என் மலர்
கடலூர்
- திராவிட மாடல் ஆட்சி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
- தமிழர்கள் ஓரணியில் திரள்வோம்.
சிதம்பரம்:
சிதம்பரம் லால்குளத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் மறைந்த எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவு மண்டபம் திறப்பு இன்று நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்த கொண்டு நூற்றாண்டு மண்டபத்தை திறந்து வைத்தார். விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் திருமாவளவன் பேசியதாவது:-
சிதம்பரத்தில் நந்தனாருக்கு மணிமண்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட எல்.இளையபெருமாளுக்கு நூற்றாண்டு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. கல்வி வளர்ச்சிக்காக நந்தனார் பாடுபட்டார். காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சிநாளாக கொண்டாடப்படும் இந்த நாளில் எல். இளையபெருமாளுக்கு மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எல்.இளையபெருமாள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டு அறிக்கை வெளியிட்டார்.
1931-ம் ஆண்டு மக்கள் தொகையில் ஒன்றரை சதவீதம் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி வளர்ச்சி பெற்று இருந்தனர். தற்போது 78 சதவீதம் பட்டியலின மக்கள் கல்வி வளர்ச்சி பெற்றுள்ளனர். திராவிட மாடல் ஆட்சி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தார். அதே போல் தற்போது தி.மு.க. அரசும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
மீண்டும் தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும். தமிழர்கள் ஓரணியில் திரள்வோம். 2026-ல் தி.மு.க ஆட்சி அமைய அனைவரும் ஒத்துழைப்போம்.
தி.மு.க. கூட்டணிக்கு விழும் வாக்குகளில் 4-ல் ஒரு வாக்கு வி.சி.க.வுடையதாக இருக்கும். அதாவது 100 வாக்குகளில் 25 வாக்குகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி உரியதாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- முகாம்கள் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாம்களும் நடைபெறும்.
- ஆதிதிராவிட மக்களுக்கு அதிகமான திட்டங்களை தந்தது தி.மு.க. அரசு.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்புரத்தில் ஐயா எல்.இளையபெருமாள் திருவுருவ சிலையை திறந்து வைத்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* இளைய பெருமாளின் போராட்டம் ஆதி திராவிட மக்களின் எழுச்சிக்கு காரணமாக இருந்தது.
* வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு அடிப்படையே இளையபெருமாள் கமிட்டி அறிக்கை தான்.
* சிதம்பரம் தொகுதியின் சீர்திருத்த பிள்ளையாக திகழ்கிறார் தொல்.திருமாவளவன்.
* தி.மு.க. அரசுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் துணையாக உள்ளனர்.
* ஓரணியில் தமிழ்நாடு இருந்தால் எந்த டெல்லி அணியின் காவி திட்டமும் பலிக்காது.
* முகாம்கள் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாம்களும் நடைபெறும்.
* கல்வி அளிப்பதன் மூலம் தீண்டாமையில் இருந்து மக்களை மீட்டெடுக்க முடியும்.
* ஆதிதிராவிட மக்களுக்கு அதிகமான திட்டங்களை தந்தது தி.மு.க. அரசு.
* சமூக விடுதலை பயணம் என்பது நீண்ட நெடிய பயணம் என்றார்.
- மக்களுடன் முதல்வர் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 5000 முகாம் நடத்தி தீர்வுகள் கண்டோம்.
- தற்போது 46 சேவைக்கு தீர்வு காணும் 10,000 முகாம்களை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் தொடங்கி வைத்துள்ளேன்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்புரத்தில் ஐயா எல்.இளையபெருமாள் திருவுருவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* வரலாற்று சிறப்புமிக்க நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.
* காமராஜர் பிறந்தநாளில் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன்.
* ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளி விளக்காக திகழ்ந்தவர் இளைய பெருமாள். அவரின் அரங்கத்தை திறந்து வைப்பதில் பெருமை அடைகிறேன்.
* 2021-ல் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் முன்னெடுப்பு மூலம் மக்களிடம் பெற்ற மனுவுக்கு 100 நாளில் தீர்வு என உறுதி தந்தேன்.
* சொன்னதை போல் தீர்வு தந்ததால் மேலும் பலர் மனு அளிக்க தொடங்கியதால் முதல்வரின் முகவரி என தனிதுறை உருவாக்கப்பட்டது.
* மக்களுடன் முதல்வர் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 5000 முகாம் நடத்தி தீர்வுகள் கண்டோம்.
* தற்போது 46 சேவைக்கு தீர்வு காணும் 10,000 முகாம்களை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் தொடங்கி வைத்துள்ளேன்.
* மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அரசின் சேவையை வழங்குவது தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் இலக்கு.
* தகுதி இருந்தும் ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் உங்கள் பகுதியில் நடக்கும் முகாமில் விண்ணப்பங்கள் கொடுங்கள். நிச்சயமாக மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்றார்.
- உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 வகையான சேவைகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- கிராமப் பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 வகையான சேவைகள் பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சிதம்பரம்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை-எளிய மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தொகுதி வாரியாக சென்று மக்களிடம் மனுக்களை பெற்றார். அந்த வகையில் அவரிடம் சுமார் 1 கோடி 5 ஆயிரம் பேர் மனுக்களை அளித்தனர்.
இந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ள குறைகளுக்கு தீர்வு காண "முதல்வரின் முகவரி" என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இந்த துறையின் மூலம் கடந்த மாதம் வரை 1 கோடியே ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
இதையடுத்து தமிழக மக்கள் அரசு திட்டங்களுக்கு விண்ணப்பித்து இருந்தால் அதன் பலன்களை உடனடியாக பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை கடந்த 2023-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி முதல் கட்டமாக 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு 9 மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டது.
2-வது கட்டமாக கிராமப் பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை 2,344 முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 13 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களில் 95 சதவீதம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
3-வது கட்டமாக தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்காக கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 433 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1 லட்சத்து 80 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. இதில் 1 லட்சத்து 47 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
இந்த நிலையில் மக்களின் குறைகளை அவர்களது இருப்பிடத்துக்கே சென்று தீர்த்து வைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந்த திட்டம் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து சிதம்பரத்துக்கு ரெயிலில் புறப்பட்டு சென்றார். நேற்று இரவு அவர் சிதம்பரம் கீழவீதியில் உள்ள ஓட்டலில் தங்கினார்.
இன்று காலை சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் சிதம்பரத்தில் உள்ள திருமண மண்டபத்துக்கு புறப்பட்டு வந்தார். அங்கு அவர் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் முதல்வரின் முகவரி துறை வழியே செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகள் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தமிழகம் முழுவதும் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 வகையான சேவைகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல கிராமப் பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 வகையான சேவைகள் பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த சேவைகளை பெற முதல் கட்டமாக இன்று முதல் நவம்பர் மாதம் வரை தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நகரப் பகுதிகளில் 3,738 முகாம்களும், கிராமப் பகுதிகளில் 6,232 முகாம்களும் நடத்தப்படும்.
இது மக்களுடன் முதல்வர் திட்டத்தில் நடத்தப்பட்ட முகாம்களை விட 2 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள், கணினி இயக்குநர்கள் போன்றவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் முதல் கட்டமாக இன்று முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி வரை நகரப் பகுதிகளில் 1,428 இடங்களிலும், கிராமப் பகுதிகளில் 2,135 இடங்களிலும் மனுக்களை பெறுவார்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் வெவ்வேறு இடங்களில் 6 முகாம்கள் நடத்தப்படும். முகாம்களுக்கு வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. முகாம்கள் நடக்கும் தகவல்கள் பிரத்யேக இணையதளத்தில் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாம்களிலும் மகளிர் உரிமைத் தொகைக்காக 4 கவுண்டர்கள் உருவாக்கப்பட்டு இருக்கும். மற்ற சேவைகளை பெற தலா 2 கவுண்டர்கள் இருக்கும்.
இந்த முகாம்களில் இ-சேவை, ஆதார் அட்டையில் மாற்றங்கள் போன்றவற்றையும் முகாம்களில் செய்யலாம். இந்த சேவைக்கு மட்டும் பாதி கட்டணமாக அதாவது ரூ.30 வசூலிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் பதில்கள் திருப்தியாக இல்லாவிட்டால் மனு தாரர்கள் மேல்முறையீடு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மனுக்கள் கொடுத்த பிறகு அது எந்த நிலையில் உள்ளது என்பதை இணைய தளம் வாயிலாக தெரிந்து கொள்ளும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிதம்பரத்தில் நடந்த விழாவில் தொடங்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று ரெயில் மூலம் சிதம்பரம் வந்தார்.
- இன்று காலை முதலமைச்சர் காரில் புறப்பட்டு ரெயிலடி திடலில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார்.
சிதம்பரம்:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று ரெயில் மூலம் சிதம்பரம் வந்தார். அவருக்கு ரெயில் நிலையத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் . இதனை தொடர்ந்து ரெயில் நிலையத்தில் இருந்து கீழரதவீதியில் உள்ள தனியார் விடுதி வரை ரோடு ஷோ நடத்தினார். அப்போது பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர் அவர் கீழரதவீதியில் உள்ள தனியார் வீடுதியில் தங்கினார்.
இன்று காலை அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு ரெயிலடி திடலில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- திமுக ஆட்சியில் கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலமாக மாறியுள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடன் வாங்குவதில் சூப்பர் முதலமைச்சர் என்றார் எடப்பாடி பழனிசாமி.
முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற எழுச்சி நோக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி இன்று புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு வந்த இபிஎஸ்-க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், 4.45 மணி அளவில் ரோடுஷோவாக சென்று மக்களை சந்தித்தார்.
அதன்பிறகு, சீமாட்டி சிக்னல் அருகில் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மின்சாரத்தை தொட்டால்தான் ஷாக் அடிக்கும்; திமுக ஆட்சியில் மின்கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது.
இன்றைய சூழலில் யாரும் வீடு கட்ட முடியாது. வீடு கட்டுவதை போல் கனவு வேண்டுமானால் காணலாம்.
ஒரு யூனிட் ரூ.3 ஆயிரம் விற்ற எம்சாண்ட் ரூ.5,500ஆக விற்பனையாகிறது.
அதிமுக ஆட்சியில் ரூ.50க்கு விற்ற சாப்பாட்டு அரிசி, இப்போது ரூ.77க்கு விற்பனையாகிறது. விலையை ஒப்பிட்டுப் பாருங்கள். எந்த ஆட்சி சிறந்த ஆட்சி என யோசித்து வாக்களியுங்கள்.
திமுக ஆட்சியில் கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளில் திமுக அரசு ரூ.4.38 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது.
தாலிக்கு தங்கம், விலையில்லா ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டம் உள்ளிட்டவைகளை திமுக அரசு நிறுத்திவிட்டது.
திமுக அரசு நிறுத்திய திட்டங்களை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வீராணம் ஏரி மூலம் பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
- சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
இந்த ஏரி மூலம் பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்பட்டு வருகிறது.
மேலும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பினரும், விவசாயிகளும் இந்த ஏரி நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏரியின் நீர் மட்டம் 47.50 அடியாகும். இந்த நிலையில் பல்வேறு வழிகளில் இருந்து ஏரிக்கு 1337 கன அடி தண்ணீர் வரத்து வருவதால் தற்போது வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டி உள்ளது.
மேலும் சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மாலை 7 மணி அளவில் திருவதிகை ஆயில் மில், திருவதிகை எம்.ஜி.ஆர். சிலை ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
- கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கலைக்குழுவினர் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கடலூர்:
முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற எழுச்சி நோக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று முன்தினமும், நேற்றும் அவர் விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இன்று (சனிக்கிழமை) அவர் கடலூர், பண்ருட்டி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதையொட்டி இன்று மாலை 4 மணியளவில் புதுச்சேரியில் இருந்து வரும் அவருக்கு கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம் .சி. சம்பத் தலைமையில் கடலூர் மாவட்ட எல்லையான, ரெட்டிச்சாவடியிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் மஞ்சக்குப்பம் எம்.ஜி.ஆர்.சிலை அருகிலும், தொடர்ந்து டவுன்ஹால் அருகிலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், 4.45 மணி அளவில் மஞ்சக்குப்பத்தில் ரோடுஷோவாக சென்று மக்களை சந்திக்கிறார். அதன்பிறகு, சீமாட்டி சிக்னல் அருகில் சிறப்புரையாற்றுகிறார்.
இதனை தொடர்ந்து பண்ருட்டி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த நெல்லிக்குப்பம் அம்பேத்கர் சிலை அருகிலும், மேல்பட்டாம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகிலும், அண்ணா கிராமம் அம்பேத்கர் சிலை அருகிலும் சிறப்புரையாற்றுகிறார். மாலை 7 மணி அளவில் திருவதிகை ஆயில் மில், திருவதிகை எம்.ஜி.ஆர். சிலை ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதன்பிறகு இரவு 7.30 மணி அளவில் பண்ருட்டி 4 முனை சந்திப்பு அருகில் பேசுகிறார். இதையடுத்து நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில் கடலூர் நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், அண்ணா கிராமம் பண்ருட்டி நெய்வேலி ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலைகளில் ஆயிரக்கணக்கான கட்சி கொடிகள் வழி நெடுக்கிலும் பல கிலோ மீட்டர்கள் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அ.தி.மு.க.வினர் வழி நெடுகிலும் பெரிய அளவிலான பேனர்கள் வைத்து வரவேற்று உள்ளனர். இது மட்டும் இன்றி மதியம் முதல் கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கலைக்குழுவினர் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதன் காரணமாக கடலூர், பண்ருட்டி, நெய்வேலி ஆகிய பகுதிகள் முழுவதும் விழா கோலம் பூண்டு உள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமியை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வரவேற்க உள்ளனர்.
- பங்கஜ் சர்மாவை வருகிற 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
- ரெயில் விபத்து தொடர்பாக 13 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டில் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரெயில் பள்ளி வேன் மீது மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலியானார்கள். 3 பேர் படுகாயத்துடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்துக்கு ரெயில்வே கேட் கீப்பர் தான் காரணம் என கருதி அவரை பொதுமக்கள் தாக்கினார்கள். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டனர். இந்த ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் குமாரை சிதம்பரம் ரெயில்வே போலீசார் கைது செய்தனர். அவரை வருகிற 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து, ரெயில் மோதி 3 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 அதிகாரிகள் கொண்ட குழு நியமித்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டது. அக்குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். ரெயில் விபத்து தொடர்பாக 13 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில், ரெயில் விபத்துக்கு ரெயில்வே கேட்டை மூடாமலேயே மூடிவிட்டதாக பிரைவேட் எண்ணை ஆலப்பாக்கம் நிலைய மாஸ்டருக்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கொடுத்துள்ளார். இதையடுத்து விபத்து நடைபெற்ற பிறகு, ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்து கேட்டை மூடவில்லை என்று பங்கஜ் சர்மா ஒப்புக்கொண்டது ரெயில்வேயின் தானியங்கி வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகி உள்ளது.
இதனை தொடர்ந்து பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்துக்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே காரணம் என்பது உறுதியாகி உள்ளது.
இதனிடையே, விபத்து நடைபெற்ற அன்றே, கேட்டை மூடும் போது வேன் ஓட்டுநர் கேட்டை திறக்கச்சொன்னதாக முதல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ராமதாஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.
- கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் விருத்தாசலம் பொன்னேரி பைபாஸ் சாலையில் உள்ள மகாலில் நடைபெற்றது.
விருத்தாசலம்:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். அதன்படி நேற்று அவர் கும்பகோணத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று விருத்தாசலம் பொன்னேரி பைபாஸ் சாலையில் உள்ள திருமண மகாலில் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி, கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்டு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறுகையில்,
என் வீட்டிலேயே, நான் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே ஒட்டு கேட்கும் கருவியை வைத்துள்ளனர்.
அதை யார், எதற்காக வைத்தார்கள் என்பதை ஆராய்ந்து வருகிறோம். அது லண்டனில் இருந்து வந்தது என்று அவர் குற்றம்சாட்டினார்.
- ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் தெற்கு ரெயில்வே உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
- கேட் கீப்பர் அறையைப் பார்வையிட்ட பின், அப்பகுதி மக்களிடமும் விசாரணை நடத்தினர்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில், ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் தெற்கு ரெயில்வே உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். கேட் கீப்பர் அறையைப் பார்வையிட்ட பின், அப்பகுதி மக்களிடமும் விசாரணை நடத்தினர்.
இதை அடுத்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த ஓட்டுநர் மற்றும் பள்ளி மாணவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் விசாரித்தனர்.
- ரெயில் மோதி 3 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 அதிகாரிகள் கொண்ட குழு நியமித்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.
- செம்மங்குப்பம் ரெயில்வே கேட் கீப்பராக ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டில் நேற்று காலை விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரெயில் பள்ளி வேன் மீது மோதி 3 மாணவர்கள் பலியானார்கள்.
3 பேர் படுகாயத்துடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்துக்கு ரெயில்வே கேட் கீப்பர் தான் காரணம் என கருதி அவரை பொதுமக்கள் தாக்கினார்கள்.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டனர். இந்த ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் குமாரை சிதம்பரம் ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
அவரை வருகிற 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ரெயில் மோதி 3 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 அதிகாரிகள் கொண்ட குழு நியமித்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. அக்குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே ரெயில்வே கேட் கீப்பர் தூங்கிதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ரெயில் வருவதாக விமல் என்ற அதிகாரி பங்கஜ் சர்மாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் பங்கஜ் சர்மா போனை எடுக்கவில்லை.
அவர் தூங்கி விட்டதாக அதிகாரியிடம் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே செம்மங்குப்பம் ரெயில்வே கேட் கீப்பராக ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.
அவர் கூறும்போது, செம்மங்குப்பம் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ரெயில்வே கேட் மூடி இருக்கும்போது, 5 அல்லது 10 நிமிடங்கள் பொதுமக்கள் காத்திருந்து செல்ல வேண்டும்.
செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டில் தகவல் தொடர்பாக அனைத்து வசதிகளும் உள்ளது என்றார்.
இந்த நிலையில் ரெயில் விபத்து தொடர்பாக நேரில் ஆஜராக 13 பேருக்கு திருச்சி ரெயில்வே கோட்டம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
பள்ளி வேன் டிரைவர் சங்கர் உள்பட 13 பேரும் நாளை திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






