search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
    X

    ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்த வாலிபர்.

    ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

    • நீல, சிவப்பு நிற முழுக்கை டீ சர்ட், டவுசரும் அணிந்திருந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை நல்லியான் தோட்டம் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் நாகை இருப்புப் பாதை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜு, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து கிடந்தவர் நீல, சிவப்பு நிற முழுக்கை டீ சர்ட், டவுசரும் அணிந்திருந்தார்.

    இது குறித்து இருப்பு பாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகையில் வாலிபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×