search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேதாரண்யம் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை
    X

    கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைபர் படகுகள்.

    வேதாரண்யம் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

    • படகுகளை பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • காற்று தணிந்து மீன்பிடிக்க செல்ல இன்னும் ஓரிரு நாள் ஆகும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைஆறுகாட்டுத்துறை புஷ்பவனம் வெள்ளபள்ளம் வானவன்மகாதேவி மணியன்தீவு சிறுத்தலை காடுஆகிய கடற்கரை பகுதியிலும்கடும் கடலிலும் பலத்த காற்று விசுவதால் சுமார் 5 ஆயிரம் பைபர் படகு மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரை ஓரம் ஆயிரத்துக்கு மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஒரு சில நாட்களாக மீன் வரத்து குறைவாக இருந்த நிலையில் தற்போது கடும் காற்றினால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

    மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் தங்கள் வளைகள் மற்றும் படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் காற்று தணிந்து மீன்பிடிக்க செல்ல ஓரிரு நாள் ஆகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×