என் மலர்tooltip icon

    மதுரை

    • பெங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரெயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • மறு மார்க்கத்தில் பெங்களூரு-நாகர்கோவில் சிறப்பு ரெயில் (06084) நவ.8, 15, 22 ஆகிய புதன் கிழமை களில் பெங்களூரில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.10 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.

    மதுரை

    தென்னக ரெயில்வே மதுரை கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க நாகர் கோவில்-பெங்களூர் ரெயில் நிலையங்கள் இடையே ஒரு சிறப்பு ரெயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் - பெங்களூரு சிறப்பு ரெயில் (06083) நவ.7, 14, 21 ஆகிய செவ்வாய் கிழமை களில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு சென்று சேரும்.

    மறு மார்க்கத்தில் பெங்க ளூரு-நாகர்கோவில் சிறப்பு ரெயில் (06084) நவ.8, 15, 22 ஆகிய புதன் கிழமை களில் பெங்களூரில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.10 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.

    இந்த ரெயில்கள் வள்ளி யூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், மொரப்பூர், திருப்பத்தூர், பங்கார பேட், கிருஷ்ண ராஜபுரம், பெங்களூரு கன்ட்டோண்மென்ட் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இந்த ரெயில்களில் ஒரு குளிர்சாதன 2 அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரெயில் மேலாளர் பெட்டி கள் இணைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ‘பேட்ச் ஒர்க்’ பள்ளங்களால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
    • முக்கிய சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் கடந்த சில வருடங்களாக புதிய சாலை பணிகள் முழுமையாக நடைபெற வில்லை. இதனால் பெரும் பாலான சாலைகள் குண் டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. ஒப்பந்ததா ரர்களின் தரமற்ற பணி களால் தற்போது போடப் படும் சாலைகளின் ஆயுட் காலம் என்பது சில மாதங்கள் மட்டுமே.

    இதனால் புதிய சாலை கள் கூட ஒரு சில நாட்களில் படுமோசமாக மாறி விடுகிறது. இதனை அதிகா ரிகளும், மக்கள் பிரதி நிதிகளும் கண்டுகொள்வ தில்லை.

    மதுரை நகரில் பெரியார் பஸ் நிலைய பகுதி, திருப்ப ரங்குன்றம் சாலை, பழங்கா நத்தம், ஜெய்ஹிந்துபுரம், அவனியாபுரம், அரசரடி, செல்லூர், கண்மாய்கரை ரோடு, காமராஜர் சாலை, டவுன்ஹால் ரோடு, மாசி வீதிகள், மாரட் வீதிகள், பழைய குயவர் பாளையம் ரோடு, ஆணையூர், கூடல் நகர், குலமங்கலம் ரோடு, ஆலங்குளம், வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, மீனாட்சி நகர், தபால்தந்தி நகர் உள்ளிட்ட 90 சதவீத சாலை கள் போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

    சாலைகளில் ஏற்பட் டுள்ள பள்ளங்க ளால் மோட்டார் சைக்கிளில் குடும்பத்துடன் செல் பவர்கள் அடிக்கடி விபத் தில் சிக்குகின்றனர். மழை காலங்களில் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது.

    மதுரை நகரில் சாலைகள் பராமரிப்பு குறித்து பொது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மதுரை நகரில் முக்கிய சாலைகளில் பேட்ச் ஒர்க் (ஒட்டு வேலை) தீவிரமாக நடக்கிறது. சாலைகளை முழுமையாக தோண்டி புதிய சாலைகளை போடாமல் பள்ளம் ஏற்பட் டுள்ள பகுதிகளில் மட்டும் தார் கலவைகளை போட்டு சமப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இதனால் பயனில்லாமல் உள்ளது.

    கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் பேட்ச் ஒர்க் செய்யப்பட்ட சாலைகள் மீண்டும் பழைய நிலைக்கு மாறியுள்ளது. சாலைகள் ஒட்டுபோட்ட இடத்தில் தரமான கலவைகள் பயன்படுத்தாததால் சிறிய மழைக்கே அவைகள் பெயர்ந்து கரைந்தோடி விட்டது. இதனால் அரசின் நிதி வீணாக்கியதை தவிர எந்த பலனும் இல்லை. தரமற்ற சாலைகளால் மதுரை நகர வாசிகளுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்பது தெரிய வில்லை.

    அண்மையில் வெளி யான ஒரு படத்தில் நடிகர் யோகிபாபு புதிதாக கட்டப் பட்ட கட்டிடத்தில் பேட்ச் ஒர்க் பணிக்கு செல்வார். அதில் கட்டிடங்கள் பெயர்ந்து வரும். மதுரை நகர சாலைகளில் மேற் கொள்ளப்பட்ட பேட்ச் ஒர்க் பணி அந்த காட்சியை நினைவூட்டுவதாக உள்ளது.

    • அன்னை பாத்திமா கல்லூரி பேராசிரியருக்கு நல்லாசிரியர் சுடர் விருது வழங்கப்பட்டது.
    • மாணவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய கல்வி உதவித்தொகையை குறித்த காலத்தில் கிடைப்பதற்கும் உதவி செய்து வருகிறார்.

    திருமங்கலம்

    திருச்சி மாவட்டம் குளித்தலை தமிழ்ச் சங்கம் ஒவ்வொரு வருடமும் சிறந்த ஆசிரியர்களை தேர்ந் தெடுத்து அவர்களுக்கு "நல்லாசிரியர் சுடர்" விருது வழங்கி வருகிறது. கடந்த கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த நல்லாசிரியர் சுடர் விருது வழங்கும் நிகழ்ச்சி இந்த வருடம் முதல் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.

    திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் துறை தலைவராகவும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலராகவும் பேராசிரியர் முனியாண்டி பணி யாற்றி வருகிறார்.

    இவர் நாட்டு நல பணித் திட்டத்தின் மூலம் கல்லூரிக்கு அருகில் உள்ள மைக்குடி, ஜம்பலபுரம், அ.தொட்டியபட்டி ஆகிய கிராமங்களை தத்தெடுத்து நாட்டு நல பணித்திட்ட மாணவர்களுடன் இணைந்து கிராம மக்க ளுக்கு தொண்டாற்றி வருகிறார். மாணவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய கல்வி உதவித்தொகையை குறித்த காலத்தில் கிடைப்பதற்கும் உதவி செய்து வருகிறார். இவரது சேவைகளை பாராட்டி திருச்சி மாவட்டம் குளித்தலை தமிழ்ச்சங்கம் நல்லாசிரியர் சுடர் விருது வழங்கி கவுரவித்தது.

    விருது பெற்ற பேராசிரி யர் முனியாண்டியை கல்லூரி தாளாளர் எம்.எஸ். ஷா, பொருளாளர் ஷகிலா ஷா, முதல்வர் டாக்டர். அப்துல் காதிர், பேராசிரியர்கள் ராமுத்தாய், சிங்கராஜா, ராஜேஸ்வரி, இன்பமேரி, ஜோதி மற்றும் ஆறுமுக ஜோதி ஆகியோர் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

    • உளுந்து விலை உயர்வால் அப்பளம் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.
    • அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத் திதன் மாநில தலைவர் திரு முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    பருப்பு விலை தற்போது கடுமையாக உயர்ந்து உள் ளது. இன்று தீட்டல் எனப்ப டும் பருப்பு வகைகள் 7 ஆயி ரத்தில் இருந்து தற்போது 12 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. இதனால் அப்பளம் விலை கடுமையாக உயர்வது மட்டு மல்லாமல், தொழில் பாதிக் கும் அபாய நிலையில் இருக் கிறது.

    மாதத்திற்கு ஒரு டன் அப்பளம் தயாரிக்கப்படு கின்ற இடத்தில் தற்போது 100 கிலோ மட்டுமே தயா ரிக்கின்ற நிலைக்கு தள்ளப் பட்டு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உளுந்தம் பருப்பு விலை உயர்வு மட்டும் அல்லாமல் பருப்பு கிடைக்காத சூழ்நிலையும் உருவாகி இருக்கிறது.

    தயாரிப்பு அல்லது விளைச்சல் இல்லையா? அல்லது பதுக்கலா என்று காரணம் தெரியவில்லை. உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து உளுந்து விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்கம் கேட்டுக்கொள் கிறது.

    அப்பளத்திற்கு மார்க் கெட்டில் விலை கிடைக்காத நிலைமை உள்ளதால் ஆயி ரக்கணக்கான தொழிலா ளர்களின் குடும்பங்கள் வேலை இழந்து தீபாவளி கொண்டாட முடியாத சூழ்நி லையில் இருக்கிறார் கள். அது மட்டுமல்லாமல் வியா பாரம் இல்லாத சூழ்நிலையில் தொழிலாளர்களுக்கு போனஸ் கூட வழங்க முடி யாத நிலைமையில் உரிமை யாளர்கள் தவித்துக் கொண் டிருக்கிறார்கள்.

    இந்த விலை ஏற்றத்தினால் அப்பளத்தின் விலை குறைந்த பட்சம் ஒரு கிலோ 50 ரூபாய் அதிகப்படுத்து வதற்கான வாய்ப்புகள் 100 சதவீதம் இருக்கிறது. எனவே இதற்கு உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • பாதுகாப்புடன் விபத்தில்லாத தீபாளியாக கொண்டாடுவோம் என கூறினர்.

    மதுரை

    மதுரை அனுப்பானடி தீயணைப்புத் துறை நிலைய அலுவலகத்தில் பட்டாசுக் கடை நடத்துபவர்கள் மற் றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் வினோத் தலை மையில் நடைபெற்றது. உதவி மாவட்ட அலுவலர் பாண்டி, தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பட் டாசு கடை வைத்து நடத்தும் நபர்கள் தகுந்த பாதுகாப்பு டன் நடத்த வேண்டும் குறிப் பாக மின்சார வயர்கள் வெளியே தொங்கும்படி இருக்கக் கூடாது, அனுமதி பெற்ற அளவுக்கு தான் பட் டாசுகள் கடையில் இருக்க வேண்டும், அதிகமான ஊழி யர்களை கடை யில் பணி யில் அமர்த்த கூடாது,

    அதிக வெப்பம் தரக்கூ டிய போக்கஸ் லைட்டுகளை பயன்படுத்தக் கூடாது, இரவில் கடையை அடைத்து விட்டு செல்லும்போது அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு விட்டதா? என்று பார்த்துவிட்டு தான் செல்ல வேண்டும். மேலும் மெயின் பாக்சை அமர்த்தி விட்டு செல்வது நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்த னர்.

    இதன் பின்பு கடை பணி யாளர்களுக்கு தீய ணைப்பு கருவியை எவ்வாறு பயன்ப டுத்த வேண்டும் என்பதனை அனுப்பானடி நிலைய அலு வலர் கந்தசாமி, திருப்பரங் குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் ஆகி யோர் செயல் விளக்கம் அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து உதயகுமார் கூறுகையில், பழைய தீயணைப்பு கருவி பி.சி. டைப் மாடல் கருவியை பயன்படுத்த வேண்டாம் என்றும் தற்போது ஏ.பி.சி. என்ற புதிய வகையான தீயணைப்பு கருவியை பயன் படுத்த வேண்டும் மேலும் சி.ஓ.2 என்ற தீயணைப்பு கருவியையும் கடைகளில் வைத்திருக்க வேண்டும் என் றும் வலியுறுத்தினார்.

    மேலும் பட்டாசு கடை அருகே தங்கள் கடையின் வெடி அதிக சத்தத்துடன் வெடிக்கும் என்பதனை காட்டுவதற்காக கடையின் அருகே டெமோ காட்டக்கூ டாது என்றும் அவர்கள் அறிவுறுத்தினர். இந்த நிகழ்ச்சியில் யுவராஜ் பட்டா சுகள், ஸ்ரீ பெரியாச்சி பட் டாசு கடை போன்ற பட்டாசு கடைகளின் மற்றும் நிறுவ னத்தின் உரிமையாளர்கள், பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • மதுரை ரெயில்வே நில பாதுகாப்பு சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • எம்.பி., எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.

    மதுரை

    மதுரை ரெயில்வே நில பாதுகாப்பு இயக்கம் சார் பில் அரசடி ரெயில்வே மைதானம் முன்பு, மக்கள் நிலத்தை பாதுகாப்போம் என்ற நோக்கத்தில் பல்லாயி ரக்கணக்கான மக்கள் மற்றும் விளையாட்டு வீரர் கள் பயன்படுத்திவரும் பொது சொத்தான மதுரை ரெயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான அரசரடி விளையாட்டு மைதானம் மற்றும் ரெயில்வே காலனி பகுதியை தனியாருக்கு தாரை வார்க்க நினைக்கும் மத்திய அரசின் செயலை கைவிடக்கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பி னர் கோ.தளபதி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு கையெ ழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தனர். இதில் மாநக ராட்சி துணை மேயர் நாகரா ஜன், மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி, மாமன்ற உறுப்பினர் எம்.ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டு நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மற் றும் பொதுமக்களிடம் கையெழுத்துக்களை பெற்ற னர்.

    தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில், ரெயில்வே மைதானத்தை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மதுரையின் நுரையீரலாக பெரும் மாசுவை தடுத்து நிறுத்தும் ஒரு இடமாக ரெயில்வே மைதானம் உள்ளது. இதை தனியார் கார்ப்பரேட் முத லாளிகளிடம் வழங்கி விட் டால் இப்பகுதியில் சுகாதா ரம் என்பதை பாதுகாக்க முடியாது.

    ஏற்கனவே காற்று மாசு பெருவாரியாக ஏற்பட்டு வரும் நிலையில் காற்றில் மாசினை குறைப்பதற்கு ரெயில்வே காலனி பெரும் பங்கு வகிக்கின்றது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மரங்களை விட இங்கு 50 சதவீதத்திற்கு மேல் மரங்கள் உள்ளது. எனவே மதுரையில் நுரையீ ரலாக இருக்கக்கூடிய ரெயில்வே மைதானத்தை தனி யார் பெரும் முதலாளிக ளுக்கு மத்திய அரசு தாரை வார்க்கும் முயற்சியினை கைவிட வேண்டும் என்று ரெயில்வே மைதானம் பாது காப்பு கையெழுத்து இயக் கத்தை துவக்கி வைக்கிறோம் என்றார்.

    • மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி மதுரை மாவட்ட எம்.எல்.ஏ.க்களை சந்தித்து இன்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
    • தமிழகத்தில் உள்ள 10 லட்சம் குறு-சிறு தொழில் களை காப்பாற்ற முடியும்.

    மதுரை

    தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பா ளர்கள் பி.என்.ரகுநாத ராஜா, பொன் குமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மின்கட்டன உயர்வால் தமிழகத்தில் உள்ள பல்லா யிரக்கணக்கான தொழிற்சா லைகள் மிகவும் பாதிக்கப் பட்ட நிலையில் தமிழக முதல் வர் நேரடியாக தலை யிட்டு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்ட மைப்பு சார்பில் தமிழகம் முழுவதிலும் உள்ள தொழிற் சாலைகள் சார்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவை தபால் மூலமாகவும், விரைவு தபால் மூலம் அனுப்பப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம், தொழில் உற்பத்தி ஒரு நாள் நிறுத்தம் கதவடைப்பு. சென் னையில் மாபெரும் உண் ணாவிரதப் போராட்டங்க ளையும் நடத்தி உள்ளோம். இது தொடர்பாக தமிழக சிறு தொழில் அமைச்சர், மின்வாரிய உயர் அதிகாரி களிடம் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது.

    எங்களது கோரிக்கைக ளில் கிலோ வாட்டுக்கான நிலை கட்டணம் குறைப்பு என்பது மிகவும் முக்கியமான கோரிக்கையாகும். எங்களது கோரிக்கைகளை முழுமை யாக நிறைவேற்றினால் மட்டுமே தமிழகத்தில் உள்ள 10 லட்சம் குறு-சிறு தொழில் களை காப்பாற்ற முடியும். அதற்கான தொடர் முயற்சி யின் ஒரு பகுதியாக ஏழாம் கட்ட கவன ஈர்ப்புக்காக இன்று (6-ந்தேதி) தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப் பினர்களையும் நேரடியாக சந்தித்து மின் கட்டணம் உயர்வை குறைக்க வேண் டும் என்பதை தமிழக முதல் வரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளிக்க இருக்கிறோம்.

    அதன்படி மதுரையில் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்ட மைப்பு சார்பாக மடீட்சியா மற்றும் இணைப்பு சங்கங்க ளின் நிர்வாகிகள் அனைவ ரும் மதுரையில் உள்ள 10 சட்டமன்ற உறுப்பினர்களை இன்று நேரில் சந்தித்து மின் கட்டண உயர்வை குறைக்க கூறும் கோரிக்கை மனுவை அவர்களிடம் சமர்ப்பிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் தெரி–வித்துள்ளனர்.

    • அனுமதியின்றி கொடிக் கம்பம் நட முயன்றதாக மாநிலம் முழுவதும் பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
    • போலீசார் கோட்டைவாசல் முன்பு குவிக்கப்பட்டிருந்தனர்.

    மேலூர்:

    தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் கட்சி கொடிக்கம்பம் நடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனாலும் அனுமதியின்றி கொடிக் கம்பம் நட முயன்றதாக மாநிலம் முழுவதும் பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மதுரை மாவட்டம் அழகர்கோவில் கோட்டை வாசல் முன்பு பா.ஜ.க. கொடிக்கம்பம் இன்று நடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி மேலூர் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி தலைமையில் இன்ஸ்பெக்டர் மன்னவன், மேலவளவு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் உள்பட ஏராளமான போலீசார் கோட்டைவாசல் முன்பு குவிக்கப்பட்டிருந்தனர்.

    பா.ஜ.க. மாவட்ட தலைவர் நரசிம்மன் தலைமையில் பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் பேரணியாக கொடிக்கம்பம் நட கோட்டைவாசல் முன்பு திரண்டனர். அப்போது அங்கு நின்றிருந்த போலீசார் கொடிக்கம்பம் நட அனுமதியில்லை. எனவே கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனாலும் அதனை மீறி பா.ஜ.க.வினர் கொடிக்கம்பம் நட முயன்றனர்.

    இதையடுத்து அனுமதியின்றி கொடிக்கம்பம் நட முயன்றதாக பா.ஜ.க.வினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • உசிலம்பட்டியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் கலந்து கொண்டன.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் கல்லூரியில் பி.கே.எம் அறக் கட்டளை, ரோட்டரி நலச்சங்கம் மற்றும் எக்விடாஸ் அறக் கட்டளை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

    முகாமிற்கு கல்லூரி முதல்வர் ஜோதிராஜன் தலைமை தாங்கினார். பி.கே.எம். அறக்கட்டளை தலைவர் மதுசூதனன், செயலாளர் லெனின் சிவா, ஒருங்கிணைப்பாளர் பொன்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேராசிரியர் பிரேமலதா வரவேற்று பேசினார். உசிலம்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் முகாமை துவக்கி வைத்து பேசினார். ரோட்டரி மாவட்ட இணை செயலாளர் ராஜேந்திரன் முன்னாள் துணை ஆளுநர் சேகர் தலைவர் ராம் பிரகாஷ் செயலாளர் செந்தில் குமார் எக்விடாஸ் அறக்கட்டளை சி.எஸ்.ஆர் நிர்வாகிகள் துணை தலைவர் கிறிஸ்டோபர் மேலாளர் ராஜா, பிரபு பி.கே.எம். அறக்கட்டளை துணை செயலாளர் இளஞ்செழியன் துணை தலைவர் பிரேம் ஆனந்த் முன்னாள் நிர்வாகி கள் ராஜா, ஜெயராஜ் அ.தி.மு.க நிர்வாகிகள் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி எஸ்.பி.பிரபு ஒன்றிய செயலாளர் ஜான்சன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகைசாமி மற்றும் பலர் கலந்து கொண்ட னர். முகாமில் 50 க்கும் மேற்பட்ட கம்பெனிகள் கலந்து கொண்டு தகுதியான நபர்களை தேர்வு செய்து நியமன ஆணைகளை வழங்கினர். கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர் பால்ராஜ் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப் பணி திட்ட பேராசிரியர்கள் சிவகுமார், திருசெல்வி மற்றும் மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.

    • தமிழகம் முழுவதுமிருந்து 2000 விவசாயிகள் பங்கேற்பு.
    • விவசாயிகளே கண்டறிந்த எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இடம்பெற்றது.

    ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா மதுரையில் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. யாதவா மகளிர் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 2000 விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். 

    நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் மற்றும் வேளாண் வல்லுநர்கள் கலந்து கொண்டு காய்கறி சாகுபடி குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சி தொடர்பாக மண் காப்போம் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் அவர்கள் பேசுகையில் "இயற்கை முறையில் காய்கறிகளை விளைப்பது எப்படி? அதை மதிப்பு கூட்டுவது மற்றும் சந்தைப்படுத்துவது எப்படி" என்பது தொடர்பாக இந்த விழாவில் பேசப்பட்டுள்ளது.

    மேலும், ரசாயன விவசாயத்துக்கு நிகரான மகசூலை இயற்கை முறையில் எடுப்பது எப்படி என்பதை வெற்றி பெற்ற முன்னோடி விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

    மேலும், இன்று ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருக்கும் ஏராளமான இளைஞர்கள் இயற்கை விவசாயத்திற்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆர்வம் இருக்கும் இளைஞர்கள் இயற்கை விவசாயியாக மாறும் வகையில், மூன்று மாத பயிற்சி ஒன்றை வடிவமைத்துள்ளோம். கோவையில் உள்ள ஈஷா மாதிரி விவசாய பண்ணையில் இந்த மூன்று மாத பயிற்சி நடைபெற இருக்கிறது. இயற்கை விவசாயத்தில் விருப்பம் உள்ள இளைஞர்கள் அங்கேயே தங்கி மூன்று மாதம் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்" என தெரிவித்தார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராமநாதபுரத்தை சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி .ராமர் பேசுகையில் "நான் கமுதியில் 30 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். பிரதான பயிராக மிளகாய் வற்றலை பயிரிட்டுள்ளேன். ஆண்டுக்கு 200 டன் மிளகாய் வற்றலை தரமான முறையில் உற்பத்தி செய்து அமெரிக்கா மற்றும் ஜெர்மனுக்கு கடந்த 8 ஆண்டுகளாக ஏற்றுமதி செய்கிறேன். என்னை பார்த்து இன்று கிட்டதட்ட 400 விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்" எனக் கூறினார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம் அவர்கள் நன்மை தரும் பூச்சிகள் மூலம் காய்கறி சாகுபடியை சிறப்பாக செய்யும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். பின்னர், பல்லடம் விவசாயி பொன்முத்து இயற்கை சந்தையை வெற்றிகரமாக உருவாக்கி நடத்துவது எப்படி என்பது குறித்து பேசினார். 

    அத்துடன், இந்த நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயிகள் பலர் இயற்கை முறையில் உற்பத்தி செய்த பொருட்களை மதிப்புக் கூட்டி பொதுமக்களுக்காக விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதற்காக 40 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் போடப்பட்டு அதில் பாரம்பரிய அரிசி, சிறு தானியம், தேன், கை வினை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் நம் மரபு இசையை பேணி காக்க சவுண்ட் மணி அவர்கள் 80க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார்.

    அதனை தொடர்ந்து வந்திருந்த அனைவருக்கும் படையல் சிவா குழுவினருடன் இணைந்து அடுப்பில்லாமல், எண்ணெய் இல்லாமல் ஆரோக்கியமான உணவு தயார் செய்து வழங்கப்பட்டது. இது மட்டுமின்றி பங்கேற்ற அனைவருக்கும் காய்கறி சாகுபடியை இயற்கை முறையில் செய்வது குறித்த கையேடும், பாரம்பரிய நாட்டு காய்கறி விதைகளும் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் விவசாயிகளே கண்டறிந்த எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இடம்பெற்றது.

    • நகையை பறிகொடுத்து படுகாயம் அடைந்த லதா மதுரை கூடல்புதூர் போலீசில் புகார் கொடுத்தார்.
    • வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட தபால் தந்தி நகர் வைகை நதி தெருவைச் சேர்ந்தவர் திலக்குமார் என்பவரது மனைவி லதா (வயது 40). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் லேசான மழை பெய்துகொண்டிருந்த நிலையில் லதா பணியை முடித்து விட்டு தனது மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் வந்தனர். ஆனால் அதனை லதா கவனிக்கவில்லை. லதாவின் அருகில் நெருங்கி வந்த மர்மநபர்கள் திடீரென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி செயினை இழுத்து பறித்தனர்.

    இதனை சற்றும் எதிர்பாராத அவர் தனது வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். மொபட்டில் இருந்து லதா கீழே விழுந்த நிலையிலும் அதனை சற்றும் கண்டுகொள்ளாமல் தரதரவென அவரை சாலையில் இழுத்தபடி செயினை அறுத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

    நகையை பறிகொடுத்து படுகாயம் அடைந்த லதா மதுரை கூடல்புதூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர்கள் லதாவை தரதரவென்று சாலையில் இழுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

    கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி கமிஷனர் ஜமால், இன்ஸ்பெக்டர் சுந்தரி, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    மதுரையில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் இதுபோன்று சென்று பெண்ணிடம் ஈவு இரக்கமின்றி தரதரவென இழுத்துச் சென்று தாலி செயினை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • சுயநிதி கல்லூரி ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி. பரிந்துரைத்த ஊதியத்தை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
    • பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    சுயநிதி கல்லூரி ஆசிரியர் பாதுகாப்பு மாநாடு மதுரை காமராசர் பல்கலைக் கழக கல்லூரியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மூட்டா தலை வர் செந்தாமரைக் கண்ணன் தலைமை தாங்கினார். மண் டல தலைவர்கள் ரமேஷ் ராஜ், ஞானேஸ்வரன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். செயலாளர் ராபர்ட் திலீபன் வரவேற்றார். மாநாட்டின் முக்கிய நோக் கம் குறித்து பொதுச்செயலா ளர் நாகராஜன் பேசினார்.

    மாநாட்டில் தமிழ்நாடு அரசு சுயநிதி ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கேரள அரசின் சுயநிதி ஆசிரியர்கள் ஒழுங்காற்றுச் சட்டத்தைப் போல் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும், தமிழ்நாடு அரசு சுயநிதி சுல்லூரிகளை ஒழுங்குபடுத்த தனி இயக்கு னரகம் தொடங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாடு அரசு, சுயநிதி ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி. பரிந்துரைத்த ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாடு அரசு சுயநிதி கல்லூரிகள் பற்றிய வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டும். பொறியியல் கல்லூரிகளில் சுயநிதி பிரி வில் பணியாற்றும் ஆசிரியர் களுக்கு ஏ.ஐ.சி.டி.இ. நிர்ண யித்துள்ள ஊதிய விகிதம்,

    அகவிலைப்படி உள் ளிட்ட பிற படிகளும், ஆசிரி யர் அல்லாத அலுவலர்க ளுக்கு குறைந்தபட்ச கூலிச் சட்டம் 1948-ன் அடிப்ப டையில் ஊதியம் அகவி லைப்படி உள்ளிட்ட பிற படிகளும் ஆண்டு ஊதிய உயர்வு மருத்துவ விடுப்பு மகப்பேறு மருத்துவ விடுப்பு உள்ளிட்ட சலுகைகளும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டன.

    முடிவில் பொருளாளர் ராஜ ஜெயசேகர் நன்றி கூறி னார்.

    ×