search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான பயிற்சி

    • மாவட்ட அளவிலான பயிற்சி கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
    • தொடர்ந்து ஆலோசனை உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    கடலூர்:

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமர் கிருட்டிணன் தலைமை தாங்கினார். பொருளியல் துறை இணை பேராசிரியர் ராமகிருஷ்ணன், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் குமார் அனைவரையும் வரவேற்றார். இதில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சுந்தரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றினார். தொடர்ந்து ஆலோசனை உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. முடிவில் என் எஸ் எஸ் உதவி பேராசிரியர் அருள்தாஸ் நன்றி கூறினார்.

    Next Story
    ×