வேதாரண்யம் சன்னதி கடலில் தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு

காதோலை கருகமணியை கடலில் விட்டு புனித நீராடி சூரியபகவானை வழிபட்டனர்.வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
கோடியக்கரை கடலில் புனிதநீராடிய பொதுமக்கள்.
கோடியக்கரை கடலில் புனிதநீராடிய பொதுமக்கள்.
Published on

வேதாரண்யம்:

ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய 3 அமாவாசைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாகும்.

இந்த நாட்களில் மூதாதையர்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம்.

இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று திதி, நீர்க்கடன் செய்ய வேண்டும். இதனால் அவர்களது ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும். நாம் செய்த பாவங்கள் நீங்கும்.

நீர்நிலைகள் அருகே அமர்ந்து வேதமந்திரங்கள் சொல்லி திதி கொடுப்பது, மூதாதையர்கள் நினைவாக பிண்டம் செய்து உணவாக படைப்பது என்று செய்து வருகின்றனர்.

அதன்படி, நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடல் மற்றும் கோடியக்கரை ஆதிசேது எனப்படும் சித்தர் கடலில் இன்று சூரிய உதயத்தின் போது கடலில் ஏரளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் தேங்காய், வெற்றிலைபாக்கு, எலும்பிச்சைபழம், காதோலை கருகமணியை கடலில் விட்டு புனித நீராடி சூரியபகவானை வழிபட்டனர் .

பின்பு வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com