என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கியது.
    • இந்தப் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு 2 முறை தள்ளி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொலிக் காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

    நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    • அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டிகள் நடைபெற உள்ளது.
    • வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலினை போட்டி தொடங்கும் இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டுப்பிரிவால் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டிகள் நடைபெற உள்ளது.

    அதன்படி நாளை காலை 7 மணிக்கு நாகை மீன்வள பொறியியல் கல்லூரியிலிருந்து தொடங்கி கங்களாஞ்சேரி ரோடு பெருஞ்சாத்தான்குடி வரை சைக்கிள் போட்டி நடத்தப்பட உள்ளது.

    போட்டிகள் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 வயதிற்குட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், 15 வயதிற்குட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது.

    3 பிரிவுகளாக நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியாவில் தயாரான சைக்கிள்கள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.

    இப்போட்டியில் நாகை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

    இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ. 5ஆயிரமும், 2-ம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரமும் , 3-ம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.2ஆயிரமும், 4 முதல் 10-ம் இடம் வரை பெறுபவர்களுக்கு தலா ரூ.250 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதால் போட்டியில் கலந்து கொள்பவர்கள்அவரவர் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலினை போட்டி தொடங்கும் இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.எனவே போட்டியில் நாகை மாவட்டத்தை சேர்ந்த 13, 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் அதிக அளவில் கலந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.
    • சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் கொங்கராயநல்லூர் ஊராட்சி சகடமங்கலம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

    உதவி இயக்குனர் அசன் இப்ராகிம் முன்னிலை வகித்தார்.

    கால்நடை உதவி மருத்துவர் பிரியதர்ஷினி வரவேற்றார்.

    முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும்எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள்- ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.

    இதில் 350-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன. முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இதில் உதவி டாக்டா்கள் முத்துகுமரன், ராதா, சிவப்பிரியா, ஸ்ரீதர் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • பாரம்பரிய நகர்மன்ற கட்டிடம் விரைவில் புனரமைக்கப்படும் என உறுதி கூறினார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நகர்மன்ற அலுவலகத்தில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    அதில், நகராட்சியை தரம் உயர்த்துதல், பாரம்பரிய நகர்மன்ற கட்டிடத்தை புனரமைத்தல், பாரதி மார்க்கெட் மற்றும் நாகூர் பேருந்து நிலையத்தை மேம்படுத்துதல் ஆகிய திட்டப் பணிகள் குறித்து விவாதிக்க ப்பட்டது.

    அப்போது, நகராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சாக்கடை பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டுமென்று ஷாநவாஸ் எம்.எல்.ஏ வலியுறுத்தினார். மேலும் பாரம்பரிய நகர்மன்ற கட்டிடம் விரைவில் புனரமைக்கப்படும் என உறுதி கூறினார்.

    கலந்தா ய்வுக் கூட்ட த்தில், நகர்மன்றத் தலைவர் இரா.மாரி முத்து, நகர்ம ன்றத் துணைத் தலைவர் எம்.ஆர்.செந்தில்கு மார், நகராட்சி ஆணையர் ப.திருமால் செல்வம், நகராட்சி செயற்பொறியாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் பலகாரங்கள் வைத்து விற்பனை செய்யக்கூடாது.
    • சமீபத்தில் உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத்துறை, நாகப்பட்டினம் நகராட்சி சார்பில், உணவு விற்பனையாளர்கள் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் உரிமம், பதிவுச் சான்று முகாம் நாகப்பட்டினம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில், நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

    உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

    உணவு விற்பனை நிறுவனங்கள் மீது புகார்களும் அதிகம் வரத் துவங்கியுள்ளது, உணவு விற்பனை நிலையங்களை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும், கோழி, ஆட்டிறைச்சி உள்ளிட்ட வற்றைகையாளும் உணவு ஹோட்டல்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் கையாள வேண்டும்.

    பழைய மற்றும் சமைத்து மீதமாகும் அசைவ உணவுகளை குளிர் பதனப் பெட்டிகளில் வைத்து மீண்டும் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

    சைவ மற்றும் அசைவ உணவு தயாரிப்பில் செயற்கை வண்ணங்களை பயன்படுத்தக் கூடாது. அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் பலகாரங்கள் வைத்து விற்பனை செய்யக்கூடாது.

    தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளில் சட்னி, சாம்பார், குருமா, காப்பி, டீ போன்றவற்றை கட்டி விற்பனை செய்யக்கூடாது. புளித்துப்போன மற்றும் கெட்டுப்போன நிலையில் தயிர், மோர் மற்றும் தேங்காய் சட்னி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என்றார்.

    இதில் ஹோட்டல் மற்றும் பேக்கரி உணவக சங்க நாகப்பட்டினம் நகரத் தலைவர் முருகையன், சங்க நிர்வாகிகள் பாண்டியன், மகேஷ் உள்ளிட்டு, ஹோட்டல், டீக்கடை, பேக்கரி, ஸ்வீட் ஸ்டால், இட்லி கடை, சாலையோர உணவகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் 60-க்கும் அதிகமான உணவு விற்பனையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    20-க்கும் மேற்பட்டோர் உணவு பாதுகாப்புத்துறை பதிவுச் சான்று வேண்டி விண்ணப்பம் அளித்தனர்.முடிவில்

    திருமருகல் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆண்டனிபிரபு நன்றி கூறினார்.

    • அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீ முச்சந்தி மகா காளியம்மன் ஆலயங்கள் அமைந்துள்ளன.

    ஆலயத்தின் புரட்டாசி பொங்கல் திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.

    இதனையொட்டி, 500க்கும் மேற்பட்ட பெண்கள் விரதமிருந்து வீட்டில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை தாமரைக்குளம் தென்கரைதெரு, தர்ம கோவில் தெரு, மார்க்கெட் சாலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆலயத்திற்கு எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகளுக்குப்பிறகு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது அதனை தொடர்ந்து ஊர்வலமாக சென்று நீர்நிலையில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சக்தி கரகம் முன்னே செல்ல, ஆலயத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலம், வந்தடைந்தது.

    அங்கு, முளைப்பாரியை வைத்து, பெண்கள் கும்மியடித்து, குலவையிட்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து குளத்தில் முளைப்பாரி விடப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • யோகா போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.

    நாகப்பட்டினம்:

    மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் அகில இந்திய தடகள போட்டிகள் கோவாவில் நடைபெற்றது.

    போட்டியில் பல மாநிலங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் ஜனனி என்ற மாணவி யோகா போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.

    வெற்றிபெற்ற மாணவியை இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி குழும இணைச்செயலாளர் சங்கர் கணேஷ், துறை தலைவர் கணேசன், அருள் செல்வன், முதலாம் ஆண்டு துறை தலைவர் தீபா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
    • 2 இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    புதுச்சேரி மாநிலம் காரை க்காலில் இருந்து நாக ப்பட்டினம் மாவட்டத்திற்கு மதுப்பாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்து மதுக் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்தாலும் கடத்தல்கா ரார்களும் பல்வேறு நூதன முறையில் கடத்தலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.

    நாகை நல்லியான் தோட்டம், வடக்குபொய்கை நல்லூரில் உள்ளிட்ட பகுதிகளில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டி ல்களை மண்ணுக்குள் புதைத்து மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து மறைத்து வைத்திருந்திருந்த 1180 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுப்பட்ட 6 மூதாட்டி உள்பட 9 போலீ சாரை கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து கடத்தி லுக்கு பயன்படுத்தப்பட்ட 2 இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுப்பாட்டி ல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    வெளி மாநில மதுபாட்டி ல்கள் கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட காவலர்களுக்கு உத்தரவிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தொடர் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுப்படு பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்தார்.

    • 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ராகு- கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது.

    மூலவர் ரத்தினகிரீஸ்வரர்- வண்டுவார்குழலி அம்மன் மற்றும் நவக்கிரகங்களுக்கு சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திருமார்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், கணக்கர் சீனிவாசன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • கல்வெட்டுகளில் உள்ள செய்திகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் எடுத்து கூறினார்.
    • முன்னதாக தமிழ்த் துறைத்தலைவி ரஞ்சனி அனைவரையும் வரவேற்றார்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை ஒருங்கிணைப்பில் தமிழ் கல்வெட்டுகள் மற்றும் மரபிலக்கணக் கோட்பாடுகள் என்னும் பொருண்மை யிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

    கருத்தரங்கில் தமிழ் கல்வெட்டுகள் மற்றும் மரபிலக்கணக் கோட்பாடுகள் என்னும் தலைப்பில் தமிழ்நாடு நடுவண் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் ரவி கல்வெட்டுகள் மற்றும் கல்வெட்டுகளில் மக்கள் அறிந்து கொள்ளும் பல்வேறு வகையான செய்திகளை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறினார்.

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறைப் பேராசிரியர் பெருமாள் மாணவ மாணவிகள் இலக்கணம் பயில்வதால் ஏற்படும் சிறப்புகள் பற்றியும் காலம் காலமாக இலக்கணம் மனித வாழ்வை நெறிப்படுத்தும் ஆற்றல் உடையது என்பதைப் பற்றி சொற்பொழிவு ஆற்றினார்.

    இந்நிகழ்வில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் சிவகுருநாதன் தலைமை உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து.

    கல்லூரி தாளாளர் வெங்கட்ராஜுலு செயலர் சுந்தர் ராஜு ,முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்விக் குழுமத்தின் இயக்குநரும்,மகரிஷி வித்யா மந்திர்சிபிஎஸ்இ பள்ளியின் தாளாளர், த. விஜய சுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். மேலும் இந் நிகழ்வில் துணை முதல்வர் (கல்விசார்) எஸ். நெல்லிவனம், துணை முதல்வர் (நிர்வாகம்) பவித்ரா வாழ்த்துரை வழங்கினர்.

    இக்கல்லூரியின் தமிழ்த் துறைத்தலைவி ரஞ்சனி வரவேற்றார்.

    முடிவில் தமிழ்த் துறை துணைதலைவர் கிருஷ்ண ராஜ் நன்றி கூறினார்.

    இக்கருத்தரங்கில் அனைத்து துறைப் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து படகு மூலம் கடலுக்கு சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பாதுகாப்பு ஒத்திகயைானது இன்றும், நாளையும் (2 நாட்கள்) கடலோர பகுதிகளில் நடைபெற உள்ளது.

    வேதாரண்யம்:

    இந்திய கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதை தடுக்கும் பொருட்டு கடலோர கிராமங்களில் அரசு சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக நடக்கிறதா? என்பதை பரிசோதிக்கும் வகையில், இந்திய கடலோர காவல் படையினர், தமிழக மரைன் போலீசார் மற்றும் மாநில போலீசார் இணைந்து சாகர் கவாச் (கடல்கவசம்) பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தமிழகத்தின் கடலோர பகுதியில் இன்று தொடங்கியது.

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது.

    அதன்படி, ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும டி.எஸ்.பி.சுரேஷ் தலைமையில் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து படகு மூலம் கடலுக்கு சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலுக்கு செல்லும் வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரையும் கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த பாதுகாப்பு ஒத்திகயைானது இன்றும், நாளையும் (2 நாட்கள்) கடலோர பகுதிகளில் நடைபெற உள்ளது.

    • கடந்த 7-ந் தேதி இலங்கை கடற்கொள்ளையர்கள் அரிவாளால் தாக்கப்பட்டனர்.
    • காயம் அடைந்தவர்கள் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதா ரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவர்க ளை வேதாரண்யம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது கடந்த 7-ம் தேதி இலங்கை கடற்கொ ள்ளையர்கள் அரிவாளால் தாக்கி அவர்களிடமிருந்து வலை, ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட பொரு ட்களை கொள்ளையடித்து சென்றனர்.

    கொள்ளையர்கள் தாக்குத லில் காயமடைந்த வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த மணியன், வேல்முருகன், சத்யராஜ், அக்கரைப்பே ட்டையைச் சேர்ந்த கோடி லிங்கம் ஆகியோர் நாகை அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இவர்களை பாஜக மாவட்ட தலைவர் கார்த்தி கேயன் தலைமையில் மாவட்ட செயலாளர் விஜேயந்திரன், விவசாய அணித் தலைவர் சின்னப்பிள்ளை, ஆன்மிக பிரிவு தலைவர் கஜேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகள் நேரில் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.

    மேலும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா மலை மூலமாக மத்திய அரசிடம் பேசி மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பா டுகளை செய்து தர நடவடி க்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    ×