என் மலர்
மதுரை
- தமிழில் வேள்வி செய்ய அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற கிணை ஆணை பிறப்பித்துள்ளது.
- தமிழில் வேள்வி நடத்த செயல்திட்டம் வகுக்கவும் ஆணை.
வருகிற ஜூலை 7-ந்தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குட முழுக்கு நடைபெற உள்ளது. தமிழ்க் கடவுளான முருகன் கோவிலின் குடமுழுக்கை தமிழ் மொழியில் நடத்தக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை என்று தூத்துக்குடியை சேர்ந்த வியனரசு மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுதொடர்பான வழக்கில், திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழாவின்போது தமிழில் வேள்வி நடத்துவது குறித்து பரிசீலிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை கோவில்களின் குடமுழுக்கின்போது தமிழில் வேள்வி நடத்த செயல்திட்டம் வகுக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழாவின்போது தமிழில் வேள்வி செய்ய அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற கிணை ஆணை பிறப்பித்துள்ளது.
- ஒரு மாநிலத்தின் வளர்ச்சி முழுக்க முழுக்க கட்டுமான துறையில் தான் உள்ளது.
- ஒப்பந்ததாரர்களின் பொருள்களின் விலை நிர்ணயம் குறித்த பட்டியலை இரண்டு வாரத்தில் வெளியிட வேண்டும்.
மதுரை:
புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்புராம், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் அரசு நெடுஞ்சாலை சாலை பணிகள், கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கும் பணியை பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகின்றேன். தற்போது தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி முழுக்க முழுக்க கட்டுமான துறையில் தான் உள்ளது.
இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்ச தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் இது பாதிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு கட்டுமான பொருட்கள் விலையை குறைத்து நிலையான விலையில் வைத்திருக்க வேண்டும்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் கட்டுமான ஒப்பந்தங்களை எடுத்து வேலை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கான 2025-26 ஆம் ஆண்டுக்கான கட்டுமான பொருள்களின் விலை பட்டியல் ஏப்ரல் மாதம் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை வெளியிடவில்லை. உரிய காலத்தில் வெளியிட்டால்தான் ஒப்பந்ததாரர்கள் விலை பட்டியல் அடிப்படையில் ஒப்பந்த புள்ளி நிர்ணயம் செய்ய முடியும். தற்போது ஒப்பந்ததாரர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மேலும் கடந்த 2024-25 ஆம் ஆண்டிற்கான விலை நிர்ணய தொகையின் அடிப்படையிலேயே தற்போது ஏல ஒப்பந்தம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் அரசு ஒப்பந்ததாரர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. 2024-25 ஆண்டிற்கு நிர்ணயம் செய்யப்பட்ட சிமெண்டு, ஜல்லி, மணல், தற்போது 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. இதேபோல் கட்டிட தொழிலாளர்களின் சம்பள விகிதமும் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்வாறு உள்ள சூழலில் அரசு இந்த வருடத்திற்கான விலை நிர்ணய பட்டியல் வெளியிடவில்லை.
இந்த வருடத்திற்கான விலை நிர்ணய பட்டியலை வெளியிடக் கோரி நிதித் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட செயலாளருக்கு மனு அளித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த வருடத்திற்கான விலை நிர்ணய பட்டியலை உடனடியாக வெளியிட உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி ஏப்ரல் மாதம் வெளியிடக்கூடிய விலை நிர்ணய பட்டியலை ஏன் இன்னும் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பினார். இவ்வாறு இருந்தால் ஒப்பந்ததாரர்கள் எவ்வாறு விலை நிர்ணயம் செய்து ஒப்பந்த புள்ளி கேட்க முடியும்?
மேலும் விலைவாசிகளும் உயர்ந்து உள்ளது என தெரிவித்த நீதிபதி, ஒப்பந்ததாரர்களின் பொருள்களின் விலை நிர்ணயம் குறித்த பட்டியலை இரண்டு வாரத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
- தேசிய நெஞ்சாலை அமைப்பதன் நோக்கமே தடையற்ற பயணத்திற்காகத்தான்.
- ஆனால் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சுங்க கட்டணம் செலுத்தி நகர்வதற்கு அரைமணி நேரமாகிறது.
மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் எல்லா மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம், அரசியலமைப்பிற்கு எதிரானது. இதனால் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விசாரணையின்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை, "தேசிய நெஞ்சாலை அமைப்பதன் நோக்கமே தடையற்ற பயணத்திற்காகத்தான். ஆனால் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சுங்க கட்டணம் செலுத்தி நகர்வதற்கு அரைமணி நேரமாகிறது. சுங்கச் சாவடிகளில் வீண் தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா?" எனக் கேள்வி எழுப்பியது.
அத்துடன் இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.
- திரையுலகில் நிறைய பேர் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள்.
- நான் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தியதன் மூலம், திடீரென முருகபெருமான் மீது அக்கறை வந்துள்ளது. தேர்தல் வருவதால், மாநாடு நடத்தி இருக்கிறார்கள். ஆண்டுதோறும் இதுபோன்ற மாநாடுகள் நடத்துவார்களா? தேர்தலில் வாக்குகள் வரவில்லை என்றால் நடத்தமாட்டார்கள்.
ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் எங்களின் பண்பாடு, செல்வம். எங்களின் உடன்பிறந்தவர்கள். அதனை வளர்த்தல் என்பது ஒரு தொழில் அல்ல. அது எங்களின் வாழ்க்கை முறை, விவசாயத்தின் நீட்சி.
ஆடு, மாடுகளுக்கு பேசும் திறன் இல்லாததால், அவற்றுக்காக நான் பேசுகிறேன். அதற்காகத்தான் ஜூலை 10-ந் தேதி மதுரையில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஆடு, மாடுகள் மாநாடு நடக்கிறது. அவற்றின் உரிமைக்காகவே இந்த மாநாடு நடத்த இருக்கிறேன்.
நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைதாகி இருக்கிறார். தனிப்பட்ட முறையில் எனக்கு அவரை நன்றாக தெரியும். ரொம்ப பாவம் அவர். இது என் கருத்து. திரையுலகில் நிறைய பேர் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள். புகழ்பெற்றவர்கள் கூட பயன்படுத்துகிறார்கள். அவர் தெரியாமல் சிக்கிக்கொண்டார். அவருக்காக நான் வருத்தப்படுகிறேன். அதிகாரங்களுக்கு தெரியாமல் இந்த போதைப்பொருள் வராது. திரையுலகில் மட்டுமல்ல, கல்லூரி, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்களில் கூட கஞ்சா, கொகைன், அபின் போன்ற போதைப்பொருட்கள் நீண்ட நாட்களாக விற்கப்படுகின்றன. அரசு நினைத்தால், போதைப்பொருள் ஒழிக்கப்படும்.
ஸ்ரீகாந்த் புகழ் பெற்ற நடிகர் என்பதால், அந்த செய்தி வெளியாகி வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. நடிகர் கைதானதால், போதைப்பொருள் ஒழிந்துவிட போகிறதா?
நான் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. கூட்டணி தொடர்பாக பொறுமையாக இருங்கள். பதில் அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரை பசுமலை உபமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- ராகவேந்திரா நகர், தானதத்து ரோடு, விவாபா அபார்ட்மென்ட் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மதுரை:
மதுரை பசுமலை உபமின் நிலையத்தில் நாளை (25-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பைபாஸ் ரோடு பகுதி, இராம் நகர் 1 முதல் 7 வரை, துரைசாமி நகர் 1 மற்றும் 2- வது குறுக்கு தெரு, வானமாமலை நகர் 1 முதல் 3-வது தெரு வரை, முத்துபாண்டி நகர், அனீஸ் கான்வென்ட் ஏரியா,
விந்தியாசல் அபார்ட்மென்ட், ஜெய் நகர் மெயின் ரோடு மற்றும் 1 முதல் 4-வது தெரு வரை, சுரேந்தர் நகர் 1 முதல் 4-வது தெரு வரை கற்பகநகர், சிவசக்தி நகர், சாய்பாபா கோவில், ராஜம் நகர், மீனாட்சி நகர், கே.கே.கார்டன், திருவள்ளுவர் விரிவாக்கம், ராகவேந்திரா நகர், அசுவதா பள்ளி, தானதத்து ரோடு, விவாபா அபார்ட்மென்ட் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இந்த தகவலை மதுரை மேற்கு செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.
- திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது.
- இந்த தர்காவில் ஆடு, கோழி பலியிட தடைகோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளையின் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழி பலியிட தடைகோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கினார்.
அதேவேளையில் நிஷா பானு வழங்கிய தீர்ப்பியில் இருந்து முரண்படுவதாக மற்றொரு நீதிபதி ஸ்ரீமதி கூறினார். இதனால் 3ஆவது நீதிபதிக்கு கொண்டு செல்ல தலைமை நீதிபதிக்கு இரண்டு நீதிபதிகளும் பரிந்துரை செய்துள்ளனர்.
- கடந்தாண்டு அனைத்து சமூக மக்களும் தேரின் வடத்தை பிடித்து இழுப்பதற்காக டோக்கன் வழங்கப்பட்டது.
- இந்த ஆண்டு ஜூலை 8-ந்தேதி கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் கண்டதேவியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கேசவமணி மதுரை ஐகோர்ட்டு அமர்வில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருந்ததாவது:-
சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் அமைந்துள்ள சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. 2014 ஆம் ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவின்படி யாருக்கும் முதல் மரியாதை வழங்க கூடாது எனவும், அனைத்து சமூக மக்களையும் இணைத்து அவர்களது பங்களிப்புடன் திருவிழா நடைபெற வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இருப்பினும் கடந்த ஆண்டு புதிய தேரோட்டமும், திருவிழாவும் நடைபெற்றது. கடந்தாண்டு அனைத்து சமூக மக்களும் தேரின் வடத்தை பிடித்து இழுப்பதற்காக டோக்கன் வழங்கப்பட்டது. இருப்பினும் முதல் மரியாதை பெறுவதற்காக சில நாட்டார்கள் அவர்கள் சார்ந்த அதிக நபர்களை கூட்டிச்சென்று தேரின் வடத்தை பிடித்ததால் பிற சமூக மக்கள் பேரின் வளத்தை பிடித்து இழுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சட்டம் ஒழுங்கு-பிரச்சனையும் உருவானது.
இந்த ஆண்டு ஜூலை 8-ந்தேதி கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. குறிப்பாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தேரின் வடத்தை பிடித்து இழுப்பதற்கு வசதியாக யாருக்கும் முதல் மரியாதை வழங்க படக்கூடாது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே கோவில் தேரோட்ட நிகழ்வில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது, அனைத்து தரப்பு சமூக மக்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி கோவில் நிகழ்வுகளிலும் பாரபட்சம் பார்ப்பது கிடையாது. கண்டதேவி கோவிலை பொறுத்தவரை ஒவ்வொரு சமூகத்திற்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. சாதிய பாகுபாடு பார்ப்பது கிடையாது அனைவரும் சமமே என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் தமிழகத்தில் எங்குமே சாதிய வேறுபாடுகள் இல்லையா என்பதை உறுதியாக சொல்ல முடியுமா? அரசின் நிலைப்பாடு அரசியலுக்கு வேண்டுமென்றால் நீங்கள் சொல்லலாம். நீதிமன்றத்தில் இது போன்று சொல்ல முடியாது. தமிழகத்தில் படித்தவர்களின் விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் சாதிய பாகுபாடும் உள்ளது என கருத்து தெரிவித்த நீதிபதிகள் கண்டதேவி கோவில் விவகாரத்தில் எவ்வித சாதிய பாகுபாடும் இல்லை என்பதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
- புதிய இடத்தில் கட்டப்படும் பள்ளிக்கு ரோட்டில் இருந்து செல்ல பாதை வசதி இல்லாமல் இருந்தது.
- டாக்டர் வைரவனின் செயல் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கீழையூர். இங்கு அரசு நடுநிலைப்பள்ளி இருந்தது. 119 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளி பல்வேறு சிறப்புகளை கொண்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இப்பள்ளி உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. எனவே புதிய இடம் பார்த்து பள்ளி கட்டிடம் கட்ட அரசு இடம் தேர்வு செய்தது. ஆனால் அரசு தேர்வு செய்யப்பட்ட இடமானது மாணவ-மாணவிகள் சென்று வர பாதுகாப்பானதாக இல்லை. பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அந்த இடம் நிராகரிக்கப்பட்டது.
பின்னர் ஊர் மக்கள் அனைவரும் இணைந்து இந்த ஊரைச் சேர்ந்த தொழிலதிபர் கோபால கிருஷ்ணனிடம் சென்று தங்களுக்கு பள்ளி கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற அவர் தனது 2 ஏக்கர் நிலத்தினை பள்ளிக்கு தானமாக வழங்கினார். தற்போது அந்த இடத்தில் புதிய கட்டிட கட்டுமான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை முதல் தரை தள பணிகள் முடிவுற்று உள்ளது.
இந்நிலையில் புதிய இடத்தில் கட்டப்படும் பள்ளிக்கு ரோட்டில் இருந்து செல்ல பாதை வசதி இல்லாமல் இருந்தது. பள்ளி அருகே சிவகங்கை மாவட்டம் கல்லலை சேர்ந்த டாக்டர் வைரவன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தை பாதைக்காக பெற பொதுமக்கள் எண்ணினர்.
டாக்டர் வைரவன் தற்போது மதுரையில் வசித்து வருகிறார். அவரை சந்தித்த ஊர்மக்கள் பள்ளிக்கு பாதைக்காக நிலம் தருமாறு கோரிக்கை வைத்தனர்.
அவர் சிறிதும் யோசிக்காமல் கல்விக்காக தனக்குரிய இடத்தை தர சம்மதம் தெரிவித்து உடனடியாக பள்ளி பகுதியில உள்ள தனக்கு சொந்தமான 20 சென்ட் நிலம் பாதைக்காக ஒதுக்கீடு செய்துள்ளார். டாக்டர் வைரவனின் இந்த செயல் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அரசு பள்ளியின் பாதைக்காக நிலம் தந்த டாக்டர் வைரவனை பள்ளி தலைமையாசிரியர் செல்வி, உதவி தலைமை ஆசிரியர் முத்துபாண்டி, ஆசிரியைகள் அமுதநாயகி, சாந்தினி கலைச்செல்வி, சந்திரா, பிரியா, ஜெயஜீவா, வழக்கறிஞர் துரை பாண்டியன், பள்ளி அலுவலக பணியாளர் அலியார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
டாக்டர் வைரவன் வழங்கிய 20 சென்ட் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.40 லட்சம் என கூறப்படுகிறது. டாக்டர் வைரவன் ஏற்கனவே தனது சொந்த ஊரான கல்லலில் உள்ள பள்ளிக்கு ஸ்மாட் வகுப்பறைகளை கட்டி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வருகிற ஜூலை 7-ந்தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குட முழுக்கு நடைபெற உள்ளது
- திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது ஆகிய நிகழ்வுகள் தமிழிலேயே நடைபெற உள்ளன.
மதுரை:
தூத்துக்குடியை சேர்ந்த வியனரசு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
வருகிற ஜூலை 7-ந்தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குட முழுக்கு நடைபெற உள்ளது. தமிழ்க் கடவுளான முருகன் கோவிலின் குடமுழுக்கை தமிழ் மொழியில் நடத்தக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை. எனவே திருச்செந்தூர் முருகன் கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, கோவில் குட முழுக்கு நிகழ்வுகள் தமிழில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.
கோவில் தரப்பில், யாக சாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி, திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது ஆகிய நிகழ்வுகள் தமிழிலேயே நடைபெற உள்ளன என தெரிவிக்கப்பட்டது.
அதனை தமிழக அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளோடு சேர்த்து, இந்த வழக்கை பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
- உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகப்பெருமான்.
- எனது நம்பிக்கையை கொண்டாட எனக்கு உரிமை உள்ளது.
மதுரையில் பிரமாண்டமாக முருக பக்தர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மதுரைக்கும் முருகனுக்கும் நெருக்கம் அதிகம். என்னை மதுரைக்கு வரவழைத்தது முருகன். என்னை வளர்த்தது முருகன். எனக்கு துணிச்சல் தந்தது முருகன்.
எனது நம்பிக்கையை கொண்டாட உரிமை உள்ளது. அதை நீங்கள் கேள்வி கேட்க முடியுமா? என் மதத்திற்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அவமரியாதை செய்யாதீர்கள். இந்துக்களை சீண்டி பார்க்காதீர்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது.
உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகன். அவருக்காக நாம் இங்கு வந்துள்ளோம். நமது அறம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆழமாக இருந்தது. இனியும் இருக்கும்.
ஒருவன் இந்துவாக இருந்தாலே பிரச்சினை. மதவாதி என சொல்கிறார்கள். மாநாட்டை உ.பி.யில் நடத்தலாமே என கேட்கிறார்கள். இந்த சிந்தனை மிக மிக ஆபத்தானது.
என் கடவுளை கேலி செய்துவிட்டு அதை மதசார்பின்மை என்கிறார்கள். அரசமைப்பு கொடுத்த கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி இவ்வாறு பேசுகின்றனர்.
முருக பக்தர்கள் ஒரு பார்வை பார்த்தாலே போதும். நம் கடவுளை திட்டும் கூட்டம் காணாமல் போகும். நம்மை காப்பாற்றும் முருகனை நாம் காப்பாற்றத் தேவையில்லை. ஆனால் நன்றியை காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்துக்களின் வாழ்வியல் முறைக்கு பிரச்சனை.
- மொழியும், ஆன்மீகமும், இலக்கியமும் சேர்ந்ததுதான் தமிழ்.
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-
இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதால் சிலருக்கு பிரச்னை. நமது வாழ்வியல் முறையை தொந்தரவு செய்து பஹல்காமில் தாக்குதல் நடத்தப்பட்டது.
எனது வாழ்வியல் முறைக்கு பிரச்னை வந்தால் எழுந்து நிற்பேன்; அடிப்பேன். இந்து என்பதற்காக நமது கடைகோடி தொண்டர்கள் கொல்லப்படுகிறார்கள்.
மொழியும், ஆன்மீகமும், இலக்கியமும் ஒன்றாக இருக்கும் பெருமை தமிழுக்கு உண்டு; கந்த சஷ்டி கவசத்தில் அறிவியல், விஞ்ஞானம் உள்ளது.
5,400 ஆண்டுகள் பழமையானவன் தமிழன். அந்த பழமையோடு வாழ விடுவார்களா? செல்பி கேட்டால் ஒரு அரசியல் தலைவர் திருநீறை அழிக்கிறார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலைத்துறை வெளியேற வேண்டும்.
- தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்.
மதுரையில் நடைபெற்று வரும் முருக பக்தர்கள் மாநாட்நடில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதில், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.
*பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்.
*திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்.
*தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலைத்துறை வெளியேற வேண்டும்.
*தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்.
*சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும்.
மதுரையில் இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தேர்தல் தொடர்பாக அரசியல் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






