திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு..!

திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது.இந்த தர்காவில் ஆடு, கோழி பலியிட தடைகோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு..!
Published on

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளையின் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழி பலியிட தடைகோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கினார்.

அதேவேளையில் நிஷா பானு வழங்கிய தீர்ப்பியில் இருந்து முரண்படுவதாக மற்றொரு நீதிபதி ஸ்ரீமதி கூறினார். இதனால் 3ஆவது நீதிபதிக்கு கொண்டு செல்ல தலைமை நீதிபதிக்கு இரண்டு நீதிபதிகளும் பரிந்துரை செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com