என் மலர்
காஞ்சிபுரம்
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு விலக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். அதை போக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாக உள்ளது. குழுக்கள் அமைத்து மக்களுக்கு ஆதரவாக அரசு செயல்படவேண்டும். அரசின் ஆதரவு இல்லாததால் வேறு யார் மூலமாக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் செல்கின்றனர்.
தூத்துக்குடியில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன். மக்களுக்கு ஆதரவாக இருக்க முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து பொருளாதார ரீதியாக அரசியல் கட்சிகள் என்ன வாங்குகிறார்கள்? என்று எனக்கு தெரியாது.
ஸ்டெர்லைட் நிர்வாகிகள் என்னை சந்திக்கவேண்டும் என்று கூறியபோது நான் மறுத்துவிட்டேன். பாரதிய ஜனதா கட்சியின் பொருளாதார விவகாரங்கள் எனக்கு தெரியாது. அதுபற்றி கேட்காதீர்கள். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு உள்துறை மந்திரி வருத்தத்தை தெரிவித்து உள்ளார்.
மத்திய அரசு தமிழக மக்களுக்கு ஆதரவாக உள்ளது. துப்பாக்கி சூடு நடத்தியது தமிழக போலீஸ்தான். இதை கண்காணிக்க தமிழக உளவுத்துறை தவறிவிட்டது. ஆனால் துப்பாக்கி சூட்டிற்கு மோடிதான் காரணம் என்று பொய்யான பிரசாரம் செய்யப்படுகிறது.

தூத்துக்குடிக்கு அமைச்சர்கள் செல்வது ஆரோக்கியமான சூழ்நிலையாகும். கலவரத்திற்கு பிறகு அப்படியே விட்டுவிடாமல் அரசு சென்று மக்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு முழுபாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மத்திய அரசு 4 ஆண்டுகளில் தமிழகத்துக்கு என்ன செய்து உள்ளது என்ற விவாதத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள்?. யாருடைய ஆட்சி காலத்தில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது? என்று விவாதம் நடத்த மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் தயாரா?. காவிரி விவகாரத்தில் நீதிமன்றம் என்ன சொல்லி இருக்கிறதோ அதை மத்திய அரசு கடைபிடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #DMK #BJP #Tamilisai
மதுராந்தகம்:
மதுராந்தகத்தை அடுத்த வள்ளுவப்பாக்கத்தை சேர்ந்தவர் பரமேஷ் (வயது 52) விவசாயி. இன்று காலை அவர் அருகில் உள்ள வயலுக்கு சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் ரத்தக் காயத்துடன் பரமேஷ் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பலத்த காயங்கள் காணப்பட்டன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் படாளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து சென்று பரமேஷ் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரமேசை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரிய வில்லை. சமீபத்தில் பரமேஷ் யாருடனும் மோதலில் ஈடுபட்டாரா? என்பது குறித்து விவரங்களை போலீசார் சேகரத்து வருகிறார்கள்.
தாம்பரம் ரெயில் நிலையம் அருகே 16 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வழி தெரியாமல் தவித்தபடி நின்றார்.
இதனை பார்த்து சந்தேகம் அடைந்த பொது மக்கள் விசாரித்த போது அவர் அந்தமான் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அவரிடம் அதிகாரிகள் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். நண்பர் ஒருவருடன் கடந்த வாரம் சென்னையை சுற்றி பார்க்க வந்தோம். அம்பத்தூர் பகுதியில் தங்கி இருந்ததாகவும் திடீரென நண்பர் மாயமாகி விட்டார். இதனால் வழி தெரியாமல் சுற்றி வந்ததாக தெரிவித்தார்.
ஆனால் அந்தமானில் உள்ள அவரது சொந்த ஊரில் போலீசார் விசாரித்த போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பே இளம்பெண் மாயமாகி இருப்பது தெரிந்தது. இதனால் அதிகாரிகள் குழப்பம் அடைந்து உள்ளனர்.
காதலனுடன் இளம்பெண் வந்து இருக்கலாம் எனவும், கொண்டு வந்த பணம் தீர்ந்த உடன் காதலன் மட்டும்சொந்த ஊருக்கு திரும்பி சென்று இருக்கலாம் என்றும் தெரிகிறது.
மீட்கப்பட்ட இளம் பெண்ணை சொந்த ஊருக்கு அனுப்ப குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.#tamilnews
சேலையூரை அடுத்த கவுரிவாக்கத்தை சேர்ந்தவர் சீனிவாசன். சுற்றுலாத் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயந்தி.
நேற்று மாலை கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு ஆதம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். இரவில் திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 52 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் ரொக்கம், 1 கிலோ வெள்ளிப் பொருட் கள் கொள்ளை போயிருப்பது தெரிந்தது.
சீனிவாசன் குடும்பத்துடன் வெளியில் சென்றிருப்பதை அறிந்த மர்ம கும்பல் நகை, பணத்தை அள்ளிச்சென்றுள்ளனர். எனவே இதில் ஈடுபட்டது அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்ற நபர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர். #Tamilnews
மாமல்லபுரம்:
நெய்வேலி நகரியத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் சத்தியரேகா (வயது 17). மாமல்லபுரத்தில் பையனூரில் உள்ள தனியார் தொழில் நுட்ப கல்லூரியில் பயோ மெடிக்கல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
அவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று விட்டு சத்தியரேகா விடுதிக்கு வந்தார். அப்போது அவர் சோகமாக காணப்பட்டார். இது பற்றி கேட்ட போது எதுவும் கூறவில்லை.
இந்த நிலையில் விடுதி வளாகத்தில் உள்ள கூரையில் சசிரேகா தனது துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து மற்ற மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சத்தியரேகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சத்தியரேகா தற்கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் உருவானது. துப்பாக்கி சூட்டைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
ஸ்டாலினை போலீசார் வேனில் ஏற்றியதும், வேனை அங்கிருந்து நகர விடாமல் தொண்டர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #SterliteProtest #DMKBandh #MKStalinArrested
மாமல்லபுரம், திருக்குளம் தெருவில் வசித்து வருபவர் முகமது யாமின். இவரது மனைவி சீமா பேகம்.
இவர்களுக்கு 5 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இவர்களில் 6-வது மகள் அலிசா (வயது 6). இவர்களது சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம்.
கடந்த 15-ந்தேதி அலிசா, வீட்டின் அருகே உள்ள மாடியில் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் தவறி கீழே விழுந்தாள்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அலிசாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி அலிசா பரிதாபமாக இறந்தாள். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற பிரேமலதா விஜயகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
‘‘வரலாற்றில் மட்டுமே படித்த ஜாலியன் வாலாபாக் படுகொலை தூத்துக்குடியில் நடைபெற்றுள்ளது. இது தமிழக மக்களுக்கு ஒரு அவமான சின்னம் தமிழ்நாட்டின் கருப்பு நாள் மே.22.
ஒரு மானை சுட்டால் கூட தண்டனை கொடுக்கக்கூடிய நாட்டில் மனிதர்களை சுட்டுக் கொல்லும் அதிகாரத்தை இவர்களுக்கு கொடுத்தது யார்? தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களில் இணைய தளங்கள் முடக்கப்பட்டிருக்கிறது. முடக்க வேண்டியது இணைய தளங்களை அல்ல. ஆட்சியை தான்.
தூத்துக்குடி கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு மாற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தால் எந்த மாற்றமும் வராது. மாற்ற வேண்டியது இந்த அரசை தான். 100 நாள் அறவழியில் மக்கள் போராடினார்கள். பேரணிக்கு ஏன் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.
இது திட்டமிட்ட படுகொலை. தற்போது வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைத்து 3 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். ஆனால் 50 ஆயிரம் மக்கள் கூடும் பேரணியில் பாதுகாப்பு பணிக்கு ஏன் அதிக அளவில் போலீசார் போடவில்லை.
உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம், ரூ.1 லட்சம் என வழங்குகிறது. ஒரு உயிரின் மதிப்பு ரூ.10 லட்சம் தானா? இந்த அரசு எதை செய்தாலும் காசு கொடுத்து வாயை அடைக்கலாம் என கருதுகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏன் மக்களை நேரில் சென்று பார்க்கவில்லை. படுகொலைக்கு பின்னால் பணம் விளையாடி இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு ஒரு மாற்றம் வேண்டும். தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.
இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு காத்துக் கொண்டிருக்கிறார்
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 52 ஆயிரத்து 365 பேர் தேர்வு எழுதினர். இதில் 91.58 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 88.14 சதவீதமும், மாணவிகள் 95.06 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு பள்ளிகள் 85.76 சதவீதம், நகராட்சி பள்ளிகள் 87.71 சதவீதம், ஆதி திராவிட நலப்பள்ளி 86.18 சதவீதம், சமூகநலத்துறை பள்ளிகள் 93.02 சதவீதம், அரசு உதவி பெறும் பள்ளிகள் 88.12 சதவீதம், தனியார் பள்ளிகள் 98.09 சதவீதம் தேர்ச்சி பெற்று இருக்கிறது. மாநில அளவில் காஞ்சீபுரம் மாவட்டம் 29-வது இடத்தை பிடித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 222 பள்ளிகளில் 47 ஆயிரத்து 583 பேர் தேர்வு எழுதினர். இதில் 43 ஆயிரத்து 584 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 94.52 சதவீதமும், மாணவர்கள் 88.72 சதவீதம் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.
மாநில அளவில் திருவள்ளூர் மாவட்டம் 27-வது இடத்தை பிடித்துள்ளது. அரசு பள்ளிகளில் 34 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
தாம்பரம்:
பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் காமராஜர் நகரில் வசித்து வருபவர் சிவசங்கரன். இவரது மனைவி கனிமொழி. பொன்னேரி கோர்ட்டில் தலைமை எழுத்தாளராக பணியாற்றி வந்தார்.
இவர்களது மகன் இனியவன். பம்மலில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில் அவர் 631 மதிப்பெண் எடுத்தார்.
ஆனால் கனிமொழி மகன் கூடுதலாக மதிப்பெண் எடுப்பார் என நினைத்தார். இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் கனிமொழி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து சங்கர்நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாமல்லபுரம் அடுத்த வட நெம்மேலியை சேர்ந்தவர் விக்டர் வெற்றிவேல். கேளம்பாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். கடந்த 10-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றார்.
நேற்று வீடு திரும்பியபோது பின்பக்க கதவு உடைபட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 11 பவுன் நகை மற்றும் வெள்ளி பெருட்கள், பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி.யின் கீழ் பெட்ரோல் விலையை கொண்டு வந்தால் மாநில அரசின் வருவாய் குறைந்து விடும் என்று மாநில அரசு எண்ணுகின்றது. ஜிஎஸ்டியின் கிழ் கொண்டு வரப்பட்டுள்ள அனைத்து பொருள்களிலும் மாநில அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளது. எனவே பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி.ன் கீழ் கொண்டு வர மாநில அரசு அனுமதி கொடுக்க வேண்டும்.
தனது தேர்தல் அறிக்கையிலேயே தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்று கூறிய குமாரசாமியின் பதவி ஏற்பு விழாவில் தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கருப்பு சட்டை அணிய தயாரா?
நீண்ட நாள் கோரிக்கையான காவிரி விவகாரத்தில் ஒரு நிரந்தர தீர்வு கொண்டு வந்தது மத்திய அரசு. அதை அரசியல் லாபத்திற்காக தி.மு.க., மத்திய அரசை குற்றம்சாட்டி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #petrol #diesel #TamilisaiSoundararajan






