்சி சேர்மன் சிற்றரசு, நடிகர் ஜீவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முஹம்மது நபி வாழ்க்கையில் சமத்துவம் குறித்து இந்த விழாவில் சிறப்புரையாற்றப்பட்டது. இந்த விழாவில் நடிகர் ஜீவா, அன்வர் பாசா, நீலம் பாசா காதிரி, இர்பான், சதக்கத்துல்லா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வாழ்நாள் சேவை சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேசன் பிரசிடன்ட் நாகூர் கலீபா சாஹிப் தென்னிந்திய தர்காக்கள் பற்றி புத்தகத்தை வெளியிட தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெற்றுகொண்டார். விழா ஏற்பாடுகளை அசோசியேசன் செயலாளர் முஜம்மில் ஜாபர் செய்திருந்தார். பொருளாளர் அபு மூசா நன்றியுரை கூறினார். பெருந்திரளான இஸ்லாமிய மக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

    • டெல்டா மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது.
    • காவிரியில் தண்ணீர் குறைவாக வரும் காரணத்தினால் பல இடங்களில் பயிர்கள் கருக தொடங்கியது.

    நாகப்பட்டினம்:

    தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் காவிரியில் தண்ணீர் குறைவாக வரும் காரணத்தினால் பல இடங்களில் பயிர்கள் கருக தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து விவசாயிகள் மற்ற நீர்நிலைகளை வைத்து காப்பாற்ற போராடி வருகின்றனர். மேலும் பல இடங்களில் குடங்களில் தண்ணீர் கொண்டு சென்று வயல்களில் ஊற்றும் அவலநிலை உள்ளது. காவிரி தண்ணீர் திறந்து விடகோரி விவசாயிகள் பல இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று குறுவை சாகுபடிக்கு கர்நாடகா அரசு தண்ணீர் கொடுக்க மறுப்பதை கண்டித்தும், காவிரி நீரை பெற்று தர உரிய அழுத்தம் கொடுக்காத மத்திய, மாநில அரசை கண்டித்தும் நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரெயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பாக ரெயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

    நாகையில் இருந்து திருச்சிக்கு சென்ற பயணிகள் ரெயிலை மறிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த ரெயில் மறியலில் ஈடுபட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • படகுகளை பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • காற்று தணிந்து மீன்பிடிக்க செல்ல இன்னும் ஓரிரு நாள் ஆகும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைஆறுகாட்டுத்துறை புஷ்பவனம் வெள்ளபள்ளம் வானவன்மகாதேவி மணியன்தீவு சிறுத்தலை காடுஆகிய கடற்கரை பகுதியிலும்கடும் கடலிலும் பலத்த காற்று விசுவதால் சுமார் 5 ஆயிரம் பைபர் படகு மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரை ஓரம் ஆயிரத்துக்கு மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஒரு சில நாட்களாக மீன் வரத்து குறைவாக இருந்த நிலையில் தற்போது கடும் காற்றினால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

    மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் தங்கள் வளைகள் மற்றும் படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் காற்று தணிந்து மீன்பிடிக்க செல்ல ஓரிரு நாள் ஆகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

    • முகாமில் 33 பேர் ரத்ததானம் செய்தனர்.
    • ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பேரிடர் காலத்தில் ரத்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவமனை ரத்த வங்கி இணைந்து நடத்திய ரத்ததான முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு இரத்த வங்கி உதவி பேராசிரியர் டாக்டர் பாலமுருகன் தலைமை தாங்கினர். டாக்டர் பாஸ்கரன், மாவட்ட நல கல்வியாளர் மணவாளன், வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் செவிலியர் கீர்த்தனா, சுகாதார ஆய்வாளர்கள், உதவி செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    முகாமில் 33 பேர் ரத்த தானம் செய்தனர்.இந்த முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    ×