என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • திருமருகல் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று உள்ளது.
    • பாலத்தில் உள்ள விரிசலால் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்

    நாகப்பட்டினம்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் திருமருகல் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று உள்ளது.

    இந்த பாலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

    இந்த பாலம் வழியாக திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம், மதுரை, விழுப்புரம், சென்னை, வேலூர், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

    இதனால் இந்த சாலை போக்குவரத்து அதிகம் கொண்ட முக்கிய சாலையாக உள்ளது.

    இந்த நிலையில் முடிகொண்டான் ஆற்று பாலத்தில் இணைப்பு பகுதிகளில் உள்ள இரும்பு தகடுகள் சேதம் அடைந்து பாலத்தில் விரிசல் விழுந்து வருகிறது.

    இந்த விரிசலால் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    எனவே விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் முன்னர் ஆபத்தான நிலையில், பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்ய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வருகிற 10-ந் தேதி முதல் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.
    • டிக்கெட் விலை நபர் ஒருவருக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரியுடன் ரூ. 6 ஆயிரத்து 500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடந்து வரும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    பணிகள் விரைவாக நடந்து வரும் வேளையில் வருகிற 10-ந் தேதி முதல் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கொச்சினில் உருவாக்கப்பட்ட செரியபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு நேற்று இரவு வந்து சேர்ந்தது. இதனால் நாகப்பட்டினம் துறைமுகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குடியுரிமை துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட குழுவினர் வருகை தந்துள்ளனர்.

    இந்த குழுவினர் பயணிகள் சோதனை கருவி, மருத்துவ பரிசோதனை கருவி, பயணிகள் கொண்டு வரும் உடமைகளை சோதனை செய்யும் கருவி, உடமைகளை பாதுகாப்பாக வைப்பது என அனைத்திற்கும் தனித்தனியாக பிரம்மாண்டமான அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் நலன் கருதி துறைமுகம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    இதற்கான டிக்கெட் விலை நபர் ஒருவருக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரியுடன் ரூ. 6 ஆயிரத்து 500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு ஒரு பயணி இலவசமாக 50 கிலோ எடையுள்ள பொருட்கள் எடுத்து செல்ல முடியும். இலங்கை செல்வதற்கு பாஸ்போர்ட், விசா ஆகியவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். விமான நிலையத்தில் பின்பற்றப்படும் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் நாகப்பட்டினம் துறைமுகத்திலும் பின்பற்றப்படும் என்று இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் நிறுவன இயக்குனர் செய்யது ஹாசிப் ஜூஹைர் கூறினார்.

    நாகப்பட்டினம் துறைமுகத்தில் வருகிற 10-ந் தேதி காலை 7.30 மணிக்கு கப்பல் புறப்பட்டு 3 மணி நேரத்தில் இலங்கை காங்கேசன் துறைமுகம் சென்றடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்த கப்பலின் சோதனை ஓட்டமானது இன்று காலை 9.45 மணிக்கு தொடங்கி நாகை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. இதில் 14 அதிகாரிகள் கப்பலில் பயணம் செய்தனர். இது மீண்டும் இன்று இலங்கைக்கு திரும்பி வர உள்ளது. இதேபோல், நாளை சோதனை ஓட்டம் தொடர்ந்து நடைபெற உள்ளது. துறை சார்ந்த பணிகளின் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
    • கட்டுமான பணிகளை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் சிகிச்சைகள் குறித்து முகமது ஷாநவாஸ் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

    அப்போது ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்ப ட்டு முதல் பிரசவமாக மேலவாஞ்சூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் மனைவி ரோஷி (வயது 27) என்பவருக்கு பிறந்த ஆண் குழந்தையை பார்வையிட்டு அவருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் பரிசு பெட்டகத்தை வழங்கினார்.மேலும் அந்த குழந்தைக்கு தருண் என்ற பெயர் சூட்டினார்.

    பின்னர் அதைத் தொடர்ந்து திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளத்திடலில் இடிக்க ப்பட்ட சமுதாயக்கூடத்திற்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் கட்டுமான பணி களை தொடங்கப்படாமல் இருப்பதை பார்வையிட்டு உடன் கட்டுமான பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷாசி த்திக்கா,வட்டார மருத்துவ அலுவலர் மணிசுந்தரம் ,பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன்,பேரூராட்சி மன்ற உறுப்பினர் முகமது சுல்தான்,பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ்,சுகாதார ஆய்வாளர் பரமநாதன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நாட்டுமட மாரியம்மன் புரட்டாசி பெருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    8-ம் நாள் திருவிழாவில் பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பல்வேறு திரவியங்கள் பால் தயிர் பஞ்சாமிர்தம் பன்னீர் இளநீர் சந்தனம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது பின்பு அம்மன் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் பரிவார தேவதைகளுடன் கோவிலை சுற்றி வீதி உலா காட்சி நடைபெற்றது வேதாரணியம் கோயில் வாதின வித்துவான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    • மாணவிகள் விழிப்புணர்வு பகாதைகளுடன் கோடியக்கரை பூங்காவிலிருந்து ஊர்வலமாக சரணாலயம் வந்தனர்.
    • அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வனஉயிரினக்காப்பாளர் அபிஷேக் தோமர், உத்தரவின்படி நாகப்பட்டினம் வனஉயிரினக் கோட்டம் வேதாரண்யம் வனச்சரகம் கோடியக்கரை சரணா லயத்தில் வனஉயிரின வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்சியாக வனசரக அலுவலர் அயூப்கான் தலைமையில் கோடியக்கரை அரசு மேல்நிலைபள்ளி மாணவ, மாணவிகள் ஆரியர்கள், வனத்துறை , பணியாளர்கள், வனவர்கள் மகாலெட்சுமி, பெரியசாமி, சதீஷ்குமார். மற்றும் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர், பாலசுப்பிரமணியன் மற்றும் துணை தலைவர் குமார் ,உறுப்பினர்கள் ராமன், வீரசுந்தரம், சிவகணேசன் உள்ளியிட்டோர் கலந்துகொ ண்டனர்.

    பின்பு தம்புசாமி இல்லவளாகத்தில் மரக்கன்று நடப்பட்டன .வன உயிரின வாரா நிகழ்ச்சியினை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பகாதைகளுடன் கோடியக்கரை பூங்கா விலிருந்து ஊர் வலமாக சரணாலயம நுழைவுவாயிலை வந்த டைந்து அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பின் சரணாலய பகுதிகளை சுற்றி காண்பித்தும் வனஉயிரினங்கள், வனம், மற்றும் பறவைகள் குறித்து டாக்டர். சிவகணேசன் மாணவ- மாணவிகளுக்கு எடுத்து உரைத்தார்.

    முடிவில் வனஉயிரின வார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    • காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியது.
    • வீட்டில் இருந்த பொருட்கள், முக்கிய ஆவணங்கள் என அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை சிவன்தெற்கு வீதியை சேர்ந்தவர் அருள்வாசகம். இவர் குத்தாலம் பேரூராட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் அருள் வாசகம் பணிக்கு சென்ற நிலையில், மனைவி மங்கையர்கரசியும் வீட்டை பூட்டிவிட்டு ரேஷன் கடைக்கு சென்று விட்டார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அருள் வாசகம் வீட்டில் தீப்பிடித்தது. தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக தீ மளமள வென பரவியது.

    இது குறித்து தகவல் அறிந்த நாகை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இருந்தும் வீட்டிலிருந்த பீரோ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் நில பத்திரம், ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் என ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது.

    மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டி ருக்கலாம் என்று கூறப்படு கிறது. இது குறித்து நாகை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மொத்தம் 11 கோடி பேரின் விவரங்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்பட்டுள்ளது.
    • இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    முக்குலத்துப் புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது :-

    கடந்த ஆண்டு பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் , சட்டமன்றம், சட்டமேலவை ஆகியவற்றின் ஒப்புதலோடு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அந்த மாநிலத்தில் சாதிவாரி கணக்கீடை நடத்த உத்தரவிட்டார்.

    மொத்தம் 11 கோடி பேரின் விவரங்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்பட்டுள்ளது.

    இதே போல கேரளாவிலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப் போவதாக அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    இதுவே உண்மையான சமூகநீதி என்று முக்குலத்துப்புலிகள் கட்சியின் சார்பில் நீண்ட காலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம்.

    பீகாரை முன்மாதிரியாக கொண்டு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

    அதேபோல தேசிய அளவிலான கணக்கெடுப்பை நடத்தி அதனடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மீனவர்களை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு சுமார் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள வலை, ஜி.பி.எஸ். கருவி உள்பட பல்வேறு உபகரணங்களை கொள்ளையடித்து தப்பினர்.
    • தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்தவர்கள் மணியன் (வயது 55), வேல்முருகன் (27), சத்யராஜ் (30), அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் கோடிலிங்கம் (53). இவர்கள் 4 பேரும் மீனவர்கள்.

    நேற்று மாலை இவர்கள் அஞ்சலையம்மாள் என்பவருக்கு சொந்தமான படகில் மீன் பிடிக்க புறப்பட்டனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு படகில் 3 இலங்கை கடல் கொள்ளையர்கள் வந்தனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததோடு, மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து மீனவர்கள் படகில் ஏறி கத்தியை காட்டி பொருட்களை கொடுக்குமாறு மிரட்டினர்.

    பின்னர் மீனவர்களை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு சுமார் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள வலை, ஜி.பி.எஸ். கருவி உள்பட பல்வேறு உபகரணங்களை கொள்ளையடித்து தப்பினர்.

    இலங்கை கடற்கொள்ளையர்களின் இந்த கொடூர தாக்குதலால் மீனவர்கள் மணியன், கோடிலிங்கம், வேல்முருகன், சத்தியராஜ் ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    இதையடுத்து அவர்கள் காயத்துடன் வேக வேகமாக கரைக்கு திரும்பி உறவினர்களிடம் நடந்த விவரங்களை கூறினர். அதனை தொடர்ந்து 4 பேரும் ஆம்புலன்சில் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது. தொடரும் அட்டூழியத்தால் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதோடு மீனவர்களையும் தாக்கி, அவர்களிடம் இருந்து கொள்ளையடித்து செல்லும் இலங்கை கடற்கொள்ளையர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.ஆதினங்குடியிலிருந்து கணபதிபுரம் வரை செல்லும் சாலை உள்ளது.

    இந்த சாலை சுமார் 5 கிலோமீட்டர் தொலைவு கொண்டது.

    இந்த சாலையை ஆதினங்குடி,பண்டாரவடை, இடையாத்தங்குடி, தென்பிடாகை, கிடாமங்கலம், ஏர்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அன்றாடும் நன்னிலம், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வர இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

    மேலும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த சாலை வழியே சென்று வருகின்றன.

    மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை உள்ளூர் வெளியூர்களுக்கு எடுத்துச்செல்ல இதே சாலையை தான் பயன்படுத்துகின்றனர்.

    இந்த நிலையில் சாலை சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    இதனால் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றன.

    இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிளில் செல்லும் பொதுமக்கள் சாலையில் மின் வசதி இல்லாத காரணத்தால் பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றன.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.

    • மனைவி வீட்டுக்கு வந்து கதவை தட்டி உள்ளார்
    • பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    நாகப்பட்டினம்,

    நாகூர் அருகே உள்ள சன்னமங்களம் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆமீர் ஹம்சா மகன் ஹாஜா மெய்தீன் (வயது 30). இவர் நாகையில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தார்.

    ஹாஜா மெய்தீனுக்கு ஆயிஷா நூர் என்ற மனைவியும், ஆஷீதீன் என்ற 7 வயது மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சிஇருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆயிஷா நூர் அவரது தந்தை வீட்டுக்கு சென்று உள்ளார். பின்னர் நேற்று காலை அவரது மனைவி வீட்டுக்கு வந்து கதவை தட்டி உள்ளார்.

    வெகு நேரமாகியும் கதவு திறக்கவில்லை. தூக்குப்போட்டு தற்கொலை உடனே அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஹாஜா மெய்தீன் புடவையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிணமாக கிடந்த ஹாஜா மெய்தீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தோட்டக்கலைத் துறை மூலம் அழகுபடுத்தும் பணி, வர்ணம் பூசும் பணி ஆகிய பணிகள் நடந்து வருகிறது.
    • அரசு துறையினருடன் ஆலோசித்து சோதனை ஓட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு செய்யப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்தியா-இலங்கை இடையிலான நல்லிணக்க கூட்டு பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்து நாகை துறைமுகத்தில் பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    தோட்டக்கலைத் துறை மூலம் அழகுபடுத்தும் பணி, வர்ணம் பூசும் பணி ஆகிய பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் ஒரு சில நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாகை துறைமுகத்தில் இருந்து 2 பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு சென்று வரும் வகையில் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் 90 சதவீதத்துக்கு மேல் முடிவடைந்துவிட்டது. மேலும் பயணிகள் கட்டணம் நிர்ணயம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து துறைமுக நிர்வாகத்துடன் மத்திய, மாநில அரசு துறையினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

    நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்குவதற்காக கொச்சியில் இருந்து ஒரு கப்பல் சில தினங்களுக்கு முன்பு புறப்பட்டது. இந்த கப்பல் இலங்கை வழியாக நாளை (சனிக்கிழமை) மாலை அல்லது 8-ந் தேதி காலை நாகைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கு பிறகு அரசு துறையினருடன் ஆலோசித்து சோதனை ஓட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு செய்யப்படும். இதைத்தொடர்ந்து ஓரிரு வாரத்தில் நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும்.

    இதற்கான அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.

    • தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க சார்பில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
    • 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையில் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அலுவலர் பேபியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் கூறியிப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு 11 வாரங்கள் வழங்கப்படாமல் உள்ள கூலியை உடனே வழங்க வேண்டும்.

    100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    சில ஊராட்சிகளில் வாரம் விட்டு வாரம் வேலை வழங்குவதை நிறுத்திவிட்டு, முறையாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இதில் மாவட்டத் தலைவர் நாகராஜ், மாநில குழு உறுப்பினர் செல்வம், விவசாய சங்க மாவட்ட தலைவர் சரபோஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×