என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அதிமுக- பாஜக கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி கிடையாது - இ.பி.எஸ். திட்டவட்டம்
- அரசு ஊழியர்கள் அரசுக்காக அரசியல்வாதியாக மாறிவிடக்கூடாது.
- பா.ம.க.வில் நடக்கும் உட்கட்சி பிரச்சனைகளில் நாங்கள் தலையிட முடியாது.
சிதம்பரம்:
சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், விளம்பர மாடல் ஆட்சி என கூறினார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
* அரசு ஊழியர்கள் அரசுக்காக அரசியல்வாதியாக மாறிவிடக்கூடாது.
* எனக்கு விவசாயம் தொழில் தான் உள்ளது. எனக்கென கம்பெனி எல்லாம் கிடையாது. மக்கள் பிரச்சனைக்காக தான் டெல்லி செல்வோம்.
* 2001-ல் பா.ஜ.க.வுடன் தான் தி.மு.க. கூட்டணி வைத்தது. அப்போது ஏன் இவ்வாறு பேசவில்லை.
* பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று அறிவித்ததால் முதலமைச்சருக்கு பயம்.
* எங்களது கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தான் அமித்ஷா கூறிவிட்டார்.
* அதிமுக, பாஜக, கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி கிடையாது. எங்கள் கூட்டணியை பொறுத்தவரை நான் சொல்வது தான்.
* பா.ம.க.வில் நடக்கும் உட்கட்சி பிரச்சனைகளில் நாங்கள் தலையிட முடியாது என்றார்.
இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு காலம் கடந்துவிட்டதாக பதில் கூறினார்.






