search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியான அலிசா.
    X
    பலியான அலிசா.

    மாமல்லபுரத்தில் மாடியில் இருந்து விழுந்து சிறுமி பலி

    மாமல்லபுரத்தில் மாடியில் இருந்து விழுந்த 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம், திருக்குளம் தெருவில் வசித்து வருபவர் முகமது யாமின். இவரது மனைவி சீமா பேகம்.

    இவர்களுக்கு 5 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இவர்களில் 6-வது மகள் அலிசா (வயது 6). இவர்களது சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம்.

    கடந்த 15-ந்தேதி அலிசா, வீட்டின் அருகே உள்ள மாடியில் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் தவறி கீழே விழுந்தாள்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அலிசாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி அலிசா பரிதாபமாக இறந்தாள். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    Next Story
    ×