search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sun exposure"

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 6-ந் தேதி வரை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெயில் இருக்கும்.
    • கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், வரும் 8-ந் தேதி வரை தமிழகத்தில் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரியிலும் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக மாவட்டங்களில் 105.8 டிகிரி பாரன்ஹீட் வரையும், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 102.2 டிகிரி வரையும், கடலோரப் பகுதிகளில் 98.6 டிகிரி வரையும் இருக்கும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 6-ந் தேதி வரை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிக மாக வெயில் இருக்கும்.

    தமிழகத்தில் நேற்று பதிவான வெப்ப அளவு (டிகிரி பாரன்ஹீட்): ஈரோடு-106.52 , சேலம்-105.08, பரமத்திவேலூா்-104.9, திருப்பத்தூா்-104.36, தருமபுரி-104 , திருச்சி-103.82, நாமக்கல்-103.1 , வேலூா்-103.1, மதுரை நகரம்-102.56, திருத்தணி-102.56, கோவை-101.84, மதுரை விமான நிலையம்-101.84 , தஞ்சாவூா்-101.3, சென்னை மீனம்பாக்கம்-100.58, பாளையங்கோட்டை-100.4.

    இதற்கிடையே வருகிற 8, 10 ஆகிய தேதிகள் வரை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது.
    • நடப்பாண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம், கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடு கையில் அதிகமாகவே இருந்தது என மக்கள் கருத்து தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி பகலில் அதிகபட்சமாக 106.2 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. அதன் பின்னர் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் குறையாமல் தொடர்ந்தது. அவ்வப்போது பெய்த கோடை மழையால் ஓரிரு நாட்கள் வெயிலின் தாக்கம் குறைந்தாலும், நடப்பாண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம், கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடு கையில் அதிகமாகவே இருந்தது என மக்கள் கருத்து தெரிவித்தனர்.

    கோடையின் உக்கிரமாக காலமான அக்னி நட்சத்திரத்துக்கு பின்னர் வெயிலின் தாக்கம் குறைந்து விடும் என்று எதிர் பார்க்கப்பட்ட வேளையில் வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பது, மக்களை கவலையடைய செய்துள்ளது.

    இது குறித்து பொது மக்கள் கூறியதாவது:-

    சேலத்தில் பகல் நேரத்தில் கடும் வெப்பம் நிலவியதால், அனல் காற்று வீசிய நிலையில் அதன் தாக்கம் இரவிலும் நீடிக்கிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையிலும் மழை பெய்யாமல் உள்ளது. சேலத்தில் நேற்று 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இன்றும் காலை முதல் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பதால், பகல் நேரத்தில் வெளியே நடமாட முடியாத நிலை உள்ளது.

    தற்போது, பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் குழந்தைகள் அவ்வப்போது குடிநீர் அருந்த வேண்டும். வெயிலில் உலாவ விடக்கூடாது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மோட்டார் கொட்டைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்து வந்ததையும் காண முடிந்தது.
    • சாதாரண மழையாக தொடங்கி விடிய இடி மின்னலுடன் கனமழைவிடிய கொட்டி தீர்த்த மழையாக மாறியது.

    கடலூர், மே.2-

    கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி யது. இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு 101 டிகிரி வெயில் பதிவானது குறிப்பிடத்தக்க தாகும். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து கடும் சுட்டெரிக்கும் வெயி லாக மாறி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் ஏப்ரல் மாதத்தில் திடீரென்று சில நாட்கள் காலையில் பனி பொழிவும், மதியம் சுட்டெ ரிக்கும் வெயில் இருந்து வந்தது.

    கடும் வெயில் காரண மாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து, சாலை ஓரங்களில் உள்ள பழசாறுகள் பல வகைகள் நுங்கு கரும்பு சாறு குளிர்பா னங்கள் போன்றவற்றை குடித்து வெயிலின் தாக்கத்தை குறைக்க முயற்சி செய்தனர். வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நடமாட்டம் உச்சி வெயில் நேரத்தில் குறைந்த அளவே காணப்பட்டு இருந்ததை காண முடிந்தது. இது மட்டும் இன்றி காலை மற்றும் மாலை நேரங்களில் கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் மக்கள் தங்கள் குடும்பத்துடன் கூடி ஆனந்தமாக தண்ணீரில் விளையாடி குளித்தும் மகிழ்ந்ததோடு, கிராமங்கள் பகுதிகளில் நிலப் பகுதி களில் உள்ள மோட்டார் கொட்டைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்து வந்ததையும் காண முடிந்தது.இந்த நிலையில் நாளை மறுதினம் மே 4-ந் தேதி முதல் கோடை வெயிலில் உச்சமாக கருதக்கூடிய அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் காலை மற்றும் மாலை நேரங்களில் லேசான சாரல் மழை பெய்து வந்ததோடு வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ந்த காற்றும் வீசி வந்தது.

    நேற்று கடலூர் நெல்லிக்குப்பம் மேல்பட் டாம் பாக்கம், நடுவீரப்பட்டு, பாலூர், பண்ருட்டி, விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையானது நேற்று இரவு சாதாரண மழையாக தொடங்கி விடிய இடி மின்னலுடன் கனமழைவிடிய கொட்டி தீர்த்த மழையாக மாறியது.மேலும் இரவு முழுவதும் இடி மின்னலுடன் கனமழை பெய்து வந்ததால் குளிர்ந்த காற்று வீசி வந்ததோடு கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது. கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம், தலைமை தபால் நிலையம் எதிரில் மற்றும் முக்கிய சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தது வருகின்ற னர். வடகிழக்கு பருவ மழை தொடங்கினால் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்வது போல் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு அக்னி நட்சத்திரம் தொடங்கு வதற்கு முன்பு கனமழை பெய்தது குறிப்பிடத் தக்கதாகும். விவசாயிகள் பொதுமக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்திலிருந்து எப்பொழுது விடிவு காலம் பிறக்கும் என்பதனை எதிர் நோக்கி இருந்த நிலையில் இந்த திடீர் கனமழை காரணமாக அனைவரும் மகிழ்ச்சியில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு-

    வானமாதேவி - 187.0, கடலூர் - 109.4, கலெக்டர் அலுவலகம் - 104.1, பண்ருட்டி - 90.0, வடகுத்து - 88.0, குப்பநத்தம் - 87.6, வேப்பூர் - 80.0, எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 79.5, விருத்தாசலம் - 69.0, ஸ்ரீமுஷ்ணம் - 68.3, காட்டு மயிலூர் - 60.0, சேத்தி யாதோப் - 52.4, கீழச்செரு வாய் - 49.0, லக்கூர் - 48.0, பெல்லாந்துறை - 40.0, லால்பேட்டை - 34.0, மீ-மாத்தூர் - 30.0, காட்டு மன்னார்கோயில் - 23.0, தொழுதூர் - 21.0, குறிஞ்சிப்பாடி -18.0, அண்ணாமலைநகர் - 9.0, கொத்தவாச்சேரி - 8.0, பரங்கிப்பேட்டை - 5.4 , புவனகிரி - 2.0, சிதம்பரம் - 1.0 என மொத்தம் - 1363.70 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது.

    • தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு சராசரி வெப்ப நிலை உயர்ந்து வருகிறது.
    • வழக்கமாக கத்திரி வெயில் காலம் என்று அழைக்கப்படும் சித்திரை மாதத்தில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    சேலம்:

    தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு சராசரி வெப்ப நிலை உயர்ந்து வருகிறது. வழக்கமாக கத்திரி வெயில் காலம் என்று அழைக்கப்படும் சித்திரை மாதத்தில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது கோடை காலம் தொடங்கும் முன்பே, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் 97.9 டிகிரி வெயில் பதிவானது.

    நேற்று 97.8டிகிரியாக பதிவாகி உள்ளது. வெப்பநிலை அதிகரித்து வருவதால், மதிய நேரங்களில் கடை வீதிகளில் மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக சேலத்தில் பழச்சாறு கடைகள், தர்பூசணி கடைகள், இளநீர் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் வீடுகளில் புழுக்கம் அதிகமாக உள்ளது. 

    ×