என் மலர்
கடலூர்
விருத்தாசலம்:
விருத்தாச்சலம் பாலக்கரையில் கரும்புக்கான நிலுவை தொகை வழங்க கோருதல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 -ந் தேதியிலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் விருத்தாசலம் பாலக்கரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருத்தாச்சலம் சப்கலெக்டர் பிரசாந்த், தாசில்தார் கவியரசு ஆகியோர் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் விவசாயிகள் போராட்டத்தை தொடருவோம் என்றனர். அதன்படி இன்று காலை விவசாயிகள் மண்டையோடு மற்றும் மனித எலும்புகளையும் வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தனியரசு தலைமை தாங்கினார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பங்கேற்றார். பின்னர் அவர் கூறியதாவது:-
உலகம் முழுவதும் பதவி உயர்வு கேட்டும் ஊதிய உயர்வு கேட்டும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. ஆனால் நாங்கள் இருபத்தி மூன்று மாதங்களுக்கு முன்பு எங்களுடைய கரும்புகளை வெட்டி சித்தூர் தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பினோம். ஆனால் அந்த கரும்பிற்கான பணத்தை கேட்டு போராட வேண்டிய ஒரு அவல நிலையில் இன்று போராடி வருகிறோம். ஆனால் அந்த பணத்தை சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகம் தர மறுக்கிறது.
தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுத்து எங்களுக்கு தர வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் அஞ்சல் கோட்டம் வில்வராயநத்தம் துணை தபால் அலுவலகத்தில் ஆரோக்கியராஜ் என்பவர் கடந்த 27-4-2005 அன்று முதல் 13-4-2007 வரை துணை தபால் அதிகாரியாக பணியாற்றினார்.
இவர் பணிபுரிந்த காலத்தில் தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர்களான கிரிஜா என்பவரின் கணக்கில் இருந்து 13 ஆயிரத்து 100 ரூபாயையும், வஞ்சனவள்ளி என்பவரின் சேமிப்பு கணக்கில் இருந்து 5 ஆயிரத்து 400 ரூபாயையும், ஜெயலட்சுமி என்பவரின் தொடர் வைப்புநிதி கணக்கில் இருந்து 4 ஆயிரம் ரூபாயையும் சம்பந்தப்பட்டவர்களின் கையெழுத்தைப்போல் போலி கையெழுத்து போட்டு கையாடல் செய்தார்.
இது தொடர்பாக உதவி தபால் கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப் கொடுத்த புகாரின் பேரில் ஆரோக்கியராஜ் மீது கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு அன்வர் சதாத் விசாரித்தார். இதில் ஆரோக்கியராஜ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு இந்திய தண்டனை சட்டப்பிரிவு 409-ன் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 420-வது பிரிவின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும், 467-வது பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 471-வது பிரிவின் கீழ் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், இந்த சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டு அன்வர்சதாத் தீர்ப்பு அளித்தார். மேலும் அவருக்கு 9 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு அன்வர் சதாத் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அழகேசன் ஆஜராகி வாதாடினார். #CuddaloreCourt
மத்திய அரசு அறிவித்த கரும்பு கிரைய தொகையை சித்தூர் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் இருந்து மாவட்ட நிர்வாகம் பெற்று தர வேண்டும், அந்த தொகையை வட்டியுடன் சேர்த்து பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விருத்தாசலம் பாலக்கரையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சப்கலெக்டர், தாசில்தார் மற்ற அதிகாரிகள், போலீசாரும் யாரும் விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால் விவசாயிகள் விடிய, விடிய பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கேயே சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கினார்கள்.
நேற்று விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் பட்டை நாமம் போட்டுக்கொண்டு காதில் பூ வைத்துக்கொண்டு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுத்தகட்டமாக பாம்புக் கறியை தின்னும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.
அதன்படி இன்று 3-வது நாளாக பாம்பு, எலி கறி தின்னும் போராட்டம் நடந்தது. விவசாயி அண்ணாதுரை தலைமை தாங்கினார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, மாநில செயலாளர் சக்திவேல், குமரேசன், ராஜேந்திரன், விஜயன், நாகராஜ், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அவர்கள் வாயில் பாம்பு மற்றும் எலிகளை வைத்து பச்சையாக உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். #tamilnews
மத்திய அரசு அறிவித்த கரும்பு கிரைய தொகையை சித்தூர் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் இருந்து மாவட்ட நிர்வாகம் பெற்று தர வேண்டும், அந்த தொகையை வட்டியுடன் சேர்த்து பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விருத்தாசலம் பாலக்கரையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் காலையில் இருந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சப்கலெக்டர், தாசில்தார் மற்ற அதிகாரிகள், போலீசாரும் யாரும் விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால் விவசாயிகள் விடிய, விடிய பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கேயே சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கியனூரை சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி (வயது 65) என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்த விவசாயிகள் விரைந்து வந்து கோவிந்தசாமியை மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விவசாயி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் பட்டை நாமம் போட்டுக்கொண்டு காதில் பூ வைத்துக்கொண்டு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு மாதவன், வேல்முருகன், ராஜா, வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போராட்டத்தின் போது சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகள் கரும்பு ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பி பல மாதங்கள் ஆகி விட்டது. இருபத்தி மூன்று மாதங்கள் ஆகியும் இந்த கரும்பு ஆலைகள் விவசாயிகளுக்கு உரிய பணத்தை தர மறுக்கிறது. கரும்பு பணத்தை மாவட்ட கலெக்டர் தான் வாங்கித் தரவேண்டும். ஆனால் அவரும் கண்டுகொள்ளவில்லை. தமிழக அரசும் கண்டு கொள்வதில்லை.
இதனை கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு பணத்தை வாங்கித் தருவார்கள் என நம்பினோம். ஆனால் அவர்கள் வாங்கித் தரவில்லை ஆலை நிர்வாகம் எங்களுக்கு பணம் தராமல் பட்டை நாமம் போட்டு விட்டது, அதுமட்டுமில்லாமல் விவசாயிகளிடம் இருந்து ஆலை நிர்வாகம் கையெழுத்து வாங்கி 400 கோடியை வாங்கி விவசாயிகள் தலையில் கட்டி விட்டது. ஆனால் வங்கி கடனைக் கேட்டு விவசாயிகளுக்கு நோட்டீஸ் விட்டுள்ளது.
இது எங்கள் காதிலும் பூ வைத்து விட்டது போலாகி விட்டது. அதனால்தான் பட்டை நாமம் போட்டு காதில் பூ வைத்துக் கொண்டு போராட்டத்தை தொடங்கி உள்ளோம், இதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் இனிமேல் நாங்கள் சாப்பிட வழியில்லை. இதனால் நாளை நாங்கள் பாம்புக் கறியை தின்னும் போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழக அரசு விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். எங்களை பாம்பு கறியை திண்ண வைத்து விடாதீர்கள். விவசாயிகளுக்கு கரும்பு பணத்தை பெற்றுத் தரும் வரை எங்களது போராட்டம் பல்வேறு வடிவில் தொடரும்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் பக்கிரி முகமது (வயது45). அதே பகுதியை சேர்ந்தவர் ஜியாவுதீன் (34). நண்பர்களான இவர்கள் 2 பேரும் சேர்ந்து வழிப்பறி, திருட்டு, கொள்ளை போன்ற பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இது தொடர்பாக பக்கிரி முகமது, ஜியாவுதீன் மீது கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட போலீஸ்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. பக்கிரி முகமது புதுவையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் 13 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் ஒரு வழக்கில் பக்கிரி முகமது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ஜியாவுதீன் புதுவையில் உள்ள அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவந்தார்.
இதனால் ஜியாவுதீனுக்கும் அந்த பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் 2 பேரும் நெருங்கி பழகி வந்தனர்.
இந்த நிலையில் ஜெயலில் இருந்து வெளியே வந்த பக்கிரிமுகமது புதுவையில் உள்ள அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றார். அப்போது ஜியாவுதீனுக்கும் அந்த பெண்ணுக்கும் தொடர்பு இருப்பது அவருக்கு தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பக்கிரிமுகமது, ஜியாவுதீனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி நேற்று மாலை பண்ருட்டி பஸ்நிலையத்தில் இருந்து பக்கிரி முகமது தொலைபேசி மூலம் ஜியாவுதீனை தொடர்பு கொண்டு மது குடிக்க வருமாறு அழைத்தார். உடனே ஜியாவுதீனும் அதை ஏற்று பஸ் நிலையத்துக்கு வந்தார்.
பின்னர் 2 பேரும் பண்ருட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கினர். பண்ருட்டி பனங்காட்டு தெரு பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்துக்கு சென்றனர். அங்குள்ள மோட்டார் கொட்டகையில் வைத்து 2 பேரும் மது குடித்தனர். பின்னர் அவர்கள் அங்கேயே படுத்து உறங்கினர்.
நள்ளிரவு கண் விழித்த பக்கிரிமுகமது அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தூங்கி கொண்டிருந்த ஜியாவு தீனை குத்தினார். இதில் திடுக்கிட்டு எழுந்த ஜியாவுதீன் சுதாரித்துக்கொண்டு பக்கிரிமுகமது கையில் இருந்த கத்தியை பிடுங்கி அவரை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த பக்கிரிமுகமது ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பின்னர் ஜியாவுதீன் ரத்தக் காயங்களுடன், கையில் கத்தியை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்த போலீசாரிடம் பக்கிரி முகமது மோட்டார் கொட்டகையில் வைத்து தன்னை கத்தியால் குத்தியதாக ஜியாவுதீன் கூறினார். இதைத் தொடர்ந்து ஜியாவுதீனை சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதையடுத்து ஜியாவுதீன் கூறிய தகவலின் பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் பனங்காட்டு தெரு விவசாய நிலத்தில் உள்ள மோட்டார் கொட்டகைக்கு சென்றனர். அங்கு பக்கிரி முகமது ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பக்கிரிமுகதுவை கத்தியால் குத்தி கொன்ற ஜியா வுதீனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மேல் நிலைப்பள்ளி அருகே இட்லி கடை நடத்தி வந்தவர் தனலட்சுமி (வயது 40).
கடந்த 2014-ம் ஆண்டு அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவி தனலட்சுமியின் இட்லி கடைக்கு அடிக்கடி சென்று இட்லி வாங்கி சென்றார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து தனலட்சுமி அந்த மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார். இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் பள்ளியிலும், உறவினர்களிடம் தெரிவித்து விடுவதாக கூறி மிரட்டினார்.
மேலும் நெல்லிக்குப்பம் திருகண்டேஸ்வரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருடன் பல்வேறு பகுதிகளுக்கு மாணவியை அனுப்பி வைத்தார். தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதால் அந்த மாணவி கதறி அழுதார். அப்போது வேறு ஒரு மாணவியை என்னிடம் அழைத்து வந்தால் உன்னை விட்டு விடுகிறேன் என்று தனலட்சுமி கூறினார்.
அதை நம்பி அந்த மாணவி தன் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மற்றொரு மாணவியை தனலட்சுமியின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த மாணவியை அறையில் அடைத்து வைத்து 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
மேலும் 2 மாணவிகளையும் திட்டக்குடியை சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் என்பவரது வீட்டுக்கு தனலட்சுமி அனுப்பி வைத்தார். அவர் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் தனலட்சுமி 2 மாணவிகளையும் விருத்தாசலம், வடலூர், பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை, சேலம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த விபசார கும்பலிடம் விற்றார்.
அந்த கும்பலிடம் சிக்கிய 2 மாணவிகளும் தப்பி திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் 5.8.2014 அன்று தஞ்சம் அடைந்தனர். அப்போது அவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கண்ணீர் விட்டு கதறி அழுதபடி கூறினர்.
இதையொட்டி மதபோதகர் அருள்தாஸ் உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் 17 பேர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். மீதி உள்ள சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டதால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று 14 வயது மாணவியின் உறவினர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அதனை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு 4.7.2016 அன்று இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அதன்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தீபா துரித விசாரணை நடத்தி கடலூர் மகளிர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் கடந்த 4-ந் தேதி நடந்தது. மாணவிகளை பாலியலில் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகர் அருள்தாஸ் உள்பட 16 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.
1) கலா (48), விருத்தாசலம்.
2) தனலட்சுமி, திட்டக்குடி.
3) ஸ்ரீதர் (23), ஊ.மங்கலம், காட்டுக்கூனங்குறிச்சி.
4) பாத்திமா (35), வளவனூர்.
5) ராதா (35), நெல்லிக்குப்பம், சுல்தான்பேட்டை.
6) ஷர்மிளாபேகம் (34), விருத்தாசலம்.
7) கவிதா (34), வடலூர்.
8) அன்பழகன் (28), சேலம், அயோத்தியாபட்டினம்.
9) அமுதா (28), சேலம்.
10) மோகன் (28), திட்டக்குடி.
11) மதிவாணன் (23), திட்டக்குடி.
12) அன்பு, விருத்தாசலம்.
13) ஆனந்தராஜ், நெல்லிக்குப்பம் அருகே உள்ள திருக்கண்டேஸ்வரம்.
14) பாலசுப்பிரமணியன் (42), புதுப்பேட்டை, விருத்தாசலம்.
15) ராதிகா (30), பண்ருட்டி.
16) மதபோதகர் அருள்தாஸ், திட்டக்குடி.
பண்ருட்டியை சேர்ந்த மகாலட்சுமி மீது போதிய ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். குற்றவாளிகள் அனைவருக்கும் இன்று (திங்கட்கிழமை) தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வ பிரியா ஆஜராகி வாதாடினார்.

ஆனந்தராஜ், பாலசுப்பிரமணியனுக்கு 4 ஆயுள் தண்டனையும், கலா, தனலட்சுமி, ஸ்ரீதர், பாத்திமா ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனையும் விதித்த நீதிபதி லிங்கேஸ்வரன் மேலும் தண்டனை விபரங்களை தொடர்ந்து வாசித்து வருகிறார். #CuddaloreStudents #CuddaloreCourt
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த கூனங்குறிச்சி பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவிக்கும், நெய்வேலி ஊ.மங்கலம் பகுதியை சேர்ந்த தொழிலாளி விஜய்(வயது 30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று காலை கல்லூரிக்கு சென்ற மாணவியை விஜய் ஏமாற்றி தனது மோட்டார் சைக்கிளில் ஆதண்டார்கொல்லை சாம்பல் ஏரி பகுதிக்கு அழைத்து சென்றார்.
பின்னர் அந்த மாணவியை வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கல்லூரி மாணவி நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் விஜய்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நெய்வேலி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் கல்லூரி மாணவியை மோட்டார் சைக்கிளில் விஜய் அழைத்து செல்லும் காட்சி கேமராவில் பதிவாகியிருந்தது. இதைத் தொடர்ந்து விஜயை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த விஜய் தலைமறைவாகி விட்டார்.
இதைத்தொடர்ந்து நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரவீந்தர்ராஜ், அம்பேத்கார், சப்-இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் விஜயை பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கல்லூரி மாணவியை விஜயும், கல்லூரி மாணவர்கள் 3 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து விஜயையும், கல்லூரி மாணவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு 7-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியும், 8-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவி ஒருவரும் இணைபிரியாத தோழிகளாக இருந்தனர்.
இவர்களில் 13 வயது மாணவி தனது பெற்றோரை இழந்தவர் என்பதால், தனது பாட்டியின் பராமரிப்பில் தங்கி படித்து வந்தார்.
இவர்கள் பள்ளிக்கூடத்தின் அருகே உள்ள இட்லி கடைக்கு சென்று பலகாரங்களை வாங்கி சாப்பிடுவது வழக்கம். ஒருநாள் 13 வயது மாணவி பலகாரம் வாங்குவதற்காக இட்லி கடைக்கு சென்றபோது இட்லி கடை உரிமையாளரான செந்தில்குமாரின் மனைவி தனலட்சுமி (வயது 40) தனது கள்ளக்காதலனான திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்த டவர் என்ற ஆனந்தராஜூடன் (24) உல்லாசமாக இருந்ததை பார்த்து விட்டார்.
அதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, தனது லீலை வெளியே தெரியாமல் இருப்பதற்காக அந்த மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று கட்டாயப்படுத்தி, ஆனந்தராஜூடன் உல்லாசமாக இருக்க வைத்தாள். அதன்பிறகு ஆனந்தராஜ் பலமுறை மிரட்டி அந்த மாணவியுடன் உல்லாசம் அனுபவித்ததோடு, தனது நண்பர்களான திட்டக்குடியைச் சேர்ந்த மோகன் என்ற மோகன்ராஜ் (28), மதிவாணன் (23) ஆகியோருக்கும் மாணவியை விருந்தாக்கினான்.
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி தனலட்சுமியிடம் கூறி கதறி அழுதார். பின்னர் தனலட்சுமி மிரட்டியதால் தனது 14 வயது தோழியையும் தனலட்சுமியின் வீட்டுக்கு அழைத்துச்சென்றார். அந்த மாணவியும் ஆனந்தராஜின் காமப்பசிக்கு இரையானாள்.
பின்னர் தனலட்சுமி மாணவிகள் இருவரையும் விருத்தாசலத்தில் உள்ள விபசார புரோக்கர் கலாவின் வீட்டுக்கு அழைத்துச்சென்று கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தினாள்.

இதேபோல் கலாவும், தனலட்சுமியும், சக புரோக்கர்களும் இரு மாணவிகளையும் விழுப்புரம் மாவட்டம் வளவனூர், சேலம், கடலூர் மாவட்டம் வடலூர் ஆகிய இடங்களுக்கு அழைத்துச்சென்று லாட்ஜிலும், வாடகை வீடுகளிலும் தங்க வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார்கள்.
கடைசியாக வடலூரில் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோருக்கு மாணவிகள் விற்கப்பட்டனர். அவர்கள் இரு மாணவிகளையும் வடலூரில் உள்ள வாடகை வீட்டில் தங்கவைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார்கள். ஒருநாள் இரவில் மாணவிகள் இருவரும் அங்கிருந்து தப்பி திட்டக்குடிக்கு சென்று போலீசில் தங்களுக்கு நேர்ந்த கொடுமை பற்றி தெரிவித்தனர்.
இது தொடர்பாக 10 பெண்கள் உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. சதீஷ்குமார் (28), அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் இடையாக்குறிச்சியை சேர்ந்தவர்.
2. தமிழரசி (27), சதீஷ்குமாரின் மனைவி.
3. கலா (48), விருத்தாசலம் நாச்சியார்பேட்டை.
4. தனலட்சுமி, திட்டக்குடி பெரியார் நகரைச் சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி.
5. மதபோதகர் அருள்தாஸ்
6. ஸ்ரீதர் (23), ஊ.மங்கலம் காட்டுக்கூனங்குறிச்சி
7. பாத்திமா (35), வளவனூர் கூட்டுறவு நகரைச் சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பவரின் மனைவி.
8. மகா என்ற மகாலட்சுமி (20) பண்ருட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி.
9. ராதா என்ற கிரிஜா (35), நெல்லிக்குப்பம் சுல்தான்பேட்டை.
10. ஷர்மிளாபேகம் (34), விருத்தாசலம்.
11. கவிதா என்ற ராஜலட்சுமி (34), வடலூர் ஆபத்தராணபுரத்தைச் சேர்ந்த அஞ்சாபுலி என்பவரின் மனைவி.
12. அன்பழகன் (28), சேலம் அயோத்தியாபட்டணம்.
13. அமுதா (28), அன்பழகனின் மனைவி.
14. மோகன் என்ற மோகன்ராஜ் (28), திட்டக்குடி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர்.
15. மதிவாணன் (23), திட்டக்குடி.
16. அன்பு என்ற செல்வராஜ், விருத்தாசலம்.
17. டவர் என்ற ஆனந்தராஜ், திருக்கண்டேஸ்வரம்.
18. பாலசுப்பிரமணியன் (42), விருத்தாசலம் புதுப்பேட்டை பாரதிநகர்.
19. ராதா என்ற ராதிகா (30) பண்ருட்டி செக்கு மேட்டுத்தெருவைச் சேர்ந்த முத்துவேல் என்பவரின் மனைவி.
மேற்கண்ட 19 பேர் மீதும் ‘போக்சோ’ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். மற்ற 17 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டதால் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று 14 வயது மாணவியின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த 4-7-2016 அன்றைய தேதி இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து சி.பி. சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா மேற்பார்வையில் கடலூர் இன்ஸ்பெக்டர் தீபா விசாரணை நடத்தி 19 பேர் மீதும் கடலூர் மகளிர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் கோர்ட்டில் நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட இரு மாணவிகளும் கோர்ட்டில் ஆஜராகி 17 பேரையும் அடையாளம் காட்டினார்கள். மேலும் சிறைச்சாலையில் நடந்த அடையாள அணி வகுப்பிலும் இரு மாணவிகளும் 17 பேரையும் அடையாளம் காட்டினார்கள்.
இந்த வழக்கு விசாரணை நடைபெறும் போது, பாதிக்கப்பட்ட இரு மாணவிகளும் பாதுகாப்பு கருதி சென்னையில் உள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களில் ஒரு மாணவி மேல்படிப்பு படிக்கிறார்.
எனவே இரு மாணவிகளுக்கும் அரசு சார்பில் இடைக்கால நிவாரணம் வழங்கக்கோரி அரசு வக்கீல் க.செல்வபிரியா கடலூர் மகளிர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி லிங்கஸ்வேரன் இரு மாணவிகளுக்கும் இடைக்கால நிவாரணமாக தலா 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் 17 பேரும் நேற்று கடலூர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிபதி லிங்கேஸ்வரன் மாலை 4 மணி அளவில் பரபரப்பான தீர்ப்பை வழங்கினார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகா என்ற மகாலட்சுமி என்பவர் சதீஷ்குமாரால் பாதிக்கப்பட்டவர் என்பதால் மகாலட்சுமியை மட்டும் விடுதலை செய்து நீதிபதி லிங்கேஸ்வரன் உத்தரவிட்டார். மதபோதகர் அருள்தாஸ் உள்பட மற்ற 16 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
இவர்களுக்கான தண்டனை விவரம் வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்று நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் க.செல்வபிரியா ஆஜராகி வாதாடினார். #Students #Harassment
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயதேவி, பரந்தாமன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை பி.ஆண்டிகுப்பம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது ஏழுமலை (வயது55) என்பவர் தனது வீட்டின் அருகே மது விற்று கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். ஏழுமலையிடம் இருந்த 10 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
அதுபோல் மாளிகைப்பட்டில் பத்மநாபன் மனைவி ரேகா (26) என்பவர் மது விற்று கொண்டிருந்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெண்ணாடம்:
ராஜஸ்தான் மாநிலம் ஆர்.கே.தில்வாடே பகுதியை சேர்ந்த சிலர் தமிழகத்துக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்பேரில் அந்த பகுதியை சேர்ந்த லத்திஹரிசன் (வயது 60) உள்பட 50-க்கும் மேற்பட்டோர் ஒருபஸ்சில் ராஜஸ்தானில் இருந்து தமிழகத்துக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். நேற்று அவர்கள் சென்னை வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் சென்னையில் இருந்து கடலூர் வழியாக ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி சென்னையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு பஸ்சில் புறப்பட்டனர். அந்த பஸ் நேற்று இரவு கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த கல்லூர் பகுதியில் வந்துகொண்டிருந்தது. இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் பஸ்சை அந்த பகுதியில் நிறுத்தி விட்டு பஸ்சில் இருந்த 50 பேரும் நெடுஞ்சாலை ஓரம் உள்ள மாரியம்மன் கோவிலில் தங்கினர்.
அவர்கள் தங்கியிருந்த கோவிலில் இன்று அதிகாலை பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து கோவிலில் தங்கியிருந்த லத்திஹரிசன் உள்பட 50 பேரும் எழுந்தனர். அவர்கள் குளிப்பதற்காக கோவிலின் அருகே உள்ள ஒரு மோட்டார் கொட்ட கைக்கு செல்வதற்காக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை கடக்க முயன்றனர்.
அப்போது அந்த வழியாக பெரம்பலூர் மாவட்டம் கீழபெரம்பலூர் பகுதியை சேர்ந்த பழனிவேல் (34) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்த கொண்டிருந்தார். அந்த பகுதியில் பனிபொழிவு அதிகமாக இருந்ததால் சாலையை கடக்க முயன்ற லத்தி ஹரிசன் மீது பழனிவேலின் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் பழனிவேல் மற்றும் லத்திஹரிசன் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். லத்திஹரிசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பழனிவேல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் 108 ஆம்புலன்சுக்கும், ராமநத்தம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு ஆம்புலன்சு ஊழியர்கள் விரைந்து வந்து படுகாயம் அடைந்த பழனிவேலை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனிவேல் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான லத்தி ஹரிசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






