என் மலர்tooltip icon

    மதுரை

    • சித்திரை திருவிழா 22-ந்தேதி தொடங்கி மே 4-ந் தேதி வரை நடக்கிறது.
    • மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 2-ந்தேதி நடக்கிறது.

    மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றது. இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா வருகிற 22-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடக்கிறது.

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஆகும். இது கோவிலில் உள்ள வடக்கு ஆடி வீதி திருக்கல்யாண மண்டபத்தில் அடுத்த மாதம் 2-ந் தேதி காலை 8.30 மணி முதல் 8.59 மணிக்குள் நடக்கிறது.

    இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. அதே போல தெற்கு கோபுரம் வழியாக வருகை தரும் பக்தர்களுக்கு கட்டணம் இல்லா தரிசனம் என்ற முறையில் அனுமதி வழங்கப்படும். இது யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு அனுமதி என்ற நிலையில் இருக்கும்.

    மீனாட்சி-சுந்தரேசுவரர் கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் கட்டண சீட்டு பெற வசதியாக இந்து சமய அறநிலையத்துறையின் https://hrce.tn.gov.in-திருக்கோவிலின் https://maduraimeenakshi.hrce.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் வருகிற 22-ந் தேதி முதல் 25-ந் தேதி இரவு 9 மணி வரை முன்பதிவு செய்யலாம்.

    இதன் ஒரு பகுதியாக ரூ.500 கட்டண பதிவில் ஒருவர் 2 சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய இயலும். ரூ.200 கட்டண பதிவில் ஒருவர் 3 சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒரே நபர் ரூ.500, ரூ.200 கட்டணச் சீட்டுகள் இரண்டையும் பதிவு செய்ய இயலாது. 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் சீட்டு வாங்க வேண்டும். ஒரு பதிவிற்கு ஒரு கைபேசி எண் மட்டுமே பயன்படுத்த இயலும். எனவே ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் செய்ய இயலாது.

    பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதி, பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டணச் சீட்டு பெற விரும்பும் பக்தர்கள் ஆதார் கார்டு, போட்டோ அடை யாள அட்டை, கைபேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி ஆகியவற்றுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இணைய தளத்தில் கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால், பக்தர்களுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு நடத்தி உரிய நபருக்கு மின்னஞ்சல் அல்லது கைபேசி எண்ணிற்கு வருகிற 26-ந் தேதி தகவல் அனுப்பப்படும்.

    உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல்-குறுந்தகவல் கிடைக்க பெற்றவர்கள், வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் உறுதி செய்யப்பட்ட தகவலை காட்டி, கட்டணச் சீட்டு தொகையை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு வருபவர்களுக்கு கட்டணச் சீட்டு வழங்கப்பட மாட்டாது.

    வெளியூரில் வசிக்கும் உறுதி செய்யப்பட்ட குறுந்தகவல் உடையவர்களுக்கு மட்டும் பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் அடுத்த மாதம் 1-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை கட்டணச் சீட்டு தரப்படும்.

    மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 2-ந் தேதி காலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    ரூ.500 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு ராஜ கோபுரம், மொட்டை முனீ ஸ்வரர் சன்னதி அருகில் உள்ள வழியில் அனுமதிக்கப்படுவர். ரூ.200 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே உள்ள பாதை வழியாக வந்து வடக்கு ராஜ கோபுரம் வழியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

    திருக்கல்யாண கட்டணச் சீட்டு பெற்றவர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர்ந்து திருக்கல்யாண காட்சியைக் கண்டு அம்மன்-சுவாமி அருள் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.... https://www.maalaimalar.com/devotional

    • மாட்டுத்தாவணி, ஒத்தக்கடை வரையில் 10 இடங்களில் மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்தப்பட உள்ளது.
    • பரிசோதனைக்காக எடுக்கப்படும் மண் மற்றும் பாறைகள் ஐதராபாத்தில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தமிழக அரசு மதுரை திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை சுமார் 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை அறிவித்தது. மேலும் இதற்காக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் ரூ.8,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மெட்ரோ ரெயில் திட்டமானது மதுரை திருமங்கலத்தில் தொடங்கி திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், பெரியார் நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, ஒத்தக்கடை வரையில் 10 இடங்களில் மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்தப்பட உள்ளது.

    இதற்கான கட்டுமான பணிகள் வருகிற 2024-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2027-ம் ஆண்டு பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மெட்ரோ ரெயில் சேவை செய்யக்கூடிய வழித்தட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், கட்டிடங்கள் என்னென்ன உள்ளன என்பது குறித்து வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் மெட்ரோ ரெயில் பணிக்காக முதல் கட்டமாக திருப்பரங்குன்றம், திருநகர், தனக்கன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அரை கிலோ மீட்டர் இடைவெளியில் சாலை ஓரத்தில் மண் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஒத்தக்கடை முதல் சுமார் 76 இடங்களில் பூமியில் 30 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு அப்பகுதியில் உள்ள மண்ணின் தரம் குறித்தும் ஆய்வு செய்ய மண் மற்றும் பாறைகள் மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

    பரிசோதனைக்காக எடுக்கப்படும் மண் மற்றும் பாறைகள் ஐதராபாத்தில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மதுரை மக்களின் நீண்ட கால கனவான மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டவுடன் அதற்கான திட்டப்பணிகள் விரைவாக நடைபெறுவது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

    • திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் தேவர் சிலையில் இருந்து ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.
    • காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கோஷமிட்டவாறு ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர்.

    மதுரை:

    மதுரையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் வடக்கு மாவட்ட தலைவர் ஆலந்தூர் ரவிச்சந்திரன் முன்னிலையில் போராட்டம் நடந்தது. ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட, அவர்கள் மீனாட்சி பஜாரில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி பேரணியாக வந்தனர். பின்பு போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு பிரிவை சேர்ந்தவர்களும் ரெயில் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அவர்களில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் தேவர் சிலையில் இருந்து ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.

    ரெயில்நிலையம் வந்த அவர்களை போலீஸ் டி.எஸ்.பி. வசந்தகுமார் தடுத்து நிறுத்தி, ரெயில் மறியல் நடத்த அனுமதி இல்லை என கூறி கலைந்து செல்லுங்கள் என்றார்.

    ஆனால் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கோஷமிட்டவாறு ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். உடனே பாதுகாப்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    அவர்கள் அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    விருதுநகரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று காலை கச்சேரி ரோட்டில் உள்ள காமராஜர் சிலை முன்பிருந்து மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.

    ரெயில் நிலையம் அருகே அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் மறுப்பு தெரிவித்து அங்கேயே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் மாணிக்கம் தாகூர் எம்.பி., முன்னாள் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    • விரக்தி அடைந்த நாகலட்சுமி அரசு பஸ்சில் செல்லும் போது கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • 3-வது நாளாக இன்றும் நாகலட்சுமியின் உடலை வாங்காமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக நாகலட்சுமி 100 நாள் வேலை திட்ட மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

    பணி தொடர்பாக நாகலட்சுமிக்கும், பஞ்சாயத்து நிர்வாகிகளுக்கும் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக நாகலட்சுமி கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசாரும் நடவடிக்கை எடுக்காமல் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த நாகலட்சுமி அரசு பஸ்சில் செல்லும் போது கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலை செய்வதற்கு முன்பு நாகலட்சுமி எழுதிய கடிதத்தில், தனது தற்கொலைக்கு காரணம் மையிட்டான்பட்டி பஞ்சாயத்து துணைத்தலைவர் முருகன், உறுப்பினர் வீரக்குமார், கிளார்க் முத்து என குறிப்பிட்டிருந்தார்.

    இதன் அடிப்படையில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த அவர்கள் தலைமறைவானார்கள். இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்காக நாகலட்சுமியின் உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.

    பிரேத பரிசோதனை முடிந்த பின்பு உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து விட்டனர். தற்கொலைக்கு தூண்டிய 3 பேரை கைது செய்ய வேண்டும், நாகலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். 5 பெண் குழந்தைகளையும் அரசு காப்பகத்தில் சேர்த்து பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

    கடந்த 2 நாட்களாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. 3-வது நாளாக இன்றும் நாகலட்சுமியின் உடலை வாங்காமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பள்ளி அருகே சிகரெட் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • ரூ.16 ஆயிரத்து 540 பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    தத்தனேரி கொன்னவாயன் சாலையில் பள்ளி அருகே சிகரெட் விற்பனை நடைபெறுவதாக செல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தார். அங்கு தத்தனேரி பள்ளிவாசல் தெரு காஜா மைதீன் மகன் சுல்தான் ரியாஸ்(35) சிகரெட் விற்றது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30-க்கும் மேற்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    வில்லாபுரம் மீனாட்சி நகர் முதல் தெருவில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக அவனியாபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வில்லாபுரம் சக்தி நகர் விசுவநாதன் (60), மீனாட்சி நகர் சோனையா பிள்ளை சந்துகுமார்(48), அதேபகுதியை சேர்ந்த சிவகுமார் (45) என்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், ரூ.16 ஆயிரத்து 540 பறிமுதல் செய்யப்பட்டது. 

    • மைனர் பெண் திருமணம்; 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் சந்தோஷ் கோபி கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    மதுரை

    மகபூப்பாளையம் வைத்தியநாதபுரம் கங்கை காலனியை சேர்ந்த கண்ணன் மகன் தினேஷ் பவர்சிங் (23). இவர் கடந்த ஆண்டு மைனர் பெண்ணை திருமணம் செய்தார். அவர் சிறுமியின் எதிர்ப்பையும் மீறி பாலியல் உறவு கொண்டார். இதன் விளைவாக சிறுமி கர்ப்பமானார்.

    அவளுக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் தினேஷ்பவர்சிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் நடுத்தெருவை சேர்ந்த முருகன் மகன் சந்தோஷ் கோபி கிருஷ்ணன் (28). இவர் 10 மாதங்களுக்கு முன்பு மைனர் பெண்ணை திருமணம் செய்தார். அந்த சிறுமிக்கும் தற்போது குழந்தை பிறந்தது.

    இது குறித்து திருப்பரங்குன்றம் குழந்தைகள் நல அலுவலர் சுமதி திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் சந்தோஷ் கோபி கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
    • மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமைதோறும் மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்ட லங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி வருகிற 18-ந் தேதி (செவ்வாய்கிழமை) மேலமாரட் வீதியில் உள்ள மதுரை மாநகராட்சி மத்திய மண்டலஅலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளான தமிழ்ச்சங்கம் ரோடு, கிருஷ்ணன்கோவில் தெரு, ஜடாமுனி கோவில் தெரு, காஜிமார் தெரு, கிருஷ்ண ராயர் தெப்பக்குளம், ஞானஒளிவுபுரம், ஆரப்பாளையம், மேலப்பொன்னகரம், ரெயில்வே காலனி, எல்லீஸ் நகர், எஸ்.எஸ்.காலனி, அரசரடி, விராட்டிபத்து, பொன்மேனி, சொக்க லிங்கநகர், துரைச்சாமி நகர், சுந்தரராஜபுரம், மேலவாசல், சுப்பிரமணிய புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.

    குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை, விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
    • இந்த போராட்டத்தில் எம்.பி. உள்பட 700 பேர் கைது செய்யப்பட்டனர்.



    மதுரை ரெயில் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட காங்கிரசார்.

    மதுரை

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    மதுரையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் வடக்கு மாவட்ட தலைவர் ஆலந்தூர் ரவிச்சந்திரன் முன்னிலையில் போராட்டம் நடந்தது. ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட, அவர்கள் மீனாட்சி பஜாரில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி பேரணியாக வந்தனர். பின்பு போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் போலீசா ருக்கும், காங்கிரசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு பிரிவை சேர்ந்தவர்களும் ரெயில் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அவர்களில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.



    திருமங்கலத்தில் ரெயில் மறியலுக்கு வந்த காங்கிரஸ் கட்சியினர்.

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பழனி குமார், காமாட்சி, ராமசாமி, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, நகர தலைவர் சவுந்தரபாண்டி, வட்டார தலைவர்கள் முருகேசன், கணேசன், சற்குணம், மணிகண்டன், ஓ.பி.சி. மாவட்ட தலைவர் சரவண பகவான், நகரச் செயலாளர் ராஜா தேசிங் மற்றும் கட்சி நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் தேவர் சிலையில் இருந்து ரெயில் நிலையத் துக்கு ஊர்வலமாக வந்தனர்.

    ரெயில்நிலையம் வந்த அவர்களை போலீஸ் டி.எஸ்.பி. வசந்தகுமார் தடுத்து நிறுத்தி, ரெயில் மறியல் நடத்த அனுமதி இல்லை என கூறி கலைந்து செல்லுங்கள் என்றார்.

    ஆனால் காங்கிரஸ் கட்சி யினர் தொடர்ந்து கோஷ மிட்டவாறு ரெயில் நிலை யத்திற்குள் செல்ல முயன்ற னர். உடனே பாதுகாப்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    அவர்கள் அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கி ரஸ் கட்சியினரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    விருதுநகரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று காலை கச்சேரி ரோட்டில் உள்ள காமராஜர் சிைல முன்பிருந்து மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.

    ரெயில் நிலையம் அருகே அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் மறுப்பு தெரிவித்து அங்கேயே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணிக்கம் தாகூர் எம்.பி., கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜா சொக்கர், முன்னாள் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவகுருநாதன், வக்கீல் சீனிவாசன், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    • கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வெங்கடேஷ்குமார் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் கொடுத்தார்.

    மதுரை

    ஜெய்ஹிந்த்துபுபுரம் புலிப்பாண்டியன் தெருவை சேர்ந்த காந்தி மகன் வெங்கடேஷ்குமார் (28). வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருபை சேர்ந்த சதுரகிரி மகன் செல்வகுமார் (21). இருவருக்கும் இடையே முன் விரோதம் உள்ளது. வெங்கடேஷ் குமாரின் தந்தை ராமையா தெருவில் சென்றார்.

    அப்போது செல்வகுமார், காவேரி மணி மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் வழிமறித்து ஆபாசமாக பேசி தாக்கினர். எதிர்தரப்பும் தாக்குதல் நடத்தியது. இது குறித்து வெங்கடேஷ்குமார் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு சதுரகிரி மகன் செல்வகுமார் (21), சோலை அழகுபுரம் இந்திரா நகர் பாலமுருகன் மகன் காவேரி மணி (19), 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    இதே வழக்கில் செல்வகுமார் கொடுத்த புகாரின்பேரில் புலிப் பாண்டியன் தெரு பால்சாமி மகன் காந்தி, எம்.எம்.சி. காலனி, ஆறுமுக நகர் முகமது ரபீக் ராஜா (42), ராமையா தெரு பாலமுருகன் (42) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • லாரிக்கு அடியில் படுத்து தூங்கிய கிளீனர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
    • லாரியை டிரைவர் நிறுத்தி இறங்கியபோது அவருக்கு நடந்த சம்பவத்தின் விபரீதம் புரிந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள பர்னிச்சர் கடைக்கு இன்று அதிகாலை சரக்குகளை ஏற்றிக்கொண்டு ராஜஸ்தா னில் இருந்து கண்டெய்னர் லாரி வந்தது. கடை 10 மணிக்கு திறக்கப்படும் என்பதால் லாரியை திருமங்கலம் நகரின் வெளியே சாலையோரத்தில் டிரைவர் ஜபார் (வயது 27) நிறுத்தி உள்ளார்.

    பின்னர் அவரும், கிளீன ரும் லாரிக்குள் தூங்கினர். இதனிடையே அங்கு வந்த 52 வயது மதிக்கத்தக்க ஒருவர் லாரியின் அடியில் தூங்கியதாக தெரிகிறது.

    காலை 10 மணிக்கு பிறகு எழுந்த டிரைவர் ஜபார் லாரியில் உள்ள சரக்குகளை கடைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர் லாரியை இயக்கினார். அப்போது லாரியின் அடியில் படுத்திருந்த நபரின் தலையில் பின்னால் உள்ள டயர் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர் கூச்ச லிட்டனர். இதையடுத்து லாரியை டிரைவர் நிறுத்தி இறங்கியபோது அவருக்கு நடந்த சம்பவத்தின் விபரீதம் புரிந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி னர். அப்போது லாரியின் டயரில் சிக்கி இறந்த நபர் தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியை சேர்ந்த பால்ராஜ் (52) என தெரிய வந்தது.

    லாரி கிளீனராக பணி யாற்றி வந்த இவர், அஜாக்கிரதையாக லாரியின் அடியில் தூங்கியதால் டயரில் சிக்கி இறந்ததும் தெரியவந்தது.

    • மகப்பேறு மருத்துவமனை அருகே உள்ள ரேசன் கடைகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சட்டசபையில் பூமிநாதன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார்.

    மதுரை

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் தொகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார். அவர் பேசியதாவது:-

    மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம் அமைத்து மதுரை மக்களுக்கு நல்வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மதுரை மண்ணின் மைந்தன் பத்மஸ்ரீ டி.எம். சவுந்தரராஜனுக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்ச ருக்கு எனது சார்பிலும், தெற்கு தொகுதி பொது மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    மதுரையில் சித்திரை திருவிழா காலங்களில் ஆழ்வார்புரம், தெப்பக்குளம் பகுதிகளில் லட்சக் கணக்கான மக்கள் கூடு வார்கள். எனவே இந்த பகுதிகளில் பொதுமக்களின் அசவுகரியத்தை குறைக்கும் வகையில் பூமிக்கு அடியில் புதைவட கம்பிகள் அமைத்து மின்விநியோகம் செய்திட வேண்டுமாறு கோரிக்கை வைக்கிறேன்.

    மதுரை தெற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 83 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 20 கடைகள் மட்டுமே சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே மற்ற 63 கடைகளையும் சொந்த இடத்துக்கு மாற்ற தேவையான நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு அரசை வேண்டுகிறேன்.

    மதுரை தெற்கு சட்ட சபை தொகுதிக்கு உட்பட்ட 44-வது வார்டில் பிரசவ மருத்துவமனை அமைந் துள்ளது. இந்த மருத்துவ மனை வளாகத்தில் 3 ரேஷன் கடைகள் உள்ளன. இதனால் மகப்பேறு சிகிச்சைக்கு வரும் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த 3 ரேஷன் கடைகளையும் உடனடியாக வேறு இடத்திற்கு இட மாற்றம் செய்து தர வேண்டும்.

    தெற்கு வாசல் பகுதியில் உள்ள திரவியம் பிள்ளை மகப்பேறு மருத்துவமனை, அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை மராமத்து செய்து மேம்படுத்த வேண்டும்.

    தமிழகத்தில் 2-வது பெரிய மருத்துவ மனையாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. அதன் சார்பு மருத்துவமனைகளான பாலரெங்காபுரம் மண்டல புற்றுநோய் மையம் மற்றும் தோப்பூர் மருத்துவ மனைகளுக்கு பராமரிப்பு செலவுக்காக ரூ. 75 லட்சம் வரை ஒதுக்கீடு செய்யப் படுகிறது. இந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டு மாறு கோரிக்கை வைக்கி றேன்.

    மதுரை சிந்தாமணி ரோட்டில் ஏராளமான அரிசி ஆலைகள் உள்ளன. மேலும் நான்கு வழிச் சாலையும் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் செல்லும் நிலையில் அங்கு அமைந்துள்ள ெரயில்வே கேட் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சிந்தாமணி பகுதியில் ெரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும். மதுரை, ராமநாதபுரம் ரோட்டில் காலியாக உள்ள இடங்களில் உழவர் சந்தை மற்றும் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும்.

    மதுரை தெற்கு தொகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் தெப்பக் குளத்துக்கு பனையூர் வாய்க்கால் வழியாக வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் நிரப்ப விட்டு வருகிறது. இதனால் அந்த தண்ணீர் பல இடங்களில் மாசுபடுகிறது. எனவே குருவிக்காரன் சாலை பகுதியில் வைகை ஆற்றில் புதிதாக தடுப்பணை அமைத்து அங்கிருந்து பனையூர் கால்வாய் வழியாக தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    இவ்வாறு பூமிநாதன் எம். எல்.ஏ. பேசினார்.

    • மதுரை மாநகராட்சி ஊழல் பட்டியல் விரைவில் வெளியாகும் என பா.ஜ.க. நிர்வாகிகள் கூறினர்.
    • இதற்கான ஆடியோ எங்களிடம் உள்ளது.

    மதுரை

    மதுரை மாநகர மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் தமிழக பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா யாருடன் கூட்டணி? என்பது பற்றி உயர் மட்ட குழு கலந்து பேசி முடிவு செய்து அறிவிக்கும். எங்களை பொருத்தவரை பாரதிய ஜனதா தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கம்.

    அதாவது கடந்த 2009-ம் ஆண்டு பொன். ராதா கிருஷ்ணன் தலைமையி லான கூட்டணி, தனித்துப் போட்டியிட்டு பெருவாரி யான வாக்குகளை பெற்றது. அதேபோல தேசிய ஜனநாயக கூட்டணி தனித்து போட்டியிட வேண்டும்.

    இல்லையென்றால் பாரதிய ஜனதா தலைமையில் கூட்டணி அமைய வேண்டும். இது தொடர்பாக பாரதிய ஜனதா மேலிடத்துக்கு கோரிக்கை வைக்க உள்ளோம்.

    மதுரை மாநகரில் பாதாள சாக்கடை இணைப்பு பணிக்கு ரூ.60 ஆயிரம் லஞ்சம் பெறப்படு கிறது. இதற்கான ஆடியோ எங்களிடம் உள்ளது. அதே போல குடிநீர் இணைப்புக்கு ரூ.50 ஆயிரம், குடிநீர் குழாய் இணைப்பை சரி செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெறப்பட்டு வருகிறது.

    மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் நடந்துள்ள ஊழல் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். விரைவில் இது பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக வெளியிடப் படும்.

    தமிழகத்தில் 75 ஆண்டு காலமாக ஆட்சி செய்த திராவிட கட்சிகள் போட்டி போட்டிக்கொண்டு ஊழல் செய்து தங்களை வளர்த்துக் கொண்டன.

    அண்ணாமலை தி.மு.க. நிர்வாகிகளின் ஊழல் பட்டியலை வெளி யிட்டுள்ளார். அதனை திருப்புவதற்காக தேவை யற்ற விவரங்களை தி.மு.க. பெரிதுபடுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×