search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேத்தியாத்தோப்பு அருகே சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி மோதி வாலிபர் பலி
    X

    சேத்தியாத்தோப்பு அருகே சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி மோதி வாலிபர் பலி

    • பிரபாகரன் (வயது 25). கொத்தனார் பணி செய்கிறார். இவர் இன்று காலை வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சேத்தியாத்தோப்பிற்கு வேலைக்கு வந்தார்.
    • சிலிண்டர் ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கடலூர்:

    காட்டுமன்னார்கோவில் பகுதி கலியன்மலை கிராமத்தைச் சேர்ந்த சிகாமணி மகன் பிரபாகரன் (வயது 25). கொத்தனார் பணி செய்கிறார். இவர் இன்று காலை வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சேத்தியாத்தோப்பிற்கு வேலைக்கு வந்தார். ப்போது காட்டுமன்னார்கோவிலுக்கு சிலிண்டர் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று எதிரில் வந்தது. இந்த லாரி சேத்தியாத்தோப்பு வாலைக்கொல்லை வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரபாகரன் துடிதுடித்து உயிரிழந்தார்.

    விபத்துக்குள்ளான லாரி அதே சாலையில் ஒரத்தில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி நின்றது. இது குறித்து ஒரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×