search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில்லாத தீபாளியாக கொண்டாடுவோம்: தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு
    X

    பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்தபடம்.

    விபத்தில்லாத தீபாளியாக கொண்டாடுவோம்: தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு

    • தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • பாதுகாப்புடன் விபத்தில்லாத தீபாளியாக கொண்டாடுவோம் என கூறினர்.

    மதுரை

    மதுரை அனுப்பானடி தீயணைப்புத் துறை நிலைய அலுவலகத்தில் பட்டாசுக் கடை நடத்துபவர்கள் மற் றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் வினோத் தலை மையில் நடைபெற்றது. உதவி மாவட்ட அலுவலர் பாண்டி, தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பட் டாசு கடை வைத்து நடத்தும் நபர்கள் தகுந்த பாதுகாப்பு டன் நடத்த வேண்டும் குறிப் பாக மின்சார வயர்கள் வெளியே தொங்கும்படி இருக்கக் கூடாது, அனுமதி பெற்ற அளவுக்கு தான் பட் டாசுகள் கடையில் இருக்க வேண்டும், அதிகமான ஊழி யர்களை கடை யில் பணி யில் அமர்த்த கூடாது,

    அதிக வெப்பம் தரக்கூ டிய போக்கஸ் லைட்டுகளை பயன்படுத்தக் கூடாது, இரவில் கடையை அடைத்து விட்டு செல்லும்போது அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு விட்டதா? என்று பார்த்துவிட்டு தான் செல்ல வேண்டும். மேலும் மெயின் பாக்சை அமர்த்தி விட்டு செல்வது நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்த னர்.

    இதன் பின்பு கடை பணி யாளர்களுக்கு தீய ணைப்பு கருவியை எவ்வாறு பயன்ப டுத்த வேண்டும் என்பதனை அனுப்பானடி நிலைய அலு வலர் கந்தசாமி, திருப்பரங் குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் ஆகி யோர் செயல் விளக்கம் அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து உதயகுமார் கூறுகையில், பழைய தீயணைப்பு கருவி பி.சி. டைப் மாடல் கருவியை பயன்படுத்த வேண்டாம் என்றும் தற்போது ஏ.பி.சி. என்ற புதிய வகையான தீயணைப்பு கருவியை பயன் படுத்த வேண்டும் மேலும் சி.ஓ.2 என்ற தீயணைப்பு கருவியையும் கடைகளில் வைத்திருக்க வேண்டும் என் றும் வலியுறுத்தினார்.

    மேலும் பட்டாசு கடை அருகே தங்கள் கடையின் வெடி அதிக சத்தத்துடன் வெடிக்கும் என்பதனை காட்டுவதற்காக கடையின் அருகே டெமோ காட்டக்கூ டாது என்றும் அவர்கள் அறிவுறுத்தினர். இந்த நிகழ்ச்சியில் யுவராஜ் பட்டா சுகள், ஸ்ரீ பெரியாச்சி பட் டாசு கடை போன்ற பட்டாசு கடைகளின் மற்றும் நிறுவ னத்தின் உரிமையாளர்கள், பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×