என் மலர்tooltip icon

    கடலூர்

    • மோட்டார் கொட்டைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்து வந்ததையும் காண முடிந்தது.
    • சாதாரண மழையாக தொடங்கி விடிய இடி மின்னலுடன் கனமழைவிடிய கொட்டி தீர்த்த மழையாக மாறியது.

    கடலூர், மே.2-

    கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி யது. இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு 101 டிகிரி வெயில் பதிவானது குறிப்பிடத்தக்க தாகும். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து கடும் சுட்டெரிக்கும் வெயி லாக மாறி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் ஏப்ரல் மாதத்தில் திடீரென்று சில நாட்கள் காலையில் பனி பொழிவும், மதியம் சுட்டெ ரிக்கும் வெயில் இருந்து வந்தது.

    கடும் வெயில் காரண மாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து, சாலை ஓரங்களில் உள்ள பழசாறுகள் பல வகைகள் நுங்கு கரும்பு சாறு குளிர்பா னங்கள் போன்றவற்றை குடித்து வெயிலின் தாக்கத்தை குறைக்க முயற்சி செய்தனர். வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நடமாட்டம் உச்சி வெயில் நேரத்தில் குறைந்த அளவே காணப்பட்டு இருந்ததை காண முடிந்தது. இது மட்டும் இன்றி காலை மற்றும் மாலை நேரங்களில் கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் மக்கள் தங்கள் குடும்பத்துடன் கூடி ஆனந்தமாக தண்ணீரில் விளையாடி குளித்தும் மகிழ்ந்ததோடு, கிராமங்கள் பகுதிகளில் நிலப் பகுதி களில் உள்ள மோட்டார் கொட்டைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்து வந்ததையும் காண முடிந்தது.இந்த நிலையில் நாளை மறுதினம் மே 4-ந் தேதி முதல் கோடை வெயிலில் உச்சமாக கருதக்கூடிய அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் காலை மற்றும் மாலை நேரங்களில் லேசான சாரல் மழை பெய்து வந்ததோடு வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ந்த காற்றும் வீசி வந்தது.

    நேற்று கடலூர் நெல்லிக்குப்பம் மேல்பட் டாம் பாக்கம், நடுவீரப்பட்டு, பாலூர், பண்ருட்டி, விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையானது நேற்று இரவு சாதாரண மழையாக தொடங்கி விடிய இடி மின்னலுடன் கனமழைவிடிய கொட்டி தீர்த்த மழையாக மாறியது.மேலும் இரவு முழுவதும் இடி மின்னலுடன் கனமழை பெய்து வந்ததால் குளிர்ந்த காற்று வீசி வந்ததோடு கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது. கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம், தலைமை தபால் நிலையம் எதிரில் மற்றும் முக்கிய சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தது வருகின்ற னர். வடகிழக்கு பருவ மழை தொடங்கினால் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்வது போல் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு அக்னி நட்சத்திரம் தொடங்கு வதற்கு முன்பு கனமழை பெய்தது குறிப்பிடத் தக்கதாகும். விவசாயிகள் பொதுமக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்திலிருந்து எப்பொழுது விடிவு காலம் பிறக்கும் என்பதனை எதிர் நோக்கி இருந்த நிலையில் இந்த திடீர் கனமழை காரணமாக அனைவரும் மகிழ்ச்சியில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு-

    வானமாதேவி - 187.0, கடலூர் - 109.4, கலெக்டர் அலுவலகம் - 104.1, பண்ருட்டி - 90.0, வடகுத்து - 88.0, குப்பநத்தம் - 87.6, வேப்பூர் - 80.0, எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 79.5, விருத்தாசலம் - 69.0, ஸ்ரீமுஷ்ணம் - 68.3, காட்டு மயிலூர் - 60.0, சேத்தி யாதோப் - 52.4, கீழச்செரு வாய் - 49.0, லக்கூர் - 48.0, பெல்லாந்துறை - 40.0, லால்பேட்டை - 34.0, மீ-மாத்தூர் - 30.0, காட்டு மன்னார்கோயில் - 23.0, தொழுதூர் - 21.0, குறிஞ்சிப்பாடி -18.0, அண்ணாமலைநகர் - 9.0, கொத்தவாச்சேரி - 8.0, பரங்கிப்பேட்டை - 5.4 , புவனகிரி - 2.0, சிதம்பரம் - 1.0 என மொத்தம் - 1363.70 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது.

    • வரதராஜ பெருமாள் ஆலய சித்தர் திருவிழா கோலகாலமாக நடைபெற்று வருகின்றது,
    • முத்து பல்லாக்கில் சாமி வீதி உலா மற்றும் கரகாட்ட நிகழ்வு நடைபெற உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் வலசக்காடு ஊராட்சியில் முத்துமாரியம்மன், வரதராஜ பெருமாள் ஆலய சித்தர் திருவிழா கோலகாலமாக நடைபெற்று வருகின்றது, இந்த திருவிழா நாளை புதன்கிழமை தொடங்கி 10 நாள் நிகழ்வாக நடைபெறுகிறது. முதல் நாள் காப்பு கட்டும் நிகழ்வும் அதனை தொடர்ந்து சாமி வீதி உலாவும் நடைபெறுகின்றது. வருகின்ற 4- ம் தேதி வியாழக்கிழமை 9ம் நாள் விழாவை முன்னிட்டு முத்து பல்லாக்கில் சாமி வீதி உலா மற்றும் கரகாட்ட நிகழ்வு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 5- ம்தேதி வெள்ளிக்கிழமை 10ம் நாள் அலகு குத்துதல் ,காவடி எடுத்தல் ,தேர் இழுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கடைசி நாளான 11 - ஆம் தேதி வியாழக்கிழமை பக்த பிரகலாத நாடகமும் அதனைத் தொடர்ந்து 12 - ம் தேதி வெள்ளிக்கிழமை அரிச்சந்திரா நாடகம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கிராம மக்கள் அனைவரும் சுவாமியை பயபக்தியுடன் தரிசித்து வருகின்றனர் இதற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் அறங்காவலர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • மளிகை கடைக்கு இன்று மதியம் டிப்- டாப் ஆசாமி வந்தார்.
    • கல்லா பெட்டியில் இருந்த ரூ. 40 ஆயிரத்தை திருடி விட்டு தப்பி சென்று விட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி பொன்னுசாமி தெருவில் மளிகை கடை உள்ளது. இந்த மளிகை கடைக்கு இன்று மதியம் டிப்- டாப் ஆசாமி வந்தார்.அவர் பூண்டு விலை என்ன என்று கேட்டார். கடைக்காரர் பூண்டுவை எடுக்க உள்ளே சென்ற போது டிப்- டாப் ஆசாமி கடையின் கல்லா பெட்டியில் இருந்த ரூ. 40 ஆயிரத்தை திருடி விட்டு தப்பி சென்று விட்டார். இது குறித்து மளிகை கடை உரிமையாளர் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ. 40 ஆயிரத்தை திருடி சென்ற டிப்-டாப் ஆசாமியை தேடி வருகிறார்கள்.

    • சிவகுமார் மதுப்பழக்கம் உள்ள இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே தொரப்பாடி பேரூராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் கூலி தொழிலாளி. மதுப்பழக்கம் உள்ள இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். பகல் 2 மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்த செல்வகுமாரை எழுப்பினர். அப்போது அவர் சுய நினைவு இல்லாமல் கிடந்தார். உடனே அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அதிகாலை நேரங்களில் சில நாட்களில் கடும் பனிமூட்டமும் இருந்து வந்தது.
    • மே 4 -ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் மாதம் முதல் பனி காலம் முடிந்து சுட்டெரிக்கும் வெயில் அடிக்க தொடங்கியது. தொடர்ந்து ஏப்ரல் மாதம் முழுவதும் கடும் வெயில் அடித்து வந்தது.101 டிகிரி வெயிலின் அளவு பதிவானது குறிப்பிடத் தக்கதாகும். அதிகாலை நேரங்களில் சில நாட்களில் கடும் பனிமூட்டமும் இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழையும் பெய்து வருகிறது.

    இந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதி யில் நேற்று காலை லேசான சாரல் மழை பெய்தது. பின்னர் வழக்கம் போல் சுட்டெரிக்கும் வெயில் அடித்துவந்தது. நெல்லிக் குப்பம், காராமணிக் குப்பம், வரக்கால்பட்டு, குமராபுரம், கோண்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இனறு காலை முதல் கருமேகம் சூழ்ந்தது. பின்னர் குளிர்ந்த காற்று வீசி வந்த நிலையில் திடீ ரென்று மழை பெய்ய தொடங்கியது. இதன் காரண மாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிறிது நேரம் பெய்த மழை காரண மாக ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர்.

    ஒரு சிலர் குடை பிடித்த படி சென்றனர். மழை நின்ற வுடன் மீண்டும் வெயில் அடிக்க தொடங்கியது. வருகிற மே 4 -ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. தற்போது கடலூர் மாவட்டத்தில் காலை நேரங்களில் மழை, மதியம் கடும் சுட்டெரிக்கும் வெயில், இரவு நேரங்களில் புழுக்கம் ஏற்படுகிறது.சீதோஷ்ணம் மாற்றம் காரணமாக பொதுமக்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடும் பாதிப்படைந்து வரு கின்றனர். சீதோஷ்ணம் மாற்றம் ஏற்படுவதால் அதற்கு ஏற்றாற்போல் உணவு முறைகளை சரியான முறையில் எடுத்து கொள்ள வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • ரூ. 10 லட்சம் கொடுத்தால் மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக பேசி உள்ளனர்.
    • போலீசார் பா.ஜ.க பிரமுகரை இன்று அதிகாலை கைது செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் விஜய ராஜ் (வயது 30) என்ஜினீயரிங் பட்டதாரி. கடந்த 2021 -ம் ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ.க.வின் கடலூர் மேற்கு மாவட்ட தொழில் பிரிவு தலைவர் பெரியசாமி, இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்த பா.ஜ.க. கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் பழனிவேல் ஆகியோர் விஜயராஜை அணுகி ரூ. 10 லட்சம் கொடுத்தால் மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக பேசி உள்ளனர்.

    இதை நம்பி விஜயராஜ் அவர்களிடம் முன்பணமாக ரூ.50 ஆயிரம் பணம் கொடுத் துள்ளார். தொடர்ந்து சிதம்பரம் வாசபுத்தூர் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் தீபக்கை(38) அறிமுகம் செய்து வைத்தனர். அவர் மூலம் 4 பேரும் ெடல்லிக்கு சென்றனர். அங்கு மத்திய மந்திரி உதவியாளர் என ஒருவரை விஜயராஜூக்கு அறிமுகம் செய்து வைத்துள் ளனர். அவர் வேலையை பற்றி கூறி விஜயராஜியின் தந்தை ராஜேந்திரனிடம் செல்போனில் பேசினார். அப்போது மீதம் உள்ள 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் வேலை உறுதி என தெரிவித்துள்ளார். 

    இதனை நம்பி அவர் கூறிய வங்கி கணக்கில் 9 லட்சத்து 50 ஆயிரத்தை விஜயராஜ் செலுத்தினார். அதன் பின்னர் சில மாதங்களாக விஜயராஜ் அலைக்கழிக்கப்பட்டார் தான் ஏமாற்றப்பட்டதாக அறிந்த விஜயராஜ் பணம் கொடுத்தவரிடம் எனது பணத்தை திரும்பி கொடுத்து விடுங்கள் என பலமுறை கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் முறையாக பதில் அளிக்காமல் காலம் தாமதம் செய்ததோடு அலைக் கழித்ததால் விஜயராஜ் இது குறித்து திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் தீபக், பெரியசாமி, பழனிவேல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர். 

    இந்நிலையில் ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி அவரது வீட்டில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற திட்டக்குடி போலீசார் அவரை இன்று அதிகாலை கைது செய்தனர். பா.ஜ.க. மாவட்ட நிர்வாகி வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் திட்டக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருக்கோவிலூர், திருவந்திபுரம்- இவற்றுக்கு நடுவில் வராகபுரி என்று போற்றப்படுவது பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவில்.
    • பிரம்மோற்சவ விழாவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இந்த நாள்கருதப்படுகிறது.

    கடலூர்:

    பண்ருட்டி காந்தி ரோட்டில் அமைந்துள்ளது வரதராஜ பெருமாள்கோவில். இதுமிகவும் பிரசித்தி பெற்றது. இடம் பெயர்ந்த பெருமாளாக அமைந்துள்ளது. நடுநாட்டு திவ்ய தேசங்களான திருக்கோவிலூர், திருவந்திபுரம்- இவற்றுக்கு நடுவில் வராகபுரி என்று போற்றப்படுவது பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவில். இங்கு வரதராஜ பெருமாள்கிழக்குநோக்கி கம்பீரமான தோற்றத்துடன் காட்சி தருகிறார். வலது கரத்தில் அபய முத்திரையும், இடது கரத்தில் கதா ஆயுதமும் சங்கு சக்கரம் தரித்தபடி அருள்புரிகிறார். வலதுபுறம்ஸ்ரீதேவி தாயார் தாமரை மலர் தாங்கி காட்சி தருகிறார். இடதுபுறம் அமைதியே வடிவான பூமிதேவி கருங்குவளை மலர் தாங்கி அருள்சுரக்கிறார்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பழமையான இந்த கோவிலில் பிரம்மோற்சவ திருவிழாதொடங்கிநடந்து வருகிறது. இதனை முன்னிட்டு தினமும் காலை, மாலை இரு வேளையும் யாகசாலை ஹோமங்கள் நடைபெற்று இரவு தினமும் ஒரு வாகனத்தில் சாமி வீதி உலா காட்சி நடக்கிறது. 4-ம் நாளான நேற்று இரவு சேஷ வாகனத்தில் சுவாமிவீதி உலாவந்தார்.

    சேஷ வாகனம், தாஸானு தாஸ' பக்திக்கு எடுத்துக்காட்டு.இதில் சுவாமி எழுந்தருளி உலாவரும் போது தரிசனம் செய்தால், நம் மனதில் இருக்கும் மிருகத்தன்மை நீங்கிசாத்விகமான குணங்கள் ஏற்பட்டும்.மற்றவர்களுக்குப் பயன்படும் வாழ்க்கை அமையும். குண்டலியோக பலன் கிடைக்கும், முதாதையர் அருள் கிடைக்கும், காரிய வெற்றி கிட்டும், பல்வேறு தோஷங்கள் நீங்கும். வைகுண்ட பிராப்தம் கிடைக்கும் 4-ம் சேஷ வாகனத்தில் வைகுண்ட வாசபெருமாள் திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளிய சுவாமி 5-ம் நாளான இன்று மாலை பெரிய திருவடி என்னும் கருட வாகனத்தில் எம்பெருமான் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பெருமாளே வரமாகக் கேட்டு பெற்ற சிறப்பினுக்கு உரியது கருட வாகனம். கருட சேவையில் எழுந்தருளும் பகவானை தரிசித்தால் சகல பயங்களும் நீங்கும் என்பது ஐதிகம்.

    முன்னதாக உற்சவ மூா்த்திக்கு மதியம் பால், தயிா், தேன், இளநீா், பழரசம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட உள்ளது. திருமஞ்சனத்தின் போது பழங்கள், பலவித மலா்களால் ஆன மாலைகள் உற்சவமூா்த்தி களுக்கு அணிவிக்கப்படுகிறது. கருட சேவை ஏற்பாடு களை கருட சேவை உற்சவ தாரர்கள் பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையில் வன்னியர் சமூகத்தினர் செய்து வருகின்றனர்.

    பிரம்மோற்சவ விழாவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இந்த நாள்கருதப்படுகிறது. அதனால் கருடவாகனத்தில் சுவாமி எழுந்தருளும் இந்நாளில் மட்டும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதை யொட்டி விரிவான பல ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம்கோவில் செயல் அலுவலர் ராமலிங்கம், பரம்பரை அறங்காவலர் பாண்டுரங்கன் மற்றும் உபயதாரர்கள், பக்தர்கள், ஓம் நமோ நாராயணா அறக்கட்டளை, 1008 தாமரைப்பூ சகஸ்ர நாம குழுவினர், கோவில் பட்டாச்சாரியார் கஸ்தூரி ரங்கன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • அம்மு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை செய்த வருகிறார்.
    • பஸ் ஊழியர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி அம்முவை கடத்தியதாக கூறியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஓறையூர் கிராமத்தை சேர்ந்தவர் மன்னாதன் இவரதுமகள் அம்மு (22) இவர் பண்ருட்டி பஸ் நிலையத்தின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை செய்த வருகிறார்.

    இவர்,நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடுதிரும்பவில்லை பல இடங்களில்தே டி எங்கும்கிடைக்காதால்.இவரது தந்தை மன்னாதன் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் புகாரில் பண்ருட்டி அடுத்த கனிசபாக்கத்தை சேர்ந்தபஸ் ஊழியர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி அம்முவை கடத்தியதாக கூறியுள்ளார். புகார் குறித்துபுதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்வழக்கு பதிவு செய்து காணாமல் போன தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை வலை வீசி தேடி வருகிறார்.

    • மனவளர்ச்சிக்குன்றியோர் சிறப்பு பள்ளளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
    • மனித வளத்துறை துணை மேலாளர் ஒ.எஸ்.அறிவு கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் தாங்கள் வாழ்வில் தன்னம்பிக்கை விடாமுயற்சி கல்வி இதன் மூலமே சாதனை செய்ய முடியும் என கூறினார்.

    கடலூர்:

    நெய்வேலி அருகே எ.குறவன்குப்பத்தில் உள்ள டிவைன் கிராஸ் மனவளர்ச்சிக்குன்றியோர் சிறப்பு பள்ளளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியம் அனைவரையும் வரவேற்றார். நியூலைட் சாரிட்டபுல் டிரஸ்ட் பொருளாளர் முன்னிலை வகித்தார். நியூலைட்சாரிட்டபுல் நிர்வாகி மனநல நிபுணர் சகாயராஜர தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினராக என்.எல்.சி.இந்தியா நிறுவனத்தின் சுரங்கங்களில் மனித வளத்துறை துணை மேலாளர் ஒ.எஸ்.அறிவு கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் தாங்கள் வாழ்வில் தன்னம்பிக்கை விடாமுயற்சி கல்வி இதன் மூலமே சாதனை செய்ய முடியும் என கூறினார். மேலும் கலைநிகழ்ச்சி விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். முடிவில் விடுதி காப்பாளர் கென்னடி நன்றி கூறினார்.

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட னர்.
    • பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த 3பேரை போலீசார் கைது செய்தனர்

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் அம்பேத்கர் நகர் மற்றும் ரெயில் நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது ெரயில் நிலையம் அருகில் உள்ள பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த சின்ன கள்ளிப்பட்டை சேர்ந்த நவநீதன்(31), ராஜா(26). சாவடி பாட்டை தெருவை சேர்ந்த இளவரசன் (26)ஆகி யோரை போலீசார் கைது செய்தனர்.

    • ராஜா பாதாள சாக்கடையில் விழுந்த மாட்டை காப்பாற்றுவதற்கு அங்கு இருந்த நபரிடம் உதவி கேட்டார்.
    • ராஜாவை 2 நபர்கள் சேர்ந்து திடீரென்று சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது‌.

     கடலூர்:

    கடலூர் வண்ணாரபாளையம் கூட்டு ரோட்டில் பாதாள சாக்கடையில் மாடு தவறி விழுந்துவிட்டது. அப்போது அங்கு இருந்த 2 பேர் இதனை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். இதில் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த ராஜா, பாதாள சாக்கடையில் விழுந்த மாட்டை காப்பாற்றுவதற்கு அங்கு இருந்த நபரிடம் உதவி கேட்டார். அப்போது அந்த நபர் சரியான முறையில் பதில் கூறவில்லை.

    இதனை தொடர்ந்து ராஜாவுக்கும் அந்த நபருக்கும் திடீரென்று வாய் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ராஜாவை 2 நபர்கள் சேர்ந்து திடீரென்று சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜா கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் 2 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் ராஜாராம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், திட்டக்குடி ஆகிய உட் கோட்டத்திற்கு உட்பட்ட போலீசார் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் அண்ணாமலை நகர், கடலூர் திருப்பாதிரிப்புலியூர், புதுப்பேட்டை, மங்கலம்பேட்டை, சோழதரம், புவனகிரி, ராமநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் அதிரடியாக கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்த சிதம்பரம் புலவேந்திரன், திருப்பாதிரிப்புலியூர் சிவப்பிரகாசம், பண்ருட்டி ஜெயராமன், விருத்தாச்சலம் பெரியசாமி, சோழதரம் ரகுபதி, புவனகிரி சாவித்திரி, ராஜி, ராமநத்தம் சாந்தி உட்பட 9 ேபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா ஆகியவற்றை அதிரடியாக பறிமுதல் செய்தனர். மாவட்டத்தில் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×