search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை மாவட்ட எம்.எல்.ஏ.க்களை சந்தித்து இன்று கோரிக்கை மனு
    X

    மதுரை மாவட்ட எம்.எல்.ஏ.க்களை சந்தித்து இன்று கோரிக்கை மனு

    • மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி மதுரை மாவட்ட எம்.எல்.ஏ.க்களை சந்தித்து இன்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
    • தமிழகத்தில் உள்ள 10 லட்சம் குறு-சிறு தொழில் களை காப்பாற்ற முடியும்.

    மதுரை

    தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பா ளர்கள் பி.என்.ரகுநாத ராஜா, பொன் குமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மின்கட்டன உயர்வால் தமிழகத்தில் உள்ள பல்லா யிரக்கணக்கான தொழிற்சா லைகள் மிகவும் பாதிக்கப் பட்ட நிலையில் தமிழக முதல் வர் நேரடியாக தலை யிட்டு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்ட மைப்பு சார்பில் தமிழகம் முழுவதிலும் உள்ள தொழிற் சாலைகள் சார்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவை தபால் மூலமாகவும், விரைவு தபால் மூலம் அனுப்பப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம், தொழில் உற்பத்தி ஒரு நாள் நிறுத்தம் கதவடைப்பு. சென் னையில் மாபெரும் உண் ணாவிரதப் போராட்டங்க ளையும் நடத்தி உள்ளோம். இது தொடர்பாக தமிழக சிறு தொழில் அமைச்சர், மின்வாரிய உயர் அதிகாரி களிடம் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது.

    எங்களது கோரிக்கைக ளில் கிலோ வாட்டுக்கான நிலை கட்டணம் குறைப்பு என்பது மிகவும் முக்கியமான கோரிக்கையாகும். எங்களது கோரிக்கைகளை முழுமை யாக நிறைவேற்றினால் மட்டுமே தமிழகத்தில் உள்ள 10 லட்சம் குறு-சிறு தொழில் களை காப்பாற்ற முடியும். அதற்கான தொடர் முயற்சி யின் ஒரு பகுதியாக ஏழாம் கட்ட கவன ஈர்ப்புக்காக இன்று (6-ந்தேதி) தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப் பினர்களையும் நேரடியாக சந்தித்து மின் கட்டணம் உயர்வை குறைக்க வேண் டும் என்பதை தமிழக முதல் வரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளிக்க இருக்கிறோம்.

    அதன்படி மதுரையில் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்ட மைப்பு சார்பாக மடீட்சியா மற்றும் இணைப்பு சங்கங்க ளின் நிர்வாகிகள் அனைவ ரும் மதுரையில் உள்ள 10 சட்டமன்ற உறுப்பினர்களை இன்று நேரில் சந்தித்து மின் கட்டண உயர்வை குறைக்க கூறும் கோரிக்கை மனுவை அவர்களிடம் சமர்ப்பிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் தெரி–வித்துள்ளனர்.

    Next Story
    ×