என் மலர்tooltip icon

    கடலூர்

    • விருத்தாச்சலம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி மோட்டார் சைக்கிளில் வந்தவரை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டார்.
    • அவர் 2 லாரி ட்யூப்களில் சுமார் 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் மதுகடத்தல் சம்பந்தமாக சிறுபாக்கம் ஒரங்கூரிலிருந்து ஓலக்கூர் செல்லும் பாதையில் மா.கொத்தனூரில் சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவரை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டார். அவர் 2 லாரி ட்யூப்களில் சுமார் 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. பின்னர் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், ஒலங்கூர் சேர்ந்த சுதாகர் (வயது 39) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது விருத்தாச்சலம் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் சிறுபாக்கம் போலீஸ் நிலையத்தில் 9 சாராய வழக்குகள் உள்ளன.

    இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் விதமாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இராஜாராம் பரிந்துரையின்பேரில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    • பண்ருட்டி அடுத்துள்ள கிராமம் ஒன்றில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதான மாணவி. நேற்று வீட்டில் இருந்தவர் திடீர் என காணாமல் போனார்.
    • மாணவியின் தந்தை முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்துள்ள கிராமம் ஒன்றில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதான மாணவி. நேற்று வீட்டில் இருந்தவர் திடீர் என காணாமல் போனார். இவரை பெற்றோர்கள் பல இடங்களில் தேடி எங்கேயும் கிடைக்க வில்லை, மாணவியின் தந்தை முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். அதேஊரை சேர்ந்த ஏற்கனவே திருமணமான 30 வயதுடைய வாலிபர் தனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதாக புகாரளித்தார்.

    இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன 9-ம் வகுப்பு மாணவியை தேடி வருகின்றனர்

    • தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட்டின் அருகே‌ நேற்று இரவு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் அந்த வழியாக நடந்து சென்றார்.
    • அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் அந்த நபர் மீது மோதியது.

    கடலூர்:

    வேப்பூர் அருகே சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட்டின் அருகே நேற்று இரவு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் அந்த வழியாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் அந்த நபர் மீது மோதியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த வேப்பூர் போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் இறந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது காரை மோதி விபத்துக்குள்ளாக்கிய காரை ஓட்டி வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பிரபாகரன் (வயது 25). கொத்தனார் பணி செய்கிறார். இவர் இன்று காலை வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சேத்தியாத்தோப்பிற்கு வேலைக்கு வந்தார்.
    • சிலிண்டர் ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கடலூர்:

    காட்டுமன்னார்கோவில் பகுதி கலியன்மலை கிராமத்தைச் சேர்ந்த சிகாமணி மகன் பிரபாகரன் (வயது 25). கொத்தனார் பணி செய்கிறார். இவர் இன்று காலை வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சேத்தியாத்தோப்பிற்கு வேலைக்கு வந்தார். ப்போது காட்டுமன்னார்கோவிலுக்கு சிலிண்டர் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று எதிரில் வந்தது. இந்த லாரி  சேத்தியாத்தோப்பு வாலைக்கொல்லை வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரபாகரன் துடிதுடித்து உயிரிழந்தார்.

    விபத்துக்குள்ளான லாரி அதே சாலையில் ஒரத்தில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி நின்றது. இது குறித்து ஒரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 2022-2023-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையில் கல்வி உதவி தொகை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
    • ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் வங்கி கணக்கு தொடங்கி கொள்ளலாம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -

    2022-2023-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையில் கல்வி உதவி தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் அருகிலுள்ள அஞ்சலகம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், மாணவர்களின் ஆதார் மற்றும் தொலைபேசி எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல்ரேகை மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கி கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது. 

    • 2023-24 ஆம் ஆண்டிற்கு சீரிய திட்டமாக காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் .
    • இப்பணிகளை மேற்கொள்வதால் 78 ஆயிரத்து 451 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

    கடலூர்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் வேளாண் பெருமக்கள் மேன்மையடையவும், உரிய நேரத்தில் விவசாய பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வேளாண்மை உற்பத்தியினை பெருக்கிடும் நோக்கத்திலும், 2023-24 ஆம் ஆண்டிற்கு சீரிய திட்டமாக காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியில் 55 பணிகள், ரூ.100 கோடி மதிப்பீட்டில் 768.30 கிலோமீட்டர் நீளத்திற்கு தூர்வார ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொள்வதால் 78 ஆயிரத்து 451 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். 

    சிதம்பரம் அருகே பள்ளிப்படை கிராமத்திலிருந்து மீதிக்குடி வரையிலான பாசன நிலங்களுக்கு பாசனம் அளித்து வரும் மீதிக்குடி கிளை வாய்க்கால்களில் 1 முதல் 5 கிளை வாய்க்கால்கள் ரூ.20.30 லட்சம் மதிப்பீட்டில் 21.20 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும், தொடர்ந்து கனகரப்பட்டு, குமாரமங்கலம் மற்றும் கடவாச்சேரி கிராமங்களில் 1,100 ஏக்கர் விலை நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வரும் குமாரமங்கலம் வாய்க்கால், நரிமுடுக்கு வடிகால், சாலியந்தோப்பு வடிகால் மற்றும் உசுப்பூர் வடிகால்களை தூர்வாரி பலப்படுத்தும் பணிகள் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்று வருவதையும், கவரப்பட்டு கிராம பகுதிகளில் 2,500 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வரும் கவரப்பட்டு வாய்க்கால் தொலைக்கல் 9 கிலோ மீட்டர் முதல் 18 கிலோ மீட்டர் வரையிலும் மற்றும் அதன் கிளை யு-டேம், டீ-டேம் இவைகளை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 9 கிலோ மீட்டர் தொலைவிற்கு தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • பொது மக்களுடன் சேர்ந்து சசி கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தனர்.
    • இறந்த போன எனது மகன் பிரதீப் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் முடசல் ஓடை சேர்ந்தவர் பிறை மாறன். இவரது மனைவி சசி. இன்று காலை கண்ணீர் மல்க தனது குடும்பத்தார், பொது மக்களுடன் சேர்ந்து சசி கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக முடசல் ஓடை மீனவ கிராமத்தில் வசித்து வருகின்றோம். எங்களின் மூத்த மகன் பிரதீப் (வயது 24). கடந்த 2021-ம் ஆண்டு துபாய் நாட்டிற்கு சென்றார். அங்கு சுற்றுலா படகில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ஏப்ரல் 29-ந்தேதி பணியில் இருக்கும் போது கடல் நீரில் மூழ்கி இறந்து விட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அங்கு உள்ள வர்கள் இறந்த போன எனது மகன் பிரதீப் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள தாக தெரிவித்தனர். பிரதீப் உடலை நேற்று 1-ந்தேதி கண்டெடுத்து உள்ளதாகவும் தகவல் அளித்தனர்.எனவே எங்கள் மகனின் உடலை விரைந்து மீட்டு தாயகம் கொண்டு வந்து சேர்க்க அரசின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

    • சுகந்தியை பிரசவத்திற்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
    • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனிக்காமல் இரவு 8 மணி அளவில் பரிதாபமாக உயிர் இறந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் பெருமாள்கோவில்தெருவை சேர்ந்தவர் மணிவேல் இவரது மனைவி சுகந்தி (35)., இவர்பிரசவத்திற்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனிக்காமல் இரவு 8 மணி அளவில் பரிதாபமாக உயிர் இருந்தாள் இது குறித்து பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.

    • மாவட்ட அளவிலான பயிற்சி கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
    • தொடர்ந்து ஆலோசனை உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    கடலூர்:

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமர் கிருட்டிணன் தலைமை தாங்கினார். பொருளியல் துறை இணை பேராசிரியர் ராமகிருஷ்ணன், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் குமார் அனைவரையும் வரவேற்றார். இதில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சுந்தரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றினார். தொடர்ந்து ஆலோசனை உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. முடிவில் என் எஸ் எஸ் உதவி பேராசிரியர் அருள்தாஸ் நன்றி கூறினார். 

    • பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலை செய்யப்பட்டவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்து கோரிக்கை கோஷம் எழுப்பினார்கள்.

    கடலூர்:

    பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலை செய்யப்பட்டவை கண்டித்தும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் பெருமாள், விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆனந்தவேல் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ரங்கேஷ், ஊடகப்பிரிவு செந்தாமரைக் கண்ணன், மாநகராட்சி கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை காற்றினார். இதில் நிர்வாகிகள் குணசேகரன் ராமமூர்த்தி பிரவீன் விஜய் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக தங்கள் கோரிக்கை கோஷம் எழுப்பினார்கள்.

    • சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
    • அரசு அனுமதி இல்லாமல் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    கடலூர்:

    காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், முத்தாண்டிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வல்லம் காலனி கிழக்கு தெரு பழனிவேல் (வயது 52) காட்டுக்கூடலூர் கலைஞர் தெருவை சேர்ந்த முருகவேல் (49), ஆகியோர் அரசு அனுமதி இல்லாமல் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான மது பாட்டில்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மோட்டார் கொட்டைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்து வந்ததையும் காண முடிந்தது.
    • சாதாரண மழையாக தொடங்கி விடிய இடி மின்னலுடன் கனமழைவிடிய கொட்டி தீர்த்த மழையாக மாறியது.

    கடலூர், மே.2-

    கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி யது. இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு 101 டிகிரி வெயில் பதிவானது குறிப்பிடத்தக்க தாகும். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து கடும் சுட்டெரிக்கும் வெயி லாக மாறி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் ஏப்ரல் மாதத்தில் திடீரென்று சில நாட்கள் காலையில் பனி பொழிவும், மதியம் சுட்டெ ரிக்கும் வெயில் இருந்து வந்தது.

    கடும் வெயில் காரண மாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து, சாலை ஓரங்களில் உள்ள பழசாறுகள் பல வகைகள் நுங்கு கரும்பு சாறு குளிர்பா னங்கள் போன்றவற்றை குடித்து வெயிலின் தாக்கத்தை குறைக்க முயற்சி செய்தனர். வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நடமாட்டம் உச்சி வெயில் நேரத்தில் குறைந்த அளவே காணப்பட்டு இருந்ததை காண முடிந்தது. இது மட்டும் இன்றி காலை மற்றும் மாலை நேரங்களில் கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் மக்கள் தங்கள் குடும்பத்துடன் கூடி ஆனந்தமாக தண்ணீரில் விளையாடி குளித்தும் மகிழ்ந்ததோடு, கிராமங்கள் பகுதிகளில் நிலப் பகுதி களில் உள்ள மோட்டார் கொட்டைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்து வந்ததையும் காண முடிந்தது.இந்த நிலையில் நாளை மறுதினம் மே 4-ந் தேதி முதல் கோடை வெயிலில் உச்சமாக கருதக்கூடிய அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் காலை மற்றும் மாலை நேரங்களில் லேசான சாரல் மழை பெய்து வந்ததோடு வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ந்த காற்றும் வீசி வந்தது.

    நேற்று கடலூர் நெல்லிக்குப்பம் மேல்பட் டாம் பாக்கம், நடுவீரப்பட்டு, பாலூர், பண்ருட்டி, விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையானது நேற்று இரவு சாதாரண மழையாக தொடங்கி விடிய இடி மின்னலுடன் கனமழைவிடிய கொட்டி தீர்த்த மழையாக மாறியது.மேலும் இரவு முழுவதும் இடி மின்னலுடன் கனமழை பெய்து வந்ததால் குளிர்ந்த காற்று வீசி வந்ததோடு கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது. கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம், தலைமை தபால் நிலையம் எதிரில் மற்றும் முக்கிய சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தது வருகின்ற னர். வடகிழக்கு பருவ மழை தொடங்கினால் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்வது போல் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு அக்னி நட்சத்திரம் தொடங்கு வதற்கு முன்பு கனமழை பெய்தது குறிப்பிடத் தக்கதாகும். விவசாயிகள் பொதுமக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்திலிருந்து எப்பொழுது விடிவு காலம் பிறக்கும் என்பதனை எதிர் நோக்கி இருந்த நிலையில் இந்த திடீர் கனமழை காரணமாக அனைவரும் மகிழ்ச்சியில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு-

    வானமாதேவி - 187.0, கடலூர் - 109.4, கலெக்டர் அலுவலகம் - 104.1, பண்ருட்டி - 90.0, வடகுத்து - 88.0, குப்பநத்தம் - 87.6, வேப்பூர் - 80.0, எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 79.5, விருத்தாசலம் - 69.0, ஸ்ரீமுஷ்ணம் - 68.3, காட்டு மயிலூர் - 60.0, சேத்தி யாதோப் - 52.4, கீழச்செரு வாய் - 49.0, லக்கூர் - 48.0, பெல்லாந்துறை - 40.0, லால்பேட்டை - 34.0, மீ-மாத்தூர் - 30.0, காட்டு மன்னார்கோயில் - 23.0, தொழுதூர் - 21.0, குறிஞ்சிப்பாடி -18.0, அண்ணாமலைநகர் - 9.0, கொத்தவாச்சேரி - 8.0, பரங்கிப்பேட்டை - 5.4 , புவனகிரி - 2.0, சிதம்பரம் - 1.0 என மொத்தம் - 1363.70 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது.

    ×