என் மலர்
உள்ளூர் செய்திகள்

முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு சரவணன் தேவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
உருவ பொம்மை எரித்து போராட்டம்
- காவிரி டெல்டாவில் பயிரிட்ட பயிர் உரிய தண்ணீர் இன்று கருகி வருகிறது.
- விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
காவிரி டெல்டாவில் பயிரிட்ட பயிர் உரிய தண்ணீர் இன்று கருகி வருகிறது.
இதனால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய தண்ணீரை தமிழகத்திற்கு தரமறுக்கும் கார்நாடக அரசை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் உரிய தண்ணீர் பெற்றுதந்து விவசாயிகளை பாதுக்கவேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, பெரியார் சிலை அருகே முக்குலத்து புலிகள் அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முக்குலத்துபுலிகள் கட்சி தலைவர் ஆறு. சரவணன் தேவர் தலைமை தாங்கி பேசினார்.
அதனை தொடர்ந்து சித்தராமையாவின் உருவ பொம்மை, படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உருவபொம்மை எரிப்பின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உருவபொம்மை மீது தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்தினர்.
இதனால் அப்பகுதியில பரபரப்பு ஏற்பட்டது.
இதில் முக்குலத்து புலிகள் கட்சியின் மாநில செயலாளர் எஸ்கே.தேவர், திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முத்துப்பேட்டை ஒன்றிய பொறுப்பாளர் பாலா திருவாரூர் நகர பொறுப்பா ளர் வினோத் குமார் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






