என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் கேட்டு போராடியவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார். #thirunavukkarasar #gajacyclone #gajarelief
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 3 நாள் பார்வையிட உள்ளேன். சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. 8-ந் தேதி நடைபெற உள்ள காங்கிரஸ் அறக்கட்டளை கூட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையில் நிவாரணம் வழங்குவது என முடிவு செய்து அறிவிக்கப்படும்.

    ஒரு வாரம் கழித்து மத்திய குழு வந்துள்ளது. இந்த குழு ஆய்வு செய்து அறிக்கை தந்தபிறகு தான் நிதி தரவேண்டும். பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் பார்த்து இருக்கலாம். அல்லது உள்துறை மந்திரி, ஏதாவது ஒரு மத்திய மந்திரியாவது வந்து பார்த்து இருக்கலாம். யாரும் வராதது மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிப்பதையே காட்டுகிறது.

    தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ.5 ஆயிரம் கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும். பல இடங்களில் மின் இணைப்பு சீராகவில்லை, உணவு பொருட்கள் போய்ச்சேரவில்லை. நிவாரண தொகையை உயர்த்தித்தர வேண்டும். தமிழக அரசு ஒதுக்கிய தொகை போதுமானதல்ல. இதனால் மத்திய அரசு நிதியை ஒதுக்க வேண்டும். மத்திய அரசு முன்கூட்டியே முதற்கட்ட நிதியை ஒதுக்க வேண்டும்.

    நிவாரணம் கேட்டு போராடியவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் போராடுபவர்கள் அரசு சொத்துகளை சேதப்படுத்தக் கூடாது. போராடுபவர்களை வழக்கு போட்டு சிறையில் அடைப்பது சரியல்ல.

    புயலுக்கு முன்னால் நடவடிக்கை சரியாக இருந்தது. புயலுக்கு பின் நடவடிக்கைகள் சரியில்லை. அமைச்சர்கள் மாவட்டங்களில் தங்கியிருந்து பணியாற்றினாலும் உரிய நிவாரண பொருட்கள் வழங்கப்படவில்லை. பணிகள் முழுவீச்சில் நடக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #gajacyclone #gajarelief 
    தாம்பரம் அருகே ஆட்டோ டிரைவருக்கு தீடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் ஆட்டோ ரோட்டோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானது.
    தாம்பரம்:

    கிழக்கு தாம்பரம், கண்ணகி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). ஆட்டோ டிவைர். இன்று காலை அதே பகுதியை சேர்ந்த பெண் டாக்டர் தனது 2 குழந்தைகளையும் இவரது ஆட்டோவில் செம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கு அழைத்து சென்றார்.

    குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு அதே ஆட்டோவில் மீண்டும் வீடு திரும்பினார். ஆட்டோ ‘கேம்ப்’ ரோட்டில் வந்த போது டிரைவர் ராஜேந்திரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

    எனவே அவரால் ஆட்டோவை ஓட்ட முடியவில்லை. இதனால் நடுரோட்டில் தாறுமாறாக ஓடி ரோட்டோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது.

    உடனே அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் கவிழ்ந்து கிடந்த ஆட்டோவை மீட்டனர். அதில் மயங்கி கிடந்த டிரைவர் ராஜேந்திரனை அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

    இந்த விபத்தில் பெண் டாக்டரின் காலில் காயம் ஏற்பட்டது. அதற்கு அவர் சிகிச்சை பெற்றார். #tamilnews
    மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து வாலிபர் மற்றும் ஊழியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.#ChennaiAirport
    ஆலந்தூர்:

    மலேசியாவில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு விமானம் ஒன்று வந்தது. அதிலிருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது வாலிபர் ஒருவர் தனது பையை விமான நிலைய தற்காலிக ஊழியரிடம் கொடுத்தார். அந்த பையை விமான நிலையத்தின் வெளியே வந்து அந்த வாலிபரிடம் ஊழியர் கொடுத்தார்.

    இதை கண்காணித்த அதிகாரிகள் 2 பேரையும் பிடித்தனர். பையை சோதனை செய்தபோது அதில் 1.2 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தது. இதன் மதிப்பு ரூ38 லட்சம் ஆகும்.

    விசாரணையில் அந்த வாலிபர் சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது. அவரிடமும், விமான நிலைய ஊழியரிடமும் விசாரணை நடந்து வருகிறது. #ChennaiAirport
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 916 ஏரிகளில் 45 ஏரிகள் 100 சதவீதமும் நிரம்பி உள்ளன. #Rain #Lakes
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 916 ஏரிகள் உள்ளன. இவை அனைத்தும் நீர் இன்றி வறண்டு காணப்பட்ட நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அனைத்து ஏரிகளிலும் நீர் வரத் தொடங்கியுள்ளது.

    நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 916 ஏரிகளில் 45 ஏரிகள் 100 சதவீதமும் நிரம்பி உள்ளன. 52 ஏரிகளில் 75 சதவீமும், 179 ஏரிகளில் 50 சதவீதமும் மீதமுள்ள ஏரிகளில் 25 சதவீதம் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளான தாமல் ஏரி, தென்னேரி ஏரி, உத்திரமேரூர் ஏரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரி, மணிமங்கலம், மானாம்பதி, மதுராந்தகம் ஏரி உள்ளிட்ட ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அவர்கள் இதுகுறித்து கூறுகையில், மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்தால் ஏரிக்கரைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் வரும் அபாயம் உள்ளது.

    எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலவீனமாக உள்ள ஏரிக்கரைகள், மதகுகள், நீர்வரத்து கால்வாய் போன்றவற்றை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  #Rain #Lakes

    புயலை வைத்து அரசியல் செய்ய மு.க.ஸ்டாலின் முடிவு செய்து உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டினார். #tamilisai #mkstalin #gajacyclone
    ஆலந்தூர்:

    தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்டா பகுதிகளில் 4 நாட்கள் மக்களுடன் தங்கி இருந்து மருத்துவ சேவை செய்ய உள்ளேன். இதற்காக ரூ.15 லட்சம் மருந்து பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் மத்திய, மாநில அரசுகள் மருத்துவ முகாம்களை நடத்துகின்றன.

    இவ்வளவு நிதி தந்தார்களா?, அவர்கள் வந்தார்களா? என்று அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும் வகையில் பேசக்கூடாது. மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அளவுக்கு, அனைவரும் அவர்கள் மீது அக்கறையுடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

    புயல் பாதித்த பகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் 5 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது. தஞ்சாவூர் பள்ளத்தூர் பகுதியில் 30 ஆண்டுகளாக இருந்த பயிராக இருந்தாலும் அடங்கலில் பதிவு செய்யப்படாததால் தென்னை மரத்தை கணக்கெடுக்க முடியாது என்று அதிகாரிகள் கூறிவிட்டதாக மக்கள் தெரிவித்து உள்ளனர். அடங்கலில் பதிவு செய்யாமல் இருந்தது அதிகாரிகளின் குறைதான். இது விவசாயிகளின் குறை கிடையாது. அனைத்து விவசாயிகளுக்கும் என்ன இழப்பீடோ அதை வழங்க வேண்டும்.

    பிரதமர் தமிழகத்துக்கு உடனடியாக மத்திய குழுவை அனுப்பி உள்ளார். மத்திய குழு பார்வையிட்டு அவர்களின் அனுமானத்தையும், தமிழக அரசின் அனுமானத்தையும் கேட்டு மத்திய அரசுக்கு தெரிவிப்பார்கள். அந்த அடிப்படையில்தான் நிதி வழங்கப்படும். இது நிர்வாக ரீதியாக நடக்கும் வழிமுறைதான். மத்திய அரசு தமிழக மக்களுக்கு முழு ஒத்துழைப்புடன் உள்ளது.

    நிவாரண பணிகளில் விமானப்படை, ராணுவ படை எல்லோரும் முழுமையாக ஈடுபட்டு உள்ளனர். முதல்-அமைச்சர் மதிப்பீடு செய்துவிட்டுதான் பிரதமரை சந்தித்து உள்ளார். பிரதமரை காலையில் சந்தித்து உள்ளார்கள். மாலையில் மத்திய குழுவை அனுப்ப அறிவிப்பு வந்து உள்ளது. இதைவிட வேகமாக செய்யவேண்டுமா? என்று தெரியவில்லை.

    புயலை வைத்து அரசியல் செய்யவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் முடிவு செய்து உள்ளார். அரசியல் செய்யாமல் மக்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilisai #mkstalin #gajacyclone
    சர்வதேச தரம் கொண்ட சென்னை விமான நிலைய மேற்கூரை 2 நாள் மழையை கூட தாக்குப்பிடிக்க முடியாமல் ஒழுகுவது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #ChennaiAirport
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து உலகின் அனைத்து பகுதிகளுக்கும் பயணிகள் சென்று வருகிறார்கள்.

    பயணிகளின் நலன் கருதி இந்த விமான நிலையம் 2013-ம் ஆண்டு உலக தரத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி பணிகள் நடந்தன.

    சென்னை விமான நிலையம் தற்போது பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. என்றாலும், இங்கு பயணிகள் சென்று வரும் பகுதியில் கூரையில் பொருத்தப்பட்ட கண்ணாடிகள் அடிக்கடி உடைந்து விழும் விபத்துக்கள் வாடிக்கையாக உள்ளது.

    தற்போது, சென்னை விமான நிலைய மேற்கூரை மழைக்கு தாக்கு பிடிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாள் பெய்த மழையில் விமான நிலையத்துக்கு பயணிகள் வந்து போகும் இடங்களில் கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகியது.

    கோப்புப்படம்

    பயணிகள் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக செல்லும் 2-வது மாடியில் மேற்கூரை ஒழுகியது. முதல் தளத்தில் காலியாக உள்ள இடத்திலும் மழைநீர் கொட்டியது. பயணிகளை பரிசோதனை செய்யும் இடத்தில் பக்கவாட்டு சுவர் வழியாக மழைநீர் பயணிகள் நிற்கும் பகுதிக்குள் புகுந்தது.

    இது பற்றிய தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. கூரையில் இருந்து மழைநீர் கொட்டிய 3 இடங்களையும் சரி செய்ய முயற்சி நடந்தது. என்றாலும் கூரையில் இருந்து மழைநீர் ஒழுகுவதை நிறுத்த முடியவில்லை.

    இதையடுத்து தண்ணீர் ஒழுகிய இடங்களில் விமான நிலைய ஊழியர்கள் பிளாஸ்டிக் பாத்திரங்களை வைத்து மழைநீரை பிடித்து வெளியே ஊற்றினார்கள். சர்வதேச தரம் கொண்ட சென்னை விமான நிலைய மேற்கூரை 2 நாள் மழையை தாக்குப்பிடிக்க முடியாமல் ஒழுகுவது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  #ChennaiAirport
    காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி மாணவிக்கு ‘லிப்டில்’ செக்ஸ் தொல்லை கொடுத்த துப்புரவு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். #Arrested
    செங்கல்பட்டு:

    காட்டாங்கொளத்தூரில் பிரபல தனியார் பல்கலைக்கழகம் உள்ளது. பல்கலைக் கழக வளாகத்திலேயே மாணவ-மாணவிகள் தங்குவதற்கு தனித்தனியாக விடுதிகள் உள்ளன. இங்கு பெரும்பாலும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்கி உள்ளனர்.

    உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி பி.இ. இன்பர்மே‌ஷன் டெக்னாலஜி 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று இந்த படிப்புக்கான தேர்வு மழையால் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு மாணவ-மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து தேர்வு உடனடியாக நடத்த வேண்டும் என்று நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் நிர்வாகம் இதனை ஏற்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆண்கள் விடுதியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கும் செட்டி புண்ணியம் பகுதியை சேர்ந்த அர்ஜூன் என்பவர் பெண்கள் விடுதியில் உள்ள கழிவு பொருட்களை எடுப்பதற்காக சென்றார்.

    அப்போது அவர் ‘லிப்ட்’ மூலமாக ஏறினார். அந்த நேரத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவியும் அதே லிப்ட்டில் ஏறினார். லிப்ட் சென்று கொண்டிருந்த போது அர்ஜூன் மாணவியிடம் ஆபாசமாக பேசினார்.

    மேலும் தான் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி மாணவிக்கு ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார். இதற்குள் அந்த லிப்ட் குறிப்பிட்ட தளத்தை அடைந்து திறந்தது.

    உடனடியாக மாணவி அலறியடித்தபடி வெளியே ஓடினார். இதனைக்கண்ட மற்ற மாணவிகள் தொழிலாளி அர்ஜூனை பிடிக்க முயன்றனர். இதற்குள் அவர் தப்பி ஓடி விட்டார்.

    மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும், மறைமலை நகர் போலீசிலும் மாணவிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகள் நேற்று நள்ளிரவு கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் போலீஸ் தடுப்புகளை தாண்டி சாலையில் வந்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒத்திவைக்கப்பட்ட தேர்வை ஜனவரி மாதத்தில் நடத்தவும், மாணவிக்கு ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்த தொழிலாளியை கைது செய்யவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கலைந்து சென்றனர். இதற்கிடையே மாணவிக்கு தொல்லை கொடுத்த தொழிலாளி அர்ஜூனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #Arrested
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மதுராந்தகம் ஏரியின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களில் 13 அடி உயர்ந்து உள்ளது. #Maduranthakamlake
    காஞ்சீபுரம்:

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது கனமழையாக கொட்டித்தீர்த்தது. இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களில் பெய்த கனமழை காரணமாக 13 அடி உயர்ந்து உள்ளது.

    ஏரியின் உயரம் 21.3 அடி ஆகும். தற்போது ஏரியின் நீர்மட்டம் 13 அடியாக பதிவாகி உள்ளது.

    ஏரியின் முழு கொள்ளளவு 694 மில்லியன் கன அடி. தற்பொழுது 140 மில்லியன் கன அடி தண்ணீர் வந்து உள்ளது.

    ஏரிக்கு கிளி ஆறு மற்றும் நெல்வாய் மதகு மூலம் 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ஏரியின் மொத்த பரப்பளவு 2411 ஏக்கர் ஆகும். கடந்த 2 நாளில் ஏரியின் நீர்மட்டம் 13 அடி எட்டி இருப்பது விவசாயிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கல்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் 2நாட்களாக பெய்துவந்த கனமழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    வெங்கம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையோர மின் கம்பம் சாய்ந்து விழுந்தது பெருமாள்சேரி தரைப்பாலத்தில் 3அடிக்கு மேல் வெள்ளம் சென்றதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவ்வழியாக சென்ற வாகனங்களை கல்பாக்கம் அணுமின் நிலைய நகரியம் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    இதேபோல் புதுப்பட்டினம், பல்லவன்நகர், மோட்டுகொல்லை, பிரபலிமேடு, ஹாஜியாநகர், பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் உய்யாலிகுப்பம் கடற்கரையில் இருந்து 3கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முகத்துவாரத்தை பொக்லைன் வைத்து தோன்டி மழைநீர் கடக்குள் செல்ல ஏற்பாடு செய்தனர். இதனால் மழைநீர் வெளியேறி படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. #Maduranthakamlake

    பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறால் ஆலந்தூர் செல்லும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். #MetroTrain
    ஆலந்தூர்:

    சென்டிரலில் இருந்தும், தேனாம்பேட்டை டி.எம்.எஸ். ரெயில் நிலையத்தில் இருந்தும் மெட்ரோ ரெயில் விமான நிலையம் வரை சென்று வருகிறது.

    இந்த நிலையில், இன்று காலை 7 மணி அளவில் பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ஆலந்தூரில் இருந்து பரங்கிமலை வரை செல்லும் மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.

    இதனால் டி.எம்.எஸ்-ல் இருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரெயில் ஆலந்தூரிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து தொழில்நுட்ப நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் சிக்னல் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்துக்கு பிறகு சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டு மெட்ரோ ரெயில் வழக்கம் போல் ஓடியது. சிக்னல் கோளாறால் காலை 7 மணி முதல் 9 மணி வரை பரங்கிமலை-ஆலந்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். #MetroTrain
    பம்மல் அருகே ஏரியில் குப்பைகளை கொட்ட முயற்சித்த 3 லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த பம்மல் நகராட்சியில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. நேற்று இரவு 10 மணி அளவில் பம்மல் நகராட்சிக்கு சொந்தமான 3 குப்பை லாரிகள் திருநீர் மலை பேரூராட்சிக்குட்பட்ட ஏரி பகுதிக்கு வந்தன. பின்னர் அதில் இருந்த குப்பைகளை அங்கு கொட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    இதை அறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏரியில் குப்பையை கொட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து 3 லாரிகளையும் சிறைபிடித்தனர். பின்னர் அவை திருநீர் மலை பேரூராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் நேற்று இரவு அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    காஞ்சீபுரம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த வேளியூர் கிராமம், கட்டபொம்மன் தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜன் (வயது 21). மனநிலை பாதிக்கப்பட்டவர்.

    இவர் அடிக்கடி அருகில் இருக்கும் வீடுகளை தட்டி வந்தார். மேலும் அவ்வழியே செல்பவர்களிடமும் சம்பந்தம் இல்லாமல் பேசி வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற கோவிந்தராஜன், பக்கத்து தெருவில் வசிக்கும் தொழிலாளி வேலாயுதம் என்பவரது வீட்டை தட்டி கூச்சலிட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வேலாயுதம் அருகில் கிடந்த கட்டையால் கோவிந்தராஜனை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தராஜன் அங்கேயே மயங்கி விழுந்தார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் கோவிந்தராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கோவிந்தராஜன் இறந்தது பற்றி அறிந்ததும் வேலாயுதம் தப்பி ஓடி விட்டார். அவரை காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் நேற்று நள்ளிரவில் இருந்து 220 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

    இதுபற்றி அணுமின் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தொழில் நுட்ப கோளாறால் முதல் அணுஉலையும் இயங்காமல் இருக்கிறது. இதனால் தற்போது மொத்தம் 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

     மாமல்லபுரம், கோவளம், நெய்வேலி, கொக்கிலமேடு, வெண்புரு‌ஷம், சூலேரிக்காடு, கல்பாக்கம் பகுதி மீனவ கிராமங்களில் 2-வது நாளாக இன்றும் காற்றின் வேகம் அதிகரித்து சாரல் மழை பெய்து வருகிறது. கடலும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது படகு, வலை, மிஷின்களை பாதுகாப்பான பகுதியில் நிறுத்தி வைத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மழை, காற்று, கடல்சீற்றம் என அப்பகுதி கடலோர கிராம மக்களும், மீனவர்களும் பீதியில் உள்ளனர். இந்த நேரத்தில் அணு உலையும் நிறுத்தப்பட்டதால் கடலோர பகுதி மீனவர்களிடையே தற்போது சுனாமி பயமும் நிலவி வருகிறது.



    ×