search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
    X

    பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

    • பொதுமக்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
    • முகாமில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    வேதாரண்யம்:

    கருப்பம்புலம் ஊராட்சி மன்றம், நாகப்பட்டினம் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை ஆகியவை இணைந்து கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் கருப்பம்புலம் ஊராட்சியில் நடைபெற்றது.

    முகாமிற்கு ஊராட்சி தலைவர் சுப்புராமன் தலைமை தாங்கினார். மருதூர் கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன் முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமில் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், கண் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், இ.சி.ஜி., ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோ தனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    இதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    முகாமில் தலைமை டாக்டர் சுந்தர்ராஜன், டாக்டர்கள் ராஜசேகர், அனாமிகா, யுவன்சிங், சகிதர்பானு, கண் மருத்துவ அலுவலர் கவிதா, சுகாதார மேற்பார்வை ஆய்வாளர் சிவப்பிரகாசம், சுகாதார ஆய்வாளர்கள் ராமராஜன், அன்பழகன், சுமதி ரகுராமன் உள்ளிட்ட மருத்துவ துறையினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×