search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை ரெயில்வே நில பாதுகாப்பு சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம்
    X

    மதுரையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் எம்.பி. வெங்கடேசன், எம்.எல்.ஏ. தளபதி மற்றும் பலர் கலந்துகொண்ட காட்சி.

    மதுரை ரெயில்வே நில பாதுகாப்பு சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம்

    • மதுரை ரெயில்வே நில பாதுகாப்பு சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • எம்.பி., எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.

    மதுரை

    மதுரை ரெயில்வே நில பாதுகாப்பு இயக்கம் சார் பில் அரசடி ரெயில்வே மைதானம் முன்பு, மக்கள் நிலத்தை பாதுகாப்போம் என்ற நோக்கத்தில் பல்லாயி ரக்கணக்கான மக்கள் மற்றும் விளையாட்டு வீரர் கள் பயன்படுத்திவரும் பொது சொத்தான மதுரை ரெயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான அரசரடி விளையாட்டு மைதானம் மற்றும் ரெயில்வே காலனி பகுதியை தனியாருக்கு தாரை வார்க்க நினைக்கும் மத்திய அரசின் செயலை கைவிடக்கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பி னர் கோ.தளபதி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு கையெ ழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தனர். இதில் மாநக ராட்சி துணை மேயர் நாகரா ஜன், மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி, மாமன்ற உறுப்பினர் எம்.ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டு நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மற் றும் பொதுமக்களிடம் கையெழுத்துக்களை பெற்ற னர்.

    தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில், ரெயில்வே மைதானத்தை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மதுரையின் நுரையீரலாக பெரும் மாசுவை தடுத்து நிறுத்தும் ஒரு இடமாக ரெயில்வே மைதானம் உள்ளது. இதை தனியார் கார்ப்பரேட் முத லாளிகளிடம் வழங்கி விட் டால் இப்பகுதியில் சுகாதா ரம் என்பதை பாதுகாக்க முடியாது.

    ஏற்கனவே காற்று மாசு பெருவாரியாக ஏற்பட்டு வரும் நிலையில் காற்றில் மாசினை குறைப்பதற்கு ரெயில்வே காலனி பெரும் பங்கு வகிக்கின்றது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மரங்களை விட இங்கு 50 சதவீதத்திற்கு மேல் மரங்கள் உள்ளது. எனவே மதுரையில் நுரையீ ரலாக இருக்கக்கூடிய ரெயில்வே மைதானத்தை தனி யார் பெரும் முதலாளிக ளுக்கு மத்திய அரசு தாரை வார்க்கும் முயற்சியினை கைவிட வேண்டும் என்று ரெயில்வே மைதானம் பாது காப்பு கையெழுத்து இயக் கத்தை துவக்கி வைக்கிறோம் என்றார்.

    Next Story
    ×