என் மலர்
செய்திகள்

பண்ருட்டி அருகே மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயதேவி, பரந்தாமன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை பி.ஆண்டிகுப்பம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது ஏழுமலை (வயது55) என்பவர் தனது வீட்டின் அருகே மது விற்று கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். ஏழுமலையிடம் இருந்த 10 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
அதுபோல் மாளிகைப்பட்டில் பத்மநாபன் மனைவி ரேகா (26) என்பவர் மது விற்று கொண்டிருந்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயதேவி, பரந்தாமன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை பி.ஆண்டிகுப்பம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது ஏழுமலை (வயது55) என்பவர் தனது வீட்டின் அருகே மது விற்று கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். ஏழுமலையிடம் இருந்த 10 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
அதுபோல் மாளிகைப்பட்டில் பத்மநாபன் மனைவி ரேகா (26) என்பவர் மது விற்று கொண்டிருந்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story






